Thursday, July 31, 2008

ஏ ஃபார் ஏப்பிள்!!!

சங்கிலித்தொடரில் பதிவு போட அழைத்த தலைவி ராப்க்கு நன்றி..

ஏதோ நான் பாக்கற சிலபல (பலானன்னு படிச்சிடாதீங்க!!!) இணையதளங்களைப் பற்றி சொல்லலாம்னு..... நீங்களே படிச்சிப் பாருங்க..

b-bawarchi.com - திடீர்னு தங்கமணி சமைக்கக் கிளம்பிட்டா, அவங்க இந்த தளத்தைப் பாத்துதான் ஏதாவது ஸ்பெஷலா செய்வாங்க (அவ்வ்வ்வ்...). இப்போ இது food/sify.com ஆ மாறிடுச்சு...

C- craigslist.org; விளம்பரங்களே இல்லாத ஒரு வரி விளம்பரத் தளம். நான் மற்றும் என் நண்பர்களெல்லாம் கார் வாங்குவதற்கு உதவிய தளத்தில் இப்போது சென்னைப் பக்கங்களும் இருக்கிறது.

d- dinamalar.com : டீக்கடை பெஞ்சுக்காகவும், டவுட் தனபாலுக்காகவும் தினமும் பார்க்கும் தளம். நமக்கு புது பதிவுகள் போட நிறைய ஐடியாக்களை தினமும் தருபவர் - எல்லா அரசியல்வாதிகளையும் கலாய்க்கும் டவுட் தனபாலு.


F-fandango.com : இது வாரயிறுதியிலே பக்கத்து கொட்டாய்லே ஏதாவது பாக்கற மாதிரி படம் இருக்குதான்னு பாக்கற தளம்.

I-Idlyvadai.com

பல மக்களைப் போல காலையில் எழுந்ததும், எனக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லிவிட்டு - பார்க்கும் முதல் தளம் இட்லிவடை.


ஒரு நாள் காலையில் எழுந்து என் பதிவுக்கு வந்தவர்கள் எவ்வளவு பேர் என்று பார்த்தால் பயங்கர அதிர்ச்சி - 500 பேருக்கும் மேல். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை, என்று சிறிது நேரம் கழித்து இட்லிவடை பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே என் பதிவை குறிப்பிட்டிருந்தனர்.


அந்த ஒரு சிறு அறிமுகத்தால், அடுத்த 3 நாட்களுக்கு எனக்கு ஒரு 2000 ஹிட்ஸ் கிடைத்தது....


J-jeyamohan.in : புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. 'குமரி'ப் பக்கத்து பேச்சுவழக்கில் எழுதப்பட்ட தமிழுக்காக விரும்பிப் படிக்கும் தளம்.

K-kumudam.com: புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

L-linkedin.com : சொல்லாமல் எஸ்கேப் ஆன பல பழைய ' நண்பர்கள்' இங்கேதான் எனக்கு திரும்ப கிடைத்தார்கள். என் 'சங்கிலியில்' இருப்பவர்கள் வேலை மாறினால், எனக்கு உடனுக்குடனே மெயில் அனுப்பி தெரிவித்துவிடும்.

M-Musicindiaonline.com : பலப்பல அருமையான பாடல்களின் தொகுப்பு அடங்கிய தளம். என்ன ஒண்ணு, எதையும் தரவிறக்கம் செய்ய முடியாது. அதனால், எனக்குப் பிடிச்ச பாட்டுக்களை ஒரு 'ஆல்பத்திலே' போட்டு, அதை ஓடவிட்டுடுவேன். அப்புறம் என்ன, அன்னிக்கு முழுவதும் மனம் மிகவும் அமைதியாக, சந்தோஷமாக இருக்கும்.

P-Pbskids.org : எங்க வீட்டு பாப்பாவுக்காக நாங்கள் தினமும் போகும் தளம். குழந்தைகள் பார்க்கும் பல்வேறு கார்ட்டூன் காரெக்டர்கள் மூலம் நிறைய விஷயங்களை கற்றுத்தருகிறார்கள். விளையாடவும் நிறைய இருக்கிறது இங்கே.

r-raaga.com - புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

S-Scribd.com - பல நல்ல புத்தகங்கள், அகராதிகள் எல்லாம் கிடைக்குமிடம். நம்ம சுஜாதா, ரமணி சந்திரன் நாவல்கள் எல்லாம் இங்கேயிருந்துதான் இறக்கிப் படித்தேன்.

w-WebSudoku.com : 'சுடோகு' ஞாபகம் வந்தால், விளையாடப்போகும் தளம். பல்வேறு 'லெவல்'களில் விளையாடலாம். 'அலைபாயும்' மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நான் போகும் தளம்.

T-Tehelka.com, tamilmoviewaves.blogspot.com : தெஹெல்கா தளத்தைப் பாத்து வர்ற கோபத்தையெல்லாம், தமிழ்மூவிவேவ்ஸ் தளத்தில் இருக்கும் பழைய விசு படங்களைப் பாத்து ஆத்திக்குவோம்.

y-youtube - இங்கே போகாமல் யாராவது இருக்கமுடியுமா? 2.5 ஆண்டுகளாக தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளை இங்கேதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மற்றும் அடிக்கடி 'funny videos', 'bloopers' - இப்படி தேடித்தேடிப் பார்த்து சிரித்துக்கொண்டே இருப்போம்.

அடுத்து நான் பதிவு போட அழைக்கும் மூவர்:

1. சின்ன பிகேபி என்றழைக்கப்படும் - நமக்கு தினம்தினம் புதுப்புது தொழில் நுட்பப் பதிவுகளை அள்ளி வழங்கும் நண்பர் பிரேம்ஜி

2. தினமும் நல்லா மழித்துவிட்டு, எனக்கு மீசையே முளைக்கவில்லை என்று வருத்தப்படும் நண்பர் விக்னேஸ்வரன்

3. நானே மறந்துவிட்டாலும், நாந்தான் மன்றத்தின் துணைத்தலைவர் என்று வாயார கூப்பிடும் நண்பர் அப்துல்லா.


Read more...

Wednesday, July 30, 2008

கேள்வி - பதில் : Part 4

கே: வேகக் கட்டுப்பாட்டை விட குறைவாக போய் 'மாமா'விடம் மாட்டிக் கொண்டதுண்டா?

ப: சென்ற வருடம் ' நயாகரா' போய் திரும்பி வந்துகொண்டிருந்தோம். மொத்தம் 7 பேர் இருந்த வண்டியை நான் ஓட்டிக்கொண்டிருந்தேன். நள்ளிரவு 11.45 மணி.

திடீரென்று பின்னாடி 'மாமா' வந்து விளக்கு போட்டுவிட்டார். சரியென்று ஓரம்கட்டினால், அவர் பக்கத்தில் வந்து ' நான் உங்களை எதுக்காக நிறுத்தினேன் தெரியுமா?' என்றார். நான் தெரியாது என்றதும், நீங்கள் மிகவும் வேகமாக செல்கிறீர்கள். நான் உங்களை 83 மைல் வேகத்தில் நிறுத்தியிருக்கிறேன் என்றார்.

சரியென்று கூறிவிட்டு, அவர் கொடுத்த டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, நண்பரிடம் 'வேகக் கட்டுப்பாட்டைவிட கம்மியாகத்தானே போனேன். எதற்கு இவர் இப்படி கூறுகிறார்?' என்றேன். 'என்னது?' என்ற நண்பர் கேட்க 'பின்னே என்ன? 87 வரைக்கும் போகலாமே - 83 தானே போயிருக்கிறேன்' என்றேன்.

நண்பரோ 'அடப்பாவி.. I- 87ங்கறது நெடுஞ்சாலை எண். வேகக் கட்டுப்பாடு அல்ல. இங்கே அதிகபட்ச வேகம் 65தான். நீ இப்படியே I- 95லே போயிருந்தேன்னா, தூக்கி உள்ளே வெச்சிருப்பான்' என்றார்.

'சரி, அதுதான் பணத்தை கட்டுன்னு விட்டுட்டான்லே. நீ வேறே எதுக்கு பயமுறுத்துறே?' என்றபடியே வீடு வந்து சேர்ந்தோம்.



-----

கே: தங்கமணியை, தங்கமணி ஆனப்பிறகு சைட் அடித்ததுண்டா?

ஒரு தடவை சென்னை காமராஜர் அரங்கத்தில் எங்கள் பழைய அலுவலகம் சார்பாக ஒரு விழா நடந்தது. நான் மேடையில் (சில அமைச்சர்கள் முன்னிலையில்) பேசவிருந்ததால், வீட்டிலிருந்து தங்கமணியும் வந்திருந்தார்.


நான் 'வரவேற்புரை' வழங்கிவிட்டு, எங்கள் அலுவலக நண்பர்கள் அமர்ந்திருந்த பகுதியில் சென்று அமர்ந்தேன். ஒரு இரண்டு/மூன்று வரிசைகள் தள்ளி 'தங்கமணியும்' அமர்ந்திருந்தார்.


என் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பரொருவர், அடிக்கடி திரும்பி ' நிறம்' பார்த்துக் கொண்டிருந்தார். என்னிடம், 'அண்ணே. மேடையிலே சூப்பரா பேசினீங்கண்ணே. கலக்கிட்டீங்க. டக்குன்னு திரும்பிடாதீங்க. அங்கேயிருந்து ஒரு பொண்ணு உங்களையே பாத்துக்கிட்டிருக்கு' என்றார்.


'தங்கமணி'யைத்தான் சொல்கிறார் என்று தெரிந்தாலும், சும்மா இருந்துவிட்டு, நிகழ்ச்சி முடிந்ததும், 'தம்பி வா, அந்த பொண்ணுகிட்டே பேசலாம்' என்று அவரை தங்கமணியிடம் அழைத்துப் போனேன்.


'பயங்கர தைரியம்ணே உங்களுக்கு' என்றவரிடம் தங்கமணியை அறிமுகப்படுத்தினேன் - 'தம்பி, இது உங்க அண்ணி!!!'


அதன்பிறகு அவரும் நானும் வெவ்வேறு வேலை/ஊர்/ நாடு மாறிவிட்டாலும், இன்றுவரை 'யாஹூ'வில் பேசினால், அவர் அடிக்கும் முதல் வாக்கியம் 'அண்ணே, என்னை மன்னிச்சிடுங்கண்ணே!!!' தான்.


----------


கே: ஆத்திரத்தோட 'அதையும்' சேர்த்து அடக்கி வெச்ச சம்பவம் ஏதாவது?...

ப: சென்னையில் ஒரு ஹோட்டலில் நண்பனுக்கு ரிசப்ஷன். நான் சிறிது நேரம் கழித்துத்தான் போனேன். போன சமயம், நண்பனைச் சுற்றி கூட்டம் இருந்ததால், ஓய்வறைக்குப் போய் வரலாமென்று போனேன். 'உள்ளே' போய்விட்டு வெளியே வர ஒரு பத்து நிமிடம் ஆகிவிட்டது.
கதவைத் திறந்து வெளியே வந்தால், நண்பன் அங்கே நிற்கிறான்.

நண்பன்: 'என்னடா, இவ்ளோ லேட்டா வர்றே'?

நான்: 'இப்போத்தாண்டா வந்துச்சு...'.

நண்பன்: "அடச்சீ, நான் அதைக் கேக்கலேடா, ஃபங்ஷனுக்கு ஏன் லேட்"?

நான்: "இல்லையே. நான் அப்பவே வந்துட்டேனே!!!"

நண்பன்: " நான் உன்னை பாக்கவேயில்லையே?"

நான்: " நாந்தான் இவ்ளோ நேரமா உள்ளே இருந்தேனே..."

நண்பன்: "ஏண்டா, நீ ரிசப்ஷனுக்கு வந்தியா, இல்லே 'இதுக்கு' வந்தியா. இப்போவாவது எல்லாரும் பாக்கறாமாதிரி வெளியே உக்காரு. நான் இப்போ வந்துடறேன்..."

நான்: "ஹிஹி".


அதுக்கப்புறம் நான் ஏன் 'அந்த'ப்பக்கம் போறேன். போய் மறுபடி அவன்கிட்டே திட்டு வாங்கவா???


Read more...

Tuesday, July 29, 2008

குழந்தைத்தனமான அரசியல்!!!











Read more...

Monday, July 28, 2008

தன் கையே தனக்குதவி!!!

கிபி 2030 - சென்னையில் ஒரு அலுவலகத்தில் நண்பர்கள் சுரேஷ், ரமேஷ் இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.


சு: பயங்கர தலைவலியா இருக்குடா.


ர: ஏன், என்ன ஆச்சு? ராத்திரி சரியா தூங்கலியா இல்லே ராத்திரி அடிச்சுது இன்னும் தெளியலியா?


சு: அதெல்லாம் ஒண்ணுமில்லேடா, வீட்டிலே பால் தீர்ந்திடுச்சு. கார்த்தாலே காபி குடிக்கலே. அதனாலே, தலைவலி.


ர: ஹேய், என்ன ஜோக்கடிக்கறியா? பால் தீர்ந்துடுச்சுன்னா, ஃப்ரிட்ஜே பால் கடைக்குப் தொலைபேசி சொல்லிடுமே? அவந்தான் 10 நிமிஷத்திலே பால் வந்து கொடுத்துடுவானே?


சு: அட, போன மாசமே அந்த கடையோட தொலைபேசி எண் மாறிடுச்சுப்பா. நாந்தான் அதை ஃப்ரிட்ஜோட settingsலே மாத்தலே.


ர: சரிப்பா, அதில்லேன்னா என்ன, உன்னோட செல்லுலே எஸ்.எம்.எஸ் வருமே?


சு: எனக்குத்தான் தினமும் ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ் வருதே - தத்துவம், அரசியல், வங்கியிலேந்து - அப்படி, இப்படின்னு. அதனாலே, நான் எந்த எஸ்.எம்.எஸ்ஸையும் பாக்கறதேயில்லை.


ர: எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சி எதுவும் நடக்கலேன்னா, உடனே ஃப்ரிட்ஜ்தான் உன் கைபேசியில் கூப்பிடுமே?


சு: கூப்பிட்டிருக்கும்னு நினைக்கறேன். நான் நேத்து என் ஆளுகிட்டே ஒரு நாலு மணி நேரம் பேசிக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலே, கிட்டத்தட்ட 10-15 கால்கள் வந்திருந்தன. எல்லாத்தையும் பாத்துக்கிட்டே வந்த நான், இதை மிஸ் பண்ணியிருப்பேன்னு நினைக்கறேன்.


ர: உன்னோட கைபேசியை நீ எடுக்கலேன்னா, கைபேசியிலேர்ந்து மெயில் பெட்டிக்கு ஒரு மெயில் போறாமாதிரி செட் பண்ணியிருக்கியே? அந்த மெயிலையாவது பாத்தியா?


சு: என்னோட கைபேசியிலேர்ந்து மெயில் பெட்டிக்கு வர்ற மெயில்களுக்கெல்லாம் நான் ஒரு 'Rule' செட் பண்ணி நேரா அதையெல்லாம் அழிச்சிடுவேன். அதனால, நான் அங்கேயும் பாக்கலை.


ர: உன்னையெல்லாம்.... என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல...


சு: இந்த தொழில்நுட்பம் இன்னும் வளரலேன்னு நான் நினைக்கறேன். பாரேன், இவ்ளோ வளர்ந்திருந்தும் எனக்கு இன்னிக்கு பால் இல்லாததாலே காபி கிடைக்கலே.


ர: டேய்.. டேய். உனக்கு வந்த எந்த தகவலையும் நீ பாக்காமே, தொழில்நுட்பம் மேலே பழி போடாதே.


சு: சரி சரி. நீ டென்சனாகாதே. எனக்கு ஒரு சந்தேகம். நாம இவ்ளோ வசதிகள் வெச்சிருந்தும், எனக்கு இன்னும் பிரச்சினை இருக்கே. அந்த காலத்துலேயெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நினைக்கறேன்.


ர: அதுதான் இல்லே. நான் கேள்விப்பட்டது என்னன்னா, அவங்க இதையெல்லாம் விட ஒரு சூப்பர் தொழில்நுட்பம் வெச்சிருந்தாங்களாம். சின்ன வயசிலே, என் தாத்தா எனக்கு சொல்லியிருக்கார்.


சு: அப்படியா, அது என்ன?


ர: அந்த தொழில்நுட்பத்தோட பேரு - 'தன் கையே தனக்குதவி'. அதாவது, தினமும் ஒரு தடவை, அவங்களே ஃப்ரிட்ஜைத் திறந்து பாத்திடுவாங்க. பால் தீர்ந்திருந்துன்னா, உடனே கடைக்குப் போய் வாங்கிட்டு வந்துடுவாங்க. அவ்வளவுதான்.


பி.கு: சிறில் அலெக்ஸின் அறிவியல் போட்டிக்கு என்னுடைய மூன்றாவது இடுகை இது.

Read more...

Wednesday, July 23, 2008

கிறுக்கியது யார் - அரைபக்கக் கதை

அண்ணே. இது தமிழ்லேதான் எழுதியிருக்காங்க. ஆனா, என்னன்னே புரியலே.

அட, எனக்குத்தான் புரியலேன்னு படிக்கற புள்ளே உன்னைக் கூப்பிட்டா, என்னடா நீயும் இப்படி சொல்றே?

விஷயம் இதுதான். சுரேஷுக்கு சுவற்றில் அரசியல் தலைவர்களை வரவேற்று எழுதுவது, விளம்பரங்கள் எழுதுவது போன்ற வேலை. இன்று சற்றே வித்தியாசமாக, சில பங்களாக்களின் சுவற்றில் 'போஸ்டர் ஒட்டாதீர்கள்', 'Stick No Bills' என்று மாற்றி மாற்றி எழுதும் வேலை கிடைத்துள்ளது. காலையிருந்து எழுதிக்கொண்டு இருக்கிறான். திடீரென்று பார்த்தால், தான் முதன்முதலில் எழுதிய சுவற்றில் யாரோ எதையோ கிறுக்கி வைத்திருக்கிறார்கள்.

அது என்னவென்று புரியாமல், அங்கே போய்க்கொண்டிருந்த ஒரு பள்ளிச்சிறுவனை கூப்பிட்டு கேட்டபோது, அந்த சிறுவன் சொன்னதுதான் இந்த கதையின் முதல் வசனம்.

"எனக்கு ஒரு ஐடியா. எங்க வீட்டுலே ஒருத்தர் இருக்கார். அவர் கவிதை, கதை எல்லாம் நல்லா எழுதுவார். 'தமிழ்மணம்' அப்படின்னு ஒரு இடம் இருக்கு. எப்போ பாத்தாலும் அங்கே போய் ஏதாவது கிறுக்கிக்கிட்டே இருப்பாரு. நான் அவரைக் கூட்டிண்டு வரேன். இங்கேயே இருங்க. அதை அழிச்சிடாதீங்க. ரெண்டு நிமிஷத்தில் வரேன்."

வந்தவர், அங்கே எழுதியிருப்பதைக் கண்டு, அடுத்த ஐந்து நிமிடம் சிரித்துக்கொண்டே இருந்தார்.

அப்படி அங்கே என்ன எழுதியிருந்தது என்று சற்று கீழே போய் பார்த்துவிட்டு, அந்த சுவற்றில் யார் அப்படி கிறுக்கியிருப்பார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்...

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

'மீ த பஷ்டு'.

Read more...

Tuesday, July 22, 2008

சென்னை இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது!!!

கிபி 2080 - சென்னை. அம்மா, அப்பா மற்றும் ஒரு பையன் உள்ள ஒரு குடும்பம். ஒரு உயர்தர சீன உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.

பையன்: அம்மா, இன்னிக்கும் எனக்கு நூடுல்ஸ் போதும்.

அம்மா: என்னப்பா, அது மட்டும் எப்படி போதும்? வேறே ஏதாவது சாப்பிடு.

பையன்: போம்மா. ஒரே போரடிக்குது.

அம்மா: ஏங்க, இவன் எப்போ பாத்தாலும் இப்பத்தான் போரடிக்குது, போரடிக்குதுன்னு சொல்லிட்டிருக்கான். இந்த வருஷமாவது அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பெங்களூர், மைசூர் போகலாங்க. அப்புறமாவது கொஞ்ச நாளைக்கு சும்மா இருக்கானான்னு பாப்போம்.

அப்பா: சரிம்மா. ஏற்பாடு பண்றேன். நம்ம எல்லாருக்கும் பாஸ்போர்ட் இருக்கு. விசா மட்டும்தான் எடுக்கணும். அதுவும் பிரச்சினையில்லை. ஒரே நாள்லே எடுத்துடலாம்.

மகன்: ஹையா.. ஜாலி.. விசான்னா என்னப்பா?

அப்பா: விசான்றது ஒரு நாட்டுக்குள்ளே போறதுக்கான அனுமதிச்சீட்டு. அது இருந்தாத்தான் அவங்க நாட்டுக்குள்ளேயே போக அனுமதிப்பாங்க.

மகன்: நீங்க விசா எடுத்துண்டு நிறைய் தடவை பெங்களூர் போயிருக்கீங்களாப்பா?

அப்பா: நான் சின்ன வயசா இருந்தப்போல்லாம், பெங்களூரும் சென்னையும் ஒரே நாட்டுலேதான் இருந்துச்சு. கொஞ்ச வருஷம் முன்னாலேதான் இப்படி ஆயிடுச்சு. அன்னிலேர்ந்து, இங்கேயிருந்து யார் அங்கே போனாலும் அல்லது அங்கேயிருந்து யார் இங்கே வந்தாலும், விசா எடுத்துத்தான் ஆகணும்.

மகன்: சரி. அங்கே போய் நாம என்னென்ன பாக்கப்போறோம்பா?

அப்பா: மைசூர் அரண்மனை பாக்கலாம். அப்புறம், நம்ம பாட்டி வீட்டு பின்னாடி ஓடுதில்லையா, காவிரி, அது புறப்பட்டற இடத்தை பாக்கலாம்.

மகன்: சூப்பர்பா. எனக்கு பாட்டி வீட்டுக்கு போகறதுக்கு பிடிக்கறதே அந்த காவிரி ஆறுதான். வருஷத்திலே எப்போ போனாலும், மேல் படிக்கட்டு வரைக்கும் தண்ணி ஓடிண்டேயிருக்கும். நீங்க சின்ன வயசிலே ரொம்ப என்ஜாய் பண்ணியிருப்பீங்க, இல்லையாப்பா?

அப்பா: இல்லைப்பா. அப்போல்லாம் இந்த காலம் மாதிரி இல்லே. கர்நாடகாலேர்ந்து தண்ணி திறந்துவிட்டாத்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணி வரும். அதுக்கு பெரிய பெரிய கலாட்டால்லாம் நடக்கும். நம்ம அரசியல் கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதம் இருப்பாங்க. திரைப்படக் கலைஞர்களெல்லாம் ஊர்வலம் போவாங்க.

மகன்: இப்போல்லாம் அந்த மாதிரி பிரச்சினை இல்லையாப்பா?

அப்பா: இல்லேப்பா. கர்நாடகா வேறே நாடானப்புறம் இந்த தண்ணி பிரச்சினை ஈஸியா தீர்ந்திடுச்சு.

மகன்: இப்போ கர்நாடகா எந்த நாடுப்பா?

அப்பா: China.

பின் - 1: இது சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் போட்டிக்கான எனது இரண்டாவது இடுகையா போடலாமான்னு தெரியல. உங்க பதில்களைப் பார்த்துத்தான் முடிவு பண்ணணும்.

பின் - 2: கடந்த 4 வருடங்களில் 300+ முறையாக எல்லை தாண்டி பிரச்சினை செய்திருக்கும் சீனாவை, சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா, பிற்காலத்திலும் அப்படியே இருந்தால், என்ன ஆகும் என்கிற கற்பனைதான் இந்த பதிவு.

பின் - 3: காவிரி பிரச்சினை இரு நாடுகளுக்கிடையே இருந்திருந்தால், எப்போவோ தீர்ந்திருக்கும் என்று ஞாநி சொல்லியிருந்தார். அதையும் இந்த 'சிறு' கதையில் பொருத்திவிட்டேன்.

Read more...

Monday, July 21, 2008

டாக்டருக்கு கதை சொல்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்!!!

டாக்டர், தனது அடுத்த படத்திற்கான கதை கேட்க கே.எஸ்.ரவிக்குமாரை வீட்டுக்கு வரச்சொல்கிறார். ரவியும் வருகிறார்.


இனி டாக்டரும், ரவியும் (ரவி1) பேசிக்கொள்வதுதான் பதிவு. நடுநடுவே ரவி2 என்றிருப்பது ரவியின் மனசாட்சி.



டாக்: வாங்க ரவி சார்... எப்படியிருக்கீங்க?


ரவி2: இவ்ளோ நேரம் நல்லாத்தான் இருந்தேன். இனிமே என்ன ஆகப்போகுதோ தெரியலியே, ஆண்டவா..


ரவி1: நான் ரொம்ப நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.


டாக்: நானும் நல்லாயிருக்கேன். நான் சொல்லி உடனே வந்ததுக்கு ரொம்ப நன்றி.. நான் நேராவே விஷயத்துக்குப் போயிடறேன்.


ரவி2: அப்பாடா. ரொம்ப நல்லதாப் போச்சு. விஷயத்தை கேட்டுட்டு இந்த இடத்தை விட்டு உடனே எஸ்ஸாயிடணும்.


ரவி1: சொல்லுங்க.


டாக்: உங்க 'தசாவதாரம்' பாத்தேன். அருமையா இயக்கியிருந்தீங்க. எனக்கும் அதே மாதிரி ஒரு கதை வேணும். செய்து தருவீங்களா?


ரவி2: என்னது, மறுபடியுமா? சாமி, ஆளை விடுப்பா. நான் ஓடிப்போயிடறேன்.


ரவி1: ரொம்ப நல்ல ஐடியா. எப்படி? அதே மாதிரி பத்து வேடம் போடப்போறீங்களா? கமல் மாதிரி நீங்க மெனக்கிடுவீங்களா? அவ்ளோ வெரைட்டி கொடுக்கத் தயாரா இருக்கீங்களா?


டாக்: நோ நோ. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. நான் அப்படி நடிக்கிறதை மக்கள் விரும்பமாட்டாங்க. அதனால், அதிகபட்சம் 2 வேடம்தான் எனக்கு சரிப்படும். அப்போதான் படம் பிச்சிக்கிட்டு ஓடும்.


ரவி2: ஆமா. பின்னே 10 வேஷத்திலேயும் ஒரே மாதிரி தாடி வெச்சிண்டிருந்தா, படம் ஓடுதோ இல்லையோ, மக்கள் தலையெ பிச்சிக்கிட்டு ஓடுவாங்க.


ரவி1: ஓ. சூப்பரா செய்யலாமே. இப்ப பாருங்க. உங்களுக்காகவே ஒரு கதையை கையோட கொண்டுவந்திருக்கேன். கேக்கறீங்களா?


டாக்: அப்படியா. வெரிகுட். சொல்லுங்க சொல்லுங்க. அதுக்குத்தானே கூப்பிட்டேன்.


ரவி1: 7-ஆம் நூற்றாண்டு. மகாபலிபுரம். மகேந்திர வர்ம பல்லவன் ஆட்சியில்தான் நம்ம கதை ஆரம்பிக்குது.

டாக்: என்னது, 7-ஆம் நூற்றாண்டுலியா.. மக்கள் ஒத்துப்பாங்களா.. தசாவதாரத்துக்கு வந்தா மாதிரி இதுக்கும் எதுவும் பிரச்சினை வந்தா?

ரவி2: அது சரி. கமலுக்கு படம் வர்றதுக்கு முன்னாடி பிரச்சினை பயங்கரமா இருக்கும். ஆனா படம் வந்தபிறகு எல்லாம் அடங்கிடும். ஆனா, இங்கேதான் அது தலைகீழாச்சே...

ரவி1: நல்லாயிருக்குமாவா? இப்போல்லாம் அதுதான் ட்ரெண்டே... முதல் பத்து நிமிடம் நல்ல த்ரில்லிங்கா - அதுவும் ராஜா காலத்து கதையா வெச்சிடணும். அப்போதான் மக்கள் படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே வந்து உக்காந்துடுவாங்க... அப்புறம், அதான் வந்திட்டமே, கொஞ்ச நேரம் இருந்து பாத்துட்டு போயிடுவோம்னு, படம் முழுக்க இருந்திடுவாங்க.


டாக்: அப்போ எதுவும் பிரச்சினை வராதுன்றீங்க...

ரவி2: இப்போ பிரச்சினை வரணும்றீங்களா.. இல்லே வரக்கூடாதுன்றீங்களா...

ரவி1: அதுக்குத்தான் நாம் 'இந்த கதையில் கொஞ்சம் கற்பனையும் கலந்துள்ளது' அப்படின்னு ஒரு ஸ்லைட் போட்டுடுவோம். அப்புறம் பொது மக்களோ, வலைப்பதிவுகள்லியோ யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.

டாக்: சரி. கதை சொல்லுங்க. நாந்தான் அந்த ராஜாவா?

ரவி2: இப்போ அது ஒண்ணுதான் குறைச்சல்.

ரவி1: சொல்றேன். வெயிட் பண்ணுங்க. மக்களும் அதைத்தான் நினைப்பாங்க. ஆனா, நீங்க ராஜாயில்லை. வேறே யாரையாவது போட்டுக்கலாம். முதல் சீன் சொல்றேன் பாருங்க.

ஒரு நாள் ராஜா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று சாப்பாட்டில் ஒரு 'கல்' வந்துவிடுகிறது. ராஜாவும் அதை 'கடக்'னு கடிச்சிடுறாரு. பல்லு கடகடன்னு ஆடுது.


டாக்: அந்த இடத்திலே க்ராஃபிக்ஸ் போட்டுடலாம். வாய்க்குள்ளே எல்லா பல்லும் டான்ஸ் ஆடறாமாதிரி காட்டினா, ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.


ரவி2: அது என்ன வாயா, இல்லே கால்வாயா, உள்ளேல்லாம் போய் படமெடுக்கறதுக்கு? சொல்றத ஒழுங்கா கேளுய்யா.

ரவி1: ஓ. சூப்பர் ஐடியா. நான் இதை பத்தி டான்ஸ் மாஸ்டர்கிட்டே பேசறேன். நீங்க மேலே கதை கேளுங்க. அந்த ராஜாவுக்கு பயங்கர கோபம் வந்துவிடுகிறது. 'கூப்பிடு அந்த சமையல்காரனை'ங்கிறார். நீங்கதான் அந்த சமையல்காரர்.


டாக்: என்ன, நான் சமையல்காரனா?.. இதெல்லாம் சரிவருமா?

ரவி1: எல்லாம் சரியா வரும். ராஜா உங்களைப் பாத்து கோபத்தோட கேக்கறார்... "அரிசியிலே கல்லு பொறுக்கினியா, இல்லையா???"


டாக்: நான் என்ன சொல்லணும்?

ரவி1: நீங்க 'பொறுக்கலேன்னு' சொல்லணும்.

டாக்: இருங்க இருங்க. நான் உடனே சொல்லமாட்டேன். ஒரு பத்து நிமிடம் சும்மா இருப்பேன்.
அந்த சமயத்திலேதான் காமிரா ட்ரிக்ஸெல்லாம் காட்டணும். காமிரா அப்படியே சுத்தி சுத்தி வரும். கீழேயிருந்து மேலே, மேலேயிருந்து கீழே.. அப்படி இப்படின்னு காட்டிட்டேயிருக்கணும்.

ரவி2: சரி. இதெல்லாம் பாக்கணும்றது மக்கள் தலையெழுத்து. நான் என்ன செய்றது?

ரவி1: ஓகே அப்படியே செய்துடுவோம்.

சரி. இப்போ நீங்க பதில் சொல்லப்போறீங்க... கூட்டத்திலே நிக்கற உங்க பொண்ணு உங்களைப் பாத்து சொல்லும். "அப்பா, பொறுக்கினேன்னு சொல்லிடுங்கப்பா.."


ஆனா, நீங்க 'பொறுறுறுறுறுறுறுறு.....க்கலே'ன்னு சொல்லிடறீங்க. மக்கள் எல்லாம் 'ஆஆஆ'னு ஆர்பரிக்கறாங்க. ராஜா கண் காட்டினவுடனே, சாம்பார் வைக்கிற ஒரு பெரிய அண்டாவோட சேத்து கட்டிடறாங்க. அப்படியே உங்களை தூக்கி ஒரு பாழும் கிணத்திலே போட ஏற்பாடு நடக்குது.


டாக்: வாவ். கதை ரொம்ப சூப்பர் த்ரில்லிங்கா இருக்கு. இந்த இடத்திலே ஒரு பாட்டு வரணும்னு நினைக்கிறேன்.

ரவி2: அதான் எல்லாம் போன படத்துலேயே சொல்லிட்டேனே. அப்புறம் என்ன, புதுசா கண்டுபிடிச்சா மாதிரி சொல்றீங்க.

ரவி1: ரொம்ப கரெக்டா சொன்னீங்க. இந்த இடத்திலே ஒரு பாட்டு போடறோம். பாட்டு வரிகள் கூட ரெடியாயிடுச்சு.

'கல்லை மட்டும் கண்டால், சோறு இறங்காது.

சோறு மட்டும் தின்றால், கல்மண் தெரியாது..." அப்படின்னு பாடறீங்க...


டாக்: நான் 'டக்குன்னு' அப்படியே மேலேயிருந்து தாவி குதிச்சி ஓடிடவா...

ரவி2: ஏங்க. உங்களுக்கு ஒழுங்கா நடக்கவோ, ஓடவோ தெரியவே தெரியாதா?? எப்போ பாத்தாலும், தாவவா, குதிக்கவான்னே கேட்டுக்கிட்டிருக்கீங்களே? இங்கே நாந்தான் இயக்குனர். நான் சொல்ற மாதிரிதான் நீங்க நடிக்கணும்.


ரவி1: கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எங்கேயும் ஓடிப்போகலை. தண்டனையை ஏத்துக்கறதுக்காக வெயிட் பண்றீங்க.

ராஜா கோபத்திலே தன் கையில் இருக்கற தட்டை அப்படியே தூக்கி உங்கமேலே வீசறாரு. அந்தத் தட்டு 'டங்'னு உங்க நெத்திலே பட்டு நீங்க மயக்கமாயிடறீங்க... அங்கே கட் பண்றோம்.

டாக்: அப்போ அடுத்த சீன் என்னது?

ரவி1: அடுத்த சீன் 21ம் நூற்றாண்டுலே ஆரம்பிக்குது. தமிழகத்துலே ஒரு சின்ன கிராமத்திலே நீங்க ஒரு கொத்தனாரா இருக்கீங்க.

டாக்: அப்பாடா. இப்போவாவது நான் சொல்றா மாதிரி கதை வைங்க.

ரவி2: விடமாட்டான் போலேயிருக்கே. சரி கேப்போம்.

ரவி1: சொல்லுங்க பாக்கலாம்.

டாக்: மொத்தம் எனக்கு நாலு பாட்டு. அதிலே ஒண்ணு நல்ல குத்து பாட்டா இருக்கணும். அதுக்கு மட்டும் நமீதாவை போட்டுடுங்க. மூணு சண்டையிலே ஒண்ணு பறந்துகிட்டு, இன்னொண்ணு ரயில்லே இருக்கணும். இதெல்லாம் இருந்தா எனக்கு போதும். கதையெல்லாம் உங்க இஷ்டம்.

ரவி2: சரி ஏதோ ஒண்ணு இயக்கணும். ஆனா சத்தியமா நான் அந்த படத்தை பாக்கமாட்டேன். இவர் பாணியில் சொல்றதுன்னா ' நான் இயக்குன படத்தை, நானே பாக்க மாட்டேன்'. அட, இது கூட நல்லாத்தான் இருக்கு.

ரவி1: அடடா, நான் இந்த ஃபார்முலாவிலே கதை யோசிக்கவேயில்லையே. சரி. ஒண்ணும் பிரச்சினையில்லே. எனக்கு ஒரு பத்து நாள் டைம் கொடுங்க. யோசிச்சி ஒரு சூப்பர் கதையோட வரேன். ஓகேவா.

டாக்: அவசரமேயில்லை. நீங்க போய் நல்லா யோசிச்சி எனக்கு சொல்லி அனுப்புங்க. நானே வந்து கதை கேக்கறேன்.

ரவி2: எஸ்கேப் ஆகுடா ரவி. இனிமே இந்த பக்கமே தலை வெச்சி படுக்கக்கூடாது.

ரவி1: வரேங்க. அப்புறம் பாக்கலாம். பை.

(ரவி தலை தெறிக்க ஓடுகிறார்).

Read more...

Friday, July 18, 2008

நண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள்!!!

ஒரு நண்பனை கழற்றி விடணும்னு ஒருத்தர் நினைக்கிறார். அதுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு நினைச்சப்போ, சமீபத்திலே ஒரு கட்சி இன்னொரு கட்சியை கழற்றி விட்டதற்கு சொன்ன காரணத்தையே சொல்லிடலாம்னு முடிவு பண்றாரு.


அதாவது - எப்போவோ நடந்த ஒரு நிகழ்ச்சியை அல்லது பேச்சை காரணம் காட்டி - நண்பனை கழற்றி விட்டுடலாம்னு நினைக்கிறாரு.


கீழ்க்கண்ட காரணங்களை பாருங்க. இதைத்தவிர வேறே ஏதாவது ஒரு காரணம் உங்களுக்குத் தெரிஞ்சா அதையும் சொல்லுங்க...அவ்வ்வ்...


10 மாசத்துக்கு முன்னாடி - எங்கள் வீட்டுக்கு வந்தபோது இரண்டாவது கப் காபி கேட்டாய்.

9 மாசத்துக்கு முன்னாடி - நான் என் ஆளு கூட இருக்கும்போது, வேணும்னே 'பபிள்கம்'மிற்கும் 'ச்யூவிங்கம்'மிற்கும் 6 வித்தியாசங்கள் சொல்லுன்னு என்னை வெறுப்பேற்றினாய்.

8 மாசத்துக்கு முன்னாடி - தண்ணி அடிக்கலாம்னு வீட்டுக்கு வரச்சொல்லி சொன்னதாலே உங்க வீட்டுக்கு வந்த எனக்கு, குடத்தை கையில் கொடுத்து 'பம்ப்'பில் தண்ணி அடிச்சிக் கொடுக்கச் சொன்னே...

7 மாசத்துக்கு முன்னாடி - நான் அனுப்பின 'Forward mail' லை அதில் சொன்னமாதிரி நீ ஐந்து பேருக்கு அனுப்பவேயில்லை.

6 மாசத்துக்கு முன்னாடி - ஆங்கிலத்துலே லவ் லெட்டர் எழுதித்தாடான்னா, லீவ் லெட்டர் எழுதி தந்துட்டே.

5 மாசத்துக்கு முன்னாடி - ஞாயிறு வீட்டுக்கு வா, யாரும் இருக்கமாட்டாங்கன்னு சொல்லி நான் உங்க வீட்டுக்கு வந்தபோது, உங்க வீடு பூட்டியிருந்துச்சு. என்னை நல்லா ஏமாத்திட்டே.

4 மாசத்துக்கு முன்னாடி - நான் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது, கொடுத்த காபியில் சக்கரையே போடவில்லை.

3 மாசத்துக்கு முன்னாடி - என் ஆளு கூட இருக்கும்போது, கற்பூர பாக்கெட்டை என்கிட்டே வாசனை காட்டி, அது என்னன்னு கண்டுபிடிக்க முடியுதான்னு பாக்கச் சொன்னாய்.

2 மாசத்துக்கு முன்னாடி - 'பக்தி' பட சிடின்னு நீ கொடுத்த சிடி 'நிஜமாகவே' பக்தி பட சிடிதான்.

போன மாசம் - ரொம்ப நல்ல படம் என்று சொல்லி என்னை டாக்டர் விஜய் படத்துக்குக் கூட்டிப்போனாய்.

டிஸ்கி: மக்கள்ஸ்.. நீங்க இவ்ளோ நேரம் படிச்சதுகூட முக்கியமில்லை. இனிமே படிக்கப் போறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். 'லேபிளை' ஒரு தடவை படிச்சுடுங்க.... அவ்வ்வ்வ்...

Read more...

Thursday, July 17, 2008

ஒரு பதிவரின் பதிவு வரலாறு!!!

ஒரு பதிவர் புதிதாக ஒரு வலைப்பூவைத் தொடங்கி - பல்வேறு தளங்களில் பயணித்து - பிரச்சினைகளை சந்தித்து - இறுதியாக என்ன ஆகிறார் என்று பார்ப்போம்.


கீழே கொடுத்துள்ளதெல்லாம் அவரது 'லேபிள்'கள் மட்டும். அந்த லேபில்களில் உள்ள (எல்லா) பதிவுகளையும் அவர் அதே வரிசைக்கிரமமாக எழுதியதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்..


சம்பவங்கள் அனைத்தும் உங்கள் கற்பனைக்கே...


வணக்கம்(1)

உதவி(3)

சொந்த கதை(5)

சிறுகதை(2)

அரசியல்(3)

திமுக(4)

பார்ப்பனீயம்(5)


பதிவர் வட்டம்(3)

****(1)

தமிழ்மணம்(5)

அராஜகம்(3)


தற்காலிக பிரிவு(1)

ஃபீனிக்ஸ்(1)

சமையல் குறிப்பு(20)

Day-end மொக்கை(55)

டிஸ்கி: என்னோட எல்லா பதிவைப் போல, இதுவும் 'நாட்டு நடப்பை' வெச்சி எழுதின ஒரு நக்கல் பதிவுதாங்க..... யாரையும் குறிப்பிட்டு எழுதல.


Read more...

Wednesday, July 16, 2008

இதுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்?

காலை அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு கிளம்பும்போது, வாய் தானாக விசில் அடிக்கிறது.


அலுவலகத்திற்குள் நுழையும்போது அப்பாடா என்றிருக்கிறது.


மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்பவேண்டுமே என்றிருக்கிறது.


வீட்டிற்குள் நுழையும்போது, தானாக கொட்டாவி வருகிறது.


வெள்ளிக்கிழமை மாலை வந்தால், எரிச்சலாக இருக்கிறது.


திங்கட்கிழமை காலை வந்தால், பயங்கர சுறுசுறுப்பாக இருக்கிறது.


அலுவலகத்திலே தமிழ்மணம் பாத்துக் கொண்டிருந்தாலும், வீட்டிலிருந்து தொலைபேசி வந்தால், கடுப்பாக இருக்கிறது.

அலுவலகத்தில் வேலை செய்யச் சொன்னால் ஜாலியாக இருக்கிறது... வீட்டில் வேலை செய்யச் சொன்னால் கோபம்தான் வருகிறது.

வீட்டில் இருக்கும்போது புத்தகம் படிக்க 'ஓய்வறை'யில் அதிக நேரம் செலவாகிறது.

இதுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்?

எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாயிடுச்சே - அதுவா?


ச்சே..ச்சே..அது காரணமாக இருக்க முடியாது.


அப்போ வேறே என்ன காரணம்?

----------------------------------------------

கதை அவ்வளவுதான்.

நம்ம கதையோட ஹீரோவுக்கு அவர் கேக்கற சரியான காரணத்தை யாராவது சொல்லுங்களேன்...

Read more...

Tuesday, July 15, 2008

விண்கூட்டர் விபத்து!!!

கிபி 2080.சென்னை நங்கநல்லூரில் ஒரு காலை வேளை. மணி 7.00.

காட்சி - 1:

சுரேஷ் பரபரப்பாக அலுவலகம் கிளம்பும் நேரம். தன் வீட்டின் 110வது மாடியில் நிறுத்தப்பட்டிருந்த தன் விண்கூட்டரை (விண் ஸ்கூட்டர்) நோக்கி மின் தூக்கியில் போய்க்கொண்டிருக்கிறான்.

"இன்னும் 10 நிமிடத்தில் என்னுடைய Exit-ஐ அடைந்துவிட்டால், அடுத்த 100 கிலோ மீட்டர்களை 5 நிமிடத்தில் கடந்துவிடலாம். 7.30 மணிக்குள் அலுவலகம் போய்ச்சேர வேண்டும். ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது".

வண்டி புறப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், நிர்ணயிக்கப்பட்ட பாதையை நோக்கி திருப்பினான்.

சுரேஷ் 5 நிமிடத்தில் தன் அலுவலகம் போவதற்குள், நாம் இந்த 'விண்கூட்டர்' பற்றி தெரிந்துகொள்வோம், வாங்க.

பத்து வருடங்களுக்கு முன் நம் மக்கள் கண்டுபிடித்த வண்டிதான் இந்த விண்கூட்டர். சூரிய ஒளியை பயன்படுத்தி பறக்க/ஓடக்கூடியது. இந்தியாவில் பெட்ரோல் சுத்தமாக இல்லாமல் போய்விட்டதால், இதை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தனர். ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால், ஒருவர் உட்காரக்கூடிய விண்கூட்டர் 1000 கிமீ வரை போகும்.

இந்தியாவில் சூரியஒளிக்கு பஞ்சமேயில்லாததாலும், வேறு வழியில்லாததாலும் மக்கள் இதை போட்டி போட்டுக்கொண்டு வாங்க ஆரம்பித்தனர். சில நாட்களில், சாலைகளில் நெரிசல் அதிகமாகி, வண்டி ஓட்டவே இடமில்லாமல் போனதால், அதே வண்டியை பறக்க வைக்க முயன்று அதிலும் வெற்றி பெற்றுவிட்டனர்.

ஓகே. மறுபடி கதைக்கு வரலாம்.

இன்னும் ஒரு நிமிடம்தான். அலுவலகம் வந்துவிடும். விசில் அடித்துக்கொண்டே வந்த சுரேஷ், திடீரென்று அலறினான்.

"ஆஆ. இதென்ன பொருள்னே தெரியலையே. திடீர்னு என் பாதையில் வந்துவிட்டதே. இந்த வேகத்தில் நான் ப்ரேக் போட்டால் என் கதி?" - ஆனால், யோசிக்க நேரமில்லை. பிரேரரரக் அடித்தான் சுரேஷ்.

காட்சி - 2

சுரேஷ் கண்விழித்துப் பார்த்த இடம் ஒரு மருத்துவமனை.

" நான் எங்கே இருக்கேன். எனக்கு என்ன ஆச்சு???"

"கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஒண்ணுமில்லை. சிறிய விபத்துதான். ஒரு வாரம் மயக்கமா இருந்து இப்பத்தான் முழிச்சிருக்கீங்க..."

"டாக்டர், எனக்கு என்ன ஆச்சு? நான் பறக்கும்போது எதுமேலேயோ மோதிட்டேன்னு நினைக்கிறேன். அது என்னன்னு தெரியல".

"ஆமா... நீங்க மோதினது ஒரு சின்ன வான்குடை (Parachute) மேல்"

"என்னது? வான்குடையா? சிறுவர்கள் விளையாட்டுப் பொருளா அவ்ளோ மேலே வந்தது?

"இல்லை. அது சிறுவர்களுக்கான வான்குடை இல்லை. சில காரணங்களுக்காக மனிதர்கள் கண்டுபிடித்ததுதான் அது..."

"என்ன காரணம் டாக்டர்?. மேலும் அதிலே ஏதோ ஒரு பொருள் கட்டியிருந்ததே? அது என்ன என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை..."

"சொல்றேன். அதிலே கட்டியிருந்தது ஒரு பூசணிக்காய்"

"என்ன, பூசணிக்காயா? எதுக்கு பூசணிக்காயை வான்குடையில் கட்டி அனுப்பினாங்க?"

"பழங்காலத்திலே புது வண்டி வாங்கறவங்க திருஷ்டி கழிக்கறேன்னு பூசணிக்காயை வண்டி முன்னாடி உடைப்பாங்க. ஸ்கூட்டர்லே போனவங்க நிறைய பேர் அதிலே வழுக்கி விபத்துக்குள்ளான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு".

"அதே பழக்கத்துலே விண்கூட்டர் வாங்கற மக்கள் பூசணிக்காயை வான்குடையிலே கட்டி பறக்கவிட்டு, விண்கூட்டருக்கு திருஷ்டி கழிக்கறாங்க. இதனாலே, மேலே பறக்கறவங்க நிறைய பேர் உங்களை மாதிரி விபத்துலே மாட்டிக்கறாங்க... நீங்க நல்லவேளையா பெரிய பிரச்சினையில்லாமே தப்பிச்சிட்டீங்க"

பூசணிக்காய் பறந்த காரணத்தைக் கேட்ட சுரேஷ், மீண்டும் நீண்ட மயக்கத்துப் போனான்.

பக்கத்தில் எங்கிருந்தோ ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியில் பழம்பெரும் நடிகர் விவேக் சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது... "1000 பெரியார்கள் வந்தாலும்..."

*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை ***

Read more...

Monday, July 14, 2008

ஜோசியர் ஒருவர் மென்பொருள் நிபுணரானால்!!!

1. மென்பொருள்லே பிரச்சினை இருந்தாக்கா, உக்காந்து அதை தீர்க்கற வழிபாருங்க. அதை விட்டுட்டு, இந்த இடத்துக்குப் போ, அந்த கோவிலுக்குப் போ - எல்லா பிரச்சினையும் தீந்துடும்னு சொல்லாதீங்க...

2. இன்னிக்கு எனக்கு உகந்த மென்பொருள் 'விஷுவல் பேசிக்'தான் - அதிலேதான் வேலை செய்வேன்னுல்லாம் இங்கே சொல்லமுடியாதுங்க. நாங்க என்ன சொல்றோமோ அதுதான் செய்யணும்.

3. ஏங்க நாம நடத்தறது வெளிநாட்டுக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்யற கம்பெனி. நேர்முகத் தேர்வுக்கு வர்றவங்களுக்கு ஜாவா தெரியுமான்னு கேளுங்க. அவங்க ஜாதகத்திலே லக்னம் எங்கேயிருக்கு தெரியுமான்னு கேக்காதீங்க..

4. இந்த மென்பொருள் எப்போ முடிப்பீங்கன்னு க்ளையண்ட் கேட்டதற்கு, 9-க்குள்ளே ஒரு நம்பர் சொல்லுன்னீங்களாமே? ஏங்க, ஒழுங்காவே பேசமாட்டீங்களா?

5. நம்ம எம்.டிகிட்டே பணம் இருக்கும்போதுதான் எல்லாருக்கும் பெரிய கணிணித்திரை வாங்கித் தருவார். உங்களுக்கு இப்போ ரொம்ப நல்ல நேரம்னீங்கன்னா, உங்க கைக்காசை போட்டு வாங்கிக்கோங்க.

6. உங்களை இங்கே மாச சம்பளத்துக்குத்தான் எடுத்திருக்கோம். மூணு கேள்விக்கு 200ரூபாய் கணக்கெல்லாம் வேலைக்காகாது. ஒழுங்கா வேலையை பாருங்க.

7. இந்த மென்பொருள்லே இருக்கிற ரெண்டு மாட்யூல்களை இன்னிக்கே 'இணைச்சி' சரி பார்க்கணும். அதுக்கெல்லாம் நல்ல முஹூர்த்தம் பாத்துக்கிட்டிருக்க முடியாதுங்க.

8. நம்ம கம்பெனியோட வரலாறு எல்லாமே தெள்ளத்தெளிவா நம்ம வலைப்பக்கத்துலேயே போட்டிருக்கு. நீங்க என்னமோ உங்க ஜோசியத்தாலே கண்டுபிடிச்சாமாதிரி பேசிக்கிட்டிருக்கீங்களே?

9. க்ளையண்ட் இந்த வாரத்துக்குள்ளே இந்த பிரச்சினையை முடிக்கணுன்றான். நீங்க என்னடான்னா, 3 மாசத்துக்குள்ளே பிரச்சினை தன்னாலே தீந்துடும்றீங்களே? அது எப்படிங்க தன்னாலே முடியும்?

10. உங்க பக்கத்து க்யூப்லே இருக்கிற குரு, எதிர் க்யூபுக்கு மாறி வந்தாத்தான் உங்களாலே நல்லா வேலை பாக்கமுடியும்றீங்களே - அதெல்லாம் இங்கே நடக்காது.

Read more...

Friday, July 11, 2008

வரி விளம்பரங்கள்!!!

குறைந்த கட்டணத்தில் மூன்றே வாரத்தில் நீச்சல் பயிற்சி. பயிற்சியாளர் உங்கள் வீட்டிற்கே வந்து காலை/மாலை இரு வேளையும் நீச்சல் கற்றுக் கொடுப்பார். நீச்சல் குளம் optional.

---

30 நாட்களில் சீன மொழி. கற்க விருப்பமா. உடனே புறப்பட்டு வரவும். குறைந்த கட்டணம் மற்றும் திறமை மிக்க பயிற்சியாளர் யாராவது கிடைத்தால் நாம் உடனே கற்கலாம். ஏனென்றால், நானும் அப்படிப்பட்ட பயிற்சியாளரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
---

தொலைதூரக்கல்வி முறையில் வீணை கற்றுத்தரப்படும். வீணை மீட்டுவதை காதால் மட்டும் கேட்டால் போதும் என்பதால், நேரில் வரத்தேவையில்லை. தொலைபேசியிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆறே மாதத்தில் அரங்கேற்றத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்படும். .

---

இவ்விடம் ஜோசியம் கற்றுத்தரப்படும். சைதாப்பேட்டை குரு தன் சொந்த வீட்டிலிருந்து ஏழாம் வீட்டில் இருக்கும் ராகுவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, டக்குன்னு குருவின் வீட்டுக்கு வரவும். நீங்கள் ஜோசியம் கற்க எவ்வளவு நாளாகும் என்பது உங்கள் ஜாதகத்தைப் பார்த்தபிறகுதான் சொல்ல முடியும்.

---


போரூரிலிருந்து அடையாறு போகவிருக்கும் எனக்கு ஒரு பயணத்துணை வேண்டும். நாளை காலையில் 6 மணி நேரங்கள் ஒதுக்கமுடிந்தவர்கள் கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.

---

வெளிமானில மெண்பொறுள் னிபுணர்களுக்கு தமில் கற்றுத்தரப்படும். பயிர்சியில் சேந்து மூண்றே மாதத்தில், கவித, கானா பாடல்கள் எளுதமுடியும். உடனே புரப்பட்டு வரவும்.

---

உடனடியாக 10 துப்பறியும் நிபுணர்கள் தேவை. நீங்கள் வரவேண்டிய முகவரி... ஐ... அதையும் நாங்களே சொல்வோம்னு பாக்கறீங்களா... மரியாதையா நீங்களா முகவரியை கண்டுபிடிச்சி வந்தாத்தான் வேலை... ஓகே..
---

தமிழ்மணத்தில் பதிவு போடுவதற்கு பதிவர்கள் தேவை. நீங்கள் 'இடது' வாசல் வழியாக வந்தாலும் ஓகே, 'வலது' வாசல் வழியாக வந்தாலும் ஓகே. தங்கள் முகத்தை காட்டிக்கொண்டு வந்தாலும் ஓகே, 'முகமூடி' போட்டுக்கொண்டு வந்தாலும் ஓகே. ஆனால், ____ சட்டை மட்டும் போட்டுக்கொண்டு வரவேண்டாம்.


பின் -1: கடைசி விளம்பரத்தில் ஒரு வார்த்தை மட்டும் விட்டுப்போயிடுச்சு. மக்கள் யாராவது அதை பூர்த்தி செய்தால் நல்லாயிருக்கும்!!!


பின் -2: கடைசிக்கு முன்னால் இருக்கும் விளம்பரங்களைப் பற்றியும் ஏதாவது சொல்லுங்க...


Read more...

Thursday, July 10, 2008

த்ரிஷா & சிம்பு நாட்டு மக்களுக்காக என்னென்ன செய்யலாம்???

சிம்புவை நயன்தாராவுடன் சேர்த்துவிட்டு, நயன்தாராவின் மார்க்கெட்டை இறக்கி விடலாம் என்று த்ரிஷா நினைத்தார்.


இந்த செய்தி உண்மையா / பொய்யா என்று எனக்குத் தெரியாது.


ஆனால், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் - சிம்புவுடன் சேர்ந்துவிட்டால், நயன்தாராவின் மார்க்கெட் இறங்கிவிடும் என்று நினைத்த த்ரிஷா, அதற்கு பதிலாக கீழ்க்கண்டவாறு செய்தால், நாட்டு மக்களுக்காவது நன்மை உண்டாகும்.


1. சிம்புவை ஒரு பெட்ரோல் பங்குக்குக் கூட்டிப்போய், வண்டியில் பெட்ரோல் போடச் செய்து, பெட்ரோல் விலையை குறைக்க வைக்கலாம்.


2. சிம்புவை ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு சேர்த்துவிட்டு, பள்ளிக் கட்டணங்களைக் குறைக்க முயற்சிக்கலாம்.


3. சிம்புவை ஒரு மாநகர சொகுசு பேருந்தில் ஏற்றிவிட்டு, பேருந்து கட்டணங்களைக் குறைக்கப் பார்க்கலாம்.


4. சிம்புவை ஒரு உயர்தர சைவ உணவகத்துக்குக் கூட்டிச் சென்று, ஒரு ஃபுல் மீல்ஸ் வாங்கித் தந்து, உணவு பதார்த்தங்களின் விலையை குறைக்க வைக்கலாம்.


5. சிம்புவை கத்திப்பாரா பாலத்துக்குப் பக்கத்தில் ஒரு கட்டில் போட்டு உட்காரச் செய்யலாம். போக்குவரத்து குறைந்தால், பால வேலையாவது வேகமாக நடக்கும்.


என்னவெல்லாம் செய்யக்கூடாது...


1. சிம்புவை மழை பெய்யும்போது மொட்டை மாடிக்கு கூட்டிப்போகக்கூடாது. (மழை அளவை குறைத்தால் நமக்குத்தான் பிரச்சினை)


2. சிம்புவை மும்பை பங்கு வர்த்தகம் நடக்கும் சாலையில் கூட்டிப்போகக்கூடாது (சென்செக்ஸ் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்).


எனக்குத் தோன்றியது அவ்வளவுதான் மக்களே.. இன்னும் வேறே எதாவது இருக்கா... சொல்லுங்க...

Read more...

Wednesday, July 9, 2008

கிபி 2030 - நங்கநல்லூர் - மேடவாக்கம் மேம்பாலம்


இடம்: சென்னை நங்கநல்லூர் - மேடவாக்கம் இணையும் இடம்.

நேரம்: கிபி 2030 - ஏதோ ஒரு திங்கட்கிழமை காலை 8மணி

---

என்னங்க, போன வாரம் வரைக்கும் இந்த இடத்திலே மேம்பாலமே இல்லை. இப்போ திடீர்னு ஒண்ணு வந்திருக்கு?

ஆமா, போன வாரயிறுதியில் நங்கநல்லூர் - மேடவாக்கம் சேர்ற பகுதியிலே ஒரு மேம்பாலம் அமைக்கணும்னு தீர்மானிச்சாங்க. உடனடியா இந்த வாரயிறுதியிலே கட்டி முடிச்சிட்டாங்க.

அதெப்படிங்க இவ்ளோ பெரிய மேம்பாலத்தை ஒரே வாரத்திலே கட்டி முடிக்கமுடியும்?

நீங்க என்ன இவ்ளோ நாளா உள்ளே இருந்துட்டு வந்தீங்களா? இப்போல்லாம் இப்படித்தான். பாலத்தை வேறொரு இடத்திலே கட்டுவாங்க. அப்புறம் எங்கே வேணுமோ, அங்கே அதை கொண்டு வந்து ரெண்டே நாள்லே ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க. எல்லாம் கணிணியோட உதவியோட பண்றாங்க.

அப்படியா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே?

ஆமா. இதனாலே மக்களுக்கு எந்த தொந்தரவுமில்லை. சனிக்கிழமை இரவு வேலையை ஆரம்பிச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு முடிச்சிடுவாங்க. மக்கள் திங்கள்லேர்ந்து பாலத்தை உபயோகப்படுத்த ஆரம்பிச்சுடுவாங்க. உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு. நீங்க வேறே.

ஆமாமா. இதை கண்டுபிடிச்சவன் நல்லா இருக்கட்டும். முன்னெயெல்லாம், ஒரு பாலத்தை கட்டிட்டிருக்கும்போது அந்த இடத்தை கடந்து போறதுக்குள்ளே எவ்ளோ பிரச்சினை வரும்றீங்க. அப்பப்பா. ரொம்ப கொடுமை.


சரி வர்றேங்க.

(அவர் போய் பக்கத்து கடையில் தினத்தந்தி வாங்குகிறார்).

தலைப்பு செய்தி - "பழைய முறையில் கட்டப்பட்ட பாலம் - கடைசி பாதை நாளை திறப்பு - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அறிவிப்பு!!!".
கீழே பார்க்க - கத்திப்பாரா பாலத்தின் படம்.

டிஸ்கி: இது ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எழுதிய கதை. அதுக்குப்பிறகு கத்திப்பாரா பாலத்தில் இரண்டு பாதைகளை திறந்துவிட்டனர். மேலும், வேலை படுவேகமாக நடப்பதால், கிபி2030 வரை கட்டுமானப்பணிகள் போகாது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!!!

Read more...

Tuesday, July 8, 2008

'சூடான' கேள்வி-பதில் : Part 3

கே: தசாவதாரம் - பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டதே. ஏதாவது 'எஃபெக்ட்' இருக்கிறதா?

ப: 1. 'ஸ்ரீரங்கநாதருக்கு' ஒரு ச்சின்ன பக்தை கிடைத்துவிட்டார். எங்கள் வீட்டு பாப்பாதான் அது. 'அந்த' கடவுள்தான் வேண்டுமென்றதால், இணையத்திலிருந்து ஒரு படம் அச்செடுத்து, வீட்டில் கதவில் ஒட்டியாகிவிட்டது.

2. ஒரு நாளைக்கு பல தடவை 'கல்லை மட்டும்' மற்றும் 'முகுந்தா' கேட்காமல் அவளால் இருக்க முடியவில்லை.

3. ஒரு வாரம் கழித்து (திரைப்படத்தை தூக்கக் கலக்கத்தில் பார்த்த) பாப்பா (3.5 வயது) சொன்ன ஒரு வரி விமர்சனம். 'He likes her. But She dont like him'.


கே: 'கொல்றாங்கோ... கொல்றாங்கோ' அப்படின்னு யாராவது உங்களிடம் சரணடைந்திருக்கிறார்களா?

ப: ஆம். ஒரு நாள் நண்பரின் வீட்டில் இருந்தபோது, நண்பரின் மகன் (வயது 5), 'சேவ் மீ, டாடி இஸ் கில்லிங் மீ' - என்று ஓடி வந்தான்.


நண்பர் பின்னாடியே வந்தார் - டென்ஷனாகாதீங்க. அவன் ஆங்கிலத்தையும், தமிழையும் சேர்த்துப் பேசறான். அதாவது - நான் அவனை 'கிள்ளிவிடுவேன்' என்று பயமுறுத்தினால், அதை ஆங்கிலத்தில் 'டாடி இஸ் கிள்ளிங் மீ' என்று ஓடிவருகிறான் என்றார்.


யப்பா, அதை எங்களிடத்தில் சொல்லியதால் பரவாயில்லை, வெளியே யாரிடமோ, பள்ளியிலோ கூறிவிட்டால், பெற்றோர்களை தூக்கி உள்ளே வைத்துவிடுவார்.. பாத்துக்கோங்க... என்று கூறிவிட்டு வந்தோம்.


கே: எல்லோரும் காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் இப்படி போட்றாங்களே, நீங்க போடலியா?


ப: சாமி. ஆளை விடுங்க. அதுக்கு பதிலா இதை கேளுங்க.


ஒரு காலத்துலே சென்னையிலிருந்து மாதமொருமுறை மென்பொருள் சேவைக்காக நாகர்கோவிலுக்கு போய்வந்துகொண்டிருந்தேன்.


அப்படி ஒரு முறை சென்னை திரும்பிவரும்போது, பேருந்தில் கடைசி ( நீள) இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனக்கு முன் ஒரு ஜோடி. வண்டி புறப்பட்ட சிறிது நேரம் கழித்து இருட்டில், சின்ன 'சில்மிஷங்கள்' செய்ய ஆரம்பித்திருந்தனர். நானும் முன் இருக்கையின் ஜன்னல் கண்ணாடியில் பிரதிபலிப்பில் தெரிந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.


கொஞ்ச நேரம் கழித்து சற்றே சாய்ந்து உட்கார்ந்தேன். அப்போது பின் இருக்கையிலிருந்த ஒருவர் என் தோளில் தட்டி, "தம்பி, கொஞ்சம் நேரே உட்காருங்க. 'எங்களுக்கு' சரியா தெரியலே" என்றார்.


பிறகென்ன, சிறிது நேரத்துக்கு ஆடாது அசங்காது - பிரதிபலிப்பையே பார்த்துக்கொண்டு வந்தோம்.!!!





Read more...

தமிழ் படங்களை யாருக்கெல்லாம் போட்டுக் காட்டலாம்!!!

இப்போதைய ட்ரெண்ட் என்னவென்றால், ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு வெளி நாட்டில்
இருக்கிற யாராவது ஒரு பிரபலத்திடம் போட்டுக் காட்டுவது அல்லது போட்டுக் காட்டுவேன் என்று சொல்வது.


உதாரணம்:

தசாவதாரம் - ஜார்ஜ் புஷ்

புனித தோமையார் - போப்பாண்டவர்


இந்த பாணியை நாம் எப்போதோ ஆரம்பித்திருக்கலாம். எந்தெந்த படங்களை யாருக்கெல்லாம் காட்டியிருக்கலாம் என்று பார்க்கலாம்.


குருவி - அந்த கார் பந்தயத்துக்காக மைக்கெல் ஷுமேக்கருக்கு காட்டியிருக்கலாம்.

திருமலை - பைக் பந்தய வீரர் பர்ட் மன்றோ (Burt Monro) இல்லாததால், அவர் வேடத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸுக்கு காட்டியிருக்கலாம்.

அரசாங்கம் - கேப்டனின் துப்பறியும் திறமைக்காக டேனியல் கிரேக்குக்கு (புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர்) காட்டியிருக்கலாம்


பில்லா - அஜித் ஒரு காட்சியில் நீச்சல் குளத்தில் இருப்பார் - அதற்காக குற்றாலீஸ்வரனுக்கு படத்தை காட்டியிருக்கலாம்.


M.குமரன் s/o மகாலட்சுமி - ஜெயம் ரவியின் பாக்சிங் திறமைக்காக - மைக் டைசனுக்கு காட்டியிருக்கலாம்.


தாஸ் - ஜெயம் ரவியின் கால்பந்து திறமைக்காக டேவிட் பெக்காமுக்கு காட்டியிருக்கலாம்.

இப்படி செய்திருந்தால், தமிழ் சினிமா, உலகத்தரத்துக்கு எப்போவோ போயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. நீங்க என்ன சொல்றீங்க?

மேற்கூறிய தமிழ் படங்களின் சாதனைகளை எனக்கு நினைவூட்டி உதவி செய்த தமிழ் மசாலா பிரேமுக்கு நன்றி.

நீங்களும் விட்டுப்போன 'அருமையான' படங்களைப் பற்றி பின்னூட்டத்தில் கூறலாம்...

Read more...

Friday, July 4, 2008

கலகக்காரர்கள் சதி!!! உதவி தேவை!!!

கடந்த இரண்டு நாட்களாக எனது பதிவு தமிழ்மணத்தில் வலது பக்கத்தில் உள்ள 'மறுமொழிகள்' பாரில் வரமாட்டேங்குது... என்னன்னே தெரியல...

மக்கள்ஸ்... இதை எப்படி சரி செய்வது?... சொல்லுங்களேன்....

Read more...

இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ!!!



கதை v1.0:

ஒரு பாட்டி மரத்தடியில் வடை சுட்டுக்கிட்டிருந்தாங்க. அப்போ மரத்திலேர்ந்து ஒரு காக்கா வந்து ஒரு வடையை எடுத்துக்கிட்டு மறுபடியும் மரத்தில் போய் உக்காந்துகிச்சு. அந்த சமயம், கீழே ஒரு நரி வந்துச்சு. காக்காவைப் பாத்து, காக்கா, காக்கா, ஒரு பாட்டு பாடேன்னுச்சு. அந்த காக்காவும், பாட்டு பாடறதுக்காக வாயைத் திறந்தப்போ, அந்த வடை கீழே விழுந்துச்சு. நரியும் அந்த வடையை தூக்கிட்டு ஓடிப்போயிடுச்சு.


கதை v2.0:
ஒரு பாட்டி, மரத்தடியில் வடை சுட்டுக்கிட்டிருந்தேன். அப்போ மரத்திலேர்ந்து ஒரு காக்கா வந்து ஒரு வடைகளை எடுத்துக்கிட்டு மறுபடியும் மரத்தில் போய் உக்காந்துகிட்டேன். அந்த சமயம், கீழே ஒரு நரிகள் வந்தார். காக்காவைப் பாத்து, காக்கா, காக்கா, பல பாட்டு பாடேன்னேன். அந்த காக்காவும், பாட்டு பாடறதுக்காக வாய்களைத் திறந்தப்போ, அந்த வடை கீழே விழுந்துட்டார். நரியும் அந்த வடையை தூக்கிட்டு ஓடிப்போயிட்டே.


ஒரே கதையோட ரெண்டு மாதிரிகளைப் படிச்சிட்டீங்களா. அடுத்த பாராவையும் படிங்க. இனிமேதான் மேட்டரே.


கதை v2.0-லே பல இலக்கணப் பிழைகள் இருக்கிறதை நீங்க பாத்திருப்பீங்க. ஒரு தடவை பதிவோட தலைப்பையும் பாத்துக்கோங்க. இரண்டாவது கதையில் பல இடங்களிலே இலக்கணம் மாறினதாலே, அதை 'இலக்கியம்' னு சொல்லலாமா?? - தயவு செஞ்சு யாராவது சொன்னீங்கன்னா, 'இலக்கியவாதிகள்' லிஸ்டோட கடைசியிலே என் பேரையும் சேத்துடுவேன்.


(ஏதாவது %$# பின்னூட்டம் போடறதுக்கு முன்னாடி, லேபிளை ஒரு தடவை பாத்துக்கிடுங்க.... அவ்வ்வ்வ்.....)

Read more...

Thursday, July 3, 2008

ரீ-ரீமேக் : பாசக் கயிறு : NULLல மாமனார்



வெட்டிப்பயலின் ஒரிஜினல் பதிவு இங்கே. அதை ரீமேக் பண்ண கேஆரெஸ் பதிவு இங்கே. நம்ம டாக்டர் விஜய் எப்பவுமே செய்யற மாதிரி, ரீமேக்குக்கே ரீமேக்தான் இந்த பதிவு.

அவங்க ரெண்டு பேரும் - பொண்ணு எப்படி இருக்கணும்னு பையனும் - பையன் எப்படி இருக்கணும்னு பொண்ணும் - கண்டிஷன் போடறாமாதிரி பதிவு போட்டிருந்தாங்க.
ஆனா, இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசமானது (எல்லா திரைப்பட விளம்பரங்களிலும் இயக்குனர், நடிகர்கள் அவங்க படத்தை பத்தி இப்படித்தான் சொல்வாங்க). நீங்களே படிச்சி பாருங்க.

மொத்தம் ரெண்டே பாத்திரங்கள். நம்ம ஹீரோ சுரேஷ். அவரு நாரதர் நாயுடுவை பாக்க போறாரு.


வாப்பா சுரேஷ். எப்படியிருக்கே?

நான் நல்லா இருக்கேன் நாயுடு சார். நீங்க எப்படி இருக்கீங்க?

பகவான் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்பா. அப்புறம்? உனக்கு வயசாயிண்டே போறது. காலாகாலத்துலே கல்யாணம் பண்ணிக்கற உத்தேசமே இல்லையா? நேரா 60-ஆம் கல்யாணம் பண்ணிக்கப்போறியா?

அட, அது விஷயமாத்தான் சார் உங்களை பாக்க வந்தேன். நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க.

என் வேலையே அதுதானேப்பா. நல்ல தமிழ்க் கலாச்சாரத்தோட ஒரு நல்ல பொண்ணு பாத்துடலாமா?

சார். இருங்க. எனக்கு பொண்ணு, இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பே இல்லை.

ஏம்பா, அப்போ ஒரு கிழவியா இருந்தாகூட ஓகேவா?

அதில்லை சார். எந்த பொண்ணு வந்தா என்ன. எப்படியும் கல்யாணத்துக்கப்புறம் என்கூட சண்டைதான் போடப்போறா. என் அம்மாவுக்கும், அவளுக்கும் நடுவிலே மாட்டிண்டு முழிக்கபோறது நாந்தான். அப்புறம் நல்ல பொண்ணு என்ன, கெட்ட பொண்ணு என்ன. யாராயிருந்தாலும் எனக்கு ஓகேதான்.

அப்புறம் என்னப்பா, என் வேலை ரொம்ப சுலபமா போச்சு. டக்குன்னு யாராவது ஒரு பொண்ணை பார்த்து கட்டிவெச்சிடறேன்.

இருங்க சார். பொண்ணுதான் எப்படி இருந்தாலும் ஓகேன்னு சொன்னேன். ஆனா 'மாமனார்' எப்படி இருக்கணும்னு நான் இன்னும் சொல்லவேயில்லையே.

என்னது? மாமனார் எப்படி இருக்கணும்னு சொல்லப்போறியா. ஏம்பா, நீ பொண்டாட்டியோட குடும்பம் நடத்தப்போறீயா இல்லே மாமனாரோடவா?

இத கேளுங்க சார். எங்க தல ரஜினியே சொல்லியிருக்காரே 'உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்'னு.

இரு இரு. ஏம்பா, எதை எடுத்தாலும், ரஜினி சொன்னாரு, ரஜினி சொன்னாருன்னா, அப்ப மத்தவங்கல்லாம் சும்மா 'ரிப்பீட்டே', 'ரிப்பீட்டே'ன்னு சொல்லிட்டிருந்தாங்களா. அதை உங்க ரஜினி சொல்லலே. அதுக்கு முன்னாலேயே யாரோ சொல்லிட்டாங்க.

சரி விடுங்க சார். யார் சொன்னா என்ன, என்ன சொன்னாங்கன்னு பாருங்க. அதனால, நான் என் வரப்போற மாமனார் எப்படியிருக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.

எனக்கு வேறே வழி? இந்த வேலைக்கு வந்துட்டேன். நீ என்னென்ன சொல்றியோ கேட்டுத்தானே ஆகணும். சொல்லுப்பா, எப்படி இருக்கணும் உன் வரப்போற மாமனார். ஏதாவது கண்டிஷன்ஸ் வெச்சிருக்கியா?

சொல்றேன் கேளுங்க.

கண்டிஷன் நெ.1: இப்போ நான் தனியார் மென்பொருள் நிறுவனத்திலே வேலை பண்றேன்.

அதனாலே, அரசாங்கத்திலே பணியாற்றவரோட பொண்ணா பாத்துடலாமா?


அதுதான் கிடையாது. எனக்கு மாமனாரா வரப்போறவரும் தனியார் நிறுவனத்திலேதான் வேலை பாக்கணும். ஏன்னா, இந்த அரசாங்க வேலையிலே இருக்கறவர்னா, அடிக்கடி வீட்டுக்கு வந்து, இந்த கருணாநிதி சரியில்ல, ஜெயலலிதா சரியில்லே, ஸ்ட்ரைக் பண்னா கைது பண்ணிடுறாங்க - அப்படி இப்படின்னு புலம்பிக்கிட்டே இருப்பாரு.


நாம் அதைத்தானே தினமும் தமிழ்மணத்திலே பாத்துக்கிட்டிருக்கோம். அங்கேயாவது 'சூப்பர்', 'அவ்வ்வ்' இப்படி எதையாவது சொல்லிட்டு போயிடலாம். வீட்டிலே வந்து மாமனார் அறுக்க ஆரம்பிச்சிட்டார்னா, எங்கேந்து எஸ்கேப் ஆகறது.


ஏம்பா, அவங்க கஷ்டம் அவங்களுக்கு. சரி விடு. உனக்கு அரசாங்க மாமனார் வேண்டாம். அடுத்தது?

கண்டிஷன் நெ.2: தனியார் நிறுவனத்திலே வேலை பாக்கற என் மாமனார், அடுத்த ஒரு வருடத்திலே ரிடையர் ஆகணும் அல்லது வாலண்டரி டிடையர் ஆகிறா மாதிரி இருக்கணும்.


அட. இது எதுக்குப்பா. ஒரு வருஷத்துக்கு அப்புறமும் வேலை பாத்துக்கிட்டுருந்தா அது நல்லதுதானே?


அதுதான் இல்லை. அடுத்த ஒரு வருஷத்திலே எனக்கு வேலை உயர்வு வந்துடும். அதுக்கப்புறம் நான் ரொம்ப பிஸியாயிடுவேன். அப்போ பொறக்க போற என் குழந்தையை யார் பாத்துக்கறது. குழந்தையை தினமும் கார்த்தாலே நடைப்பயிற்சிக்கும், மாலையிலே பூங்காவுக்கும் யார் கூட்டிப்போறது. அதுக்கெல்லாம் மாமனார்தான் கரெக்ட்.


ஓ. குழந்தையை பாத்துக்கறதுக்கு இப்பவே ஆள் புடிக்கறே.
ரொம்ப நல்லதுப்பா. மேலே சொல்லு.


இதுலே இன்னும் விஷயம் இருக்கு. அப்படி அவர் ரிடையரோ அல்லது வாலண்டரி ரிடையரோ ஆயிட்டார்னா, அப்போ அவருக்கு நிறைய பணம் கிடைக்குமில்லே, அதிலே எனக்கு ஒரு 'ப்ரேஸ்லெட்'டாவது கிடைக்காதா. அதுக்காகத்தான் அப்படி சொன்னேன்.


அப்போ உனக்கு ஒரு சின்ன 'ப்ரேஸ்லெட்' போடணும்றதுக்காக உன் மாமனார் வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கணும்றே. இப்போதான், மக்கள் எல்லாருக்கும் 'பிரேஸ்லெட்' எப்படி கிடைக்குதுன்னு புரியுது. நீ சொல்லுப்பா. உனக்கென்ன, என் நேரம்தான் இப்போ சரியில்லே.


கண்டிஷன் 3: வீட்டிலே இருக்கும்போது மட்டும்தான் அவர் என்னை, 'மாப்ளே', 'மாப்ளே'ன்னு கூப்பிடலாம். நான் தெருவிலே தனியா நடந்து போகும்போது பாத்தார்னா, மாப்ளேன்னு கூப்பிடக்கூடாது.


இது என்னப்பா அநியாயமா இருக்கு? நீ எங்கே இருந்தா என்ன, அவர் உனக்கு எப்பவுமே மாமனார்தானே. மாப்ளேன்னு கூப்பிடாதேன்னா, அவர் என்னன்னு கூப்பிடுவார்? எதுக்காக இந்த கண்டிஷன்?

வீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க. அந்த சமயத்திலே ' நந்தி' மாதிரி வந்து 'மாப்ளே'ன்னு கத்தி காரியத்தையே கெடுத்தார்னா, யாருக்குதான் கோபம் வராது சொல்லுங்க.

ரொம்ப சரியா சொன்னேப்பா. ரோட்லே எங்கே பாத்தாலும், விரோதியை பாக்கறாமாதிரி டக்குன்னு தலையை திருப்பிக்கிட்டு போகச்சொல்லிடறேன். ஓகேவா. எனக்கு தலையே சுத்தறா மாதிரி இருக்கு. அவர் உன்னை எப்படி கூப்பிடணும்னு சொல்லிட்டே. நீ அவரை கூப்பிடறதுன்னு ஏதாவது கண்டிஷன் வெச்சிருக்கியா?

இருக்கே. அடுத்த கண்டிஷனே அதுதான். கண்டிஷன் நெ.4: என்னை 'மாமா'ன்னோ, 'சார்'ன்னோ கூப்பிடச் சொல்லி யாரும் வற்புறுத்தக்கூடாது. நான் மாமனாரை 'அப்பா'ன்னுதான் கூப்பிடுவேன்.

அடடா.. அடடா. அப்படியே புல்லரிக்குதுப்பா. இதுதான் உன்கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம். எல்லார்கிட்டேயும் ரொம்ப பாசமா இருப்பே. என்னதான் வெளி நாட்டுக்குப் போனாலும், நம்ம கலாச்சாரத்தையும், மனுசங்களையும் மதிக்கிற நல்ல உள்ளம் உனக்கு இருக்கு. நீ ரொம்ப நாள் நல்லா இருப்பேப்பா. நான் மனசார வாழ்த்தறேன்.

இருங்க சார். பாசம் கீசம் எல்லாம் ஒண்ணுமில்லே. அப்பான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம், அவருக்கப்புறம் அவரோட சொத்து எல்லாமே எனக்குத்தான் வரணும்னு அர்த்தம். புரிஞ்சுதா...

இதைக்கேட்டு நாயுடு மயக்கம் போட்டு விழுகிறார்.

Read more...

Wednesday, July 2, 2008

உணவகக் கதைகள் - 1

ஏய்.. என்னப்பா இங்கே சத்தம்? என்ன பிரச்சினை?

முதலாளி, வாங்க. இவர் பேரு சுரேஷ். குடும்பத்தோட எப்பவுமே நம்ம உணவகத்துக்குத்தான் சாப்பிட வருவார். உள்ளே 'குடும்ப அறை' இருக்கு - போய் உக்காருங்கன்னு சொன்னாலும் கேக்கமாட்டார். 'வெளியே' உட்கார்ந்து சாப்பிடறேன்னு சொல்வார்.

அதனாலென்னப்பா, உக்காரட்டுமே? அதுக்கு எதுக்கு தகராறு?

அதில்லை முதலாளி. எந்த ஐட்டம் கொடுத்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கறாரு. இட்லி குண்டாவேயில்லை. தோசை முறுகலாவேயில்லை. பஜ்ஜியை மனுசன் சாப்பிடுவானான்னு கேக்கறாரு. எதுக்கெடுத்தாலும் தகராறு பண்றாரு.

தம்பி, கஸ்டமர்ஸ்கிட்டே அன்பா நடந்துக்கணும். அவங்க என்ன கேக்கறாங்களோ அதை கொடுக்கணும். சண்டை போடக்கூடாது.

இவர்கூட பரவாயில்லேங்க. இவர் சொந்தக்காரங்க, கூட வர்றவங்க இவங்கல்லாம்கூட தாறுமாறா பேசறாங்க. ஒரு தடவை இந்த உணவகத்தை நாங்க நடத்திக் காட்டறோம். அப்போ எல்லா ஐட்டங்களும் சூப்பரா போடுவோம் அப்படின்னு சவால் விடறார்.

அப்படியா சொன்னார்? செய்யட்டுமே. யார் இந்த உணவகத்தை நடத்தினாலும் சரி. மக்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டாங்கன்னா எனக்கு சந்தோஷம்தான். ஐயா, நீங்களே அடுத்த வருஷத்திலிருந்து இந்த உணவகத்தை எடுத்து நடத்திக்கோங்க. நல்லாவேயிருங்க.

(சில நாட்களுக்குப் பிறகு)

முதலாளி, நாங்க அப்பவே சொன்னோம். அவர் தொல்லை தாங்கமுடியல. நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு எங்களுக்கு இப்பவே தெரிஞ்சாகணும்.

சரி. நானே அவரிடம் பேசறேன்.

ஐயா, நீங்க ரொம்ப தரக்குறைவா பேசறதா எங்க ஊழியர்கள் சொல்றாங்க. நீங்க மரியாதையா வெளியே போயிடுங்க.

என்னது? நான் எப்போ அப்படி பேசினேன்.

மூணு மாசம் முன்னடி நீங்க என் ஊழியர்கிட்டே 'இது போண்டா' அப்படின்றதுக்கு பதிலா 'இது போண்டாடா' அப்படின்னு 'டா' போட்டு பேசிட்டீங்க. எனக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கலை. இப்ப நீங்களே போறீங்களா, இல்லே கழுத்தை பிடிச்சி தள்ளட்டுமா?

'இது ரொம்ப அக்கிரமம், அநியாயம். அதுக்கு நான் அப்போவே மன்னிப்பு கேட்டுட்டேன். திடீர்னு இப்போ அந்த பேச்சை ஏன் இழுக்குறீங்க?' என்றபடியே அவரும் குடும்பத்துடன் வெளியே செல்கிறார்.

அதன் பிறகு, உணவக ஊழியர்களும், முதலாளியும் happily lived ever after. THE END.

டிஸ்கி-1:

மேற்கூறிய சம்பவமும், சம்பவத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. அப்படியும் யாரையாவது குறிப்பிடும்படியாக இருந்தால், அது 'தற்செயலானதுதான்'.

டிஸ்கி-2:

முழுக்க முழுக்க நமக்குத் தெரிந்த மனிதர்களைப் பற்றியே படம் எடுத்துவிட்டு, 'இதில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே' என்று போடும் மணிரத்னம் ஐயாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!!!

டிஸ்கி-3:

உணவகக் கதைகள் - 1ன்னு போட்டது சும்மா 'trend'க்காகத்தான். '2, 3'ம் பாகமெல்லாம் வராது.


Read more...

Tuesday, July 1, 2008

தசாவதாரம் Vs மெட்டி ஒலி By கஜினி


கஜினி கணக்காக தொடர்ந்து மூன்று வாரமாக முயன்று போன ஞாயிறன்று வெற்றிகரமாக தசாவதாரம் பார்த்தாயிற்று. அதைப் பார்த்துவிட்டு வண்டியில் வரும்போது (40 மைல்கள்) நானும் தங்கமணியும் பேசிக்கொண்டதுதான் இது....

தங்கமணி: அப்பாடா, 'மெட்டி ஒலி' மாதிரி இழுத்தடிக்காமே, 3 மணி நேரத்திலே முடிச்சிட்டாங்க..

நான்: என்னது? மெட்டி ஒலி மாதிரியா? தசாவதாரம் எங்கே, மெட்டி ஒலி எங்கே?

என்ன என்னது?. அதிலேயும் முதல்லேயே 5 சகோதரிகள்னு தீர்மானிச்சிட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு குடும்பம், பிரச்சினை. ஒரு அப்பா இருந்துக்கிட்டு எல்லாரையும் இணைச்சிக்கிட்டே கதையை நகர்த்திண்டு போறார்.அதே மாதிரி இங்கேயும் 10 வேடங்கள்னு தீர்மானிச்சிட்டாங்க. ஒரு 'கிருமி' எல்லாரையும் இணைச்சிண்டே கதையை நகர்த்திண்டு போறது.

அதனாலே? அதுவும் இதுவும் ஒண்ணாயிடுமா? இந்த படத்திலே 'க்ராஃபிக்ஸ்' இருந்துதே? மெட்டி ஒலியில் அது இல்லையே?

அப்பாடா. ஒரு வித்தியாசத்தை கண்டுபிடிச்சிட்டீங்க. இன்னும் கேளுங்க.

சொல்லு சொல்லு.

மெட்டி ஒலி கடைசி நாள் ஞாபகம் இருக்கா? உங்களுக்கு எப்படி மறக்கும்? அலுவலகம் போனா தொடர் மிஸ்ஸாயிடும்னு லீவ் போட்டுண்டு வீட்லே இருந்தீங்களே?

அது எதுக்கு இப்போ? மேட்டரை சொல்லு.

மெட்டி ஒலி கடைசி பாகம் - அரை மணி நேரமும் ஒரே ஷாட். நடுவே விளம்பர இடைவேளை கூட விடலை. கல்யாண மண்டபம், கீழே, மேலே அப்படின்னு காமிரா சுத்தி சுத்தி காட்டிண்டே இருந்தது. க்ராஃபிக்ஸே இல்லாமே அவங்க அப்படி எடுக்கலையா, என்ன?

அப்போ வேறே எந்த வித்தியாசமுமே இல்லைன்னு சொல்ல வரியா?

அப்படி கேளுங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய வித்தியாசம். பாட்டு. 'அம்மி அம்மி அம்மி மிதிச்சி...' அப்படின்னு அப்போல்லாம் நீங்க கூட நாள் முழுக்க பாடிண்டிருப்பீங்களே. எவ்ளோ நல்லா புரிஞ்சுது. இந்த படத்திலேயும் ஒரு பாட்டு வருதே. மல்லிகா பாடுற பாட்டு. கொஞ்ச நேரத்துக்கு அது தமிழ் பாட்டுதானானு சந்தேகம் வருதா இல்லையா?

அது சரி. ஆனா, மத்த பாட்டுக்களெல்லாம் நல்லா இருந்ததில்லையா? முகுந்தா, முகுந்தா பாட்டு அருமையா இருந்ததே?

ஆமா. கல்லை மட்டும், முகுந்தா ரெண்டு பாட்டுக்காக ஓகே சொல்லலாம்.

அவ்ளோதானா, கமல் மற்றும் அந்த முதல் பத்து நிமிட கதை இதெல்லாம் நல்லாயில்லையா என்ன?

கண்டிப்பா. எல்லா கமலோட நடிப்பு மற்றும் ரெண்டு பாட்டு சூப்பர் - சின்னச்சின்ன விஷயங்களைக்கூட ரொம்பவே கவனமாக யோசிச்சி பண்ணியிருக்காங்க. அதுக்காகவும் பாராட்டலாம். ஆனா...

ஆனா என்ன?

ஆனா படம் பாத்துட்டு ஒரு பத்து நிமிடத்துக்கு யாரை பாத்தாலும் கமல் மாதிரியே தெரியுது. இப்போ உங்களைப் பாத்தால்கூட கமல் மாதிரிதான் இருக்குது.


அப்படியா?


ஆமா. அந்த வில்லன் கமல் மாதிரியே இருக்கீங்க...

சரி சரி. கடைசியா என்ன சொல்லவர்றே? படம் நல்லாயில்லையா?

நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்........... தெளிவா குழப்பறாய்யா... முகுந்தா... முகுந்தா.......


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP