நேற்று (12/12/2009), Connecticut Glastonbury-யில் வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) கூட்டம் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டத்தில், கனெக்டிகட் தமிழ் சங்கத்தின் தலைவி திருமதி.ஸ்ரீமதி ராகவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
FeTNAவின் தலைவர் முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் - இந்த பேரவையின் வரலாற்றினையும், ஆண்டு விழாவின் சிறப்பினையும், சென்ற முறை அட்லாண்டாவில் நடைபெற்ற கூட்டத்தின் வெற்றியையும் சொல்லி, அதைவிட இந்த முறை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டிய அவசியத்தையும் கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு.நல்லதம்பி (மறைந்த நடிகர் திரு.என்.எஸ்.கிருஷ்ணனின் புதல்வர்) தன் பெற்றோரின் வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
விழாவில் பேசிய முனைவர் திரு.பழனி சுந்தரம் அவர்கள் - இந்த விழாவினை வெற்றிகரமாக நடந்த அனைத்து தமிழர்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், ஜூலை மாதம் நடக்கவிருக்கும் விழாவில் பங்கேற்கவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் இன்னும் முடிவாகவில்லையென்றும் கூறினார். ஆனாலும், பலரை இன்னும் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு பட்டியலை வாசித்தார்.
திரு.அப்துல் கலாம் அவர்கள் (இவரை மூன்று வருடங்களாக விழாவுக்கு வரவழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்), பேரூர் ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், HCL தலைவர் ஷிவ் நாடார், PepsiCo தலைவி இந்திரா நூயி, எழுத்தாளர் சிவசங்கரி, இறையன்பு IAS, இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், நடிக/ நடிகையர் சூர்யா, ஜோதிகா, விக்ரம், விவேக், வடிவேலு, கஞ்சா கருப்பு, மதுரை முத்து - ஆகிய பலரும் வர வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.
முனைவர். திரு முத்துவேல் செல்லையா, முனைவர் திரு.பழனி சுந்தரம், FeTNAவின் முன்னாள் தலைவர் திரு. நாச்சிமுத்து சாக்ரடீஸ், தமிழ்மணம் சங்கரபாண்டி மற்றும் பலருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது.
இதே மாநிலத்தில் இருக்கும் - பிரபு (இவரும் பதிவராம். ஆனால் கடந்த ஒரு வருடமாக ஒன்றும் எழுதவில்லையாம்!), சுகன் மற்றும் மோகன் என்று சில தமிழர்களின் நட்பும் கிடைத்தது.
குடி என்பது எனக்கு 'குடி'த்தனத்தில் மட்டுமே இருப்பது என்பதால் ஒன்றும் குடிக்காமல், அங்கிருந்த அருமையான உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, சுமார் 8.30 மணிக்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.
*****

(வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி)

(இ-வ திரு. நல்லதம்பி, திரு.முத்துவேல் செல்லையா, திரு.பாலகிருஷ்ணன், திரு.பழனி சுந்தரம்).

(முனைவர் திரு.முத்துவேல் செல்லையா பேசுகிறார்).

(முனைவர் திரு.பழனி சுந்தரம் பேசுகிறார்).
Read more...