Showing posts with label ரெண்டு. Show all posts
Showing posts with label ரெண்டு. Show all posts

Thursday, April 17, 2008

சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!

சங்கம் 'ரெண்டு' போட்டிக்காக தமிழக அரசியல் தலைவர்களை பேட்டி கண்டால் என்ன சொல்வார்கள் என்று ஒரு சிறு கற்பனை. வழக்கம்போல் எல்லோரும் சேவையில் இருப்பதால், ரெண்டு வாக்கியமாவது சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். இனி அவர்கள் சொன்னவை. ஒரு மாறுதலுக்காக தலைவர்கள் வேறு வரிசையில்.

சு.சுவாமி:

ஒரு வாரத்திலே 'ரெண்டு' வழக்காவது போடலேன்னா, எனக்கு தூக்கமே வராது. இன்னும் 'ரெண்டே' பாயிண்ட்கள்தான் பாக்கி, பாத்துண்டே இருங்கோ, மத்திய அரசை 'ரெண்டே' நாள்லே கவிழ்த்துடுவேன்.

ஆற்காட்டார்:

தமிழகத்தில் மின்சாரத்தடை, சென்னையில் பேனர் பிரச்சினை இந்த 'ரெண்டை' தவிர எதுவேணாலும் கேளுங்க. 'ரெண்டே' 'ரெண்டுலே' (செகண்டுலே) பதில் தர்றேன்.

டி.ஆர்.பாலு:

வருடத்துக்கு 'ரெண்டு' பாலம் கட்ட அடிக்கல் நாட்டணும், வாழ்நாளில் 'ரெண்டு' பாலமாவது கட்டி முடிக்கணும் - இதுதான் எனது குறிக்கோள்.

காங்கிரஸ் தலைவர்:

சொன்னா நம்புங்க. நான் தமிழகத்தலைவரா பொறுப்பேத்து 'ரெண்டு' நாள்தான் ஆகுது. அதுக்குள்ளே என்னோட 'ரெண்டு' லோடு வேட்டி கிழிஞ்சி போச்சு.

விஜயகாந்த்:

எனக்கு மட்டும் 'ரெண்டு' அண்ணன் தம்பிங்க, 'ரெண்டு' மச்சான், 'ரெண்டு' சித்தப்பா பெரியப்பா, 'ரெண்டு' பசங்க இவங்கல்லாம் இருந்திருந்தாங்கன்னா, நான் ஏன் மத்தவங்களுக்கு கட்சியில் சீட்/பதவி இதெல்லாம் கொடுக்கப்போறேன்?

ஜெயலலிதா:

நாங்க தோழிங்க 'ரெண்டு' பேரும் ஓய்வுக்குப் போயிட்டிருக்கோம். இப்போ போய் 'ரெண்டு' போட்டியில் கலந்துக்க சொல்றீங்களே?

கலைஞர்:

சொந்த குடும்பத்தில் பிரச்சினை என்றால் 'இரண்டு' நிமிடம் தொலைபேசியில் முடித்துவிடுகிறேன் என்றும் மக்கள் பிரச்சினை என்றால் 'இரண்டு' வரி கடிதம் எழுதுவேன் என்றும் என்னை பற்றி தவறாக பேசுகிறவர்கள் யாராவது இருந்தால் உடனே வரவும். 'இரண்டு' வருடம் உள்ளே போட்டுவிடுகிறேன்.


பிகு: சங்கம் 'ரெண்டு' போட்டிக்கான எனது 'ரெண்டாவது' இடுகை இது.

Read more...

Tuesday, April 15, 2008

கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்

எல்லோருக்கும் நிதி டிவியின் சார்பாக வணக்கம்.


நாம இப்போ நமது மூத்த நடிகர் உலக நாயகன் திரு.கமல் அவர்களின் புதிய படப்பூஜைக்கு வந்திருக்கிறோம். இந்தப்புதிய படத்தில் நமது கமல் அவர்கள் ஒரு புதிய சாதனையை செய்யபோகிறார் என்று செய்தி வந்திருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்வதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம்.


திரு.கமல் கடந்த 75 வருடங்களாக நடித்துக்கொண்டிருந்தாலும், கடந்த 30 வருடங்களில் அவர் யாராலும் செய்ய முடியாத சாதனைகளை செய்திருக்கிறார் என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொண்டுள்ளோம்.


கடந்த 4 திரைப்படங்களில், திரு.கமல் அவர்கள் போட்டு நடித்துள்ள வேடங்கள் பின்வருமாறு:


2010 - தசாவதாரம் - 10 வேடங்கள்
2015 - அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - 41 வேடங்கள்
2020 - நாயன்மார்கள் - 63 வேடங்கள்
2025 - மகாபாரதம் - 106 வேடங்கள் (5 பாண்டவர்கள், 100 கௌரவர்கள் மற்றும் கிருஷ்ணர்)


இதோ, திரு.கமல் அவர்கள் வந்துவிட்டார். அவரிடம் பேசுவோம்.


வணக்கம். திரு.கமல் அவர்களே.. ஒரே திரைப்படத்தில் நீங்கள் போட்டுவரும் வேடங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அது போல், இப்போது நடிக்கப்போகும் திரைப்படத்தில் நீங்கள் எவ்வளவு வேடத்தில் நடிக்கப்போகிறீர்கள் என்று தெரிந்துகொள்வதற்கு நாங்கள் எல்லாம் ஆவலாக உள்ளோம். கடைசியாக நீங்கள் நடித்த 100 வேடங்களைவிட அதிகமாக இருக்குமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.


வணக்கம். நிதி டிவி நேயர்களே. ஆம். கடந்த 4 திரைப்படங்களில் நான் போட்டு நடித்துள்ள வேடங்கள் மிக அதிகம். கண்டிப்பாக இன்னும் அதிக வேடங்கள் போட வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், சுமார் 35 வருடங்களுக்குப் பிறகு நான் மிக சிரமப்பட்டு நடிக்கப்போகும் படம் இது என்று சொல்லலாம். கதையையும், என் வேடங்களையும் கேட்டபோது எனக்கே வியப்பாக இருந்தது. என்னடா, இதில் நாம் நடிக்க முடியுமா, நடித்தால் மக்கள் விரும்பி பார்த்து, படத்தை வெற்றி பெறச் செய்வார்களா என்று மலைப்பாக இருந்தது. ஆனால், படத்தை எடுக்கும் தம்பிதான் தைரியப்படுத்தி என்னை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்.


அது சரி, இந்த படத்தில் உங்களுக்கு எவ்வளவு வேடங்கள் என்று நீங்கள் சொல்லவேயில்லையே?

ரெண்டு.


பிகு: ரெண்டு போட்டிக்கான இடுகை அல்ல இது.

Read more...

Monday, April 14, 2008

எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!

சனி, ஞாயிறுன்னா எங்க வீட்டுலே ரெண்டுதாங்க... அதனாலெ, இப்போல்லாம் என்னாலே முடியவேயில்லை.. ஆனால் என்ன பண்றது. தங்கமணியின் தொல்லை தாங்கமுடியலேன்னு பொறுத்துண்டு போறேன்.

என்னோட எல்லா நண்பர்கள் கிட்டேயும் கேட்டுப் பாத்துட்டேன். அவங்க வீட்டுலேயும் வார இறுதியின்னா ரெண்டுதானாம். அவங்களும் அவங்கவங்க தங்கமணிகளின் தொல்லை தாங்கமுடியலேன்னு சொல்றாங்க.

அதனால், இப்போல்லாம் வார இறுதி வருதுன்னாலே, ரொம்ப பயமா இருக்குது. ரெண்டு, ரெண்டுன்றேனே அப்படின்னா என்னன்னு கேக்க மாட்டீங்களா?

கீழே இருக்கறதயும் படிங்க... இப்படியெல்லாம் யாரு சொல்வாங்கன்னு உங்களுக்கு சந்தேகம் வராதுன்னு நெனெக்கிறேன்.

1. எங்க அப்பா, அம்மாக்கு திருமண நாள் வருது. தங்க காசு ஏதாவது வாங்கி தரணும்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

2. ஒரு வேளை இந்த வருஷமே என் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டா, மூத்த மாப்பிள்ளையா நீங்க என்ன செய்றதா இருக்கீங்க?

3. வாரம் முழுக்க ஆபீசுக்குப் போயிடறீங்க. வார இறுதியிலாவது எங்க கூட கொஞ்சம் பேசக்கூடாதா? அப்படி என்ன அந்த கம்ப்யூட்டர்லே இருக்குதோ?

4. இந்த வாரம் கண்டிப்பா முழு நாளும் வெளியே போறா மாதிரி ஏதாவது ஒரு இடம் பிடிங்க.


இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியும்னு நெனெக்கிறீங்க? அப்படி ஏதாவது பதில் சொல்லிட்டாக்கூட, அது அடுத்தடுத்த கேள்விகளுக்கு அடிப்படையா அமையும்னு புரிஞ்சிக்க கொஞ்ச நாளாயிட்டது எனக்கு.


அதனால, சனி, ஞாயிறுன்னா எப்பவுமே எங்க வீட்டுலே ரங்கமணியாகிய நான், அந்த ரெண்டையும் மூடிக்கிட்டு உக்காந்திருப்பேன்னு சொல்ல வந்தேன். அப்படி நான் மூடலேன்னா, வீடு ரெண்டாயுடும்னு நான் சொல்லலேன்னா உங்களுக்குத் தெரியாதா என்ன?

பிகு: ரெண்டு போட்டிக்கான எனது முதல் பதிவு இது..

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP