Monday, May 26, 2014

சங்கீத வாத்தியார்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்!!




அமெரிக்காவில் இருந்தபோது சஹானாவிற்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுக்கவேண்டுமென்று ஒரு நல்ல ஆசிரியரைத் தேடினோம். கர்நாடக முறையிலான பாட்டு சொல்லிக் கொடுக்க எங்க கிராமத்தில் யாரும் இல்லாது போகவே, ஹிந்துஸ்தானி பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரிடம் சேர்ந்தார். இரு வருடங்கள் பாட்டு கற்றும் கொண்டார்.

இதற்கிடையில் சென்னை திரும்பி வர நேர்ந்ததும் இங்கே அதே ஹிந்துஸ்தானிக்காக ஒரு வாத்தியைப் பிடித்தோம். இவரை பாடச் சொல்லிக் கேட்ட வாத்தி, நல்லாத்தான் பாடுறாங்க. ஆனா, அவர் (அமெரிக்க வாத்தி) சொல்லிக் கொடுத்த முறை வேறு. நான் சொல்லிக் கொடுக்கும் முறை வேறு. அதனால், முதல் இரு மாதங்கள் மறுபடி ஆரம்பத்திலிருந்துதான் சொல்லிக் கொடுப்பேன். சஹானாவின் வேகத்திற்கேற்ப அடுத்தடுத்த கட்டத்திற்குப் போய்விடலாம் என்றார். அப்போ இரண்டு வருடங்கள் கற்றுக் கொண்டது வேஸ்ட்தானா என்றதற்கு, அப்படி சொல்ல முடியாது. ஆனா அப்படிதான் என்று மழுப்பி பாடத்தை ஆரம்பித்தார். ஆனால், வேகமாகவும் பாடங்களில் முன்னேறினார்.

அதே வகுப்பில் கர்நாடக வாத்தி ஒருவரும் இருந்தார். சஹானா நல்லா பாடுறாங்க. நேரம் இருந்தால் கர்நாடக பாட்டு வகுப்பிலும் சேர்த்து விடுங்க. வேகமா பிக்கப் செய்துடுவாங்க என்று சொல்லி அதிலும் சேர்த்துக் கொண்டார்.

இதற்கிடையில் சஹானா, வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே, அதிலும் சேர்த்துவிட்டோம். இப்படியாக சென்னையில் இந்த மூன்று வகுப்பிலும் சேர்ந்து சஹானா பாடி / வாசித்து வந்தார்.

கால மாற்றம். காலச் சக்கரத்தில் சுழற்சி. எங்களை பெங்களூருக்கு தள்ளியது.

இங்கே பாட்டு வகுப்பில் சேர்ப்பதற்காகப் போனோம். எங்கே பாடுங்க? - இது வாத்தி. சஹானாவும் 2-3 பாடல்களைப் பாடிக் காட்டினார். எல்லாவற்றையும் கேட்ட வாத்தி இறுதியில் என்ன சொல்லியிருப்பார்? அதேதான். இதுவரை இவர் கற்றவை ஹிந்துஸ்தானி & கர்நாடிக் ஆனாலும், கற்றுக் கொடுக்கும் வகைகள் எல்லா இடத்திலும் வெவ்வேறாக இருப்பதால், மறுபடி முதலிலிருந்து துவக்க வேண்டும் என்றார். செம டென்சன் ஆனோம். மறுபடி - சரிகமபதநி என்று முதல் வகுப்பிலிருந்தா, அப்போ நான்கு ஆண்டுகளாக இவர் கற்றதெல்லாம் வீண்தானா என்று கேட்க - அப்படியில்லை ஆனால் அப்படித்தான் என்றார். ஆனால் கவலைப்படாதீர்கள் ஓரிரு மாதங்களில் நான் மறுபடி இதே நிலைமைக்குக் கொண்டு வந்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.

அடுத்து வயலின் வாத்தி. இதிலும் 1-2 பாடல்களை வாசித்துக் காண்பித்தார் சஹானா. மேலே உள்ள பத்தியில் பாட்டுக்கு பதிலாக வயலின் என்று போட்டுக் கொள்ளவும். சொந்தமாக பாடல்களை வாசித்துப் பழகி வரும் நிலையில் இருந்தாலும், அடிப்படை வகுப்பில் இந்த வாத்தி சொல்லிக் கொடுக்கும் முறை மாறுபடுகிறது என்று சொல்லி, ஓரிரு மாதங்கள் மறுபடி பாடங்களை கற்றுத் தருகிறேன். வேகமாக பிக்கப் செய்துவிடுவார் என்று சொல்லியுள்ளார்.

என்ன கொடுமை இது வாத்திகள்? புதிய பள்ளி, புதிய மொழி இப்படி எல்லாப் பிரச்னைகளையும் கடந்து ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாறினாலும், இந்த பாட்டு / வயலின் வகுப்பு வாத்திகள் படுத்தும் ‘பாட்டுக்காக’ இனிமேல் அடுத்த முறை இடப்பெயர்வுக்கு பயங்கரமாக யோசிக்க வேண்டியிருக்கும்.

இப்படி இந்த சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வாத்திகள், பள்ளிக்கூடம் நடத்தினால் என்ன ஆகும்? மூன்றாம், நான்காம் வகுப்பில் சேர வரும் மாணவ/விகளை மறுபடி முதல் வகுப்பிலேயே சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவார்களோ? #மிடியல.

***


Read more...

Thursday, May 22, 2014

பிரச்னை புரியல. ஆனால் உங்க பதில் தேவை!!

தெரிஞ்சோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ, ஓட்டக்காரர்னு ஒரு பேரு எடுத்துட்டேன். நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கும், அலுவலகத்தில் அடிக்கடி பேசித் தொடர்பில் இருப்பவர்களுக்கும் அது தெரியும். ஆனால், அலுவலகம் முழுக்க எப்படி பரப்புவது? இதற்கு நான் எடுத்த சில முயற்சிகளும் அதன் பலன்களும் என்னன்றதுதான் இந்த பதிவு.


சென்ற அலுவலகத்தில் ஒரு நல்ல பதவி வந்தபோது, அதற்காக ஒரு அறிமுக மின்னஞ்சல் அலுவலகம் முழுக்க அனுப்பணும். உங்களைப் பற்றிய விவரங்களை இந்த டெம்ப்ளேட்டில் எழுதித் தாங்கன்னு கேட்டாங்க. அதில் ஒரு தலைப்பு - பொழுதுபோக்கு. அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ், இதில் நம்ம ஓட்டத்தைப் பற்றி எழுதி அனுப்புவோம் - அலு முழுக்க தெரியட்டும்னு எழுதி அனுப்பினேன். என்ன ஆச்சரியம்? இந்த குறிப்பிட்ட தகவல் மட்டும் வெட்டப்பட்டு, பாக்கி விவரங்கள் எல்லாம் மின்னஞ்சலில் வந்தது. என்னம்மா ஆச்சு? ஏன் அதை மட்டும் வெட்டிட்டீங்கன்னு கேட்டா, மின்னஞ்சல் ரொம்ப பெரிசா இருந்துச்சு, அதனால்தான். தப்பா எடுத்துக்காதீங்கன்னு சொன்னாங்க. சரின்னு விட்டுட்டேன்.


ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒரு திட்டத்தின் கீழ், உடல்நல அமைச்சராக நான் போட்டியிட்டு, என் ஓட்டத்தைப் பற்றி அலு முழுக்க நிறைய விளம்பரங்கள் செய்து, பலரை ஓட வைத்தது வரலாறு.


இங்கே கட் பண்றோம். அடுத்த வருடம். வேறொரு வேலை. வேறொரு அலு.


அதே பழைய டெம்ப்ளேட். அதே போல 'பொழுதுபோக்கு' பத்தி. ஆனால், அதே போல் ஓட்டத்தைப் பற்றி எழுதலாமா வேண்டாமான்னு ஒரு யோசனை. பிறகு, சேச்சே, அது வேறு அலு. இது வேறு அலு. அங்கேதான் லூஸ்தனமா சிந்திச்சி, அந்த ஒத்தை வரியை 'கட்' பண்ணினாங்கன்னா, இங்கேயும் பண்ணுவாங்களா என்னன்னு நினைச்சி, மராத்தான் பற்றியும் அதில் நம் பங்களிப்பு குறித்தும் சிறு குறிப்பு (2 வரிகள் மட்டுமே) வரைந்து அனுப்பி வைத்தேன்.


நம்ம குழுவிலேயே 150+ பேர் இருக்காங்க. எல்லாருக்கும் தெரியட்டும்னு அனுப்பிச்ச வெச்ச அந்த தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல், ஒன்றரை மாசம் கழித்தும் வெளிவரவில்லை. போன வாரம் தொலைப்பேசி கேட்டா, கொஞ்சம் எடிட் பண்ணனுமேன்னாங்க. ஏங்க, அதில் இருப்பது என் படிப்பு, சான்றளிப்புகள், அனுபவம் இவ்வளவுதான். இதில் எதை எடிட் செய்யணும்னு கேட்டேன்.


பதில்? இதைப் படிக்கற நீங்க நினைப்பது சரிதான். மறுபடி அதே 'பொழுதுபோக்கு' விவரத்தை எடுத்துடலாமான்னு கேட்டாங்க. எனக்கு செம குழப்பம். ஏம்மா, அதில் என்ன பிரச்னைன்னு கேட்டா, பொபோ'ன்னா - புத்தகம் படிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது இப்படிதான் இருக்கணும். நீங்க ஓடறதுன்னு போட்டிருக்கீங்களேன்றாங்க. அவ்வ். வேண்டாம். அதை எடுக்க வேண்டாம். அப்படியே மின்னஞ்சல் அனுப்புங்கன்னா, முடியாது. அதை எடுக்கலேன்னா மின்னஞ்சலே வராதுன்னுட்டாங்க. நீங்க ஆணியே புடுங்க வேண்டாம். மின்னஞ்சல் அனுப்பலேன்னா பரவாயில்லைன்னுட்டேன்.


இந்த நிமிடம் வரை என் அறிமுக மின்னஞ்சல் வரவேயில்லை.


* ஏன் அந்த விவரத்தை மட்டும் இரு அலுவலகத்திலும் எடிட் பண்ணனும்னு சொல்றாங்க?


* இந்த நாட்டில் ஒரு தனி மனிதனுக்கு ஓடவும், அதை மற்றவரிடம் பகிர்ந்துக்கவும் அனுமதி இல்லையா?


இந்த இரு சம்பவத்திலும், மின்னஞ்சல் அனுப்பும் / அனுப்ப முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருந்தது தமிழர்கள். அதுவும் பெண்கள் என்பது இங்கு தேவையில்லாத தகவல்.


***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP