Sunday, October 13, 2013

ஒரே கல்லிலே பல மாங்காய் - இறுதிப் பகுதி

முந்தைய இரண்டு பகுதிகளையும் படிச்சிட்டீங்களா?

அந்த பொதுக் கூட்டத்தில் பேச நான் தயாராகிட்டிருக்கும்போது, எனக்கு முன்னால் பேசிய ஒரு பெண்ணும் Fitness துறைக்காகவே பேசி ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தார். Fitஆக இருந்தால் என்னென்ன நன்மை, உடல் வலு, திறன் அப்படி இப்படியென்று எல்லாவற்றையும் பேசினார்.

அடுத்து தலைவர் வந்தார். சரி சரி. நான்தான் மேடையேறினேன்.

நானும் Fitenss துறைக்காகத்தான் பேச வந்திருக்கிறேன். எனக்கு முன் பேசிய செல்வி.____ அவர்கள் இந்த துறையின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பேசி, எனக்கு உதவி புரிந்தார். அதற்கு அவருக்கு என் நன்றிகள். எனது தலைப்பு ‘Running'.

நன்மைகளைப் பற்றி முன்னரே பேசிவிட்டதால், Runningன் தீமைகளைப் பற்றி நான் பேசப் போகிறேன்.

தீமையா, Fitnessல் தீமைகளும் இருக்கா? என்று கூட்டத்தில் சலசலப்பு. இவ்வளவு நேரம் கசமுசகசமுச என்று பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது அமைதியாக கேட்க ஆரம்பித்தனர்.

யெஸ். தீமைகள்தான். ஓடுவதால் வரும் தீமைகள் என்னவென்றால்:
* நீங்கள் ஓட்டத்தை காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
* வீட்டிலேயே இருக்க மாட்டீர்கள். இதனால் வீட்டில் திட்டு விழும்.
* It is Contagious / Infectious.
* உங்களால் ஓடுவதை நிறுத்த முடியாது.
* எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் எழுந்து தயாராகி, எல்லாரிடமும் திட்டு வாங்குவீர்கள்.

முந்தைய பகுதியில் பார்த்த க.ப. தங்கவேலு காட்சி இங்கேதான் ஆரம்பித்தது!!

ஓட்டத்தின் நன்மைகள் எல்லாமே அதன் By-productsகள்தான். அவைகளுக்காக நாம் ஓடமாட்டோம். நம் விருப்பத்திற்காக, சந்தோஷத்திற்காக ஓட ஆரம்பித்து, அதன் விளைவால் வரும் by-productsகளை வாங்கிக் கொள்வோம். யாரெல்லாம் ஓடத் தயார்?

ஆங்காங்கே பல கைகள் (வளையல் அணிந்த மற்றும் அணியாத) கைகள் தூக்கப்பட்டன!

என்னுடைய இலக்கு, திசம்பரில் பெங்களூரில் இரண்டு ஓட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதில் நம் நிறுவனம் சார்பாக குறைந்த பட்சம் 25 பேர் என்னுடன் 10கிமீ தூரம் ஓடவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நிறுவனத்தின் பெயர் பொறித்த சட்டை, தொப்பி இவற்றை அணிந்து ஓடினால், நிறுவனத்திற்கும் ஒரு நல்ல விளம்பரம்தானே?

(இப்போது அங்கிருந்த பெரிய தலைகள் சிலர் கவனிக்கத் துவங்கினர்).

இதற்குத் தேவையான பயிற்சியை இந்த இரண்டு மாதங்களில் செய்வோம். முதல் ஓட்டம் ஓடியபிறகு எப்படி இருந்ததென்று சொல்லுங்கள். பிறகு நானே சொன்னாலும், நீங்கள் நிறுத்த மாட்டீர்கள்.

எனக்கு இந்த வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். இப்போது ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

(முந்தைய பதிவில் இருந்த கேள்விகள் இந்த சமயத்தில் கேட்கப்பட்டன).

***

இதைத் தவிர பிட் நோட்டீஸ் ஒன்று அடித்து அனைவருக்கும் கைப்பட விநியோகித்தேன். ஒரு பெரிய மின்னஞ்சல் தயார் செய்து அனைவருக்கும் அனுப்பினேன்.

பிரச்சாரம் முடிந்தது.

தேர்தல் நாள்.

அந்த நாளில் நான் ஓட்டுப் போட்டுவிட்டு, உடனே சென்னைக்கு வண்டியேற வேண்டும். கடைசி நேரத்தில் நான் இல்லாவிட்டால், ஓட்டு விழுமா என்ற சந்தேகம். என்ன ஆகுதோ ஆகட்டும் என்ற முடிவுடன், அந்த இடத்தை விட்டு வந்தாயிற்று.

***

முடிவுகள்.

யெஸ். நான் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இப்போது வாக்குறுதிகளை செயல்படுத்தும் கட்டம். விரிவான திட்டங்கள், தெளிவான தகவல் தொடர்புகள் என, விருப்பப்பட்டு வரும் நண்பர்கள் அனைவரையும் ஓட வைக்க வேண்டிய வேலை.

எப்படி போகுதுன்னு ஓட ஓடத்தான் தெரியும்.

***

அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சல் இதுதான்:
https://docs.google.com/file/d/0B84c8UzuDzMeYWlSeEpUYjhMQlE/edit?usp=sharing.

அனைவருக்கும் வழங்கிய பிட் நோட்டீஸ்:
https://docs.google.com/file/d/0B84c8UzuDzMeRnNFV1pGejVETTQ/edit?usp=sharing

***

சுபம்.



Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP