Tuesday, April 15, 2008

கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்

எல்லோருக்கும் நிதி டிவியின் சார்பாக வணக்கம்.


நாம இப்போ நமது மூத்த நடிகர் உலக நாயகன் திரு.கமல் அவர்களின் புதிய படப்பூஜைக்கு வந்திருக்கிறோம். இந்தப்புதிய படத்தில் நமது கமல் அவர்கள் ஒரு புதிய சாதனையை செய்யபோகிறார் என்று செய்தி வந்திருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்வதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம்.


திரு.கமல் கடந்த 75 வருடங்களாக நடித்துக்கொண்டிருந்தாலும், கடந்த 30 வருடங்களில் அவர் யாராலும் செய்ய முடியாத சாதனைகளை செய்திருக்கிறார் என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொண்டுள்ளோம்.


கடந்த 4 திரைப்படங்களில், திரு.கமல் அவர்கள் போட்டு நடித்துள்ள வேடங்கள் பின்வருமாறு:


2010 - தசாவதாரம் - 10 வேடங்கள்
2015 - அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - 41 வேடங்கள்
2020 - நாயன்மார்கள் - 63 வேடங்கள்
2025 - மகாபாரதம் - 106 வேடங்கள் (5 பாண்டவர்கள், 100 கௌரவர்கள் மற்றும் கிருஷ்ணர்)


இதோ, திரு.கமல் அவர்கள் வந்துவிட்டார். அவரிடம் பேசுவோம்.


வணக்கம். திரு.கமல் அவர்களே.. ஒரே திரைப்படத்தில் நீங்கள் போட்டுவரும் வேடங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அது போல், இப்போது நடிக்கப்போகும் திரைப்படத்தில் நீங்கள் எவ்வளவு வேடத்தில் நடிக்கப்போகிறீர்கள் என்று தெரிந்துகொள்வதற்கு நாங்கள் எல்லாம் ஆவலாக உள்ளோம். கடைசியாக நீங்கள் நடித்த 100 வேடங்களைவிட அதிகமாக இருக்குமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.


வணக்கம். நிதி டிவி நேயர்களே. ஆம். கடந்த 4 திரைப்படங்களில் நான் போட்டு நடித்துள்ள வேடங்கள் மிக அதிகம். கண்டிப்பாக இன்னும் அதிக வேடங்கள் போட வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், சுமார் 35 வருடங்களுக்குப் பிறகு நான் மிக சிரமப்பட்டு நடிக்கப்போகும் படம் இது என்று சொல்லலாம். கதையையும், என் வேடங்களையும் கேட்டபோது எனக்கே வியப்பாக இருந்தது. என்னடா, இதில் நாம் நடிக்க முடியுமா, நடித்தால் மக்கள் விரும்பி பார்த்து, படத்தை வெற்றி பெறச் செய்வார்களா என்று மலைப்பாக இருந்தது. ஆனால், படத்தை எடுக்கும் தம்பிதான் தைரியப்படுத்தி என்னை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்.


அது சரி, இந்த படத்தில் உங்களுக்கு எவ்வளவு வேடங்கள் என்று நீங்கள் சொல்லவேயில்லையே?

ரெண்டு.


பிகு: ரெண்டு போட்டிக்கான இடுகை அல்ல இது.

6 comments:

வெட்டிப்பயல் April 16, 2008 at 10:26 AM  

போட்டிக்கான இடுகை இல்லைனு சொல்லிட்டீங்க. அதனால ஓகே...

தசவதாரம் வந்த பிறகு இத்தனை ரோல் தேவையானு பார்த்துட்டு விமர்சிக்கலாமே

வால்பையன் April 16, 2008 at 12:02 PM  

இது ஒரு மேனியா வியாதி என்று கற்றதும் பெற்றதும் புத்தகத்தில் சுஜாதா சொல்லியிருக்கிறார், படித்தீர்களா?
(உங்களை சொல்லவில்லை வித்தியாச மேனியா பற்றி சொல்கிறேன்)


வால்பையன்

வால்பையன் April 16, 2008 at 12:02 PM  

இது ஒரு மேனியா வியாதி என்று கற்றதும் பெற்றதும் புத்தகத்தில் சுஜாதா சொல்லியிருக்கிறார், படித்தீர்களா?
(உங்களை சொல்லவில்லை வித்தியாச மேனியா பற்றி சொல்கிறேன்)


வால்பையன்

சின்னப் பையன் April 16, 2008 at 3:11 PM  

ஹலோ வெட்டிப்பயல் -> அச்சச்சோ.. இந்த இடுகை அவரை 'திட்டறா' மாதிரியே இல்லே... ரெண்டு, மூணு வேடங்கள் போடுவது அவருக்கு கொஞ்ச நாள் கழிச்சு 'கஷ்டமா' போயிடும்னு சொல்ல வந்தேன்...

வாங்க வால்பையன் -> என்னங்க.. இதிலே ஏதாவது உள்குத்து இருக்குதா???? :-))))))))))))

Anonymous,  June 1, 2008 at 5:39 AM  

adhu sari 1 mishtake in ur post.nayanmargal padathil sivan role yaar panuvanga?? so nayanmargal movies 64 role.okva??

Athisha June 1, 2008 at 2:02 PM  

ஆக்சுவலி அவரு 1000 தலை வாங்கிய அபூர்வ சிகாமணி படத்தில 1001 வேடங்கள்ல நடிக்கப்போறதாதான் 2030 தினதந்தி ல குருவியார் சொல்லிருக்காங்க.....

;-)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP