Wednesday, April 30, 2008

அரசியல்வாதி ஒருவர் - மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தால்!!!

என்னது? என்னோட அறையை உடைக்க போறீங்களா? எதுக்கு?

பக்கத்துல இருக்கிற என்னோட அறையிலிருந்து காண்டீனுக்கு ஒரு மேம்பாலம் கட்டப்போகிறோம். அதுக்கு உங்க அறை இடைஞ்சலா இருக்கு.
---

நீங்க உங்க குழுத்தலைவரா இருக்கலாம். ஆனால் ஓய்வறைக்குப் போகும்போதுகூட, உங்க குழுவில் இருக்கறவங்கல்லாம், 'வாழ்க, வளர்க' அப்படின்னு கோஷம் போட்டுக்கிட்டு உங்க பின்னாடி வர்றது கொஞ்சம்கூட நல்லாயில்லே.

---
எதுக்கு என்னோட ஒரு வார சம்பளத்தை பிடித்தம் செய்துட்டீங்க?

கடந்த ஒரு வாரமா நீங்க 9.15க்கு அலுவலகம் வந்து உங்க வருகைக்கு ஸ்வைப் செஞ்சிட்டு, 9.17க்கு வீட்டுக்குப் போயிடறீங்க. அதுக்கெல்லாம் நாங்க சம்பளம் கொடுக்கமாட்டோம்.

---
ஆமா. என் தம்பி நடத்தும் கம்பெனிக்கும் கொஞ்சம் ப்ராஜக்ட்ஸ் கொடுங்கன்னு நாந்தான் நம்ம க்ளெயண்ட்கிட்டே கேட்டேன். அதிலென்ன தப்பு?

---
இங்கே பாருங்க. உங்க மேலெ என்ன குறை சொன்னாலும் உடனே 1970லே, 1980லே அப்படின்னு ஆரம்பிச்சிடாதீங்க. அப்போல்லாம் நம்ம ஊரிலே கம்ப்யூட்டரே இல்லை. புரியுதா?

---
ப்ராஜெக்ட் ஏன் லேட்டா போகுதுன்னு கேட்டதுக்கு, போன குழுத்தலைவர் இருந்தபோது Effort variance 18.5% இருந்ததை, நீங்கள் வந்தபிறகு 16.3% ஆ குறைஞ்சிருக்கு அப்படின்னு நீங்க சொல்றது கொஞ்சம் கூட நியாயம் இல்லை.

---
இதோ பாருங்க. குழுத்தலைவர் சொல்றது உங்களுக்கு பிடிக்கலேன்னா, அவரை கூப்பிட்டு பேசுங்க. அதை விட்டுட்டு விசைப்பலகை, எலிக்குட்டி இதெல்லாம் அவர்மேலே தூக்கி அடிக்கறதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லே.

Read more...

Thursday, April 17, 2008

சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!

சங்கம் 'ரெண்டு' போட்டிக்காக தமிழக அரசியல் தலைவர்களை பேட்டி கண்டால் என்ன சொல்வார்கள் என்று ஒரு சிறு கற்பனை. வழக்கம்போல் எல்லோரும் சேவையில் இருப்பதால், ரெண்டு வாக்கியமாவது சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். இனி அவர்கள் சொன்னவை. ஒரு மாறுதலுக்காக தலைவர்கள் வேறு வரிசையில்.

சு.சுவாமி:

ஒரு வாரத்திலே 'ரெண்டு' வழக்காவது போடலேன்னா, எனக்கு தூக்கமே வராது. இன்னும் 'ரெண்டே' பாயிண்ட்கள்தான் பாக்கி, பாத்துண்டே இருங்கோ, மத்திய அரசை 'ரெண்டே' நாள்லே கவிழ்த்துடுவேன்.

ஆற்காட்டார்:

தமிழகத்தில் மின்சாரத்தடை, சென்னையில் பேனர் பிரச்சினை இந்த 'ரெண்டை' தவிர எதுவேணாலும் கேளுங்க. 'ரெண்டே' 'ரெண்டுலே' (செகண்டுலே) பதில் தர்றேன்.

டி.ஆர்.பாலு:

வருடத்துக்கு 'ரெண்டு' பாலம் கட்ட அடிக்கல் நாட்டணும், வாழ்நாளில் 'ரெண்டு' பாலமாவது கட்டி முடிக்கணும் - இதுதான் எனது குறிக்கோள்.

காங்கிரஸ் தலைவர்:

சொன்னா நம்புங்க. நான் தமிழகத்தலைவரா பொறுப்பேத்து 'ரெண்டு' நாள்தான் ஆகுது. அதுக்குள்ளே என்னோட 'ரெண்டு' லோடு வேட்டி கிழிஞ்சி போச்சு.

விஜயகாந்த்:

எனக்கு மட்டும் 'ரெண்டு' அண்ணன் தம்பிங்க, 'ரெண்டு' மச்சான், 'ரெண்டு' சித்தப்பா பெரியப்பா, 'ரெண்டு' பசங்க இவங்கல்லாம் இருந்திருந்தாங்கன்னா, நான் ஏன் மத்தவங்களுக்கு கட்சியில் சீட்/பதவி இதெல்லாம் கொடுக்கப்போறேன்?

ஜெயலலிதா:

நாங்க தோழிங்க 'ரெண்டு' பேரும் ஓய்வுக்குப் போயிட்டிருக்கோம். இப்போ போய் 'ரெண்டு' போட்டியில் கலந்துக்க சொல்றீங்களே?

கலைஞர்:

சொந்த குடும்பத்தில் பிரச்சினை என்றால் 'இரண்டு' நிமிடம் தொலைபேசியில் முடித்துவிடுகிறேன் என்றும் மக்கள் பிரச்சினை என்றால் 'இரண்டு' வரி கடிதம் எழுதுவேன் என்றும் என்னை பற்றி தவறாக பேசுகிறவர்கள் யாராவது இருந்தால் உடனே வரவும். 'இரண்டு' வருடம் உள்ளே போட்டுவிடுகிறேன்.


பிகு: சங்கம் 'ரெண்டு' போட்டிக்கான எனது 'ரெண்டாவது' இடுகை இது.

Read more...

Wednesday, April 16, 2008

தமிழக அரசியல் தலைவர்களின் தொலைபேசியின் Answering Machine:

நம் உடன்பிறப்புகள் / ரத்தத்தின் ரத்தங்கள் அவரவர் தலைவர்களை தொலைபேசியில் அழைக்கின்றனர். ஆனால் தலைவர்கள் எல்லோரும் 'மக்கள் சேவை' செய்ய போயிருப்பதால், தொலைபேசியில் அவர்களுக்குப் பதிலாக அவர்களது குரலே கேட்கிறது. அந்த குரல் என்ன செய்தி சொல்கிறது என்று ஒரு சிறு கற்பனை செய்து பார்ப்போமா?

கலைஞர்:

கூப்பிடுவது எனது உடன்பிறப்பானால்... உனக்காக கவிதை/கடிதம் எழுதத்தான் போயிருக்கிறேன். மறக்காமல் நமது பத்திரிக்கை சந்தாவைக் கட்டிவிடவும். கலைஞர் தொலைக்காட்சியையும் பார்க்கவும். நன்றி.

கூப்பிடுவது அன்னை சோனியாவாக இருப்பின்... அன்னையே.. அந்த கூடுதல் அமைச்சர் பதவி என்னவாயிற்று என்பதை தெரிவிக்கவும்... நன்றி..

ஜெயலலிதா:

என் ரத்தத்தின் ரத்தமே! நான் என் தோழியுடன் ஓய்வெடுக்க சென்றுள்ளேன். தமிழகத்தில் உள்ள மைனாரிட்டி அரசை எதிர்த்து போராட்டம் அறிவித்திருந்தேனே, அதில் பங்கேற்காமல் எனக்கு ஏன் தொலைபேசுகிறாய்?. மரியாதையாய் தொலைபேசியை வைத்துவிட்டு போய் போராட்டத்தில் கலந்துகொள். எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க.

மருத்துவர்:

வணக்கம். நான் தமிழகத்தின் மாதிரி பட்ஜெட் தயாரிக்க சென்றுள்ளேன். நீ கூப்பிட்ட காரணத்தை கூறிவிட்டு, தமிழக அரசு ஏதேனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளதா என்பதையும் கூறு. உடனே நாம் அதை எதிர்த்து அறிக்கை விடவேண்டும். கூடவே எந்த பெரிய நடிகராவது திரைப்படத்தில் வெண்குழல் புகைக்கிறாரா என்பதையும் தெரிவி. அவரை எதிர்த்து நாம் போராடவேண்டும். நன்றி.

விஜயகாந்த்:

தொலைபேசியில் கூப்பிட்டதற்கு நன்றி... நம் திருமண மண்டபத்தை உடைத்தார்கள் அல்லவா மகாபாவிகள், அந்த வீடியோவை பார்க்க போயிருக்கிறேன். நீ கூப்பிட்ட விஷயத்தை சொன்னபிறகு, நாம் அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பதற்கும் பதிலை சொல்லிவிட்டு தொலைபேசியை வைக்கவும். நன்றி. வணக்கம்.

காங்கிரஸ் அலுவலகம்:


நம் தலைவர் வேட்டி மாற்ற போயிருக்கிறார். ஆம். இன்றைய கூட்டத்தில் அதை நம் கட்சியினர் கிழித்துவிட்டனர். நீங்கள் கூப்பிட்ட காரணத்தைக் கூறுங்... ஆ... என் வேட்டி.. ஏய்.. விடுங்கப்பா... ஏய்ய்...

Read more...

Tuesday, April 15, 2008

கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்

எல்லோருக்கும் நிதி டிவியின் சார்பாக வணக்கம்.


நாம இப்போ நமது மூத்த நடிகர் உலக நாயகன் திரு.கமல் அவர்களின் புதிய படப்பூஜைக்கு வந்திருக்கிறோம். இந்தப்புதிய படத்தில் நமது கமல் அவர்கள் ஒரு புதிய சாதனையை செய்யபோகிறார் என்று செய்தி வந்திருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்வதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம்.


திரு.கமல் கடந்த 75 வருடங்களாக நடித்துக்கொண்டிருந்தாலும், கடந்த 30 வருடங்களில் அவர் யாராலும் செய்ய முடியாத சாதனைகளை செய்திருக்கிறார் என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொண்டுள்ளோம்.


கடந்த 4 திரைப்படங்களில், திரு.கமல் அவர்கள் போட்டு நடித்துள்ள வேடங்கள் பின்வருமாறு:


2010 - தசாவதாரம் - 10 வேடங்கள்
2015 - அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - 41 வேடங்கள்
2020 - நாயன்மார்கள் - 63 வேடங்கள்
2025 - மகாபாரதம் - 106 வேடங்கள் (5 பாண்டவர்கள், 100 கௌரவர்கள் மற்றும் கிருஷ்ணர்)


இதோ, திரு.கமல் அவர்கள் வந்துவிட்டார். அவரிடம் பேசுவோம்.


வணக்கம். திரு.கமல் அவர்களே.. ஒரே திரைப்படத்தில் நீங்கள் போட்டுவரும் வேடங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அது போல், இப்போது நடிக்கப்போகும் திரைப்படத்தில் நீங்கள் எவ்வளவு வேடத்தில் நடிக்கப்போகிறீர்கள் என்று தெரிந்துகொள்வதற்கு நாங்கள் எல்லாம் ஆவலாக உள்ளோம். கடைசியாக நீங்கள் நடித்த 100 வேடங்களைவிட அதிகமாக இருக்குமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.


வணக்கம். நிதி டிவி நேயர்களே. ஆம். கடந்த 4 திரைப்படங்களில் நான் போட்டு நடித்துள்ள வேடங்கள் மிக அதிகம். கண்டிப்பாக இன்னும் அதிக வேடங்கள் போட வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், சுமார் 35 வருடங்களுக்குப் பிறகு நான் மிக சிரமப்பட்டு நடிக்கப்போகும் படம் இது என்று சொல்லலாம். கதையையும், என் வேடங்களையும் கேட்டபோது எனக்கே வியப்பாக இருந்தது. என்னடா, இதில் நாம் நடிக்க முடியுமா, நடித்தால் மக்கள் விரும்பி பார்த்து, படத்தை வெற்றி பெறச் செய்வார்களா என்று மலைப்பாக இருந்தது. ஆனால், படத்தை எடுக்கும் தம்பிதான் தைரியப்படுத்தி என்னை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்.


அது சரி, இந்த படத்தில் உங்களுக்கு எவ்வளவு வேடங்கள் என்று நீங்கள் சொல்லவேயில்லையே?

ரெண்டு.


பிகு: ரெண்டு போட்டிக்கான இடுகை அல்ல இது.

Read more...

Monday, April 14, 2008

எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!

சனி, ஞாயிறுன்னா எங்க வீட்டுலே ரெண்டுதாங்க... அதனாலெ, இப்போல்லாம் என்னாலே முடியவேயில்லை.. ஆனால் என்ன பண்றது. தங்கமணியின் தொல்லை தாங்கமுடியலேன்னு பொறுத்துண்டு போறேன்.

என்னோட எல்லா நண்பர்கள் கிட்டேயும் கேட்டுப் பாத்துட்டேன். அவங்க வீட்டுலேயும் வார இறுதியின்னா ரெண்டுதானாம். அவங்களும் அவங்கவங்க தங்கமணிகளின் தொல்லை தாங்கமுடியலேன்னு சொல்றாங்க.

அதனால், இப்போல்லாம் வார இறுதி வருதுன்னாலே, ரொம்ப பயமா இருக்குது. ரெண்டு, ரெண்டுன்றேனே அப்படின்னா என்னன்னு கேக்க மாட்டீங்களா?

கீழே இருக்கறதயும் படிங்க... இப்படியெல்லாம் யாரு சொல்வாங்கன்னு உங்களுக்கு சந்தேகம் வராதுன்னு நெனெக்கிறேன்.

1. எங்க அப்பா, அம்மாக்கு திருமண நாள் வருது. தங்க காசு ஏதாவது வாங்கி தரணும்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

2. ஒரு வேளை இந்த வருஷமே என் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டா, மூத்த மாப்பிள்ளையா நீங்க என்ன செய்றதா இருக்கீங்க?

3. வாரம் முழுக்க ஆபீசுக்குப் போயிடறீங்க. வார இறுதியிலாவது எங்க கூட கொஞ்சம் பேசக்கூடாதா? அப்படி என்ன அந்த கம்ப்யூட்டர்லே இருக்குதோ?

4. இந்த வாரம் கண்டிப்பா முழு நாளும் வெளியே போறா மாதிரி ஏதாவது ஒரு இடம் பிடிங்க.


இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியும்னு நெனெக்கிறீங்க? அப்படி ஏதாவது பதில் சொல்லிட்டாக்கூட, அது அடுத்தடுத்த கேள்விகளுக்கு அடிப்படையா அமையும்னு புரிஞ்சிக்க கொஞ்ச நாளாயிட்டது எனக்கு.


அதனால, சனி, ஞாயிறுன்னா எப்பவுமே எங்க வீட்டுலே ரங்கமணியாகிய நான், அந்த ரெண்டையும் மூடிக்கிட்டு உக்காந்திருப்பேன்னு சொல்ல வந்தேன். அப்படி நான் மூடலேன்னா, வீடு ரெண்டாயுடும்னு நான் சொல்லலேன்னா உங்களுக்குத் தெரியாதா என்ன?

பிகு: ரெண்டு போட்டிக்கான எனது முதல் பதிவு இது..

Read more...

Saturday, April 12, 2008

கும்பல்லே கோவிந்தா!!! கும்பலோட கோவிந்தா!!!




Read more...

Friday, April 11, 2008

சன் ம்யூசிக் தொகுப்பாளினியை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்தால்???

சன் ம்யூசிக் தொகுப்பாளினி ஒருவர், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். முதல் நாளே அவரை ஒரு நேர்காணல் (interview) எடுக்கச்சொல்லி விட்டார்கள். அதுவும் தொலைபேசியில். விடுவாரா அவர்?... புகுந்து விளையாடிட்டார்... எப்படின்னு பாருங்க...


பதில்களில் ஒண்ணும் சுவாரசியம் இல்லாலதால், நேர்காணலில் அவர் கேட்கும் கேள்விகள் மட்டும் இங்கே.. பதில்கள் உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்...

இப்போ இன்டர்வியூ ஆரம்பம்.


ட்ரிங்... ட்ரிங்..

ஹலோ...

ஹலோ...


வாழ்க்கையிலே சுகம், துக்கம் ரெண்டுமே சேந்துதாங்க வரும். இந்த இரண்டையும் சரிசமமா ஏத்துக்கிட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுபவங்கதான் மனுசன். இன்னிக்கி காத்தாலே பாருங்க, நான் எழுந்தவுடனே காப்பி குடிக்கலாம்னு பாத்தேன்.. ஆனா, பாலே வரலே. சரி, பரவாயில்லேன்னு சொல்லி காப்பியே குடிக்காமெ நான் வேலைக்கு வந்துட்டேன். இதமாதிரி நீங்களும் இருந்திட்டீங்கன்னா, வாழ்க்கையிலே எந்த பிரச்சினையும் இல்லே. என்ன சொல்றீங்க.. சரி.. இப்போ இந்த நேர்காணலுக்குப் போகலாமா?


ஹலோ, சுரேஷ் இருக்காரா?


அப்படியா, சுரேஷ்தான் பேசறதா... நாங்க மன்னார் அன்ட் மன்னார் கம்பெனியிலேர்ந்து பேசறோம். நீங்க எப்படி இருக்கீங்க சுரேஷ்?


என்ன, ரொம்ப நாளா என் லைனை எதிர்பார்த்துட்டிருந்தீங்களா?... நானே இன்னிக்குத்தான் வேலைக்கு சேர்ந்தேன்!!! நீங்க எப்படி இருக்கீங்க?


ரொம்ப சந்தோஷம்... நானும் நல்லா இருக்கேன்... கொஞ்சம் உங்க டிவி வால்யூமை குறைக்கிறீங்களா? நீங்க பேசறது இங்கே எதிரொலி கேக்குது.


ஓகே.. நேர்காணலை ஆரம்பிக்கலாமா? சுரேஷ், நீங்க முதமுதலா வேலை பாத்த கம்பெனி பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.


ஆஹா.. அப்படியா...இருங்க உங்க வீட்டிலே இதை பத்தி சொல்றேன். ஆமா.. கல்யாணத்துக்குப் பிறகு நீங்க செஞ்ச முதல் டெஸ்டிங் எது?


சோ ச்வீட்... உங்களுக்குப் பிடித்த மென்பொருள் என்னன்னு நான் தெரிஞ்சிக்க முடியுமா?


ஹாஹா... ரொம்ப தமாஷா பேசறீங்க... நீங்க சமீபத்திலே எழுதிய மென்பொருள் என்ன? அதிலேர்ந்து சில வரிகளை சொல்லுங்க பாக்கலாம்.


சரி சுரேஷ்.. உங்களுக்கு நாங்க வேலை கொடுத்தால், எவ்ளோ நாளில் வந்து சேர்வீங்க?


லவ்லி.. இப்படிப்பட்ட ஆளைத்தான் நாங்க தேடிண்டிருந்தோம். இன்னிக்கே உங்களுக்கு ஆபர் லெட்டர் அனுப்பறோம். உடனடியா வந்து வேலைக்குச் சேருங்க.. என்ன... போனை வச்சிடவா.. வீட்லே எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க... பை......

சுரேஷ் ரொம்ப நல்லா பேசினாரு இல்லே... இப்படியே எல்லாரும் இருந்திட்டா, உடனடியா நாங்க செலக்ட் பண்ணிடலாம்...

ஓகே. அடுத்து நாம பேசப்போற நபர் ரமேஷ். அவர்கிட்டே பேசறதுக்கு முன்னாடி ஒரு சிறு இடைவேளை... நான் போய் காபி எடுத்துக்கிட்டு வந்துடுறேன்...சீ யூ... பை...

Read more...

Thursday, April 10, 2008

மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால்???

மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால், எப்படியெல்லாம் பேசுவார்? பாப்போமா??


என்ன.. இந்த மென்பொருள் வேலை செய்யவில்லையா... நேத்து எல்லாம் நல்லா வேலை பண்ணிச்சா?.. இதுக்கு முன்னாடி என்ன உள்ளீடு (input) கொடுத்தீங்க.. இன்னிக்கு காலையிலே வழக்கம்போல வெளியீடு (output) சரியா வந்ததா?


ஆமாங்க... நான் "அரை நிரலர்தான்" (programmer). இப்போதான் 1000 நிரல்களை (programs) எழுதியிருக்கேன்.


என்னது... ஒரு வாரமா எந்த வெளியீடும் (output) வரலியா? முன்னாடியே என்கிட்டே வந்து சொல்றதுக்கென்ன? சரி.. பார்க்கிறேன்.


இந்த மென்பொருள் சரியா வேலை செய்யலேன்னு சொன்னா எப்படி? மொதல்லே நீங்க போய் எல்லா சோதனைகளும் பண்ணிட்டு வாங்க... அதை பாத்தப்புறம்தான் எதையும் செய்யமுடியும்.

ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே வந்திருக்ககூடாதா? இப்போ பெரிய பிரச்சினையாயிடுச்சு. என்னாலெ முடிஞ்சத நான் செய்துபாத்துட்டேன். நம்ம ஆலோசகர்களுக்கு (consultants) சொல்லி அனுப்பிடுங்க.


எவ்வளவு தரம் சொல்றது உங்களுக்கு?. என்னதான் அவசரமா இருந்தாலும், இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தாதான் இந்த மென்பொருளை நான் பார்ப்பேன்.

இதோ பாருங்க.. என்னால் ஆனத நான் செய்துட்டேன். இனிமே ராத்திரி 12 மணி தாண்டினால்தான் இந்த செயல் (process) வேலை செய்யுமான்னு சொல்லமுடியும்.

3 மணிக்கு ஒருதடவை இந்த மென்பொருளோட செயல்திறனை கண்காணிச்சிக்கிட்டே இருங்க. என்ன பிரச்சினை வந்தாலும், உடனே எனக்கு தெரியப்படுத்துங்க. ஓகேவா.

ஆமா. நான் முன்னாடி மருத்துவரா இருந்தேன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
நீங்க எழுதுற குறிமுறைகள் (code) எதையும் புரிஞ்சிக்கவே முடியலையே!!!

Read more...

Wednesday, April 9, 2008

ஒகெனெக்கல்லிருந்து பாடம் - எதிர்காலத் திட்டங்களுக்கு யோசனைகள்!!!

ஒகெனெக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகாவில் கிடைத்த எதிர்ப்பை பாடமாக வைத்துக் கொண்டும், எதிர்வரும் திட்டங்களுக்கு இதே மாதிரி எதிர்ப்பு வராமலிருக்கவும், நமது தமிழக அரசு என்னென்ன செய்யலாம் என்றபோது எனக்கு தோன்றிய யோசனைகள் இது. எப்படியிருக்குன்னு பாத்து சொல்லுங்க.

1. கர்நாடக பேரன், பேத்திகளுடன் ஆலோசித்தல்:

தமிழகத்தில் திட்டங்கள் போட்டால், அவை நடைமுறைக்கு வருவதற்கு 10 வருடங்களேனும் ஆகின்றது. அதற்குள், பக்கத்து மாநிலங்களில் பல புதிய தலைவர்கள் (அடுத்த தலைமுறையினர்) வந்துவிடுகின்றனர். பழைய திட்டங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அதனால், அவற்றை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறுகின்றனர். அதனால், எந்த திட்டம் போட்டாலும் இனிமேல், கர்நாடகத் தலைவர்களின் பேரன், பேத்திகளிடமும் ஆலோசித்து, அவர்கள் ஒப்புதலை இப்போதே பெற்றுக்கொள்ளச் செய்யலாம்.

2. தேர்தல் நேரங்களில் புதிய திட்டங்கள் இல்லை.

கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி - ஆகிய நம் அண்டை மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் வருமாயின், அந்த வருடம் தமிழ் நாட்டில் எந்த புதிய திட்டமும் தொடங்கக்கூடாது என்று முடிவெடுக்கலாம்.

3. தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் இனிமேல் கர்நாடகத்தில்:

தமிழ் திரைப்பட பாடல்களின் படப்பிடிப்புகள், வெளி நாடுகளுக்குப் பதிலாக இனிமேல் கர்நாடகத்தில்தான் எடுக்கப்படவேண்டும் என்று அறிவிக்கலாம். இதனால், அங்கு என்ன கலாட்டா வந்தாலும் அவர்கள் இத்தகைய படங்கள் வெளியிடுவதை தடுக்க மாட்டார்கள். மேலும், தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க, கர்நாடகத்தில் படப்பிடிப்பு நடத்துபவர்களுக்கு சிறப்பு வரிச்சலுகை அளிக்கலாம்.

4. தொலைக்காட்சித் தொடர்களில் கன்னடத்தில் சில வசனங்கள், பாடல்கள்:

'புகுந்த வீடா பொறந்த வீடா, எந்த இடம் நல்ல இடம்' என்ற பாடலை 'உட்டித மனெயா, ஹோத மனெயா, யா மனே ஹொள்ள மனே' என்று மொழிபெயர்த்து பாடுமாறு தொலைக்காட்சித் தொடர் இயக்குனர்களை கேட்டுக்கொள்ளலாம். இப்படி நடு நடுவே கன்னடத்தில் பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒலிபரப்பினால், எந்த பிரச்சினை வந்தாலும், கர்நாடகத்தில் இத்தகைய தொடர்களை ஒளிபரப்புவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.


நீங்க என்ன நினைக்கிறீங்க?

Read more...

Tuesday, April 8, 2008

ஒரு வருங்காலத் தலைவர் உருவாகிறார்!!!



தலைவரோட பேரனை பாத்துக்க கட்சியிலிருந்து ஆள் வேணும்னு கேட்டிருந்தாங்களே,
கிடைச்சாங்களா?

கிடைச்சாங்களாவா, அந்த வேலைக்கு போக ஒரே அடிதடியாம்.
ஏன்?ஒவ்வொரு தடவை 'டயபர்' மாத்தும்போதும், அவர் 1000 ரூபாய் நோட்டு தர்றாராம்.
----



'2020' திட்டத்துக்கு நான் இப்போவே தயாராக ஆரம்பிச்சிட்டேன் அப்படின்னு தலைவரோட பேரன் எந்த திட்டத்தை பத்தி சொல்றாரு?
அது ஒண்ணுமில்லே. 2020லே அவர் கல்யாணம் செய்துக்கபோறாராம்.
----



இந்த பள்ளியிலே காலையிலே மற்றும் மதியம் - ஒரு மணி நேரத்துக்கு யாரும் கழிப்பறை
போகமுடியாதா? ஏன்?

இந்த பள்ளியில் படிக்கும் ஒரு அரசியல்வாதியின் பேரன் 'போகும்' நேரமாம் அது.
----


தலைவரோட பேரன் வீட்டிலே விளையாடும்போது கூட நண்பர்களை சேர்த்துக்க மாட்டாராம்.ஏன்?
கேட்டா அவங்களுக்கு என் இதயத்திலே இடம் உண்டு... ஆனால் என் பொம்மைகளை தர மாட்டேன்கிறாராம்.
----



நம் தலைவர் பேரன், ரெண்டு மணி நேரமா அழுதிட்டிருக்காறா? ஏன்?
கட்சியில் அவருக்கு 'சிறுவர்' அணி தலைவர் பதவி வேணுமாம்.
----



இவரு வருங்காலத்திலே நம்ம தலைவரை போல வருவாருன்னு எப்படி சொல்றே?
இவரு படிக்க்கிற பள்ளியில் என்ன பிரச்சினை வந்தாலும், உடனே வாத்தியாருக்கு கடிதம் எழுத ஆரம்பிச்சிடறாரே..
----



கட்சிப் பத்திரிக்கையில் வந்த விளம்பரம்:
வாரீர்!! வாரீர்!! அலைகடலென திரண்டு வாரீர்!!!
தலைவர் பேரன், வருங்கால முதலமைச்சர் கட்டியுள்ள வீட்டுபுது மனை புகுவிழா


இடம்: மெரினா பீச் (பாரதியார் சிலைக்கு பின்னால்)
நேரம்: வரும் ஞாயிறு மாலை 6.00 மணிக்கு




Read more...

வழக்கறிஞர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால்???

ஒரு தத்துவம்:

1000 பிழைகள் வாடிக்கையாளருக்குப் போவதில் தப்பேயில்லை... ஆனால், நன்றாக வேலை செய்யக்கூடிய ஒரு ப்ரோக்ராம் அவருக்குப் போகாமல் இருக்கக்கூடாது...

ஒரு விருப்பம்:

அனைத்து மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஜூன் மாதம் முழுவதும் கோடை கால விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.


ஒரு வேண்டுகோள்:

மெ.உ.ஆ (மென்பொருள் உதவி ஆவணம்) 3.2.3அ-இல், செக்ஷன் 25.33.இஅ-இன் படி, இந்த மென்பொருள் இப்படி வேலை செய்யக்கூடாது. அப்படி தவறாக செய்வதால், உடனே அதிக பட்ச கவனம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு கேள்வி:

போன மார்ச் மாதம், 10ம் தேதி மதியம் 2 மணியிலேர்ந்து 3 மணிக்குள்ளே, நீங்க என் டேடாபேஸ்-லே ரெண்டு மூணு தடவை நுழைஞ்சிருக்கீங்க. ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா???


ஒரு காரணம்:

அந்த நிறுவனத்துக்காக நான் எவ்வளவோ உழைச்சிருக்கேன். அதனால்தான், என்னை அவங்க டெல்லி கிளைக்கெல்லாம் அனுப்பிச்சாங்க. ஆனால், சமீபகாலமாக அங்கே வேறே ஒருத்தரோட ஆதிக்கம் ரொம்ப அதிகமாயிட்டிருக்கு. அது எனக்குப் பிடிக்கலே. அதனால், நான் இப்போ வேறு
நிறுவனத்திற்கு மாறிவிட்டேன். ஆனால், அந்த நிறுவனத்தில் செய்த மென்பொருளைப் பற்றி இங்கு நான் நிச்சயமாக பேசமாட்டேன்.


ஒரு வாடிக்கையாளர்:

என் தாத்தா இவரிடம் ஒரு மென்பொருள் செய்யக்கொடுத்தாரு. இவரு என்னடான்னா, அதை முடிக்காமெ இவ்ளோ காலம் இழுத்தடிச்சிட்டாருங்க...என் பேரனோட காலத்திலாவது எங்களுக்கு அந்த மென்பொருள் கிடைக்குமாங்கறது சந்தேகமா இருக்கு...

ஒரு டிஸ்கி:

தமிழ்மணத்திலே ஒரு வழக்கறிஞர் இருக்காருன்னு தெரியும்.. அவரோட சேத்து, மற்ற எல்லோரும் இதை வெறும் நகைச்சுவையாக எடுத்துப்பீங்கன்னு நெனெக்குறேன்... அப்படிதானுங்களே!!!

ஒரு முன்னோட்டம்:

இப்பவே துண்டு போட்டுடறேன். வேறு பல துறையினரும் மென்பொருள் நிபுணராக வேலை பார்த்தால் எப்படி இருக்கும்னு... என்னோட அடுத்த பதிவுகளில்.

Read more...

Sunday, April 6, 2008

கர்நாடகத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் எதையெல்லாம் நிறுத்தலாம்???

டாஸ்மாக் மது விற்பனை:

அரசு விளக்கம்: தமிழகத்தில் எல்லோரும் குடித்துவிட்டு கர்நாடகத் தலைவர்களை கண்டபடி பேசுகின்றனர். இதனால், அவர்களுக்கு தேர்தலில் கவனம் செலுத்தமுடியாமல் போகிறது. அதனால், எஸ்.எம்.கிருஷ்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த தேர்தல் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூடுமாறு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தொலைக்காட்சித் தொடர்கள்:

அரசு விளக்கம்: கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்கள் எப்போதும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பதால், தேர்தல் கூட்டங்களுக்கு வருவதேயில்லை. அதனால், தேர்தல் முடியும்வரை அனைத்துத் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களையும் நிறுத்துமாறு, குமாரசாமி கேட்டுக்கொண்டதால், அதை தமிழக அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

தினசரி, வாரப் பத்திரிக்கைகள்:

அரசு விளக்கம்: தமிழகத்தில் இருக்கும் தலைவர்கள் பேசுவதெல்லாம், இந்தப் பத்திரிக்கைகள் பெரிதாக வெளியிட்டு பிரச்சினைகளை மேலும் வளர்க்கின்றனர். அதனால், கர்நாடகத்தில் தேர்தல் நேரத்தில் குழப்பம் உண்டாகிறது. அதனால், அங்கு தேர்தல் முடியும்வரை அனைத்து தமிழக பத்திரிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என்று நாகராஜ் கேட்டுக்கொண்டதால், தமிழக அரசும் செவி சாய்த்துள்ளது.

மின்சாரம்:

அரசு விளக்கம்: கர்நாடகா தேர்தல் காரணமாக அங்கு தலைவர்கள் தினமும் பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர். அதற்கு அவர்களுக்கு நிறைய மின்சாரம் தேவைப்படுகிறது. நெய்வேலியிலிருந்து அவர்களுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், தமிழக மக்கள் அவர்களது மின்சாரத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசும் அதற்கிணங்கி, மே மாதம் முழுவதும் தமிழகத்தில் மின்சாரத்தை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அரசு வேண்டுகோள்:
இன்னும் எதையெல்லாம் நிறுத்தலாம் என்று அரசு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இது வெறும் கற்பனைதாங்க!!! எப்படியிருக்குன்னு சொல்லிட்டுப் போங்க...


Read more...

Saturday, April 5, 2008

தமிழ்மண பதிவர்களுக்கு ஒரு சூடான கேள்வி!!!

Read more...

Friday, April 4, 2008

பின்னூட்டப் பெட்டியில் படங்கள் ஏற்ற முடிந்தால்???






Read more...

Thursday, April 3, 2008

வீட்டு உரிமையாளர் விதிக்கும் நிபந்தனைகள்: (சென்ற பதிவின் தொடர்ச்சி)

புதிதாக வீட்டுக்கு வருபவர், வீட்டு உரிமையாளருக்கு விதித்த நிபந்தனைகள், சென்ற பதிவில் இங்கே. அந்த கடிதத்திற்கு வீட்டு உரிமையாளர் அனுப்பும் பதில்தான் இந்த பதிவு.

அனுப்புனர்: வீட்டு உரிமையாளர்
பெறுனர்: வாடகைக்கு வருபவர்

ஐயா,

உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் நிபந்தனைகள் எல்லாம் படித்தேன். அருமையான யோசனைகள். ஆனால் நிபந்தனைகளைப் போட வேண்டுமென்றால், அவை என் நிபந்தனைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

அதனால், கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் படித்து, வாடகை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உடனடியாக வீட்டுக்கு வாடகைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வழக்கம்போல், அடைப்புக்குறிக்குள் இருப்பவை, நான் என் மனதில் நினைப்பதாகும் அவற்றை நீங்கள் படிக்க வேண்டாம். இனி என் நிபந்தனைகள்:

கலைஞர் குடும்பத்தினர் ஒருவர் கட்சி/ஆட்சிப் பதவிக்கு வரும்போது மட்டும்
(எப்படியும் 1 வருடத்திற்கு ஒருவர் புதிதாக வந்து கொண்டே இருப்பார்)

சுப்ரமணியம் சுவாமி டீ பார்ட்டி அல்லது யார் மேலாவது வழக்கு போடும்போது மட்டும்(அப்பாடா, ஆறு மாததிற்கு ஒரு முறையாவது வாடகையை ஏத்திடலாம்).

டி.ஆர்.பாலு ஒரு பாலம் புதிதாக கட்ட ஆரம்பிக்கும்போதும்
(அவருதான் அடிக்கடி ஒரு புது பாலம் கட்டறேன்னு வேலையை ஆரம்பிக்கறாரே)

குமுதன், விகடனில் ரஜினியின் கவர் ஸ்டோரி வரும்போது மட்டும்
(அவரோட கதை இல்லாமே இதுக ரெண்டும் இல்லவே இல்லையே)

தமிழகத்தில் ஒரு போலி சாமியார் பிடிபடும்போது மட்டும்
(மாசத்துக்கு ஒருத்தர் கண்டிப்பா மாட்டுவாரு)

தமிழ்மணத்தில் '@##' மற்றும் '@#$' பதிவுகள் வரும்போது மட்டும்
(அதுதான் அடிக்கடி 'சூடா' வருதே)

தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் கொள்ளை போகும்போது
(இதுவும் அடிக்கடி நடக்குதுன்னு நினைக்கிறேன்)

Read more...

Wednesday, April 2, 2008

எனக்கு 16 மொழிகள் தெரியும்!!!

தமிழ்

ஆங்கிலம்

இந்தி

தெலுங்கு

மலையாளம்

கன்னடம்

மராத்தி

குஜராத்தி

பெங்காலி

பஞ்சாபி

ஒரியா

ஸ்பானிஷ்

சைனீஸ்

ப்ரென்ச்

ஜெர்மன்

சிங்களம்


இப்படிப்பட்ட மொழிகள் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.


உங்களுக்கு???

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP