Showing posts with label சங்கிலி. Show all posts
Showing posts with label சங்கிலி. Show all posts

Wednesday, April 22, 2009

உச்சத்தைத் தொட்ட தினம்...

அண்ணன் ஆதி அவர்களின் இந்த இடுகைதான் இதுக்கு முன்னோடி!

அவர் நம்மை அழைக்கலேன்னாலும், நாமளா போடறதுதானே சங்கிலி இடுகைக்கும், எதிர் இடுகைக்கும், நமக்கும் மரியாதை. அதனாலே என்ன சொல்ல வர்றேன்னா... கீழே படிங்க. உங்களுக்கே புரியும்.

***

அன்று ஆகஸ்ட் 27. சஹானாவின் பிறந்த நாள்.

வேறொரு இடத்தில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், வீட்டிலும் அலங்காரம் செய்ய ஆரம்பித்திருந்தோம்.

அன்று மட்டும் சஹானா சமத்தாக இருந்ததால், எங்களுக்கு சந்தோஷம்.

நிறைய பரிசுகள் வரப்போகிறதென்று தெரிந்ததால், அவளுக்கும் சந்தோஷம்.

பார்ட்டிக்கு வரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வாங்கி வைத்தாயிற்று.

பெரியவர்களுக்காக குடிக்க (குளிர்பானம்தாங்க!), கொறிக்க - சில சாப்பாட்டுப் பொருட்கள் தயார்.

வண்ண வண்ண ரிப்பன் தோரணங்கள் கட்டியாகி விட்டது.

அவற்றை மேற்கூறையிலிருந்து பக்கவாட்டுச் சுவர்களில் ஒட்டவைத்து, ஒரு விழா மேடைக்கான தோற்றத்தை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தோம்.

பிறந்த நாள் புத்தாடை அணிவித்து, சஹானாவின் புகைப்படங்களை அங்கங்கே சுவற்றில் மாட்டியாயிற்று.

நாங்களும் பழைய ஆடைகளை துவைத்து, நெருப்புப் பெட்டியின் கீழ் தேய்த்து போட்டுக் கொண்டாயிற்று.

நடுநடுவே ஊரிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வாழ்த்து தொலைபேசிகள் வந்த வண்ணமிருக்கின்றன.

ஏற்பாடு செய்திருந்த பிறந்த நாள் கேக் தயாராகி விட்டதென்று தொலைபேசியும் வந்தாயிற்று.

எல்லோரும் வந்திருந்த பார்ட்டியில் குழந்தைகளுக்கான சிலபல நிகழ்ச்சிகள் நடைபெற்று, அனைவரும் விடைபெற்று சென்றனர்.

இப்படியாக ஒரு பிறந்த நாள் விழா மகிழ்வுடன் நிறைவேறியது.

*** The End ***

பின்குறிப்பு:

என்னடா, ஒண்ணுமே புரியல. அதுக்குள்ளே இடுகையும் முடிஞ்சிடுத்தேன்னு நினைக்கிறவங்க - ஒரு நிமிஷம்.

மேலே 'அவற்றை'ன்னு ஆரம்பிக்கும் வாக்கியத்தை மறுபடி படிக்கவும்.

இடுகையின் தலைப்பையும் ஒரு முறை படிக்கவும்.

புரிஞ்சிடுத்தோன்னோ?

Read more...

Friday, October 31, 2008

2008 புத்தாண்டு தீர்மானங்கள் - ஒரு பின்னோட்டம்

போன வருஷம் வரைக்கும் புத்தாண்டுத் தீர்மானங்கள் அப்படின்னு எதையும் நினைத்ததில்லை. சரி, இந்த வருஷம் இரண்டு விஷயங்கள் செய்யலாம்னு ஆரம்பத்திலே நினைச்சதும், இன்னியோட முடிஞ்ச இந்த பத்து மாசம் வரைக்கும் அந்த
இரண்டு விஷயங்களையும் ஒழுங்கா செய்துட்டு வர்றதாலேயும், இனிமே வருஷா வருஷம் ஏதாவது தீர்மானம் போட்டு அதை நிறைவேற்ற முயற்சிக்கலாம்னு ஒரு தைரியம் பிறந்திருக்கு.


முதல் தீர்மானம்: பூச்சாண்டி


போன வருஷம் மத்தியிலே தமிழ்மணம் பாக்க ஆரம்பிச்சாலும், டிசம்பர் இறுதியில் நாமும் ஏதாவது எழுதுவோம்னு ஆரம்பிச்சேன். டிசம்பர் 24ம் தேதியிலிருந்து பல ஆரம்பகட்ட பிரச்சினைகளைத் தாண்டி, தமிழ்மணத்தில் இணைந்து, முதல் பின்னூட்டம் பெற்ற நாள் ஜனவரி 8.


வாரம் ஒண்ணு அல்லது இரண்டு சிரிப்பு பதிவு போட்டு, இந்த வருஷம் முழுதும் எழுதணும் - தினமும் இரண்டு பேராவது நல்லா சிரிக்கறதுக்கு நாம காரணமா இருக்கணும்னு நினைச்சி ஆரம்பிச்சது, வேகம் பிடிச்சி இன்னியோட 165+ பதிவுகளாயிடுச்சு.

அரை மணி நேரத்துலே அஞ்சு மேட்டர் உருவாகி, ரெண்டு மணி நேரத்துலே டைப் செய்து, அந்த வாரம் முழுக்க பதிவு போட்ட நாட்களும் உண்டு; ஒரே மேட்டரை ஒரு மாசம் வரைக்கும் முடிக்கத் தெரியாமல் இழுத்தடிச்சி வெளியிட்ட நாட்களும் உண்டு.

இந்த தீர்மானத்தாலே சாதிச்ச பெரிய விஷயம் என்னன்னா - உலகமெங்கும் பல இடத்தில் இருந்தாலும், மனம் விட்டு சிரிச்சி பேசக்கிடைத்த நண்பர்கள்.முதல் தடவை பேசும்போதே பலப்பல நாட்கள் பேசியதைப் போல் ஒரு உணர்வை பெற்றுத் தந்ததற்காக இந்த இணையத்துக்கு ஒரு நன்றி.

இதே மாதிரி யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையோட (மொக்கையோட- ந்னு நீங்க சொல்றது கேக்குது!!!) எழுதணும்னு நினைச்சாலும், வருங்காலத்துலே உருப்படியா எதையாவது எழுதணும்னு நினைக்கறதுண்டு.

இரண்டாவது தீர்மானம் : ஒரு வெளிநாட்டு மொழி

ரொம்ப வருஷமாவே ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழி கத்துக்கணும்னு இருந்த ஒரு ஆசை, இந்த வருஷம் புத்தாண்டு தீர்மானமாவே ஆயிடுச்சு.


அர்னால்டும், ஜாக்கி சானும் நமக்கு பிடிச்ச வெளிநாட்டு நடிகர்கள். இதிலே அர்னால்ட் பேசும்
ஆங்கிலம் நமக்குத் தெரியும்றதாலே, ஜாக்கி பேசும் சைனீஸ் கத்துக்கணும்னு ஆசை வந்துடுச்சு.


இங்கே நூலகத்திலிருந்து மாண்டரின் CD வாங்கி காரில் போகும்போதெல்லாம் கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாலு மாசம் வரைக்கும் மெதுவாக போன அந்த பழக்கம், நம்ம வழக்கமான வழக்கப்படி மெதுவாக குறைந்துகொண்டே வந்தது. யாராவது ஒருவரிடத்தில் பணம் கட்டிப் படித்தாலேயொழிய எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்றென்ணி இங்கே சைனீஸ் கற்றுக்கொடுக்க யாரையாவது தேடினேன்.


ஆள், பணம், நேரம் இந்த மூன்று காரணிகளில் ஏதோ ஒன்று சரிப்படாமலேயே போனதால், தொடர்ந்து காரிலேயே கேட்டு கற்றுக்கொள்ள முயற்சித்து வந்தேன். இப்படியே போய்க்கொண்டிருந்தபோது சென்ற மாதம் ஒரு ஆள் கிடைத்தார்.


உடனே பயிற்சியில் பணத்தைக் கட்டி சேர்ந்துவிட்டேன்.வாரம் ஒரு நாள் 1.5 மணி நேர வகுப்பு - 2 மாதத்துக்கு இந்த பயிற்சி வகுப்பு. எப்படியும் இந்த வருட முடிவில், மாண்டரின் மொழியில் சரளமாக (இல்லாவிட்டாலும், மெதுவாக) பேச முடியும் என்ற நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது. பேசுவதற்கு மட்டும்தான் இந்த பயிற்சி. எழுத, படிக்க கிடையாது. அதனால், அடுத்த புதுவருட தீர்மானம் ஒன்று ஏற்கனவே ரெடியாயிடுச்சு.... :-)

பிகு: நானும் ஏதாவது ஒரு சங்கிலித் தொடரை ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். இதை படிக்கும் மக்களில் ஒரு மூணு பேராவது தங்கள் 2008 தீர்மானங்களின் பின்னோட்டத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டால் நல்லாயிருக்கும்.

Read more...

Saturday, October 18, 2008

சினிமா சினிமா, கிருஷ்ணா, சினிமா சினிமா

பதிவின் தலைப்பை முகுந்தா முகுந்தா பாணியில் படிக்கவும். மாட்டிவிட்ட பரிசலுக்கு நன்றி...

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நாலைஞ்சு வயசிருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பாத்த படங்கள்னு நினைவுக்கு வருவது - சென்னை பைலட் தியேட்டரில் பக்த துருவ மார்க்கண்டேயா (பாட்டியுடன்). சத்யம்-ல் லாரல் ஹார்டி (அப்பாவுடன்). இதைப்பற்றி விரிவான ஒரு கொசுவத்தி பதிவு அடுத்த வாரம் வருது. (வருங்காலப் பதிவுக்கு இப்பவே உரல் கொடுக்கமுடியுமான்னு யாராவது சொல்லுங்கப்பா!!!).

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கஜினி கணக்காக விடாமுயற்சியுடன் முயன்று பார்த்த படம் தசாவதாரம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

புதையல். இதுதான் நான் இணையத்தில் கடைசியாகப் பார்த்த தமிழ் படம். பிங்க் சட்டை, பச்சை பேண்ட் என்று கலக்கல் ஸ்டைலில் அரவிந்த்சாமி நடித்த படம். நல்லா வாய் விட்டு சிரிச்சி ( நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா) பார்த்தேன். கணிணியின் பவர்ப்ளக்கை சொருகாமல், பேட்டரியில் பார்த்ததால்தான், படம் இருட்டாக (வெளிச்சம் கம்மியாக) இருந்ததென்று கடைசியில் உணர்ந்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பாட்ஷா.

ஒவ்வொரு தடவை பாட்ஷா பாத்தப்புறமும் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தும். என்னன்னா, செம பசியாயிருக்கும். பசியைக்கூட மறந்து அந்த படத்தை பார்ப்பதுதான் காரணம்.
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் இணையத்தில் தமிழ்முரசு பார்த்தேன். காதலில் விழுந்தேன் படத்தைப் பற்றிய சர்ச்சை - ஒரு முழுப் பக்கத்தில் படங்களுடன் கூடிய செய்தி. ஒரு வெட்டி (NOT நம்ம வெட்டி) படத்துக்கு இவ்ளோ பிரச்சினையா அப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு கோபம் இருந்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதமோ அல்லது இணையமோ - சினிமா செய்திகளை கடைசியில்தான் படிப்பேன். பேட்டி போக எல்லா இடத்திலும் ஒரே கிசுகிசு மேட்டர்தான். நமக்கு ஒரு நயா பைசா பிரயோசனம் இல்லாத மேட்டரை படிச்சி என்ன ஆகப்போகுது சொல்லுங்க.

7.தமிழ்ச்சினிமா இசை?

இசையைப் பொறுத்தவரை நமக்கு பாட்டு வரிகள் புரியணும், கேட்பதற்கு இனிமையா இருக்கணும், வாத்திய இரைச்சல் குறைவா இருக்கணும் - அவ்ளோதான்.

அது - தேவா (உதா: மனம் விரும்புதே உன்னை, நலம் அறிய ஆவல்) இருந்தாலும் சரி, இளையராசா (ஏகப்பட்ட பாடல்கள்) இருந்தாலும் சரி, ரகுமான் (உதா: என்னவளே அடி என்னவளே) இருந்தாலும் சரி.

இதே ரீதியில் இருக்கும் பாடல்கள் எப்போவும் காரில், வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

கஜினிக்குப் பிறகு முகுந்தா முகுந்தாதான் ஸஹானா விரும்பிக் கேட்கும் பாடல் என்பதால் அந்த பாட்டு அடிக்கடி வீட்டில் ஒலிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நல்ல படம்னு எங்கேயாவது விமர்சனம் படித்தால், தேடிப்பார்த்துவிடுவேன்.

மலையாளம் - கத பறயும் போள், தன்மத்ரா
இந்தி - சக் தே இந்தியா, லகான், முன்னாபாய் MBBS
ஆங்கிலம் - விரும்பிப்பார்ப்பது நகைச்சுவை/திகில் படங்கள்.

சென்ற வாரம் க்வாரண்டைன் (Quarantine) பார்த்தேன். பயங்கர திகில் படம். பெரிய அரங்கில் மொத்தமே 5 பேர்தான் அமர்ந்திருந்தோம். அடிக்கடி பக்கத்தில், பின்னால் யாரோ வந்து நிற்பதுபோலவே இருந்தது. படம் முடிந்ததும், விட்டாப் போதும்டா சாமி என்று ஓடிவந்துவிட்டேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியா டிக்கட் வாங்கி, நேரடியா உக்காந்து பார்ப்பதைத் தவிர எனக்கு சினிமாவுடன் எந்த தொடர்பும் கிடையாது.

அதனால், கிளைக்கேள்விகள் N/A.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு படத்தின் தயாரிப்பு செலவு 1000 கோடியாகும். (இதில் ஹீரோ மற்றும் டைரக்டர் இவங்களோட சம்பளம் மட்டும் 950 கோடியாகும்).

ஒரு பாட்டுக்கு 30 ஆடைகள் மாற்றி, 40 நாடுகள் செல்வார்கள்.

கொரியாவிலிருந்தோ, நைஜீரியாவிலிருந்தோ ஒரு பாடகரை கொண்டு வந்து தமிழ்ப்படத்தில் பாடவைப்பார்கள்.

கட்டவுட்களுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.

அரசு மானியம் பெற்று திரையிடப்படும் படங்கள் வெளியாகும் நாளன்று அரசு விடுமுறை அளிக்கப்படும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


பால், பீர் விலை குறைய வாய்ப்புண்டு.

பதிவர் மற்றும் வாசகர் சந்திப்புகளை பரிசல் ஏதாவது ஒரு திரையரங்கத்தில் வைத்துக்கொள்ளலாம்.

உடனடியா எல்லா டாஸ்மாக் கடைகளையும் பக்கத்து திரையரங்கத்திற்கு மாற்றிவிடலாம்.

மதன்ஸ் திரைப்பார்வையில் - ஆங்கிலத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட தமிழ் படங்களுக்கு விமர்சனம் செய்வதைவிட - நேரடியாக அந்த ஆங்கிலப்படத்துக்கே விமர்சனம் செய்யலாம்.

அலுவலகத்தில் எல்லோரும் தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி விவாதிப்பார்கள் (இப்போவும் அப்படித்தான். இன்னும் அதிகமாயிடும்!!!).

-----

இந்த பதிவை படிக்கிறவங்க - இன்னும் இந்த தொடரை எழுதாதவங்க - கண்டிப்பா எழுதணும்னு கேட்டுக்கறேன்.... :-))



Read more...

Thursday, September 11, 2008

கடைசி வரை பார்த்து, எழுந்து கை தட்டிய படங்கள் மூன்று!!!

நண்பர்களோடு தில்லி தமிழ்ச்சங்கத்தில் பார்த்த தெனாலி, உயிரோடு உயிராக போன்ற படங்களும் சரி, மனைவியோடு சென்னையில் பார்த்த பட்ஜெட் பத்மனாபன், மிடில்க்ளாஸ் மாதவன், லிட்டில் ஜான் ஆகிய மொக்கை படங்களும் சரி - கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் கடைசி வரை உட்கார்ந்து - இருட்டில் அனானியாக கமெண்ட் அடித்துக்கொண்டுதான் பார்த்திருக்கிறேன்.

அதனால், ட்ரெண்டிலிருந்து சற்று விலகி, கடைசி வரை பார்த்து எழுந்து கைதட்டிய படங்கள் மூன்று என்று இந்த பதிவிடுகிறேன். நல்ல படங்கள் என்று நிறைய் பார்த்திருந்தாலும்(!!!), உடனே நினைவுக்கு வருவது, அடிக்கடி அசைபோடுவது என்ற வகையில் இந்த மூன்றையும் சொல்ல விழைகிறேன்.

அன்பே சிவம்:

இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை. கமலின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும், அன்பின் அருமையையும் எடுத்துரைத்த படம். இந்த படத்தை நண்பர்களுடன் தில்லியில் விடுதியில் இருந்தபோது குறுந்தகடு வாங்கி பார்த்தது. சும்மா பொழுது போகாமல் பார்க்க ஆரம்பித்தோம். போகப்போக படத்தில் ஐக்கியமாகி முடியும்வரை யாருமே எழுந்துபோகாமல் உட்கார்ந்திருந்தோம்.


படம் முடிந்தபிறகு நிஜமாகவே எழுந்து நின்று கைதட்டியவர்களில் நானும் ஒருவன். இன்றும் எப்போதாவது இணையத்தில் தேடி பார்க்கும் படங்களில் ஒன்று.

தன்மத்ரா

எகிறி, கத்தி, குதித்து, குட்டிக்கரணம் போட்டு, நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி நடிக்கும் தமிழ் நடிகர்கள் பார்க்கவேண்டிய படம்.

ஒரு சிறு மேக்கப்பும் இல்லாமல் நடித்திருக்கும் மோகன்லால், படம் முழுக்க அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.

ஒரு சாதாரண குடும்பத்தலைவனுக்கு அல்சைமர்ஸ் நோய் தாக்கியபின், அவரின் செய்கைகளும், அவர் குடும்பம் படும் பாடும்தான் கதை.

அலுவலகத்தில் சட்டையை கழற்றும்போதும், அங்கேயே கழிவறையில் குளிக்கும்போதும், மற்றும் பல காட்சிகளிலும் மோகன்லால் அனாயாசமாக நடித்திருப்பார்.

வெகு நாட்களாய் இணையத்தில் தேடிக்கொண்டே இருந்தபின், சமீபத்தில்தான் இந்த படத்தைப் பார்த்தேன். கொஞ்சம் கூட நகர முடியாமல் கட்டிப்போட்ட படம் முடிந்தபின், என்னையறியாமல் கைதட்டினேன்.

த க்வீன் (2006)

இளவரசி டயானா கார் விபத்தில் இறந்தபிறகு அடுத்த ஒரு வாரம் அந்த ராஜ குடும்பத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய கதை.

ராணியாக நடித்த ஹெலன் மிர்ரனுக்கு ஆஸ்கர் ( நம்ம தசாவதாரம் ஆஸ்கர் இல்லேங்க!!!) விருதை 2007ம் ஆண்டு பெற்றுத் தந்த படம். இந்த படத்தில் ஹெலனுடைய நடை, உடை, பாவனை ஆகிய எல்லாமே முதல் தரம் (தரம்=Class; தடவை இல்லே...).

பிரதமர் டோனி ப்ளேயராக நடித்தவரும் அருமையாக நடித்திருப்பார்.

படத்தில் நடித்தவர்களின் உடையலங்காரம், இசை, நிஜமாக டயானா இறந்தபோது ஒலிபரப்பப்பட்ட தொலைக்காட்சி காட்சிகளை நடு நடுவே இணைத்து காட்டப்பட்ட விதம் - எல்லாமே சூப்பர்ப்...

இந்த மாதிரி படம் நம் நாட்டில் எப்போது எடுக்கப்போகிறோம் என்று கவலைப்பட்டுக்கொண்டு எழுந்து நின்று கைதட்டினேன்.

Read more...

Thursday, July 31, 2008

ஏ ஃபார் ஏப்பிள்!!!

சங்கிலித்தொடரில் பதிவு போட அழைத்த தலைவி ராப்க்கு நன்றி..

ஏதோ நான் பாக்கற சிலபல (பலானன்னு படிச்சிடாதீங்க!!!) இணையதளங்களைப் பற்றி சொல்லலாம்னு..... நீங்களே படிச்சிப் பாருங்க..

b-bawarchi.com - திடீர்னு தங்கமணி சமைக்கக் கிளம்பிட்டா, அவங்க இந்த தளத்தைப் பாத்துதான் ஏதாவது ஸ்பெஷலா செய்வாங்க (அவ்வ்வ்வ்...). இப்போ இது food/sify.com ஆ மாறிடுச்சு...

C- craigslist.org; விளம்பரங்களே இல்லாத ஒரு வரி விளம்பரத் தளம். நான் மற்றும் என் நண்பர்களெல்லாம் கார் வாங்குவதற்கு உதவிய தளத்தில் இப்போது சென்னைப் பக்கங்களும் இருக்கிறது.

d- dinamalar.com : டீக்கடை பெஞ்சுக்காகவும், டவுட் தனபாலுக்காகவும் தினமும் பார்க்கும் தளம். நமக்கு புது பதிவுகள் போட நிறைய ஐடியாக்களை தினமும் தருபவர் - எல்லா அரசியல்வாதிகளையும் கலாய்க்கும் டவுட் தனபாலு.


F-fandango.com : இது வாரயிறுதியிலே பக்கத்து கொட்டாய்லே ஏதாவது பாக்கற மாதிரி படம் இருக்குதான்னு பாக்கற தளம்.

I-Idlyvadai.com

பல மக்களைப் போல காலையில் எழுந்ததும், எனக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லிவிட்டு - பார்க்கும் முதல் தளம் இட்லிவடை.


ஒரு நாள் காலையில் எழுந்து என் பதிவுக்கு வந்தவர்கள் எவ்வளவு பேர் என்று பார்த்தால் பயங்கர அதிர்ச்சி - 500 பேருக்கும் மேல். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை, என்று சிறிது நேரம் கழித்து இட்லிவடை பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே என் பதிவை குறிப்பிட்டிருந்தனர்.


அந்த ஒரு சிறு அறிமுகத்தால், அடுத்த 3 நாட்களுக்கு எனக்கு ஒரு 2000 ஹிட்ஸ் கிடைத்தது....


J-jeyamohan.in : புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. 'குமரி'ப் பக்கத்து பேச்சுவழக்கில் எழுதப்பட்ட தமிழுக்காக விரும்பிப் படிக்கும் தளம்.

K-kumudam.com: புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

L-linkedin.com : சொல்லாமல் எஸ்கேப் ஆன பல பழைய ' நண்பர்கள்' இங்கேதான் எனக்கு திரும்ப கிடைத்தார்கள். என் 'சங்கிலியில்' இருப்பவர்கள் வேலை மாறினால், எனக்கு உடனுக்குடனே மெயில் அனுப்பி தெரிவித்துவிடும்.

M-Musicindiaonline.com : பலப்பல அருமையான பாடல்களின் தொகுப்பு அடங்கிய தளம். என்ன ஒண்ணு, எதையும் தரவிறக்கம் செய்ய முடியாது. அதனால், எனக்குப் பிடிச்ச பாட்டுக்களை ஒரு 'ஆல்பத்திலே' போட்டு, அதை ஓடவிட்டுடுவேன். அப்புறம் என்ன, அன்னிக்கு முழுவதும் மனம் மிகவும் அமைதியாக, சந்தோஷமாக இருக்கும்.

P-Pbskids.org : எங்க வீட்டு பாப்பாவுக்காக நாங்கள் தினமும் போகும் தளம். குழந்தைகள் பார்க்கும் பல்வேறு கார்ட்டூன் காரெக்டர்கள் மூலம் நிறைய விஷயங்களை கற்றுத்தருகிறார்கள். விளையாடவும் நிறைய இருக்கிறது இங்கே.

r-raaga.com - புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

S-Scribd.com - பல நல்ல புத்தகங்கள், அகராதிகள் எல்லாம் கிடைக்குமிடம். நம்ம சுஜாதா, ரமணி சந்திரன் நாவல்கள் எல்லாம் இங்கேயிருந்துதான் இறக்கிப் படித்தேன்.

w-WebSudoku.com : 'சுடோகு' ஞாபகம் வந்தால், விளையாடப்போகும் தளம். பல்வேறு 'லெவல்'களில் விளையாடலாம். 'அலைபாயும்' மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நான் போகும் தளம்.

T-Tehelka.com, tamilmoviewaves.blogspot.com : தெஹெல்கா தளத்தைப் பாத்து வர்ற கோபத்தையெல்லாம், தமிழ்மூவிவேவ்ஸ் தளத்தில் இருக்கும் பழைய விசு படங்களைப் பாத்து ஆத்திக்குவோம்.

y-youtube - இங்கே போகாமல் யாராவது இருக்கமுடியுமா? 2.5 ஆண்டுகளாக தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளை இங்கேதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மற்றும் அடிக்கடி 'funny videos', 'bloopers' - இப்படி தேடித்தேடிப் பார்த்து சிரித்துக்கொண்டே இருப்போம்.

அடுத்து நான் பதிவு போட அழைக்கும் மூவர்:

1. சின்ன பிகேபி என்றழைக்கப்படும் - நமக்கு தினம்தினம் புதுப்புது தொழில் நுட்பப் பதிவுகளை அள்ளி வழங்கும் நண்பர் பிரேம்ஜி

2. தினமும் நல்லா மழித்துவிட்டு, எனக்கு மீசையே முளைக்கவில்லை என்று வருத்தப்படும் நண்பர் விக்னேஸ்வரன்

3. நானே மறந்துவிட்டாலும், நாந்தான் மன்றத்தின் துணைத்தலைவர் என்று வாயார கூப்பிடும் நண்பர் அப்துல்லா.


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP