Monday, October 26, 2009

டைரக்டர் விசுதான் கைப்பை வாங்க உதவி பண்ணனும்!!!

ஒண்ணுமில்லேங்க. ஒரு கைப்பை. ஒரே ஒரு கைப்பை வாங்கணும்னு தங்கமணி சொன்னாங்க. சரி வாம்மா போகலாம்னு சொன்னேன். அதுக்கு - இருங்க. கடைக்குப் போறதுக்கு முன்னாடி என் கண்டிஷன்களையெல்லாம் சொல்றேன். கேளுங்கன்னாங்க.

இதென்னம்மா, மணல்கயிறு எஸ்.வி.சேகர் மாதிரி எட்டு கண்டிஷன் போடப்போறியா... ச்சீச்சீ. அவரை மாதிரி எட்டெல்லாம் கிடையாது. என்னோடது வெறும் அஞ்சே அஞ்சு கண்டிஷன்ஸ்தான். கொஞ்ச நேரம் பேசாமே நான் சொல்றதை கேளுங்க.

சரி சரி. சொல்லும்மா சொல்லு.

******

கண்டிஷன் நம்பர் 1: Size

கைப்பை பெரிசா கைப்பெட்டி மாதிரியும் இருக்கக்கூடாது. ச்சின்னதா பர்ஸ் மாதிரியும் இருக்கக்கூடாது. நடுவாந்தரமா இருக்கணும்.

அவ்ளோதானே. வெரி சிம்பிள். வா கடைக்குப் போகலாம்.

இருங்க. நான் இன்னும் மிச்ச நாலு கண்டிஷன்களை சொல்லவே இல்லையே?

சரி. சொல்லு.

கண்டிஷன் நம்பர் 2: நீளம்

கைப்பையை தோள்லே மாட்டினா, நீளமா கால் வரைக்கும் வரக்கூடாது. அதனால் தோள்லே மாட்ட முடியாதவாறு சின்னதாவும் இருக்கக்கூடாது.

ஏம்மா. இப்பதான் எல்லாத்திலேயும் adjustable மாடல் இருக்குமே. நமக்கு எவ்ளோ நீளம் வேணுமோ, அவ்ளோ வெச்சிக்க வேண்டியதுதானே?

எனக்கு adjustable வேண்டாம். வாங்கும்போதே சரியானதா வாங்கிடணும். வாங்கித்தர முடியாதுன்னா இப்பவே சொல்லிடுங்க... என்ன?

சரி சரி வாங்கித் தர்றேன். அடுத்த கண்டிஷனை சொல்லு.

கண்டிஷன் நம்பர் 3a: கலர்.

கொஞ்சம் dark கலர்தான் வேணும். அதுக்காக ரொம்ப darkஆ இருக்கக்கூடாது.

கறுப்பு ஓகேவா?

எனக்கு தமிழ்லே பிடிக்காத ஒரே கலர் - கறுப்பு. அதனால் அது வேணாம். brown ஓகே.

கண்டிஷன் நம்பர் 3b:

எந்த கலரா இருந்தாலும், ரொம்ப பளபளான்னு இருக்கக்கூடாது. அதுக்காக மங்கின கலராவும் இருக்கக்கூடாது.

அப்போ நடுவாந்திரமா இருக்கணும். சரியா?

எப்படி கரெக்டா சொல்றீங்க?

அதைத்தானே முதல்லேந்து சொல்லிட்டு வர்றே? ம். சரி. மேலே..

கண்டிஷன் நம்பர் 4: Cost

ஆஹா.. இப்பத்தான் எனக்கு தேவையான விஷயத்துக்கு வந்திருக்கே. இந்த கண்டிஷனை நான் சொல்றேன்.

சரி சொல்லுங்க.

உனக்கு என் க்ரெடிட் கார்டை கொடுத்துடறேன். உனக்கு எவ்ளோக்கு வாங்கணும்னு தோணுதோ நீ வாங்கிக்கோ. அப்புறம் எந்த கேள்வியையும் கேக்க மாட்டேன்.

அதெல்லாம் வேணாம். நான் ரொம்ப காஸ்ட்லியால்லாம் வாங்க மாட்டேன். அதனால் எனக்கு கார்டெல்லாம் வேணாம்.

ஏம்மா? நாந்தான் திட்ட மாட்டேன்னு சொல்றேன்ல.

காரணத்தை சொல்றேன். அவசரப்படாதீங்க. ஏன்னா, அதுதான் எனது அடுத்த கண்டிஷன்.

கண்டிஷன் நம்பர் 5:

நான் வாங்கப்போற கைப்பை, ஒரு வருஷத்துக்கு மேலே உழைக்கக்கூடாது.
அப்படின்னா, என்ன ஒரு வருஷத்துலே அதை கிழிச்சிடப் போறியா?

கிழிக்க மாட்டேன். அதுக்காகத்தான் ரொம்ப விலை கொடுத்து வாங்க மாட்டேன்னு சொன்னேன்.

அப்புறம்?

நான் எந்த கைப்பையையும் ஒரு வருஷத்துக்கு மேலே பயன்படுத்த மாட்டேன். அதனால், விலை கொஞ்சம் கம்மியா வாங்கி, அதை ஒரு வருஷத்துக்கு மட்டுமே பயன்படுத்தி, அடுத்த வருஷம் மறுபடியும் புதுசா வேறே ஒண்ணு வாங்கணும். அதான். இப்ப புரிஞ்சுதா?

மனதில்: விளங்கிடும். இந்த கண்டிஷனுக்கெல்லாம் உட்பட்டு ஏதாவது கைப்பை கிடைக்கும்னு நினைக்கிறே? ஒரு வருஷம் தேடினாலும், நோ சான்ஸ்...

வாயில்: ரொம்ப நல்லா புரிஞ்சுதும்மா. ஒரு ரெண்டு நாள் தேடினா போதும். கிடைச்சிடும்னு நினைக்கிறேன். இன்னிக்கே தேட ஆரம்பிச்சிடுவோம். நீ உடனே கிளம்பு. போகலாம்.

*****

டைரக்டர் விசுதான், எஸ்.வி.சேகரை ஏமாத்தி கல்யாணம் செய்து வெச்சா மாதிரி, எனக்கும்... வெயிட் வெயிட்.. கல்யாணம் செய்து வெக்கச் சொல்லலே... ஒரே ஒரு கைப்பை வாங்கித்தர சொல்றேன். அவ்ளோதான். செய்வாரா?

*****

Read more...

Sunday, October 25, 2009

ச்சின்னப் பையன் 25

பிரபலங்கள்தானே 25 போடணும் நாம எதுக்காக போடணும்னு ஒரு கேள்வி இருந்தாலும் - நம்மை பற்றி நமக்கே சரியாக தெரியாத போது வேறே யார் எழுதமுடியும்னு நினைச்சதாலும் - பதிவு போட்டே ரொம்ப நாளாச்சு, எதையாவது போடணும்றதாலும் - ட்விட்டரில் 104 பேர் பின் தொடர்ந்தாலும் தனியா புலம்பற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமோன்னு நினைக்கற
அளவுக்கு பொலம்பறதாலும் - அங்கே உளர்னதுலே எனக்கு பிடிச்ச நான் போட்ட 25 ட்விட்டுகளை இங்கே பதிவா போட்டுட்டேன்!!! (யப்பா. ஒரு வழியா அந்த வாக்கியம்
முடிஞ்சிடுச்சு!!!).

*****

1. ச்சின்ன வயசிலே நான் ரொம்ப brightஆ இருந்தேன்னு சொல்வாங்க. அது சரிதான். நான் அப்பவே ujalaவுக்கு மாறிட்டேன்னு அவங்களுக்கு தெரியாது!

2. நானும் ஒரு பேராசிரியர்தான். அவர் அறையிலும் நான் ட்விட்டரிலும் தனியா பேசிட்டிருக்கோம். யாரும் கேக்கறா / படிக்கறா மாதிரி தெரியல!!!

3. கொடை வள்ளல்னு கேள்விப்பட்டு வந்தவங்களுக்கு குடை கிடைத்தது. அது குடை வள்ளல்தாங்க. தப்பா ப்ரிண்ட் பண்ணிட்டாங்க என்றார். காலை வணக்கம்

4. காலை வணக்கம்! வலது கால் செருப்பை வலது காலிலும், இடதை இடதிலும் போட்டுட்டு போனா, இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாளே!!!

5. As I am suffering from lot of work in Office, I am applying for leave for 2 days - Thurs & Friday. Will update everything on Monday. Thanks

6. ஆபீஸ் நேரத்தை பயனுள்ளதாய் கழிக்க, கொஞ்ச நேரம் வெளியே ஷாப்பிங் போறேன்... மறுபடி 1.5 மணி நேரம் கழித்து சந்திப்போம்... நன்றி வணக்கம்

7. காலை வணக்கம். கலைஞர் கடிதம் எழுதறாரா? அம்மா ஓய்வெடுக்கறாங்களா? மருத்துவர் அடுத்த போராட்டமா? அப்போ எல்லாம் asusualதான்.

8. கலைஞர் தாட்ஸ் - படிப்பை குடும்பத்தோட படிச்சா கட்டணத்துலே ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா????

9. குளிர்காலம் ஆரம்பிச்சிடுச்சு. காலையில் எழுந்துக்கவே சோம்பலா இருக்கு. ஒரு ஆறு மாசம் லீவ் போடமுடியுமான்னு பாக்கணும்!!!

10. #delayedtweets ச்சே அப்பா ரொம்ப மோசம். குடும்பத்தில் யாரும் பதவிக்கு வந்தா முச்சந்தியில் வெச்சி அடிங்கன்றாரே. நான் அமைச்சர் ஆகவே முடியாதா?

11. கலைஞர் தாட்ஸ் - பரிட்சையின் கேள்வித்தாள் முரசொலியில் 'அவுட்' ஆயிடுமா?

12. கலைஞர் தாட்ஸ் - படிப்பை குடும்பத்தோட படிச்சா கட்டணத்துலே ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா????

13. #delayedtweets மெகா சீரியல்னு ஏதோ ஒண்ணு ஆரம்பிக்கிறாங்களாம். அதை எவன் பாக்கப் போறான்.. நாடகம்னா 13 எபிசோட்தானே வரணும்?

14. நாளைக்கு தலைவர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டம் பண்ணப்போறாராம். என்ன ஆகுமோ தெரியலியே!!! #delayedtweets

15. 10.40am. இன்னிக்கு வீட்லேதானே இருக்கேன். அப்புறமும் ஏன் தூக்கம் தூக்கமா வருது?

16. ராஜபக்சேவுக்கு திருக்குறள் மட்டும்தானா? உளியின் ஓசை குறுந்தகடு கிடையாதா? எ கொ கலைஞர் இது?

17. ஒரு பு.அடுப்பு ஊதுகிறது -> ஒரு ஃபுல்லுக்கே இப்படியா உளர்றது? #sequelsthatwillneverbe

18. 1000 த.வா.அ.சிகாமணி -> 1000 தடவை உதை வாங்கினாலும் திருந்தாத ரங்கமணி #sequelsthatwillneverbe

19. எனக்கு 20 உனக்கு 18 -> எனக்கு சரக்கு உனக்கு சைட்டிஷ் #sequelsthatwillneverbe

20. ச்சின்னப்பையன் தாட்ஸ் - இதை ஏதாவது நர்சரி பள்ளியிலாவது ஒரு பாடமா வைக்கமுடியுமான்னு பாக்கணும்

21. நாலே வரின்னாலும் ஆங்கிலப்படத்தில் தமிழ்ப் பாடல். கேட்டீங்களா? நம்ம ஏஆர்ஆர் கலக்கல். குறுகுறு பார்வையிலே http://couplesretreatsoundtrack.com/

22. அமெரிக்கர்களை விடுங்க.. வட இந்தியர்களையே நம்மாட்கள் கடவுள் போலதான் பாக்கறாங்க... இந்த தாழ்வு மனப்பான்மை எப்பத்தான் போகுமோ???

23. இன்னிக்கு 6 மணி நேரம் மீட்டிங். நிறைய பேரு தொடர்ச்சியா பேசுவாங்க. பார்வையை அவங்க மேலே விட்டுட்டு, மனசை இந்தியாவுலே விட்டுட வேண்டியதுதான்...

24. "வயிற்றுக்கும் தொண்டைக்கும்...உருளுதடி"... "அம்மா.. நீ பண்ண சீடையெல்லாம் காணாமே போச்சுன்னியே... அப்பாதான் அதை சாப்பிட்டிருக்காரு"

25. 3000lb capacity கொண்ட மின்தூக்கியில் 140lb மட்டுமே உள்ள நான் தனியா பயணம் செய்தா, மின்தூக்கி திட்டுமா? திட்டாதா?

********

Read more...

Friday, October 2, 2009

உபோஒ - மறுபடியுமா???

ஒரு ச்சின்ன அறிவிப்பு: மக்களே, இந்த இடுகையை படிச்சபிறகு, இதற்கு முந்தைய இடுகைகளையும் பாருங்க. படிக்காமே விட்டிருந்தீங்கன்னா, ஒரு தடவை அவைகளையும் படிச்சிடுங்க... நான் பிரஷர் குக்கர் விக்கலே.. ஆனாலும் சிரிப்புக்கு க்யாரண்டி தர்றேன்.... ஹிஹி...

*****

மொட்டை மாடி. ஒரு மனிதன். கையில் கைப்பேசி மற்றும் கணிணி. உட்கார்ந்து கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.

"ஹலோ, கமிஷனர்?"

"யெஸ். யார் நீ?"

"நான் யாருன்றது அப்புறம் இருக்கட்டும். நான் சொல்றத கவனமா கேளுங்க. இந்த சென்னையில் ஏதோ ஒரு இடத்துலே அஞ்சு பாம் வெச்சிருக்கேன். அது பத்தி பேசணும். மறுபடி பத்து நிமிடம் கழிச்சு கூப்பிடறேன்".

"வெயிட். வெயிட். நீ. தப்பா சொல்றேன்னு நினைக்கிறேன்... அஞ்சு இடத்துலே பாமா? அல்லது ஒரே இடத்துலே அஞ்சு பாமா?"

"ஹாஹா.. வெரி குட். நல்லா கவனிக்கறீங்க. நான் சொன்னது - ஒரே இடத்துலே அஞ்சு பாம்".

டொக்.

*****

மொட்டை மாடி மனிதன் தன் கணிணியை உயிர்ப்பித்து - நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் மறுஒலிபரப்பை பார்த்துக் கொண்டிருக்கிறான். நடுநடுவே தன் கைக்கடிகாரத்தையும்.

*****

அங்கே கமிஷனர் அலுவலகம் பரபரப்பாகிறது. எல்லோரும் வார் ரூமில். எல்லாக் கதவுகளையும் இழுத்து பூட்டிவிடுகிறார்கள். கமிஷனரின் தொலைபேசி, ஸ்பீக்கரில் பொருத்தப்படுகிறது.

சரியாக பத்து நிமிடம் கழித்து தொலைபேசி அழைப்பு வருகிறது.

இந்த அழைப்பை ட்ரேஸ் பண்ணுங்க - கமிஷனர்.

"ஹலோ. யார் நீ?"

பின்னணியில் கிரிக்கெட் சத்தம் கேட்கிறது.

"நான் யாராயிருந்தா என்ன? நான் சொல்லப் போற மேட்டர்தான் முக்கியம் கமிஷனர். சீக்கிரம் நான் சொல்றத கேளுங்க. நான் மேட்ச் பாக்கணும்.".

"சாம்பியன்ஷிப் போட்டியில்தான் இந்தியா இல்லையே? அப்புறம் ஏன் நீ மேட்ச் பாக்கணும்? நீ என்ன பாகிஸ்தானியா? நியூஸிக்காரனா? ஆஸ்திரேலியனா அல்லது இங்கிலாந்துக்காரனா?"

"நல்லா யோசிக்கிறீங்க.. ஏன் நான் ஒரு இந்தியனாவோ, தமிழனாவோ, சென்னைவாசியாவோ அல்லது மைலாப்பூர்காரனாவோ இருக்கக்கூடாதா என்ன?"

"டேய் விளக்கெண்ணெய்... நீ சொன்ன எல்லாருமே இந்தியந்தாண்டா... அதை ஏன் தனித்தனியா சொல்றே..."

"சரி அதை விடுங்க. நான் வைச்சிருக்கிற அந்த அஞ்சு பாம்களை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே கண்டுபிடிச்சு உங்க அலுவலகத்துக்கே கொண்டு வந்து பிரிச்சிப் பாத்துட்டீங்கன்னா அது வெடிக்காது. அப்படி செய்யாமே அதை அங்கேயே திறந்துட்டீங்கன்னா, கண்டிப்பா வெடிச்சிடும்."

தொலைபேசியை ம்யூட்டில் போட்டு - "இந்த அழைப்பை ட்ரேஸ் பண்ணிட்டீங்களா? எங்கேந்து வருதுன்னு தெரிஞ்சுதா?"

"சார். சொன்னா ஆச்சரியப்படுவீங்க. இந்த கால் இதே கட்டிடத்திலிருந்துதான் வருது சார்..."

"அப்படியா?"

வார் ரூமில் சுற்றும்முற்றும் பார்க்கிறார்கள். எல்லோரும் படபடவென்று தங்கள் கணிணியில் தட்டிக்கொண்டிருக்க, ஒருவர் மட்டும் தன் கைப்பேசியை காதில் வைத்து - கையால் மூடியவாறே - ஏதோ கேட்டுக்
கொண்டிருக்கிறார்.

கமிஷனர் அவரிடம் போய் டக்கென்று அவர் தொலைபேசியை பிடுங்கி, காதில் வைத்து கேட்கிறார்.

"திடீர்னு வேனை நிறுத்திடறாங்க. பாதிரியார் பதட்டப்பட்டு பார்க்கிறார். வெளியே போலீஸ் வந்து கதவைத் தட்டுது. எல்லாரும் கீழே இறங்கினப்புறம், போலீஸ் வேனுக்குள்ளே ஏறி என்னவோ தேடறாங்க... ஒரு நிமிஷம் இருங்க.. குக்கரை இறக்கிட்டு வந்துடறேன்..."

"என்னய்யா இது? யாரு போன்லே? என்ன சொல்லிட்டு இருக்காங்க?"

"சார் சார்... சாரி சார்... இது என்னோட மனைவிதான் சார். நீங்க நினைக்கிற மாதிரி அந்த குண்டு வைச்ச ஆள் நானில்லே சார்..."

"சரி.. போன்லே என்ன சொல்லிட்டிருந்தாங்க உங்க மனைவி?"

"அது வந்து... அது வந்து.. நேத்திக்கு நான் கோலங்கள் பாக்கலே. அதனால் அதோட கதையை என்கிட்டே சொல்லிட்டிருந்தாங்க. மன்னிச்சிடுங்க சார்.. இனிமே இந்த மாதிரி நடக்காது."

"அடச்சே... மரியாதையா போனை கட் பண்ணிட்டு, வேலைய பாரு.. வேற யாராவது போன் பண்ணி என்கிட்டே விளையாடறதா இருந்தா இப்பவே சொல்லிடுங்க. நானா கண்டுபிடிச்சேன்னா, தொலைச்சிடுவேன்.."

அப்போது ஒரு காவலாளி ஒருவரை இழுத்து வந்து - "சார். நம்ம கட்டிட மொட்டை மாடியில் இவன் உக்காந்திருந்தான் சார். சந்தேகமாயிருக்கவே பிடிச்சி இழுத்துட்டு வந்திருக்கேன்".

"சபாஷ். நல்ல வேலை பண்ணீங்க. டேய், உன் போனைக் குடு" என்று வாங்கி அதிலிருந்து போயிருக்கும் அழைப்புகளை பார்க்கிறார்.

"உனக்கு என்ன தைரியம் இருந்தா, எங்க கட்டிடத்திலிருந்து எனக்கே போன் பண்ணி குண்டு வெச்சிருக்கேன்னு சொல்லுவே. மரியாதையா சொல்லிடு. அந்த அஞ்சு குண்டு எங்கே வெச்சிருக்கே. எத்தனை மணிக்கு வெடிக்கும்?"

"சார். என்னை மன்னிச்சிடுங்க. நான் குண்டெல்லாம் எங்கேயும் வைக்கலே. நான் குரியர் டெலிவரி பண்றவன். உங்க ஆபீஸுக்கு அஞ்சு பெரிய பார்சல் வந்திருக்கு. அதை என்னாலே தூக்கிட்டு இந்த வெயில்லே வரமுடியல. அதனால் இந்த ஐடியா பண்னேன். அதாவது, இந்த இடத்துலே அஞ்சு பாம் இருக்குன்னும், அதை இங்கே கொண்டு வந்துதான் திறந்து பாக்கணும்னும் சொன்னா, நீங்களே போய் உங்க பார்சலை டெலிவரி எடுத்துடுவீங்கன்னு நினைச்சி, இந்த தப்பை பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இனிமே இந்த மாதிரி தப்பை பண்ணவே மாட்டேன்".

"மொதல்லே இவனை தூக்கி லாக்கப்புலே போடுங்க. அப்பதான் புத்தி வரும். Mission Accomplished. எல்லாருக்கும் நன்றி. நீங்கல்லாம் உங்க வேலையை பாக்கலாம்."

அரை மணி நேரத்தில் பிரச்சினையை தீர்த்த கமிஷனரை பாராட்டி எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட - தலையாட்டிக் கொண்டே கமிஷனர் வெளியே செல்ல - பின்னணி இசையில் 'சம்பவாமி யுகே யுகே...'.

முற்றும்.

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP