Thursday, September 8, 2011

இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதற்காக?



இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக - இப்படி ஒரு அழகான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது நடுநடுவே ட்ரிங்ட்ரிங்னு கைப்பேசி சத்தம். என்னடான்னு பார்த்தா, பாட்டு கனவில். கைப்பேசி ஒலித்தது நிஜத்தில். எவன்டா இந்த நேரத்திலேன்னா (மணி விடியற்காலை மணி மூன்று) - லோக்கல் நண்பரிடமிருந்து.

லோகல்னா ரொம்ப லோக்கல் - பக்கத்து வீட்டு நண்பர்தான் கூப்பிட்டது. என்ன பிரச்னைன்னு தெரியலேன்னு எடுத்துப் பேசினேன். "அவருக்கு ****** பிரச்னை வந்துடுச்சு. ரொம்ப அவஸ்தைப் படறாரு. உடனடியா மருத்துவமனை போகணும். கொஞ்சம் வரமுடியுமா" - பேசியது சகோதரி - நண்பரின் மனைவி.

சடார்னு எழுந்தேன். தங்ஸுக்கு சொல்லிவிட்டு, வண்டி சாவி எடுத்து வெளியே ஓடி, நண்பரை கூட்டிக்கிட்டு குளிரில் மருத்துவமனை அடைந்து அவரை சேர்த்தும்விட்டேன். டாக்டர் வந்து மருந்து மாத்திரை (ரெண்டும் ஒண்ணுதானே?) கொடுத்து பிரச்னையை தற்காலிகமாக தீர்த்து வைத்தார்.

இந்த ஊர் டாக்டர்கள் சும்மாவே இருக்க மாட்டாங்க. ஏதாவது ஜோக் அடிச்சிக்கிட்டு, வந்தவங்களோட லொடலொடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. நமக்கு வாய்ச்சவரும் அப்படியே. நம்ம நண்பரைப் பார்த்து சாதாரணமா கேட்டாரு.

”இவரு (என்னைக் காட்டி) உங்க சகோதரரா”?

அவரும் - ”இல்லீங்க டாக்டர்” அப்படின்னாரு.

அடப்பாவி, ஒண்ணுமண்ணா பழகினோமே, என் மனைவிகூட உன்னை அண்ணா அண்ணான்னு கூப்பிடுவாளே? அதை எப்படிடா மறந்தேன்னு
நினைக்கும்போதே, அடச்சே, என் மனைவிக்கு அண்ணன்னா நான் மச்சான்தானே, ஒரு தெய்வ மச்சானை எப்படி சகோதரன்னு சொல்றது என்பதால் நண்பர் மறுத்துட்டார்னு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

அந்த டாக்டரும் விடமாட்டேன்றாரு.

”அப்படின்னா, கலீகா (கூட வேலை பார்ப்பவரா)”?

நான் எதுவாயிருந்தா இந்த டாக்டருக்கு என்னன்னு எனக்கு புரியல. ஆனாலும் நம்ம நண்பர் அசராமே பதில் சொல்றாரு.

”கூட வேலை பார்ப்பவரா - இல்லே இல்லே”.

அடப்பாவி, நேத்திக்கு சாயங்காலம் வரைக்கும் நானும் இவனும் ‘கலீக்’தானே. ஒருவேளை இவன் வேலையை விட்டுட்டானா அல்லது எனக்கு வேலை போயிடுச்சா, எதுவும் புரியலியேன்னு கைப்பேசியில் மின்னஞ்சலை பார்க்கிறேன். வேலையை விட்டு தூக்கினதா எதுவும் செய்தி இல்லை. அப்பாடான்னு இருந்தது.

சரி. இத்தோட நிறுத்திக்குவோம்னு நான் சொல்றதுக்குள்ளே டாக்டர் மறுபடி - ”அப்போ நண்பரா?”.

அப்பாடா. இதுக்கு கண்டிப்பா “ஆமாம்” என்று சரியான பதிலைச் சொல்லி நண்பர் பரிசை அள்ளிச் செல்வாருன்னு பார்த்தா - என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு சொன்னாரு - “ம்ஹூம்”.

அட்றா அட்றா - இனிமே டாக்டருக்கு கேட்பதற்கு எந்த ‘ஆப்ஷனும்’ இல்லேன்னு நான் கணிச்சது சரியாப் போச்சு. டாக்டர் இப்ப டென்சனாகறாரு.

"அப்படின்னா இவர் யாரு? உங்களை இவரு ஏன் கூட்டிட்டு வரணும்?"

இப்பத்தான் நண்பர் தன் திருவாயைத் திறந்து பதில் சொன்னார்.

“இவரை சில வருடமா எனக்குத் தெரியும்.”

அதுக்கப்புறம் அந்த டாக்டர் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கலே. அவருக்கு என்ன புரிஞ்சுதோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு இன்று வரைக்கும் புரியாத விஷயங்களில் இதுவும் ஒண்ணு. நண்பர்(?) ஏன் அப்படி சொன்னாரு?



***



Read more...

Monday, September 5, 2011

ஆங்கிலப் படப் பாடல்கள்.




ஆங்கிலப் படங்களோட பாடல்கள் பற்றிய பதிவு இல்லை இது. தமிழ்ப் பாடல்கள்தான். அதை ஆங்கிலத்தில் ’முழி’பெயர்த்து ட்விட்டரில் விளையாடிய விளையாட்டு.


மக்கள் நிறைய பேரு சரமாரியா விளையாடி, இந்த tagஐ இந்திய அளவில் ட்ரெண்டில் கொண்டு வந்துட்டாங்கன்னா பாத்துக்குங்க.


ட்விட்டரில் இல்லாத நண்பர்களுக்காக என்னுடைய முழுபெயர்ப்பு பாடல்கள் இங்கே.


எல்லா பாட்டும் தெரியுதான்னு பாருங்க. ஏதாவது பாட்டு தெரியலேன்னா கேளுங்க.


***

With the Top-like eye, love matter she told me #englishpadamsongs

Gem-time-chain, me touching touching doing lullaby #englishpadamsongs

Yesterday you were a small girl. Today you are a fatherfather. #englishpadamsongs

I love you love you love you love you she told. my heart pick pick she went. In eye she has love camera #englishpadamsongs

To tell one word, I waited for one year. To see your eyes, I blossomed day and night. #englishpadamsongs

Dont pick the flowers. Dont break the love. #englishpadamsongs

khaki-shirt wearing brother-in-law. to do a steal, kept his cheek. #englishpadamsongs

Dont know to sing; Dont know to read; Dont even know the school; Dont know the book; Dont know the letters. #englishpadamsongs

o butterfly, butterly; why did you spread your wings? #englishpadamsongs

shell is available; gem is also available; there is no time to open it sweety #englishpadamsongs

One day is enough? is today is enough? For me singing, is today enough? #englishpadamsongs

Cucumber, tender cucumber, chandrika is going without seeing me. #englishpadamsongs

Saw a lady, after that saw the moon, there is no light in the moon #englishpadamsongs

Is it your fault? Is it my fault? who should I put the blame on? #englishpadamsongs

kakaka kikikuku kekeke kukukeke pls sing. #englishpadamsongs

Shall I keep only you inside of my heart; I promise you nothing is there inside my heart. #englishpadamsongs

In the may month of 1998, I became Major. after becoming major, I became totally bejaar. #englishpadamsongs

Oh heart. why silence? flowers. will they speak? #englishpadamsongs

Me the autodriver; autodriver; all the 4 routes I now; also a good singer. born in the same country as Gandhi. #englishpadamsongs

before stoneage; before sandage; before sea-age; the love came which is a surprise. #englishpadamsongs

papapa papapari papapa papari. New brigegroom, came good luck. New bride. came good time. #englishpadamsongs

dripping dripping getting wet Tajmahal, pls come and dry it out #englishpadamsongs

Is it me? Is somebody else? Slowly slowly am I changing? #englishpadamsongs

New sky. New land. everywhere it is snowing. whenever I came to welcome me. colorful flowers are falling hohohoho #englishpadamsongs

mustafa mustafa dont worry mustafa #englishpadamsongs

small small wish. wish to spread my wings #englishpadamsongs

OOO kick is coming up. OOO shy is gone. #englishpadamsongs

I asked for soundless pricavy. I asked for battleless world. #englishpadamsongs

why you born as a lady? why did you fall in my eyes? #englishpadamsongs

***



Read more...

Saturday, September 3, 2011

வெதர்.காம் சொன்னா வெங்கடேச பெருமாள் சொன்னா மாதிரி.


நாலு நாள் முன்னாடியிருந்தே அனைவரும் 'ஐரீன்' ஜெபத்தை துவக்கியிருந்தனர். நம்மாளு ஒருத்தர் மிக கவலையாக இருந்தார்.
சனி, ஞாயிறு ரெண்டு நாள் மட்டும் ஐரீன் வருதாம். திங்கள் மறுபடி வெயிலாம். என்ன கொடுமை இது என்றார். அவரவர் கவலை அவரவருக்கு.

நானோ, இவங்க எப்பவுமே இப்படிதான். ஐரீனால் நமக்கு ஒண்ணும் ஆகாதுன்னு சூனாபானா வடிவேல் மாதிரி கண்டுக்காமே போயிட்டிருந்தேன். நாம ஸ்டெடியா இருந்தா மத்தவங்களுக்கு பொறுக்காதே. பயமுறுத்த ஆரம்பிச்சாங்க.

இந்த தடவை புயல் பயங்கரமா இருக்கும். மின்சாரம் போயிடும். குடிதண்ணீர் கிடைக்காது. எதுவுமே செய்யமுடியாதுன்னு ஒரே டார்ச்சர்.

ஹிஹி. இதெல்லாம் ஜுஜுபி. நாங்க சென்னையிலேயே இதை விட அதிகமா பாத்துட்டோம்னா கேக்க மாட்டேன்றாங்க. மரியாதையா எல்லா முன்னேற்பாடும் செய்து வெச்சிக்கோ. அவ்வளவுதான் சொல்வேன்னு பாசமழை.

கூடவே ஒரு பழமொழி வேறே. வெதர்.காம் சொன்னா வெங்கடேச பெருமாள் சொன்னா மாதிரி.

சரி இனிமே இவங்களை சமாளிக்க முடியாதுன்னு கடைக்குப் போனா, பயபுள்ளைங்க எல்லாத்தையும் சூறையாடியிருக்காங்க. குடிதண்ணீர், பால், பழம், சூப், சிப்ஸ், பழரசம் - இப்படி எதுவும் கிடைக்கலை. இரண்டு மூன்று கடைகள் ஏறி இறங்கி கடைசியில் ஒரு கடையில் கிடைத்தது.

சனி மதியம் அனைத்திற்கும் நாங்கள் தயார்.

மெழுகுவர்த்தி/தீப்பெட்டி எடுத்து வைங்க என்றார் தங்க்ஸ். நம்ம வாய் சும்மா இருக்குமா? மெழுகுவர்த்திக்கு எகனைமொகனையா ஊதுவத்தியும் வேணுமான்னு கேட்டேன். சிறிது நேரம் காதை மூடிக் கொண்டேன்.

சனி மாலை ஆறு மணி.

மழை சீராக பெய்ய ஆரம்பித்தது. காற்று பலமாக இல்லை.

டிவிட்டரில் நம்ம ஊருக்கு கீழே இருக்கும் நியூயார்க்/ நியூஜெர்சி மக்கள் பயமுறுத்த ஆரம்பித்திருந்தார்கள். மழை பிச்சி உதறுது. மின்சாரம் போயிடுச்சு. மரங்கள் விழுது - அப்படின்னு.

சரிதான். நிஜமாவே புயல் வரப்போகுது போலன்னு நினைத்தோம்.

சனி இரவு 12 மணி:

மழை மட்டும் பலமாக பெய்தது. காற்று அவ்வளவாக இல்லை.

ஞாயிறு காலை 7 மணி:

எங்க ஊர் மேயர் ட்விட்டர், Facebook, தொலைபேசின்னு எல்லாத்திலேயும் - யாரும் வெளியே வராதீங்க. 11 மணிக்கு புயல் வருது அப்படின்னு பயமுறுத்திக்கிட்டே இருந்தாரு.

11 மணியாச்சு; 12 மணியாச்சு; 1 மணியாச்சு; புயலும் இல்லை. ஒரு பயலும் வரவில்லை.

எங்க மாநிலத்தில் கடற்கரையோரம் பிரச்னைகள் இருந்தாலும், ஊருக்குள் பெரிதாக எதுவும் ஆகவில்லை.

எங்க வீட்டு முன்னாடி சிறியதும் பெரியதுமாய் ஒரு பத்து மரங்கள் இருக்கு. அதில் ஒண்ணாவது விழும்னு நினைச்சோம். ஆனா, வெறும் குச்சி மாதிரி நிற்கும் மரங்கள் கூட விழவில்லை.

அடுத்த தடவை சென்னையில் புயல், மழைக் காலத்தில் இவங்களை கூட்டிப் போய் காட்டணும்.

*****

கீழிருக்கும் படம் எங்க பாஸ் வீட்டுக்குப் பக்கத்தில். கடல் ஒரு நூறு அடி ஊருக்குள்ளே வந்திருக்கு. அந்த ஸ்டாப் கம்பத்திற்கு பக்கத்தில் எங்க பாஸ் வீடு. பயந்துட்டே இருந்தாங்களாம். கடைசியில் ஒண்ணும் ஆகலை.


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP