Monday, August 8, 2016

இவங்களை வெச்சிக்கிட்டு...

அடியேன் : 
மந்திராலயம் போயிருந்தோமே. அப்பா. என்ன இடமில்லே. எப்பேர்ப்படட மகான். அங்கிருந்த மூணு நாளும் மனதில் ஒரு அமைதி. எப்போடா மறுபடி போய் அவரைப் பார்ப்போம்னு தோணுது.

தங்கமணி : 
அங்கே தங்கியிருந்த ஹோட்டல் சரியேயில்லை. சுடு தண்ணியே வரலை. மூணு நாளும் அறையை பெருக்கவே இல்லை அவன். போய் திட்டினப் பிறகே வந்து சுத்தம் செய்தான். அடுத்த முறை வேறே ஹோட்டலில்தான் தங்கணும்.

மகளதிகாரம் : 
இந்த முறை போனாலும் மார்கழி மாதமே போலாம்பா. சாப்பாடு காலை 8 மணிக்கே போட்டுடறாங்க. அந்த கஞ்சி அதை மறுபடி சாப்பிடணும் போலிருக்கு. இரவு உணவும் மடத்திலேயே போட்டுடறாங்க. பகல் முழுக்க சுத்திட்டு சாப்பிட மடத்துக்கு வந்துடணும்.

அடியேன் : 
உடுப்பி. போன வருடம் போய் பார்த்த குழந்தை கிருஷ்ணன் இன்னும் கண்ணிலேயே இருக்கான். மத்வர் முதல் வ்யாஸராஜர், விஜயேந்திரர், ராகவேந்தரர்னு பற்பல மகான்கள் நின்ற இடத்தில், நாமும் நிற்கிறோம்னு நினைச்சாலே உடம்பு அப்படியே புல் அரிக்குது.

தங்கமணி : 
இந்த முறை பலிமார் மடத்தில் அறை போடாதீங்க. எக்கச்சக்க பல்லி & பூச்சி. காபிக்கு எவ்ளோ தூரம் அலைய வேண்டியிருக்கு அங்கே. அடுத்த முறை ஒரு ஃபிளாஸ்க் எடுத்துப் போயிடணும். குப்பை போட சில கவர்கள் ரொம்ப முக்கியம்.

மகளதிகாரம் : 
woodlands சாப்பாட்டை விட கிருஷ்ணர் கோயில் சாப்பாடு செம. அமாவாசை அன்னிக்கு சாப்பாடு கிடையாது, இன்னிக்கு டிபன்தான் சொல்லிப்போட்டாங்களே, அப்புறம் அவல் பிரசாதம் & பாயசம் - இதெல்லாம் என் நாக்கில் இன்னும் ருசிக்கிது.

இவங்களை வெச்சிக்கிட்டு ஒரு கொலை கூடசெய்ய முடியாது போலிருக்கே. கிருஷ்ணா!!

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP