Showing posts with label சொந்தக் கதை. Show all posts
Showing posts with label சொந்தக் கதை. Show all posts

Thursday, December 24, 2020

மேடை நாடகங்கள்

மேடை நாடகங்கள்

சாவிசி’யில் மௌலி & காத்தாடியின் பேட்டிகளைப் பார்த்தபிறகு, நானும் அந்தக் காலத்தில் நாடகங்களில் நடித்த....... பதறாதீங்க... நாடகங்களைப் பார்த்த நினைவுகள் வந்ததால்.. இந்த பதிவு. 

திருவல்லிக்கேணியில், (அப்பாடா, ஊர் பேர் வந்துடுச்சு!!) பார்த்தசாரதிஸ்வாமிசபா (ஒரே சொல் - நன்றி அலெக்ஸ்!) எங்க வீட்டிலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் இருந்தது. நான் (அப்போதும்) சின்ன வயசாக இருந்தப்போ, அது அரங்கமா இருந்தது. நாடகங்கள் தொடர்ச்சியாக நடக்கும். எங்க + அக்கம்பக்க பள்ளிகளின் ஆண்டு விழாக்களும் அங்கேதான் நடக்கும். பிறகு அந்த அரங்கத்தை இடித்து அபார்ட்மெண்ட்களாக கட்டிட்டாங்க. இப்போ அந்தந்த வீடுகளில், தொலைக்காட்சியில் மட்டும்தான் நாடகங்கள் வருது. ஆனா, அவற்றை பார்க்க வெளியாட்களுக்கு அனுமதியில்லை. சரி விடுங்க. 

ஏதோ ஒரு விசு படத்தில் ஒரு வசனம் வரும். ‘ஊரில் இருக்கும் 2 நாடக க்ளப்களில் நான் உறுப்பினர். மாதம் 4 நாடகங்களுக்கு டிக்கெட் வரும். ஆனா இவ எந்த நாடகங்களுக்கும் போக மாட்டேங்கறா’. தீபாவளி சீட்டு மாதிரி அப்போ இருந்த நாடக க்ளப்களில் எங்க மாமாவும் ஒரு மெம்பர். இல்லையில்லை. அவரே ஒரு பார்ட்னர் மாதிரி. 2-3 பேர் நண்பர்கள் சேர்ந்து ஒரு க்ளப் வைத்திருந்தனர். இந்த சபாவில் நடக்கும் நாடகங்களுக்கு மொத்தமாக டிக்கெட் வாங்கி, உறுப்பினர்களுக்கு கொடுக்கும் வேலை. 

வாராவாரம் நடக்கும் நாடகங்களுக்காக இவர் அந்த அரங்கத்தில் இருக்க, நாங்க சிறுவர்கள் அங்கேயே விளையாட்டிருப்போம். நாடகம் துவங்கும்போது, வாசலில் நின்று, சீட்டு கிழித்து அனைவரையும் உள்ளே அனுப்பும் வேலை இவருக்கு. என்னை ஒரு நாற்காலியில் அமர்த்தி, ‘நான் வந்து கூட்டிட்டுப் போறவரை எங்கேயும் ஓடிடாதே. இருட்டில் தேடமுடியாது’ன்னுட்டு போயிடுவார். நாமும் எதுவும் புரியாவிட்டாலும், நாடகங்களைப் பார்த்திருந்தது வழக்கமா இருந்தது. ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.சேகர், காத்தாடி... என இவர்களின் நாடகங்களெல்லாம் அங்கு பார்த்த நினைவு இருக்கு. 

அப்படி துவங்கிய நாடகங்களைப் பார்க்கும் படலம், பிறகு, நினைவு தெரிந்தபிறகு (அப்படின்னா?) கலைவாணர் அரங்கம், ராணி சீதை ஹால், வாணி மகால் இவற்றிலெல்லாம் தொடர்ந்தது. மேற்கூறியவர்களுடன் பிறகு ரசித்துப் பார்த்தது - கிரேசியின் நாடகங்கள்.

பல முறை பார்த்த நாடகம்னா நினைவுக்கு வருவது - எஸ்.வி.சேகரின் ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட். பேய் பிடித்த அவர், ஒரு கதவில் வெளியேறி, சில நொடிகளில் இன்னொரு கதவு வழியா வரும்போது, வேறு உடைகளை அணிந்து வருவதைப் பார்த்தெல்லாம் அந்த காலத்தில் கை தட்டியது, விசில் அடித்தது (சரி.. வெறும் காத்துதான்) இப்போ நினைத்தாலும்... ஒண்ணும் ஆகவில்லை... சும்மா சொன்னேன். 

LIVE நாடகங்கள் என்பதால், அதில் தெரியும் பிழைகள், அவற்றை சமாளிக்க அவர்கள் சொல்லும் வசனங்கள்னு அவையும் ரசிக்கும்படியா இருக்கும். 

ஒரு முறை ஒரு கேரக்டர் தன் சட்டைப்பையிலிருந்து எதையோ எடுக்கும்போது, சில காகிதங்கள் கீழே விழுந்துடும். அவர் அதை எடுக்காமல் திரும்பிவிட, சேகர் அவரைக் கூப்பிட்டு - ‘இந்த குப்பையை யார் அள்ளுவா? நானா? இப்படி குப்பை போட்டா, சபாகாரர் கொடுக்க வேண்டிய பணத்தை குறைச்சிடுவார். ஒழுங்கா எடுத்துப் போங்க’ன்னு அவரைத் திட்டுவார். 

இன்னொரு நாடகத்தில், ஒருவர் மைக்கிற்கு சிறிது தூரத்தில் நின்று பேச, மேடையிலேயே ‘உங்களுக்கு இங்கே நின்று பேசணும்னு மார்க் போட்டிருக்கில்ல. பின்னே ஏன் அங்கே நின்று பேசுறீங்க?’ன்னு ஒரு வசனம். 

இதெல்லாம் அந்தந்த நேரத்தில் சேர்க்கப்பட்ட வசனங்கள்னு புரியும். இதே போல பல சொல்லலாம். ஆனா மறந்துடுச்சு. ஆகவே சொல்ல முடியாது. 

1995-96 நினைக்கிறேன். இதுவே சோ இறுதியாக நடிக்கும் மேடை நாடகம்னு விளம்பரம் வந்திருந்தது. கலைவாணர் அரங்கில் தொடர்ச்சியாக ஒரு வாரம் அவருடைய நாடகங்கள். ஒரு 2 நாள் மட்டும் போய் பார்த்தோம். 

1999ல் சென்னையை விட்டபிறகு, தில்லியில் தமிழ்ச்சங்கத்திற்கு அருகிலேயே பல காலம் வசித்தாலும், பல நாடகங்கள் அங்கு நடந்திருந்தாலும், ஒருமுறைகூட போகவில்லை. (வாராவாரம் சனிக்கிழமை திரைப்படத்திற்கு மட்டும் சென்றுவிடுவோம்!!).

அந்த பழைய நாடகங்கள் பெரும்பாலும், யூட்யூப்பிலும், mp3யாக இப்போதும் கிடைக்குது. ஆனா, நேரில் பார்க்கும் அந்த அனுபவம் இதில் இல்லாததால், இவற்றைப் பார்க்கும் / கேட்கும் ஆர்வமே வரவில்லை. 

பல்லாண்டுகள் இத்தகைய நாடகங்களை பார்த்த பாதிப்பில் எழுதியதே இந்த ‘நாடகம் மாதிரி’ மினி தொடர். படிச்சிட்டு திட்டக்கூடாது. நோ பேட் வேர்ட்ஸ்.

http://boochandi.blogspot.com/2009/03/1.html


***


Read more...

Tuesday, July 21, 2020

புத்தகங்கள் (மொழிபெயர்ப்பு)


*** இவை அனைத்தும் கன்னடம் டு தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் பற்றியது மட்டுமே.
** இவை அனைத்தும் மாத்வ சித்தாந்தத்தைப் பற்றிய புத்தகங்கள் மட்டுமே.

* சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாய் சில கட்டுரைகளை மொழிபெயர்த்து ப்ளாக்கில் போட்டு, வாட்சப் லிங்க் மூலமா பலருக்கு அனுப்பிச்சேன்.
** பலர் தொலைபேசி, அருமையா இருக்கு, புத்தகமா போடுங்க நாங்க வாங்கறோம்னாங்க. (அதில் சிலரைப் பற்றிதான் இந்த பதிவே!!).

* சரின்னு புத்தகங்கள் போடத் துவங்கினேன். (இதுவரை 10). அவங்களிடம் சொன்னேன்.
** புத்தகம் படிக்க கஷ்டம், ஈ புக் போடுங்க. படிக்கறேன்னாங்க.

* சரின்னு கிண்டிலில் எல்லா புத்தகங்களையும் இறக்கினேன் (இதுவரை 28). அவங்களிடம் சொன்னேன்.
** புத்தகமெல்லாம் பெருசு பெருசா இருக்கு, சின்ன சின்னதா பிரிச்சி மாதா மாதம் படிக்கற மாதிரி செய்ங்கன்னாங்க.

* சரின்னு ஒரு மாத இதழ் துவக்கினேன். அவங்களிடம் சொன்னேன்.
** அந்த மாத இதழை ஈ-புக்கா போடுங்க. படிக்கறோம்னாங்க.

* சரின்னு அதை ஒரு appல் போட்டேன். அவங்களிடம் சொன்னேன்.
** பெரிய பெரிய கட்டுரைகள் படிக்க கஷ்டமாயிருக்கு. ஏதாவது கேள்வி பதில் தொகுப்பு மாதிரி இருக்கான்னாங்க?

* சரின்னு ஒரு app உருவாக்கி, அதில் 5,000 கேள்வி பதில் போட்டேன். அவங்களிடம் சொன்னேன்.
** நமக்கு எதுவுமே தெரியல. எங்களுக்கு புரியற மாதிரி ஏதாவது சொல்லுங்கன்னாங்க. (அல்லது) எனக்கு சில கேள்விகள் இருக்கு. அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கன்னாங்க.

** OTOH, இந்த அனைத்தையுமே வாங்கி, படிச்சி, அடிக்கடி சந்தேகம் கேட்டு, நம்மை ஊக்குவிப்பவர்களும் உண்டு.

** So, இதிலிருந்து புரிஞ்சிக்கிட்டது என்னன்னா, ஒண்ணுமில்லே. அவ்வளவுதான். :-)

** இதில் யார் மீதும் கோபமோ, வருத்தமோ நமக்கு இல்லை. நாம் செய்வதெல்லாம் நம்ம திருப்திக்கு மட்டுமே. ப்ளஸ் கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - இதுக்கும்தான்.

***

Read more...

Thursday, July 16, 2020

ராமாயணம் - கன்னடப் பாடல்கள்



சென்ற ஆண்டு அக்டோபர். சென்னையிலிருந்து ஒருவர் ஒரு 150 பக்க PDFஐ அனுப்பியிருந்தார். கையெழுத்துப் பிரதி. மிகவும் பழைய புத்தகம்னு புரியுது. கன்னட எழுத்துக்கள். எனக்கு கன்னடம் தெரியாது, ஆகவே, இதை படித்து தமிழில் தட்டச்சி கொடுக்க முடியுமான்னு கேட்டார். முதல் பக்கத்தை மேய்ந்தபோது, பல சொற்கள் புரிந்தும், சில புரியாமலும் இருந்தன. சரி நான் பார்த்து சொல்கிறேன்னு சொல்லி விட்டுட்டேன். 

நமக்கு ஏற்கனவே இருந்த சிலபல ப்ராஜெக்ட்ஸ்களை செய்து கொண்டேயிருக்க, அவரும் நடுநடுவே நிலவரத்தை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் இதோ அதோன்னு சொல்லிட்டே. இந்த ஆண்டு மார்ச் அங்கிருந்து கூப்பிட்டார். அந்த டாகுமெண்ட் எனக்கு கொஞ்சம் தமிழில் கொடுங்க. எனக்கு 70 வயசு. நான் கண் மூடுவதற்குள் அதை தமிழில் புத்தகமாக பிரசுரிக்க வேண்டும். இதுவரை 10-15 கன்னடர்களை நான் கேட்டாச்சு. யாருக்கும் நேரம் இல்லை / முடியவில்லை / தெரியவில்லை / புரியவில்லை / ஆர்வம் இல்லை. நீங்க இதை முடித்துக் கொடுத்தால், இதை என் குடும்பம் என்றைக்கும் மறக்கவே மறக்காது.

என்னடா இது அவ்வளவு முக்கியமா? சரி, இதன் வரலாறு என்னன்னு கேட்டால்: 

1820-1890 வரை வாழ்ந்த இவருடைய தாத்தாவுடைய தாத்தா எழுதிய புத்தகம் (பாடல்) இது. பெயர் நரஹரி தாசர். அங்கிதம் (முத்திரை) நாமகிரீஷ. மைசூர் சமஸ்தானத்தில் புலவராக (கவிஞராக) இருந்திருக்கிறார். பிறகு ஏதோ ஒரு சமயத்தில் அவர்கள் தமிழகம் வந்துவிட, தமிழர்களாகிட்டாங்க. இப்போ இவருக்கு கன்னட கொத்தில்லா. 

சரி, இது என்ன புத்தகம்னு தெரியுமான்னா, ராமாயணம் - தீர்க்க கிருதி. (நீண்ட பாடல்). இதை தயவு செய்து... மறுபடி பழைய ராமாயணம்!!.

இப்போ இதில் ஆர்வம் வருது. ஆனா, நமக்கு அச்சிட்ட (printed) புத்தகங்கள் மட்டுமே வேகமாக படிக்க முடியும். கையெழுத்து படிக்க ரொம்ப தாமதம் / நேர விரயம் ஆகும். அதுவும் இதில் ஏகப்பட்ட அடித்தல், திருத்தல்.நம் கன்னட சந்தில் சில பேருடன் முன்னர் பேசியிருந்தாலும், மிகவும் மொக்கையான (சிறியதான) ஓரிரு உதவிகளை கேட்டு, அவர்கள் அதையே செய்யாமல் விட்டதால், அவர்களைக் கேட்காமலேயே செய்யணும்னு முடிவு. இதில் இருக்கும் சிக்கல், படிப்பவர் நேடிவ் கன்னடராகவும், சம்ஸ்கிருதம் & ராமாயணம் தெரிந்தவராகவும் இருக்கணும். அப்படி ஒருவரை தேடணும்னு பார்த்தேன். 

நம் அலுவலக நண்பர் ஒருவரைக் கேட்டு, அவரும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு 40 பக்கம் வரை கடகடன்னு முடித்தனர். ஓரளவுக்கு சரியாகவே இருந்தாலும், சரி முடித்து விடலாம்னு நினைச்சா, அதன் பிறகு நீண்ட ப்ரேக் விட்டுட்டாங்க. இப்போ வேற யாரையாவது பிடிக்கணும். 

எதிர் வீட்டு சார் ஒருவர் கொரோனாக்கு முன்பாக சனி & ஞாயிறு விடுமுறையாக இருந்தாலும் தவறாமல் ஆபீசுக்குப் போய்விடுவார். ஒரே ஒரு நாள்கூட வீட்டில் இருந்தால் என்ன செய்வதென்றே தெரியல. செம போர் அடிக்குது. இப்படி சொன்னவரை கொரோனா வீட்டிலேயே பின் போட்டு அழுத்த, அவரிடம் போய் - சார் இப்படி இப்படி விஷயம். உங்க உதவி தேவைன்னு கேட்டு, வழக்கம்போல டிஸ்க்ளெய்மரும் சொன்னேன். முடியலேன்னா பரவாயில்லை. ஒன்றும் பிரச்னையில்லை. நீங்கதான் செய்யணும்னு கட்டாயமில்லை. சொல்லிடுங்க. நான் வேற ஆள் பார்த்துக்கறேன். 

இல்லேப்பா, ஒரே ஒரு வாரயிறுதி போதும். முடிச்சி கொடுத்துடறேன். ஒன்றும் வேலையெல்லாம் இல்லை. வழக்கம்போல சும்மாதான் இருப்பேன். -- அவ்வளவுதான், அடுத்து மூன்று வாரங்களுக்கு அவர் நம் பக்கம் திரும்பவேயில்லை. நேராக பார்த்தாலும், டேக் டைவர்ஷன் போட்டு திரும்பிடுவார். சரி இவரை நம்பி பிரயோஜனமில்லை. 

நம் பழைய வீட்டில் ஒரு அக்கா. பேராசிரியை. சரி அவங்களிடம் கேட்கலாம்னு கேட்டாச்சு. கண்டிப்பா செய்து தர்றேன்னு சொல்லி, ஒரே வாரத்தில் சுமார் 30-40 பக்கங்கள் வரை படித்தும் ரெகார்ட் செய்து கொடுத்தார். அவ்ளோதான் முடிஞ்சுது. வேற வேலை இருக்குன்னுட்டாங்க. பரவாயில்லை. மிக்க நன்றின்னு அந்த ரெகார்டிங்கை வாங்கினேன். 

அவங்க ரெகார்டிங்கில் ஒரே ஒரு பிரச்னைதான். வேகம் வேகம் அப்படியொரு வேகம். நமக்குத் தேவையே, சிலபல கடினமான சொற்கள், அடித்து திருத்திய இடங்களில் இருக்கும் வாக்கியங்கள் இப்படி. ஆனா இந்த அக்காவோ, 

* சிக்கலான சொற்கள் வந்தால் அதை படிக்காமல் விடுவது
* அடித்து திருத்தப்பட்ட சொற்கள் வரும் இடத்தில் மூச்சு வாங்கும் சாக்கில், அவற்றை முழுங்கிவிடுவது
* வாக்கியத்தின் கடைசி சொற்களை முழுங்கிவிடுவது.
* நடுநடுவே சில வரிகளையே விட்டுவிடுவது

என ரெகார்டிங்கைக் கொடுத்தார். 

ஆக, நம் தேவைகள் முழுமையா பூர்த்தி ஆகவில்லை. சரி மேடம், இது போதும் மிக்க நன்றின்னு சொல்லியாச்சு.

அடுத்து இன்னொருவர். அதே டிஸ்க்ளெய்மர். வாரயிறுதி மாலையில் நான் ஒரு அரை மணி ப்ரீயா இருப்பேன். அப்போ செய்யறேன். (வாரம் முழுக்க அப்படி என்னதான் செய்றார்னா, அது மிகப்பெரிய ரகசியம்!! சும்மாதான் இருப்பார்). அவரும் ஒரே ஒரு வாரம் ஒரு ஐந்து பக்கங்கள் படித்துக் கொடுத்தார். அஷ்டே.

இப்படியாக சுமார் 7-8 பேரை அணுகி, அதில் 3-4 பேர் கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொடுக்க, அவற்றைத் தொகுத்து, அலசி, அடுக்கி, ஆராய்ந்து, சிக்கெடுத்து, தட்டச்சி, தமிழில் கன்னடப் பாடல்களைப் படிக்கணும்னா போடவேண்டிய 1,2,3,4 ஆகியவற்றை போட்டு, சரிப்படுத்திக் கொடுத்து, முடிக்க வேண்டிய வேலை இந்த வாரயிறுதியுடன் முடிஞ்சிடும்(னு நம்பறேன்).

இது வரை வந்ததை படித்துப் பார்த்தால், ராமாயணத்தை - குட்டி குட்டி பாடல்களாக -  சுமார் 100 பாடல்கள் - வெவ்வேறு ராகங்களில், நல்ல எதுகை மோனை சந்தங்களுடன் இயற்றியிருக்கிறார் தாசர். அவர் கொள்ளு-கொள்ளு-பேரனின் ஆசைப்படி, தமிழில் புத்தகமாக வந்தால் நல்லது. நமக்கு அன்பளிப்பாக ஒரு தொகை தர்றேன்னு சொல்லியிருக்கார். நமக்காக இல்லைன்னாலும், நமக்கு மேற்படி உதவியவர்களுக்கு பகிர்ந்தளிக்கணும். 

ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஸ்ரீராமார்ப்பணமஸ்து.

***

Read more...

Saturday, April 25, 2020

என்னிடம் ஏன் குறைவான சட்டைகளே இருக்கின்றன?


சிறிய வயதில்.. என்ன சிறிய வயதில்.. என்னுடைய 22 வயது வரையே என்னிடம் இருந்தது மொத்தம் 3-4 சட்டை பேண்ட்கள்தான். அதுவும் பம்மல் கமல் சொல்கிற மாதிரி சாயம் போனதாகதான் இருக்கும். சட்டை அளவு சிறியதாக இருந்தபோது தீவளிக்கு தீவளி அப்பா சட்டை வாங்கிக் கொடுத்த நினைவு. அளவு பெரிதானபிறகு அதுவும் கிடையாது. 

ஒரு முறை உறவினர் ஒருவர், அவருடைய உறவினர் யாருடைய திருமணத்திற்கோ போகவேண்டி, என்னை துணைக்கு வரச்சொல்லியிருந்தார். அது ஒரு பெரிய IAS அதிகாரி வீட்டுத் திருமணம். அதற்காக நல்ல சட்டை, பேண்டா போட்டுட்டு வான்னு சொல்லிட்டார். நல்ல சட்டை பேண்ட்க்கு நான் எங்கே போறது?. பக்கத்து வீட்டுப் பையனிடம் சட்டை மட்டும் கைமாத்து வாங்கிக்கிட்டு போய் வந்தாச்சு. பேச்சுவாக்கில் அவரிடம் இது இரவல் சட்டைன்னு சொல்ல, நான் உனக்கு வாங்கித் தர்றேன்னு சொன்னவர், மறந்துவிட்டு, இன்று வரை அதை நினைவுபடுத்தியும் அவர் வாங்கித் தரவேயில்லை. 

பிறகு, வேலைக்கு போகத் துவங்கும்போதே உருப்படியான சட்டை வாங்கியதாக நினைவு. ஆனால், அப்போதும் ஒரு சமயத்தில் 5-6 சட்டைகள், 2-3 டி-ஷர்ட்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. 

நினைவு தெரிந்தும் (அப்படின்னா என்ன?) சட்டை வாங்க வசதியில்லாமல் இருந்ததாலோ என்னமோ, எப்பவும் நமக்குன்னு சட்டை வாங்குவதில் / வைத்துக் கொள்வதில் ஒரு ஈடுபாடு / ஆர்வம் (இரண்டும் ஒண்ணுதானோ?) இருந்ததில்லை. வாரத்துக்கு ஐந்து நாளில் ரிப்பீட் செய்யாமல் இருந்தால் போதும். அவ்வளவே வைத்துக் கொண்டிருந்தேன். 

நாம் வாங்கும் சட்டைகள், வேறு ஏதாவது திருமணத்திற்கு நமக்கு பரிசாக வரும் சட்டைகள், மராத்தன்களில் கொடுக்கும் பனியன்கள் என எதையும் நாம் வைத்துக் கொள்வதில்லை. மனதில் என்னுடைய சிறுவயது கொசுவர்த்தி வர, அந்த நிலையில் இருந்த அண்ணன் பையன், அக்கா பையன் இவங்களுக்குக் கொடுத்துடுவேன். (இப்போ அந்த பசங்களும் நல்ல நிலைக்கு வந்து, கொரோனா பட்டியலில் டாப்-3யில் இருக்கும் நாடுகளில் டாப்பா, நலமா இருக்காங்க). அதைத்தவிர மாமனார் வரும்போதெல்லாம் பாசமாக ஒரு ட்-ஷர்ட் வாங்கித் தருவார். அதை அப்படியே பத்திரமா வைத்திருந்து, தம்பி வரும்போது அப்படியே பார்சல். கொஞ்ச நாள் கழித்து, எங்க அப்பா வாங்கித் தந்த சட்டை எங்கேன்னு DW கேட்க, எங்கேயாச்சும் மேலே பெட்டியில் இருக்கும், அப்புறம் தேடிக்கலாம்னு சொல்லி சமாளிச்சிடுவேன். 

ஒரு காலத்தில், அமெரிக்காவில் இருந்தபோதும் அதே நிலைதான். ஒரு கிழமைக்கு ஒரு சட்டை. கருப்பு திங்கள், வெள்ளை செவ்வாய்ன்னு சன் டிவி அறிவிப்புகள் போல அந்தந்த கிழமைக்கு அந்தந்த நிற சட்டைகள். ஊருக்குப் போன புதிதில் அனைவரையும் போல, ஊருக்கு புகைப்படங்களை அனுப்பணும்ற கட்டாயத்திற்காக பல வாரயிறுதிப் பயணங்களை மேற்கொண்டோம். அப்போது நம்மிடம் இருந்த 1-2 டீஷர்ட்களையே போட்டுட்டுப் போக, இங்கிருந்த DWவின் பாட்டி (85+ வயதிலும் அவங்க கண் அவ்ளோ ஷார்ப்) - என்ன மாப்பிள்ளை எப்போவும் ஒரே சட்டையே போட்டிட்டிருக்காரு? அவர்கிட்டே ஒரேயொரு சட்டைதான் இருக்கான்னு கேட்டுவிட, ஒரே களேபரம்தான். இன்னிக்கே நிறைய சட்டை வாங்கறோம்னு DW மேலுக்கும் கீழுக்கும் (அறைக்குள்ளேயேதான்) குதிக்க, சரின்னு போய் நிறைய (2தான்) வாங்கி வந்தோம். வந்ததும், பழைய சட்டைகளை ஃப்ரிட்ஜ், அவன் இவற்றைத் துடைக்க வைத்துவிட, மறுபடி டி-ஷர்களின் எண்ணிக்கை அதே 2-3 எட்டியது!!.

இருக்கும் 5-6 சட்டைகளை மேலும் எப்படி குறைப்பதுன்னு யோசித்தபோது, செமையான ஐடியா சிக்கியது. ஒரே நிற  சட்டை மட்டும் வைத்துக் கொண்டால் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கருப்பு-வெள்ளை மட்டும் போதும் இதில் 2 அதில் 2ன்னு முடிவெடுத்தா, வீட்டில் தடை. கருப்பு வேண்டாம். வேற வேறன்னு சொல்ல, சரி அப்துல் கலாம் மாதிரி தலைமுடிதான் மாத்திக்க முடியல. அவர்போல நீல சட்டை?ன்னு கேட்க, அப்ரூவ்ட். ஆக, இப்போ இருக்கிறது (50 shades of blue மாதிரி) 5-6 நீல சட்டைகள் மட்டுமே. 

சட்டை ரொம்ப பெரிசாயிடுச்சு. ஐ மீன் பதிவு ரொம்ப பெரிசாயிடுச்சோ? இத்தோட முடிச்சிக்கலாம். நன்றி.

***




Read more...

Monday, October 28, 2019

கைப்பேசி வழிப்பறியா?


சமீபத்தில் ஒரு நாள், நங்கநல்லூரில், மணிரத்னம் / பிசிஸ்ரீராம் படக்காட்சி போல இருந்த, வெளிச்சம் குறைந்த ஒரு சாலையில், ரண்டக்க ரண்டக்க என்று மனதில் பாடியவாறு நடந்து கொண்டிருந்தேன்.

ஆள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. ஒரு மிக முக்கிய தொலைபேசி அழைப்பை (மோடி இல்லை. அதற்கு முந்தைய நாள்தான் அவருடன் பேசியிருந்தேன்) எதிர்பார்த்திருந்ததால், கைப்பேசியை கையிலேயே வைத்து, அடிக்கடி எடுத்து பார்த்தவாறு போனபோது, எதிரில் ஒரு ஸ்கூட்டரில் ஒரு பெண் வண்டி ஓட்ட, பின்னாடி ஒரு பையன் அமர்ந்து வந்தார். ஜானவாசக் கார் மாதிரி இது ஜானவாச ஸ்கூட்டர் போலன்னு நினைத்தேன். மிகவும் மெதுவாக ஓட்டி வந்த அந்தப் பெண், வெயிலும் இல்லையே, ஏன் இப்படி முழுக்க மூடியவாறு வண்டியை ஓட்டிப் போறாங்கன்னு நினைத்தவாறு - ரண்டக்க...

நம்மைக் கடந்து போகும்போது, அந்தப் பெண் ‘மொபைல்’னு கத்தியது கேட்டது. சரி, அவங்க மொபைல் விழுந்துடுச்சு போல; இல்லையே எதுவும் விழுந்த மாதிரி தெரியலையேன்னு நினைத்து, நான் ’பாட்டு’க்கு போயிட்டிருக்கேன். நமக்குப் பின்னால், ’க்றீச்’சென்று தரையில் கால்களை தேய்க்கும் சத்தமும் (அந்தப் பெண் வண்டியை நிறுத்தறாங்க!!), அந்தப் பையன் இறங்கி என் பின்னால் வரும் சத்தமும், எனக்கு முன்னால் அவனுடைய நிழலும் (முறையே) கேட்டது / தெரிந்தது.

இந்த இடத்தில் 5 நொடிகள் freeze பண்றோம். எவ்வளவு செய்திகளைப் படிக்கிறோம். கைப்பேசி வழிப்பறி நம் நண்பர்களுக்கே ஆகியிருக்கு என்னும் தகவல்களெல்லாம் நினைவுக்கு வர, *Freeze முடிந்தது* கையில் இருந்த கைப்பேசியை உடனடியாக பேண்ட் பாக்கெட்டில் போட்டுட்டேன்.

என்னைக் கடந்து, எனக்கு முன் ஓடிய அந்தப் பையனை, ஸ்கூட்டரில் வந்து அந்தப் பெண் வண்டியில் ஏற்றிப் போயிட்டார்.

கேள்விகள்:
* மொபைல்னு ஏன் கத்தினாங்க?
* கீழே விழுந்திருந்தா, அதைத் தேடியது போலவும் இல்லையே?
* வீட்டிலேயே மறந்துட்டு வந்ததற்கான எச்சரிக்கைன்னா, அந்தப் பையன் இறங்கி ஓடி வந்தது ஏன்?
* என் கைப்பேசியைப் பார்த்துதான் மொபைல்னு கத்தினாங்களா?
* அதைப் பறிக்கத்தான் அந்தப் பையன் ஓடிவந்தானா?

இப்படி பல சந்தேகங்கள்.

கைப்பேசி போயிருந்தாலாவது, வீட்டில் சொல்லி, ஒரு புது கைப்பேசிக்கு அனுமதி வாங்கி, வாங்கியிருப்பேன். அதுவும் இல்லை. இந்த காலத்து பசங்க, எதைத்தான் ஒழுங்கா செய்றாங்க?

ம்ஹும்.

***


Read more...

Tuesday, May 21, 2019

10ம் வகுப்பு பிரச்னைகள்!


இந்தியாவுக்கு வரும்போது #மகளதிகாரத்தின் 4ம் வகுப்பு சேர்க்கைக்காக பள்ளிகள் தேடல் பிரச்னைகளைப் பற்றி எழுதிய மூன்று பதிவுகள் இங்கே. 


காலச்சக்கரம் கடகடன்னு உருண்டு இப்போ அவங்க 10வது வந்தாச்சு. இந்த வகுப்பில் வரும் பிரச்னைகள், அடுத்து 11க்கு வேறு பள்ளி பார்க்கணும். அதில் என்ன பிரச்னைகள்னு இங்கே பார்ப்போம். 

ட்யூஷன்:

9வது முடிந்த அடுத்த நாளிலிருந்தே பல நண்பர்கள் 10வதுக்கு ட்யூஷன் சேர்ந்துட்டாங்க. அவங்க கணிதத்தில் 3 பாடம் முடிச்சிட்டாங்க. கணினி முழுக்க கத்துக்கிட்டாச்சுன்னு ஒரே புலம்பல். அதெல்லாம் வேண்டாம். ஒழுங்கா விடுமுறையை எஞ்சமாய் பண்ணு. திட்டமிட்டபடி ஹரிபுத்தர் எல்லா புத்தகங்களும் படி / படங்களைப் பாரு. விடுமுறையில் கொடுத்த assignments மட்டும் முடிச்சா போதும். படிப்பது பிறகுன்னு சொல்லியாச்சு.

பள்ளி திறந்தபிறகு மறுபடி ட்யூஷனுக்கான peer pressure. சரி, ட்யூஷன் இல்லாமல் எவ்வளவு % எடுப்பே? ட்யூஷன் சேர்ந்தா எவ்வளவு கிடைக்கும்? இல்லாமல் 90% சேர்ந்தா 95%. சரி நமக்கு 90% போதும். என்ன வேணுமோ நானே சொல்லித் தர்றேன். Question Bank வாங்கிப் படிப்போம். சொல்லிக் கொடுக்கதானே பள்ளியில் வாத்திமாருங்க இருக்காங்க. எல்லாரின் வாட்சப் எண் வாங்கு. எந்நேரமும் சந்தேகம் இருந்தா கேட்பேன்னு (லார்ட் லபக் தாஸ்!!) சொல்லு. பிறகு பார்த்துக்கலாம்னு ட்யூஷன் பேச்சை நிறுத்தியாச்சு. 

வயலின்:

சாதாரண நாட்களிலேயே ஒரு நாளைக்கு 1மணி நேரம் வாசிக்க வைக்க படாதபாடு படுவோம். அதுவும் இப்போ Boardexam வேற. வயலின் வாசிக்க முடியுமா? வகுப்புக்கு போகமுடியுமான்னு பல கேள்விகள். என் கேள்வி. வயலின் வாசிப்பதால் எவ்வளவு % மார்க் போகும்?. அவர் பதில். வாசிக்கலேன்னா 95% வாசிச்சா 90%. போதும். 90% போதும். ஒழுங்கா வாசி.  இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. கிளம்பு, வயலின் வகுப்புக்குப் போகலாம்னு கிளப்பியாச்சு.

11வது:

இந்த பள்ளியில் 10வது வரைக்குமே உள்ளது. லுருவில் பெரும்பாலும் (அனைத்து?) பள்ளிகளிலும் இதே நிலைதான். 11வதுக்கு வேறொரு பள்ளி. அதுக்கு 10வது படிக்கும்போது அக்-நவம்பரில் போய் பேர் கொடுத்துட்டு (admission) வரணும். வெறும் பேர் மட்டும் கிடையாது, ஒரு நுழைவுத் தேர்வு எழுதிட்டு, token advance admission fees கட்டணும். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ரூ.25,000. 

இப்போ மூன்று பள்ளிகளில் admission போடறோம்னு வைங்க, ரூ.75000 போச்சு. இதில் ஒரு பள்ளியில்தான் சேரப் போறோம். பாக்கி ரூ.50000 போயே போச்சு. நல்ல வியாபாரம் இல்லே!!. சரி ஒரே ஒரு பள்ளியில் மட்டும் register பண்ணுவோம்னா, பிறகு அங்கு நாம் கேட்கும் அறிவியல் பிரிவு கிடைக்கலேன்னா, வரலாறு / பொருளாதாரம்னு வேற ஏதாவது எடுக்கச் சொல்லிட்டா, பிடிக்காமல் படிக்க வேண்டியதாப் போயிடும்னு புலம்பல். சரி, இதுக்கு என்ன பண்றதுன்னு பார்ப்போம்னு சொல்லி வெச்சிருக்கு. 

Class test:

பள்ளி துவங்கி 2ம் நாளே class testஆம். அவ கூப்பிட்டு சொல்றா. நான் இப்ப படிக்கணுமே?. இப்போ நான். அதெப்படி இப்படி எதுவுமே சொல்லித் தராமல் test வைப்பாங்க. நாளைக்கு நான் வர்றேன் பள்ளிக்கு. டீச்சரைப் பார்த்து கேட்கறேன். இப்போ அவங்க. வேண்டாம். நானே பார்த்துக்கறேன். பல பேர் ட்யூஷன் போவதால், அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கலாம். எகொஇச? மறுபடி நான். அப்படி அவங்க test வெச்சி அதில் நீ ஒண்ணுமே எழுதலேன்னா பரவாயில்லை. நான் வந்து பிறகு பேசறேன்னு அடக்கியாச்சு. பிறகு அந்த testம் இல்லை. வசந்தியாம். 

அடுத்த அறிவுரை. இனி இந்த மாதிரி வசந்தியெல்லாம் பல வரலாம். எதையும் ஆராயாமல் நம்ப வேண்டாம். நம் இலக்கு boardexam மட்டும்தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதுக்கு மட்டும் படின்னு சொல்லி அடக்கியாச்சு. வரவர பள்ளி வகுப்புகளிலும் fakenews வசந்திகள் பரவ ஆரம்பிச்சிடுப்பா!!

இப்பதான் வருசம் துவங்கியிருக்கு. இன்னும் அடுத்த ஆண்டு தேர்வு வரும்முன் வேறு என்னென்ன பிரச்னைகள் வருமோ? அதுக்கு இன்னொரு பதிவுடன் வர்றேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். 

***

Read more...

Sunday, December 24, 2017

சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...

சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...


அமெரிக்காவில் இருந்தவரை, இந்தியாவில் நடக்கும் எந்தவொரு குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வரவேண்டிய அவசியம் இருக்காது. அன்றைக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே. நீங்க மட்டும்தான் இங்கே இல்லை. We miss youன்னு இங்கேயிருந்து சொல்வாங்க. சரி சரின்னு அழைப்பை துண்டித்து, Seinfeld பார்க்க உட்கார்ந்துடுவோம். 

ஆனா, இந்தியா வந்தபிறகு நிலைமை வேற. நெருங்கிய / தூரத்து உறவினர்களின் சின்ன / பெரிய / மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு (அவங்க கூப்பிட்டா!) போகவேண்டிய கட்டாயம். கூப்பிடாமல் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போவதில்லைன்னு என் மாமனார் மேல் சத்தியம் செய்திருக்கேன். ஒரு வேளை கூப்பிட்டு போகாமல் இருந்துட்டா? அதைப் பற்றிய பேச்சு / பிரச்னை தனி. 

சரி, நீ உன் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி நடத்திருக்கியா? அதுக்கு எல்லாரையும் கூப்பிடுவியா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள்தானான்னு கேள்வி வரும். எல்லா கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் விடை காண்போம். மேலே (கீழே!) படிங்க. 

அது சரி, நெருங்கிய / தூரத்து சொந்தங்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உன்னை கூப்பிடணும்னு அவசியம்தானான்னு கேட்பீங்க. மிகச்சரி. அவசியம் இல்லைதான். ஒரு திருமணம்னா, மாப்பிள்ளை, பொண்ணு & அந்த தாலி (அல்லது மோதிரம்) மட்டுமே இருக்கணும். நானெல்லாம் அநாவசியம் என்றே நினைப்பேன். ஆகவே, யாரும் கூப்பிடலேன்னா நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. 

ஒரு கசின். மிகவும் நன்றாகவே பேசுவார். ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் பார்த்தால், நாள் முழுதும் பேசிக்கொண்டும் இருப்போம். ஆனால் அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நமக்கு அழைப்பு இருக்காது. ஏற்கனவே சொன்னாற்போல் நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அடுத்த சந்திப்பில் பார்க்கும்போது அவரும் நன்றாக பேசுவார், நானும். 

ஆனால், யாரேனும் என்னை அழைக்காமல் விட்டுவிட்டால் நமது இன்னொரு கசினுக்குப் பிடிக்காது. அவன் எப்படி உன்னை அழைக்காமல் விடலாம் என்று கிளம்பிவிடுவார். இவரும் நம் அண்ணன்தான். நல்லவர்தான். நம் வீட்டு நிகழ்ச்சிகளில் பற்பல உதவிகள் செய்தவர். நமக்கு அழைப்பு இல்லாத நிகழ்ச்சிகள் அவருக்கும் பிடிக்காது. அந்த நிகழ்ச்சி நடத்துபவரைக் கூப்பிட்டு, ஏன் இவனை மட்டும் கூப்பிடலை. இந்தா தொலைபேசி எண், கூப்பிடு அவனை என அவரிடம் சொல்லிவிடுவார். 

இது எப்படி எனக்குத் தெரியும்னா, ஒரு முறை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நமக்கு அழைப்பு இல்லை. எல்லாம் நன்மைக்கேன்னு நாம சும்மா இருந்தாச்சு. திருமணத்திற்கு 2 நாள் முன்னால், அந்த மாப்பிள்ளையின் தந்தை தொலைபேசியில் அழைத்து, தப்பா நினைக்காதே. உன்னை கூப்பிடாமல் விட்டுப்போச்சு. கட்டாயம் மகன் திருமணத்திற்கு வந்துடுன்னுட்டார். சரி, பெரியவரே கூப்பிட்டபிறகு போகாமல் இருக்கமுடியுமான்னு போய் 2 நாளும் விழாவை சிறப்பித்து வந்தாச்சு. பிறகு சில நாட்கள் கழித்து அவரை இன்னொரு இடத்தில் பார்த்தபோது - உன் (மேற்சொன்ன நல்ல அண்ணன்) உன்னைக் கூப்பிடச்சொல்லி 4முறை சொல்லிட்டான். ஆகவே உன்னை கூப்பிட்டேன் - என்றார். 

அன்றிலிருந்து ஒரே ஒரு வழிதான் பின்பற்றுவது. சொந்தங்களில் ஏதாவது நிகழ்ச்சி வந்து, நமக்கு அழைப்பு இல்லைன்னா, இந்த அண்ணனிடம் - அந்த கடைசி ஒரு வாரத்தில் - பேசக்கூடாதுன்ற முடிவு. உன்னை கூப்பிட்டாங்களான்னு இவர் கண்டிப்பா கேட்பார். அதன்பிறகு நடக்கப்போவதுதான் நமக்குத் தெரியுமே.

நிற்க. 

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரையில் சொந்த பந்தங்கள் அனைவருக்கும் நேரில் போய் பத்திரிக்கை கொடுப்பது நல்ல பழக்கம்தான். ஆனால் நேரமேயில்லாமல் அனைவரும் வேகமாக ஓடுகிற இந்த காலத்தில், இதெல்லாம் சரிப்படுமா? எனக்கு உறவினர் யாரேனும் தொலைபேசி, உங்க விலாசம் சொல்லுங்க, அந்தப்பக்கம் வந்து பத்திரிக்கை கொடுக்கணும்னு சொன்னால், நான் சொல்வது இதுதான். ”உங்களை வரவேண்டாம்னு சொல்லலை. தலைக்குமேல் உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். பேசாமல் மின்னஞ்சலோ / வாட்சப்போ அனுப்பிவிடுங்க. நான் கண்டிப்பா வந்துடுவேன். சிரமம் வேண்டாம். எனக்குப் பிரச்னையில்லை”. சிலர் சரின்னு வாட்சப்பிடுவாங்க. அது போதும்னு நானும் போய் வந்துடுவேன். 

ஆனா, நமக்கு வாய்த்தவர்கள் அப்படியில்லை. ஒரு முறை அடியேன் செய்த புதுமனை புகுவிழா. அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய 2 வாரத்தில் நடத்த நிச்சயிக்கப்பட்டது. வந்தவுடன் ஒரு சிறிய அறுவை சிகிச்சை வேறு. ஒவ்வொருவருக்கா தொலைபேசத் துவங்கினேன். இந்த மாதிரி பிரச்னை, நீங்க கண்டிப்பா வந்துடணும். எல்லாமே சுமுகமா போயிட்டா பிறகு எப்படி? நம் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்னை செய்தார். ”நேரில் வந்து கூப்பிட்டாதான் வருவோம். என்ன மரியாதை தெரியாம இருக்கீங்க?”. ”சார், இந்த மாதிரி இந்த மாதிரி ஆகவே..”. ”நோ நோ. ரிஜட்டட்”. கடைசியில் நான் சொல்லிட்டேன். ”நீங்க பெரியவங்க. நான் என் பிரச்னையை சொல்லிட்டேன். பெரியவங்களா வந்து ஆசிர்வாதம் செய்ய முடிந்தா நல்லது. இல்லேன்னா அங்கேயிருந்தே சொல்லிடுங்க. நன்றி”ன்னு வெச்சிட்டேன். மனுசன் வந்தாரான்னு கேட்பீங்களே? ஹிஹி. ஆள் வரவில்லை. சரி விடுங்க. இதெல்லாம் ஜகஜம்தான்னு விட்டாச்சு. 

சரி கூப்பிட்ட மற்றவர்கள் வந்தாங்களான்னு கேட்டால், அது ஒரு தனி பிரச்னை. கேளுங்க. 

RSVP என்னும் மேட்டர் நம்ம மக்களுக்கு என்றைக்கும் தெரியப்போவதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருக்கு. நீங்க வர்றீங்களா இல்லையான்னு சொல்லணுமா வேண்டாமா? 500-600+ பேர் வரக்கூடிய திருமண நிகழ்ச்சிக்கு இந்த RSVP தேவையில்லை. ஆனா ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு?. 

ஒரு முறை நம் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். வெறும் 20 பேர்தான் சாப்பாட்டுக்கு. அதில் அழைக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் 6 பேர். கண்டிப்பா வந்துடுவோம் ஜமாய்ச்சிடலாம்னு சொன்னவங்க யாருமே நிகழ்ச்சிக்கு + சாப்பாட்டுக்கு வரவில்லை. நிகழ்ச்சி அவங்க வீட்டிற்கு பக்கத்து தெருவில்தான். இதனால் எனக்கு அவமரியாதை, அவமானம் இதெல்லாம் கிடையாது. மீந்து போகும் சாப்பாட்டிற்கு என்ன கதி? வரலைன்னு சொன்னா தப்பா நினைச்சிப்பாங்களோ? சரி வர்றோம்னு சொல்லிடுவோம். பிறகு போகவேண்டாம். அடேய். சாப்பாடு வீணாயிடும்னு நினைச்சிப் பாருங்கய்யா!!

மறுபடி நிற்க. நாம் செய்த சில குளறுபடிகளையும் சொல்றேன்.

ஒரு கசின் சகோதரி. அவருடைய கணவர் நம்மிடம் நல்லா ஜாலியா பேசுவார். ஒரு காலத்தில், அவருடைய வட்ட திருமணங்களுக்கெல்லாம் எனக்கு பத்திரிக்கை வந்துகொண்டிருந்தது. ஒரு முறை என்ன ஆச்சுன்னா, வீட்டில் இருந்த ஒரு பரிசை Giftwrap செய்து வைம்மா என்று அம்மாவிடம் சொல்ல, அவரும் செய்து வைக்க, நாமும் அதைப் போய் அவருடைய சகோதரரின் திருமணத்தில் கொடுத்துட்டு வந்தோம். ஓரிரு நாட்கள் கழித்துப் பார்த்தால், கொடுக்கணும்னு நினைத்த பரிசு இன்னும் வீட்டிலேயே இருந்தது. அப்படின்னா, நாம் அவருக்கு எதை Giftwrap செய்து கொடுத்தோம்?. கண்டுபிடிக்கவே முடியவில்லை.

சில நாட்கள் கழித்து இன்னொருவர் மூலம் தெரியவந்தது. நம் வீட்டில் பழைய audio cassetteகள் போட்டு வைக்கும் ஒரு டப்பா. தவறுதலாக அம்மா அதைக் கொண்டு போய் Giftwrap செய்துவர, அதையே கொடுத்திருக்கிறோம். மிகப்பெரிய தவறுதான். அடுத்த ஒரு மாதத்தில் அந்த கசினின் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்டு வந்தேன். ஆனால், தவறு தவறுதானே. நடந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்றுவரை அந்த கசின் கணவர் அதை மறக்கவில்லை. மறக்கக்கூடிய தவறா நாம் செய்திருக்கிறோம்?.

வேறொரு நிகழ்ச்சி. இதே போல் இன்னொரு கசின் சகோதரி. அவர் கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். நம் வீட்டு நிகழ்ச்சி. கசின் & அவர் கணவரைக் கூப்பிடணும். நான் என்ன செய்தேன்னா, கசின் கணவருடன் பேசிவிட்டு, அவர் பெயரிலேயே பத்திரிக்கையை அனுப்பிட்டேன். ஆனால் நிகழ்ச்சிக்கு அவர்கள் இருவரும் வரவில்லை. என்னடான்னா, வீட்டில் என் அப்பா அம்மா இருக்காங்க. அவர்களையும் கூப்பிட்டு, அவர்கள் பெயரிலேயே பத்திரிக்கை கொடுத்திருக்கணும். அப்படி குடுக்காததால் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லைன்னு இன்னொருவர் மூலமாக சொல்லியனுப்பினார். 

நான் கசின் சகோதரியை கூப்பிடணும். கணவருடன் இருக்காருன்னு அவரை கூப்பிட்டேன். அடுத்து அவர் வீட்டில் அனைவரையும் கூப்பிடணும்னா அது முடியுமா? நாம் செய்தது ஒரு சிறிய நிகழ்ச்சி. வந்தா வரட்டும் வரலேன்னா போகட்டும் நான் சொல்லிட்டேன். செய்தது சரியா தவறான்னு தெரியல. வழக்கம்போல் நம் வீட்டில் சிலர் அது தவறுன்னும் சிலர் அது சரிதான்னு சொல்லிட்டிருந்தாங்க. சரி விடுங்க. 

இன்னொரு சம்பவம். நம் வீட்டுத் திருமணம். சொந்தங்களை ரெயில் / பேருந்து நிலையங்களிலிருந்து கூட்டி வர / கொண்டு போய் விட என்று ஒரு Vanஐ இரு நாட்களுக்கும் நிறுத்தி வைத்திருந்தேன். Transport-In-charge என்று ஒரு கசினையும் நியமித்து வண்டி வேணும்னா இவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அனைவருக்கும் சொல்லியிருந்தேன். முந்தைய நாள் இரவு ஒரு குழு வண்டி எடுத்துப் போயிருக்க, இன்னொரு உறவினர் குழு வண்டி இல்லை என்று கோபித்துக் கொண்டனர். இந்த கசின் நம்மிடம் சொல்லாமல் பிரச்னையை தீர்க்கப் பார்க்க, பிரச்னை தீரவில்லை. நாளை நாங்கள் திருமணத்திற்கு வரமாட்டோம்னு சண்டை போட்டு அந்தக் குழுவினர் போய்விட்டனர். பிறகு வந்தாங்கன்றது வேறு விஷயம். இந்த பிரச்னை தெரிந்து, திருமணம் ஆன ஒரு வாரத்தில், அந்த குழுத்தலைவருக்கு தொலைபேசி நான் மன்னிப்பு கேட்டேன். இதுவும் நம் தப்புதான். எல்லாம் ஒரு படிப்பினைதானே?

ஒரு தூரத்து சொந்தம். பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. சந்தோஷமா போய் சாப்பிட்டு(!!) வந்தாச்சு. ஓர் ஆண்டுக்குப் பிறகு அவங்க வீட்டிலேயே இன்னொரு நிகழ்ச்சி (புமபுவி) வந்தது. அதற்கு நமக்கு அழைப்பில்லை. அது பரவாயில்லை. ஆனால், சில நாட்கள் கழித்து அந்த புது வீட்டிற்கே நாம் போக வேண்டிய நிலைமை. அப்போது அவங்க சொல்லிட்டாங்க. ”சாரிப்பா. உன்னை இந்த வீட்டு புமபுவி’க்கு கூப்பிடலை. மறந்துபோச்சு”. நானும் “அச்சச்சோ. சாரி எல்லாம் எதுக்கு? ஒண்ணும் பிரச்னையில்லை. இன்னும் கட்டப்போற அடுத்தடுத்த வீடுகளுக்கு மறந்துடாதீங்க”ன்னு ஒரு மொக்கை ஜோக் அடிச்சி நான் (மட்டும்!) சிரிச்சாச்சு. ஆனா பக்கத்தில் இருந்த ஒரு கசின் விடுவாரா? “ஆமா நீங்க போன ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க. இந்த நிகழ்ச்சிக்கு இவனை கூப்பிடலைன்னு என்னிடம் சொல்லி வருத்தப்பட்டான்”ன்னு சும்மா அடிச்சி விட்டுட்டாரு. நமக்கு வாய்த்த கசின்கள் இப்படிப்பட்ட ரகம். என்னத்த செய்றது. 

தன் வீட்டில் எந்த நிகழ்ச்சிக்கும் நம்மைக் கூப்பிடாத கசின் ஒரு முறை என்னிடம் - ”என்னடா, கூப்பிட்டாதான் நிகழ்ச்சிக்கெல்லாம் வருவியா? நாம அப்படிதான் பழகியிருக்கோமா?” என்றெல்லாம் கேட்டார். சாதாரண நாள் என்றால் யார் வீட்டிற்கும் போவதற்கு தயங்காதவன் நான். வெறுமனே தொலைபேசிவிட்டு, ஒரு நல்ல காபி வேணும். வீட்டில் இருப்பீங்களா. இதோ வர்றேன்னு சொல்லி பல முறை பலர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஆனா திருமணம், புமபுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு? அவரிடம் நான் சொல்ல நினைத்தது - “அடேய். நான் என் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டும் நீங்க யாரும் வரவில்லை. பிறகு நிகழ்ச்சி எப்படி நடந்ததுன்னும் கேட்கவில்லை. அப்படியிருக்கும்போது கூப்பிடாமல் யார் வருவாங்க சொல்லு”. ஆனால் வழக்கம்போல் இதைக் கேட்கவில்லை. 

இவ்வளவு பேசிவிட்டு ‘மொய்’ மறந்துட்டேன் பாருங்க. மக்கள் இந்த மொய் விஷயத்தில் ஏன் இவ்வளவு டென்சன் ஆகுறாங்கன்றது நமக்கு என்றைக்கும் புரியாத விஷயம். அவன் திருமணத்தில் அவன் எனக்கு இவ்வளவுதான் / இதுதான் கொடுத்தான். அதனால் நானும் இவ்வளவுதான் கொடுப்பேன். அவன் சக்திக்கு எவ்வளவோ கொடுக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. திருமணங்கள் / நிகழ்ச்சிகள் முடிந்தும் எப்போதும் ஓயாத பேச்சுன்னா அது மொய் பற்றியதுதான். 

ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு / பத்திரிக்கை வருது. தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் போகமுடியவில்லை. அந்த சமயத்தில், மொய் மட்டும் யாரிடமாவது கொடுத்து அனுப்பணுமா? இதற்கு நம் சொந்தங்கள் பலர் சொல்லும் பதில் - யெஸ். நீ வரலேன்னாலும் பரவாயில்லை. மொய் கொடுத்து அனுப்பு. என் கேள்வி - ஏன்?. நான் போகாத நிகழ்ச்சிகளுக்கு நான் மொய் / பரிசு கொடுப்பதில்லை. தகராறு ஆனா ஆகட்டும்னு விட்டுடறது. மிடியல. 

இப்போதைக்கு இங்கே நிறுத்திக்குவோம். சொல்வதற்கு இன்னும் பற்பல சம்பவங்கள் இருப்பதால், அடுத்த பாகம் வந்தாலும் வரும்.

***

Read more...

Thursday, August 24, 2017

மாணிக்கம் அலையஸ் பாட்ஷா

மாணிக்கம் அலையஸ் பாட்ஷா



நம் எதிர்வீட்டில் குடியிருக்கும் ஒருவர் வேறொரு இடத்தில் வீடு கட்டி, போன வாரம் புதுமனை புகுவிழா நடத்தியிருக்கிறார். அடிக்கடி பார்த்து சிரிப்பதால் - அவர்/ நம் வீட்டுப் பெண்கள் பேசிக்கொள்வதால் - அவர் / நம் வீட்டுச் சிறுமிகள் சேர்ந்து வேறொரு குழுவுடன் விளையாடிக்கொள்வதால், நம்மையும் விழாவிற்குக் கூப்பிடுவார், போய் ஒரு கட்டு கட்டிவிட்டு வரலாம்னு நினைச்சிருந்தா - மனுசன் நம்மை கூப்பிடவேயில்லை. நம் மாடி வீட்டு, பக்கத்து வீட்டு, நம் தெருவில் பலரைக் கூப்பிட்டும், நமக்கு அழைப்பு நோ. கூப்பிட்ட / கூப்பிடாத ஆட்களைப் பார்த்து ஒருவிதமாக ஊகித்தாலும், innocent until provenபடி பொறுமையாக இருந்தோம். 

இன்று அந்தச் சிறுமி சொன்னதாக, நம் வீட்டுச் சிறுமி சொன்னதும், சந்தேகம் தீர்ந்தது. Houseownersகளை மட்டும்தான் விழாக்கு கூப்பிட்டோம். வாடகைக்கு இருப்பவர்களை கூப்பிடவேணாம்னு அப்பா சொல்லிட்டார்.

நாம் ஒரு காலத்தில் பாட்ஷாவாக இருந்தாலும், தற்போது மாணிக்கத்தைவிட மோசமாக, 1BHKல் ஒரு மினிமலிஸ்டாக வாழ்க்கை நடத்துவதில் வெற்றி கண்டிருக்கிறோம்னு புரிஞ்சிடுச்சு. 

நாமாக எதையும் யாரிடமும் சொல்லிக்கொள்வதில்லை. ஜிம்பிளாக இருந்தாலும், எப்படியோ விஷயம் தெரிஞ்சிடுது. இப்படிதான் போன ஆண்டு நம் கடவுச்சீட்டு புதுப்பிக்கப் போனால், அப்படியே கொடுத்துடறாங்களா? காவலர் வந்து சரிபார்த்தபிறகுதான் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. சரி அவராவது எங்க வீட்டுக்கு வரக்கூடாதா? நேராக மாடிக்குப் போய் நம் houseownerரிடம் போய் நம்மைப் பற்றி விசாரித்திருக்கிறார். 

அவர் போன பிறகு, நம்மாள் இறங்கி வந்து, எங்கேயாவது வெளிநாடு போகப்போறீங்களா? கடவுச்சீட்டுக்கு ஆள் வந்ததேன்னார். இல்லே சார், சும்மா புதுப்பிச்சி வெச்சிக்கலாம்னு - நமக்கு லுரு முகவரியிலும் ஒரு ஆவணம் வேணும். அதனால்தான் இதெல்லாம்னேன். அவரோ - நான் சிங்கப்பூர் போயிருக்கேன், அங்கே ஒரு வாரம் இருந்து ஊர் சுற்றிப் பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக எல்லாரும் ஒரு முறையாவது ஒரு வெளிநாடாவது போகணும். அப்பதான் நம் நாடு எப்படியிருக்குன்னு தெரியும்னு ஒரு 15 நிமிடம் பேசினார். நாம் எப்பவும்போல் நம் கதையை எதுவும் சொல்லிக்கவில்லை. 

பின்னர் ஒரு நாள் நம் மாமனாரிடம் இதைப் பற்றி houseowner பேசியபோது, இவர் ‘உண்மையைச் சொல்லிட்டாரு’. அவரோ உடனே நம்மிடம், என்ன, நீங்க அமெரிக்கால்லாம் போய் இருந்திருக்கீங்கன்னு சொல்லவேயில்லையேன்னார். நானோ, ஹிஹி. மறந்துட்டேன் சார்ன்னேன். ஒரு மாதிரி மேலும்கீழும் பார்த்தவாறு போனவர்தான், அதுக்குப் பிறகு பல நாட்கள் நம்மிடம் பேசவேயில்லை. 

நாமும் இப்படியே maintain செய்வோம்ற முடிவுக்கு வந்ததால், இப்போ அந்த புதுமனை புகுவிழா அழைப்பு வரவில்லை. நமக்கு குறைந்தபட்சம் ரூ500க்கான செலவு மிச்சம்.

***


Read more...

Wednesday, May 24, 2017

ஜொள் அங்கிள்

அடியேன் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் 22 கிமீ தூரம். அலுவலகப் பேருந்தில்தான் போய் வருவது. அடியேன் வீட்டுப் பக்கத்திலேயே இன்னும் இருவர் (மகளிர்) அதே அலுவலகத்தில் வேலை செய்றாங்க. அலுவலகத்திற்கு தாமதமாகப் போகணும்னாலோ, வீட்டிற்கு சீக்கிரம் வரணும்னாலோ, மூவரும் ஒரு Ola book செய்து, 1/3 போட்டு போய் வருவது வழக்கம்.

திடீர்னு அலுவலகத்தில் ஒரு carpool app உருவாக்கி, மக்கள் எல்லாரும் அதை பயன்படுத்திக்கோங்கன்னு சொன்னாங்க. நாங்க மூவரும், நம்ம வீட்டு பக்கம் யாராவது காரில் போவோர் வருவோர் இருக்காங்களான்னு பார்க்கலாம்னு பார்த்தோம். அட, ஒருவர் இருந்தார். நமக்கு தோதான நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்புபவராகவும் இருந்தார். சரி ஒரு நாள் இவர் வண்டியில் மூவரும் போவோம்னு முடிவு செய்தோம்.

அந்த நாளும் வந்தது. ஒருவருக்கு ரூ70. சும்மா போகும் வண்டியில் நாங்களும் போனால், அவருக்கு ரூ210 வரும். ஒவ்வொருவராக தம் கைப்பேசியிலிருந்து அந்த rideக்கு request கொடுத்தோம். Note the point. இரு மகளிர் மற்றும் நான். அவங்க ரெண்டு பேர் requestம் உடனே approve ஆயிடுச்சு. எனக்கு எதுவும் பதில் வரலை. Ofcourse, நாங்க மூவரும் ஒரே க்ரூப்ன்னு அங்கிளுக்கு தெரியாது.

வண்டி புறப்பட இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. புரியுதா, அந்த அங்கிளுக்கு நீங்க வர்றது பிடிக்கலை. ஜொள் அங்கிள்ன்றங்க மகளிர். சரி, நீங்க போங்க, நான் பேருந்திலேயே வர்றேன்னேன். வெயிட்டீஸ், அங்கிளுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்ன்றாங்க. இருவரும், அந்த requestஐ cancel செய்துவிட, உடனே அங்கிள் என் requestஐ approve செய்துவிட்டார். அதற்குள் நாங்க ஒரு ஓலா புக் செய்துவிட, நானும் அந்த அங்கிள் வண்டியை cancel செய்துவிட்டேன். ஒழுங்கா என்னையும் ஓகே சொல்லியிருந்தா ஒரு ரூ210 வந்திருக்கும். இப்போ ஜொள் அங்கிள் தனியா போகவேண்டியதாய் போச்சு. (அதன் பிறகு வேறு யாரும் request கொடுக்காத பட்சத்தில்). 

இனி மறுபடி இன்னொரு நாள் இவர் வண்டிக்கு request கொடுக்கலாமான்னு நான் கேட்க, அங்கிள் திருந்தியிருக்காரா இல்லையான்னு இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்னு இருவரும் சொல்லியிருக்காங்க. பார்ப்போம். அதன் முடிவை இன்னொரு பதில் சொல்றேன். 

தொடரும்...

Read more...

Wednesday, September 21, 2016

ஒரு சிறிய பரிசோதனை முயற்சி

ஒரு சிறிய பரிசோதனை முயற்சி

நமக்குத் தேவைப்படும் என்று அவ்வப்போது வாங்கி வைத்த - எப்போதுமே பயன்படுத்தாத - சின்னச்சின்ன பொருட்கள் வீட்டில் நிறைய இருந்தன. தள்ளி விடணும்னு நினைத்தாலும், சோம்பல்பட்டு அது நடக்காமலேயே போனது. க்விக்கர் / ஓலா ச்சே.. ஓஎல்எக்ஸ் இதிதெல்லாம் போடக்கூடிய அளவுக்கு பெரிய பொருட்கள் இல்லை அவை. ஆகவே, எல்லாத்தையும் ‘விலையில்லா’ பொருட்களாகவே கொடுத்திடலாம்னு முடிவு செய்தேன்.

இதே அமெரிக்காவா இருந்தா, Garage Sale, Spring clearanceன்னு தட்டுமுட்டு சாமான்களைக் கூட விற்றிடலாம். இங்கே அப்படி முடியாதென்பதால், அலுவலகத்தில் இலவசமாக எடுத்துக்கோங்கப்பான்னு அறிவிப்பு வைத்து, எல்லாத்தையும் தள்ளிவிடலாம்னு நினைச்சா - இன்னொரு ஐடியா வந்தது்.

எப்போவோ பயன்படும்னு நாம் வாங்கின மாதிரி, தேவையேயில்லை என்றாலும் சும்மா கிடைக்குது என்பதற்காக பார்க்குறவங்க எடுத்துப் போறாங்களான்னு பார்க்கலாம் ஒரு பளிச்.

முதலில் என்னென்ன பொருட்கள்னு பார்த்துடுவோம்.

3 லேப்டாப் பைகள்
2 பைக் ஹெல்மெட்கள்
2 மிதிவண்டி ஹெல்மெட்கள்
2 செட் casual shoes
5 புதிய water bottle (decathlonல் வாங்கிய ரூ100 மதிப்புடையது)
2 Photo frames

இவ்வளவுதான்.

ஐடியா இதுதான். என் அலுவலகக் கட்டிடத்தில், மூன்று மாடிகளில், காபி குடிக்க ஒதுங்கும் இடங்கள் ஆறு உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில், இலவசம்னு அறிவிப்பு போட்டு ஒரு பொருளை வைக்க வேண்டியது. யாராவது அதை எடுக்காமல் விடறாங்களா, இலவசம்னு பார்த்தவுடன் அள்ளிடறாங்களான்னு அங்கேயே காபி குடித்தவாறு பார்க்க வேண்டியது - எப்படி?

2 வாரங்களுக்கு முன் இதை செயல்படுத்தத் துவங்கினேன். நேற்றோடு எல்லா பொருட்களையும் தள்ளி விட்டாயிற்று. வீடு கொஞ்சம் சுத்தமாச்சு. சரி, அந்த பரிசோதனை என்ன ஆச்சு?

* 99% மக்கள் ‘இலவசம்’னு பார்த்தவுடன் பொருளைக் கையில் எடுத்து விடுகின்றனர். சில நிமிடங்கள் அந்தப் பொருளின் தரத்தைப் பார்த்துவிட்டு, எடுத்துப் போய்விடுகின்றனர்.
* கண்டதும் காதல் கொண்டு, லேப்டாப் பையை எடுத்துப் போன ஒருவர், சில நிமிடங்களிலேயே திரும்பக் கொண்டு வந்து வைத்துவிட்டார்.. (பையில் பிரச்னை இல்லை, நமக்குத் தேவையில்லைன்னு நினைச்சிருப்பார்). -- Good, sir.
* Water bottleகளைப் பார்த்ததும், குழுவாக அங்கே வந்த பெண்களுக்கிடையில் அடிதடி (அளவிற்குப் போகவில்லையென்றாலும், நிறம் தேர்வு செய்வதில் சிறு சச்சரவு!!) - குழாயடி மாதிரி காபியடிச் சண்டை!!
* எதிர்பார்த்த மாதிரியே, அளவு பிரச்னை என்ற காரணத்தினால், ஷூக்களை பலர் எடுக்கவில்லை. அரை மணி நேரம் ஆகியும் போணி ஆகாத பொருள்னா அது ஷூ மட்டும்தான்.
* ஆகவே, ஷூக்களைத் தவிர எல்லாப் பொருட்களும், அதைப் பார்த்த முதலாமவர் அல்லது இரண்டாமவரால் கண்டிப்பாக எடுத்துப் போகப்பட்டன.

எப்படியோ, எடுத்துப் போனவர்கள் அந்தந்த பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கினால் மகிழ்ச்சிதான். அப்படியில்லாமல், இன்னும் சில காலம் கழித்து, அவங்களும் இதே போல் இலவசம்னு அவற்றைத் தள்ளிவிடாமல் இருக்க எல்லாம் வல்ல அந்த கபாலியை வேண்டியவாறு... நன்றி வணக்கம்.

***


Read more...

Tuesday, September 6, 2016

புலிப்பாண்டி கொடூரமானவன்தான்...


புலிப்பாண்டி கொடூரமானவன்தான்...

நம்ம ஊர் BMTC or Ashok Leyland நிறுவன ஊழியர்களின் சீருடை நிறம் தெரியும்தானே. நீல சட்டை + அதற்கு தகுந்தாற்போல ஒரு காற்சட்டை. அதே வண்ண உடை என்கிட்டே ஒண்ணு இருக்கு. எப்பவாவது சுழற்சி முறையில் அதை அலுவலகத்திற்கு போட்டுப் போகவும் நேரிடும். சரி? அதில் என்ன பிரச்னைன்றீங்களா? நம்ம அலுவலகத்தில் Housekeeping அணியின் சீருடையும் அதுதான்.

உங்களையும் யாராவது Housekeepingன்னு நினைச்சிக்கப் போறாங்கன்னு வீட்டில் கிண்டல் செய்வாங்க. அப்படியெல்லாம் நடக்காது. ஐடி கார்ட் பார்த்தா தெரிஞ்சிடும்னு சொல்லிட்டிருப்பேன்.

பிறகு ஒரு நாள்..

அதே ஆடை அணிந்து அலுவலகம் போயிருந்த நாள்.

சார்.. சார்.. பின்னாடியிலிருந்து ஒரு தேன் குரல்.

யெஸ்’னு திரும்பினா.. ஒரு பொண்ணு..

Housekeepingன்னு நினைத்து என்னைக் கூப்பிட்டு, பின்னர் தெளிவடைந்து..

சாரி சார்.. அந்த Tap வேலை செய்யலைன்னு சொல்லலாம்னு நினைச்சி கூப்பிட்டேன்னு..

எனக்கோ சரியான போபம். சரி, தப்பு அந்தப் பொண்ணு மேல் இல்லை. நாம அணிந்த உடை மேல்தானேன்னு - சரி சரி, இனிமே பார்த்து பேசும்மான்னு சொல்லி அனுப்பிட்டேன்.

புலிப்பாண்டி கொடூரமானவன்தான். ஆனா பொண்ணுங்ககிட்டே இல்லை.

***

Read more...

Monday, August 8, 2016

இவங்களை வெச்சிக்கிட்டு...

அடியேன் : 
மந்திராலயம் போயிருந்தோமே. அப்பா. என்ன இடமில்லே. எப்பேர்ப்படட மகான். அங்கிருந்த மூணு நாளும் மனதில் ஒரு அமைதி. எப்போடா மறுபடி போய் அவரைப் பார்ப்போம்னு தோணுது.

தங்கமணி : 
அங்கே தங்கியிருந்த ஹோட்டல் சரியேயில்லை. சுடு தண்ணியே வரலை. மூணு நாளும் அறையை பெருக்கவே இல்லை அவன். போய் திட்டினப் பிறகே வந்து சுத்தம் செய்தான். அடுத்த முறை வேறே ஹோட்டலில்தான் தங்கணும்.

மகளதிகாரம் : 
இந்த முறை போனாலும் மார்கழி மாதமே போலாம்பா. சாப்பாடு காலை 8 மணிக்கே போட்டுடறாங்க. அந்த கஞ்சி அதை மறுபடி சாப்பிடணும் போலிருக்கு. இரவு உணவும் மடத்திலேயே போட்டுடறாங்க. பகல் முழுக்க சுத்திட்டு சாப்பிட மடத்துக்கு வந்துடணும்.

அடியேன் : 
உடுப்பி. போன வருடம் போய் பார்த்த குழந்தை கிருஷ்ணன் இன்னும் கண்ணிலேயே இருக்கான். மத்வர் முதல் வ்யாஸராஜர், விஜயேந்திரர், ராகவேந்தரர்னு பற்பல மகான்கள் நின்ற இடத்தில், நாமும் நிற்கிறோம்னு நினைச்சாலே உடம்பு அப்படியே புல் அரிக்குது.

தங்கமணி : 
இந்த முறை பலிமார் மடத்தில் அறை போடாதீங்க. எக்கச்சக்க பல்லி & பூச்சி. காபிக்கு எவ்ளோ தூரம் அலைய வேண்டியிருக்கு அங்கே. அடுத்த முறை ஒரு ஃபிளாஸ்க் எடுத்துப் போயிடணும். குப்பை போட சில கவர்கள் ரொம்ப முக்கியம்.

மகளதிகாரம் : 
woodlands சாப்பாட்டை விட கிருஷ்ணர் கோயில் சாப்பாடு செம. அமாவாசை அன்னிக்கு சாப்பாடு கிடையாது, இன்னிக்கு டிபன்தான் சொல்லிப்போட்டாங்களே, அப்புறம் அவல் பிரசாதம் & பாயசம் - இதெல்லாம் என் நாக்கில் இன்னும் ருசிக்கிது.

இவங்களை வெச்சிக்கிட்டு ஒரு கொலை கூடசெய்ய முடியாது போலிருக்கே. கிருஷ்ணா!!

***

Read more...

Sunday, May 22, 2016

கியர் மிதிவண்டியும், ஞானும் பின்னே கடைக்காரரும்



கியர் மிதிவண்டி வாங்கி ஓட்டணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தேன். இனி இவன் வேலைக்கு ஆகமாட்டான்னு நண்பர் சீவின் வினோத் ஒரு நாள் மாலை தொலைப்பேசி, இங்கே கடையில் நிக்குறேன். கடனட்டை எடுத்து உடனே வா, உனக்கு ஒரு வண்டி வாங்கணும்ன்றாரு.

அடடா, சரி போவோம்னு போய் வண்டி பார்த்தோம். ஒரு வண்டியைத் தேர்ந்தெடுத்தாச்சு. ஏதாவது கேள்வி இருக்கான்னு கேட்டார் கடைக்கார். நமக்கு கியர் வண்டி எப்படி ஓட்டறதுன்னு ஐடியாவே இல்லாததால், சிலபல மிகவும் அடிப்படையான கேள்விகளைக் கேட்டு அவரை குடைஞ்சாச்சு.



நான் : வேகமா போயிட்டிருக்கும்போது, போக்குவரத்து சிக்னல் வருது. நானும் நிக்கணும். அப்போ எல்லா கியரையும் குறைத்து 1-1க்கு வரணுமா? பைக், கார்லேல்லாம் அப்படிதானே செய்றோம்?

கடை: ஐயோ. அப்படியெல்லாம் இல்லீங்க. எந்த கியரிலும் நிற்கலாம். எந்த கியரிலும் கிளம்பலாம்.

நான்: அப்படியா. அடடே. இந்த தொழில்நுட்பத்தை ஏன் அந்த பைக், கார்காரங்க கொண்டு வரலே?

கடை: அடுத்த மாதம் நான் டெல்லிக்குப் போகும்போது அதைப் பத்தி பேசறேன்.

நான்: சரி. அப்போ நியூட்ரல் அப்படின்னு ஒரு மேட்டரே இல்லைன்றீங்க. க்ளட்ச் எங்கேன்னு சொல்லவேயில்லையே?

கடை: ஆ. க்ளட்ச்’லாம் இதில் கிடையாது. கியர் மட்டும்தான்.

நான்: ஓ. சரி. இந்த கியரை இப்படித்தான் மாத்தணுமா?

கடை: யோவ். வண்டி நிற்கும்போது கியர் போடாதே. அப்புறம் செயின் அவுந்து/அறுந்துப் போச்சுன்னு என்கிட்டே வரக்கூடாது.

நான்; சாரி சாரி. சரி. வண்டி ஓட்டும்போது, நாம் எந்த கியரில் இருக்கோம்னு தெரியறதுக்கு ஏதாவது குறி இருக்கா?

கடை: ஆமா. எந்த கியரில் இருக்கீங்கன்னு நீங்க ஞாபகம் வைக்க அவசியம் இல்லை. பார்த்தாலே தெரியும்.

நான்: நல்லவேளை செய்தீங்க. இல்லேன்னா, நான் வண்டி ஓட்டும்போது, 1-3, 2-4, இப்படி சொல்லிக்கிட்டே போகணும்.

கடை: சரி, அடுத்த கேள்வி?

நான்; இன்னும் ஏதோ கேட்கப் போக, நீங்க முன்னே பின்னே சைக்கிள் ஓட்டியிருக்கீங்களான்ற மாதிரி பார்த்தார் கடை. அதனால், இப்போதைக்கு இவ்வளவுதான் சார்னு சொல்லிட்டேன்.

நம்மகிட்டே இதுவரை இருந்த மிதிவண்டி, பைக் எதிலும் இந்த சின்னச்சின்ன சமாச்சாரங்களான ஒலிப்பான், நிறுத்துவான், பின்னோக்கிப் பார்க்கும் கண்ணாடி எதுவும் இருந்ததேயில்லை. இந்த வண்டியிலும் அதெல்லாம் வேணுமான்னு யோசிக்க, அதற்குள்ளாக எல்லாத்தையும் அவரே வெச்சிக் குடுத்துட்டாரு.

இப்படி ஒரு வழியாக வண்டியுடன் வீட்டுக்கு வந்து, வாங்கின விலையை விட ரொம்ப கம்மியாக ஒரு விலையைச் சொல்லி, அவ்வளவுக்குதான் வாங்கினேன்னு சொல்லியாச்சு.

அப்பா, இதுக்கும் கியர் இல்லாத வண்டிக்கும் என்ன வித்தியாசம்?

அதும்மா, சாலையில் மேடுகளில் ஏறும்போது, அதிக கியர் போட்டு ரொம்ப கஷ்டமில்லாமல் போயிடலாம்.

மிதிவண்டி வாங்கறதே, மிதிச்சி மிதிச்சி, உடற்பயிற்சி போல ஓட்டத்தான். அதிலும் கியர் போட்டு, சிரமமேயில்லாமல் ஓட்டணும்னா, அதுக்கு மோட்டர்பைக்கே வாங்கிடலாமே?

சரி சரி. புது புத்தகத்துக்கெல்லாம் அட்டை போட்டாச்சா? போய் ஏதாவது எடுத்துப் படி. அப்பா ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன்.

ஷப்பாஆஆஆ..

***



Read more...

Sunday, March 20, 2016

தாசர் மாபியா - வாட்சப்பில் வினாடிவினா

வாட்சப்பில் வினாடிவினா

போன ஆண்டு நடுவில் ஆரம்பித்தேன் அந்த கேள்வி பதில் நேரம் - குடும்ப வாட்ஸப்பில். எதைப் பற்றி? - வேறென்ன. நம்ம தாசர் பாடல்களைப் பற்றிதான். தாசர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் எழுதிய புத்தங்கள், பாடல்கள் இன்னபிறவைப் பற்றி. அந்த வினாடிவினா நிகழ்ச்சியில், தினம் ஒரு கேள்வி கேட்கப்படும். விடையை எனக்கு தனியாக வாட்சப் செய்ய வேண்டும். பொதுவில் போட்டுவிடக் கூடாது. தினம் இந்த எச்சரிக்கையைச் செய்தும், சில நாட்கள், சிலர் தங்கள் விடையை பொதுவிலேயே போட்டுவிடுவர். பிறகு ‘மன்னிச்சு’ கேட்டும் விடுவர்.

50 நாட்கள் நடத்தியதில், தினமும் சராசரியாக 8-10 பேர் விடையளித்து வந்தனர். பலர் சரியாக. சிலர் சரியாக-தப்பாக. எனினும், மக்களின் பொதுஅறிவுக்காக போட்டியை நடத்தி, தினமும் மதிப்பெண்கள் வழங்கி வந்ததால், மக்களும் ஆர்வத்துடன் கலந்து விடையளித்து வந்தனர்.

அது போன ஆண்டு.

நிற்க.

இந்த ஆண்டு தாசர் பாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டி, இதற்கான ஒரு அமைப்பில் சென்று சேர்ந்தபோது அவர்களிடம் மேற்கண்ட வினாடிவினாவைப் பற்றி சொன்னேன். உடனே இதை ஏன், நம் அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு செய்யக்கூடாதுன்னு கேட்டு, உடனடியாக ஒரு திட்டமும் தயாரிக்கப்பட்டது. இதற்கான பல்வேறு yahoo, google groupsகளில் விளம்பரம் செய்யப்பட்டு ஆர்வமுள்ள மக்களைத் திரட்டும் வேலையும் நடந்தது.

வாரம் இரு முறை (திங்கள் & வியாழன்) தலா 10 கேள்விகள் கேட்கப்படும். விடையளிக்க அடுத்த மூன்று நாட்கள் கால அவகாசம். விரிவான விடையெல்லாம் கிடையாது. ஓரிரு சொற்கள் மட்டுமே. இதெல்லாம் விதிகளாக சொல்லப்பட்டன.

சென்ற வாரம், முதல் பகுதி கேள்விகள் கேட்கப்பட்டன. இதுவரை 30 பேர் உள்ள குழுவில் 15 பதில்கள் வந்தன. அமெரிக்கா, வட இந்தியாவிலிருந்தும் சேர்ந்திருக்கின்றனர்.

கன்னட தாச சாஹித்யத்தைப் பற்றி மக்களை தினமும் ஒரு சில நிமிடங்களாவது படிக்க, யோசிக்க வைக்கணும்னு இந்த முயற்சி. எவ்வளவு நாட்கள் ஓடுதோ ஓடட்டும்னு துவக்கியாச்சு. இதில் இன்னொரு லாபம் என்னன்னு பார்த்தீங்கன்னா, கேள்விகள் கேட்பதற்காக நானும் நிறைய படிக்க வேண்டியிருக்கு. பொதுநலம் கலந்த சுயநலம். படித்து, கேள்விகளைத் தொகுத்து, வெளியிட்டு, விடைகளை சரிபார்த்து, அவற்றை வெளியிட்டு - முதல் சீசனுக்கு 3 மாதத்துக்காவது போட்டியை நடத்தணும்னு அவா. மற்றவை புரந்தரதாசர் கையில்.

***

Read more...

Thursday, March 10, 2016

கணக்கில் மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை.


கணக்கில் மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை.

ரஜினி ஜோக்ஸ் என்ற ஜானரில் ஒரு ஜோக் வரும். ஒரு தேர்வில் ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் என்று இருந்தபோது, தலைவர் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டு, ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்கவும் என்று எழுதிவிட்டு வந்தார் என்று இருக்கும்.

அதே போல்..

நேற்று மாலை 4 மணி. ட்ரிங் ட்ரிங். அப்பா, கணக்கு மதிப்பெண் வந்துடுச்சு. நான் 92 எடுத்திருக்கேன்.

சூப்பர்மா. வெரி குட்.

அப்புறம் சிறிது நேரம் கழித்து மறுபடி ட்ரிங் ட்ரிங்.

ஒரு தப்பு நடந்து போச்சுப்பா. நான் இப்பதான் பார்க்கிறேன்.

என்னம்மா?

Part-Bயில் ஐந்து கேள்விகளில் மூன்று எழுதினால் போதும்னு போட்டிருக்கு. தேர்வில் நான் அதை கவனிக்காமல், ஐந்தையும் எழுதியிருந்தேன்.

சரி.

அதை என் மிஸ்ஸும் கவனிக்காமல், எல்லாக் கேள்விகளுக்கும் மதிப்பெண் கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் சேர்த்துதான் 92 வந்திருக்கு.

நல்லவேளை, மொத்த மதிப்பெண்கள் 100க்கு மேல் போயிருந்தா, கவனிச்சிருப்பாங்க. இப்போ கவனிக்கலை. அதானே?

அதில்லைப்பா. நான் நாளைக்கே போய், இதை சரியா திருத்துங்கன்னு சொல்லிடப் போறேன்.

மதிப்பெண் குறைஞ்சிடுமே பரவாயில்லையாம்மா?

அது ஒண்ணும் பிரச்னையில்லைப்பா. எவ்ளோ குறையுதோ குறையட்டும்.

சரிம்மா. அப்படியே செய்.

இன்று மாலை 4 மணி. ட்ரிங் ட்ரிங்.

அப்பா. கணக்கு மிஸ் எல்லார் முன்னாடியும் என்னைப் பாராட்டினாங்க.

அது சரி. மதிப்பெண் என்ன ஆச்சு.

92லிருந்து 78க்கு வந்துடுச்சு. ஆனாலும் பரவாயில்லை. நான் ஒரு Honest girlன்னு மிஸ் சொன்னாங்க. இப்படியே இருக்கணும்னு சொன்னாங்க. நானும் இப்படியே இருக்கப் போறேன்.

சூப்பர்மா. வாழ்த்துக்கள்.

***

ஒரு Honest Sathyaக்கு Honest பொண்ணுதானே பொறக்கும்னு obvious கமெண்ட்லாம் போட வேண்டாம் மக்களே!!

***


Read more...

Monday, February 15, 2016

உட்கார்ந்தான், ஓடினான், கிடந்தான்.



ITPL to KRPuram ரெயில் நிலையம். முன்பெல்லாம் ஆட்டோவில் ரூ150 கேட்பாங்க. ரூ120க்கு வருவாங்க. சென்ற ஆண்டு நவம்பர் மழைக்குப் பிறகு எல்லா விலையும் கூடிப்போச்சு போல. இந்த முறை கேட்டதற்கு ரூ300ன்னாரு. சாமி, ரூ500க்கு நான் சென்னைக்கே போறேன். என்னை விட்டுடுங்கன்னு ஓலா ஆட்டோ பார்த்தால், ஒரே ஒரு நிமிடம் காட்டியது. Confirm செய்து நிமிர்ந்தால், அடடே, அவரே வந்துட்டாரேன்னு ஓலா வந்துடுச்சு. ரூ110 மீட்டர்+ரூ10 கொடுத்து ரெயில் ஏறியாச்சு.

நிமிர்ந்த முதுகும், நேர்கொண்ட பார்வையுமாய் உட்கார்ந்து போகணும் இந்த Double Deckerல். (அப்படின்னா, அந்தக் கட்சிக்காரங்க இந்த ரெயிலில் போக முடியாதான்னு கேட்கக்கூடாது!!). வாரயிறுதி வெள்ளி மாலைக்கு அதிக கும்பலில்லை. 3-seaterல் நான் ஒருவனே உட்கார்ந்து வந்ததால், கொஞ்சம் கால் நீட்டி கால் மடக்கி பிரச்னையில்லாமல் போக முடிந்தது.

Central to Triplicane பேருந்தில் ஏறியாச்சு. பெங்களூரு நிலைமையில் 4கிமீக்கு ரூ12ஆவது இருக்கும்னு காசு கொடுத்தால், ரூ4க்கு டிக்கெட் கொடுத்து, சரியான மீதி சில்லறையும் உடனே கொடுத்தார் நடத்துனர். கண்ணில் வந்த ஜலத்தை கஷ்டப்பட்டு அடக்கிண்டேன்.

85+ வயதான ஒரு சொந்தக்கார். நான்கைந்து சாக்லெட் கொடுத்தார். யாருக்கு இது? சஹானாவுக்கான்னா, அடேய் இது உனக்குதான். சாப்பிடுன்னார். எனக்கு எதுக்கு? சின்ன வயசில் தினமும் சாக்லெட் கேட்டு எங்க வீட்டுக்கு வருவே. உனக்கு எவ்வளவு வயசான என்ன? எங்களுக்கு நீ எப்பவுமே குழந்தைதான். அப்புறம் என்ன சொல்றது? போட்டேன் சாக்லெட்டை (என்) வாயில்.

அப்பா. எவ்ளோ நாளாச்சு இந்த லோக்கல் டாஸ்மாக் வாசத்தை நுகர்ந்து. பறக்கும் ரெயிலில் படுத்தபடியே (மட்டையாகி) வந்த இருவரிடம்தான் அந்த நறுமணம். ரூ5க்கு 15 நிமிடத்தில் திருவல்லிக்கேணியிலிருந்து கஸ்தூரிபாய் நகருக்கு வந்து சேர்த்துடுச்சு பறக்கும் ரெயில். (யஹ் கஸ்தூரிபாய் நகர் ஹை).

இறங்கியவுடன் தயாராக நின்றது புதுச்சேரிக்கான ஒரு குளிர்சாதன பேருந்து. லோக்கல் வெயிலில் காயணும்னு வந்தவனுக்கு, எதுக்கு குசாபே. வேண்டாம்னுட்டேன். (ஹிஹி. காசும் அதிகமா இருக்கும்லே!). பின்னாடியே இன்னொரு தநா விரைவுப் பேருந்து. ரூ97க்கு 3.30மணி நேரம் ஓட்டி (ஒரு சிறு தேநீர்க்கான நிறுத்தத்துடன்) புதுச்சேரி கொண்டு வந்து சேர்த்தார் ஓட்டுநர்.

ஆரோவில் ஓட்டம் துவங்கிடுச்சு. 9மணி வாக்கில் சரியான வெயில். சட்டையைக் கழற்றி கக்கத்தில் வைத்து ஓடிக்கொண்டிருந்தேன். அப்போ பக்கத்தில் வந்த ஒருவர், சட்டையை அவுத்திட்டீங்க சரி. அந்த பூணலையும் எடுத்துடுங்க. ரொம்ப தொந்தரவா இருக்கும். நான் அதுக்குதான் அதை கழற்றி Hotelலிலேயே வெச்சிட்டு வந்துட்டேன்னாரு. அடேய். அதுக்கு நீ ஊரிலேயே வெச்சிட்டு வந்திருக்காலாமேன்னு, சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. சரி சார், அடுத்த முறை அப்படியே செய்றேன்னு கொஞ்சம் முன்னாடி ஓடிப்போனேன்.

சரி, 42கிமீ ஓட்டத்திற்கே சட்டையைக் கழட்டிட்டே, 75 அ 100 ஓடினா, இன்னும் எதையெல்லாம்.. ஐ மீன்.. என்னவெல்லாம் செய்வேன்னு ஏடாகூடமா கேட்காமல், அடுத்த பத்திக்குப் போங்க.

புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால்.. சரக்கு கடையல்ல. நான் சொல்ல வந்தது ஃப்ளெக்ஸ். கட்சிகளின் ‘தலைவர் வருகிறார்’ பேனர்கள் கூட இல்லை. திருமண வாழ்த்துகள் ப்ளெக்ஸ்கள். மணமக்களை ஓரமாக போட்டுவிட்டு, வாழ்த்தும் நண்பர்களின் படங்களுடன் ஏகப்பட்ட விளம்பரங்கள். டூ மச். இஅ23பு போல், ஒரு ஃப்ளெக்ஸ் மைதானம் அமைத்தாலும், அதுவும் நிரம்பிவிடும்.

இதுவும் புதுச்சேரியில்தான். ஞாயிறன்று அம்மா கட்சியினர் பட்டாசு வெடித்து சிறப்பு ஊர்வலம். இதனால் பேருந்துகள் ஒரு பத்து நிமிட நெரிசலில் சிக்கின. ஆனால் மக்கள் அதுக்காக திட்டவில்லை. ஏன்னா, எல்லா பேருந்துகளிலும் ஏறி ‘சார், லட்டு, அம்மா, லட்டு’ன்னு லட்டு விநியோகம் செய்து கொண்டிருந்தனர். எல்லாரும் ஆளுக்கு 2கூட வாங்கிக் கொண்டபோது, நான் லட்டு வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்காக, நான் அந்தக் கட்சி இல்லையோ? வேறெந்தக் கட்சியா இருக்கும்னெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம் மக்கழே.

Auroville to Puducherry பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ கேட்போம்னு எவ்வளவு ஆகும்னா, இவரும் சென்னை போகும் கட்டணத்தை விட அதிகமாக, ரூ200ன்னு சொல்லி, வண்டி எடுக்க வந்தார். சிரமப்படாதீங்க, நானே பார்த்துக்கிறேன்னு சொல்லி, ஒரு தனியார் பேருந்தில் ஏறி ரூ5க்கு டிக்கெட் எடுத்து, பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.

Puducherry to Bangalore. படுக்கை வசதி கொண்ட குசாபே. இரவுக்குள் வீட்டுக்கு வந்து சேர்த்துட்டான்.

இப்படியாக ஆரோவில் பயணம் இனிதே நிறைவுற்றது.

***


Read more...

Monday, February 1, 2016

வாரயிறுதி பயணக் குறிப்புகள்.


ஒரு திருமண நிகழ்ச்சிக்காக திருக்கோயிலூருக்குப் போய் வந்தோம். அந்த பயணத்திற்கான சிறு குறிப்புகள்தான் இந்தப் பதிவு.

பெங்களூரிலிருந்து திருக்கோயிலூருக்கா? பேருந்திலா? சாலைகள் மோசமாக இருக்கும். பார்த்து போங்கன்னு சொன்னார் நண்பர். கிருஷ்ணகிரி வரை தேநெ7 வெண்ணெய். அதுக்கப்புறமும் நண்பர் சொன்ன மாதிரி மோசமெல்லாம் இல்லை. படுமோசம். 3+ ஆண்டுகளாகவே அப்படிதான் இருக்காம். பல இடங்களில் சாலை / பாலம் போடும் வேலைகள். முடிஞ்சிடுச்சுன்னா நல்லாயிருக்கும். அதுவரை கர்ப்பஸ்த்ரிகள் அந்தப் பக்கம் போவதை தவிர்க்கவும்.

பல ஆண்டுகள் கழித்து சஹானாவைப் பார்த்த உறவினர் ஒருவர், என்னம்மா படிக்கிறே, என்ன பள்ளி, எத்தனாவது ரேங்க் என பல கேள்விகள் கேட்டாரு. இவரும் எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்னாரு. முடிஞ்சுதா? அடுத்த நாள் காலை. அந்த ஆளை மறுபடி சந்திக்க நேர்ந்தது. சஹானாவைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி - என்னம்மா படிக்கிறே?.

செங்கம் பேருந்து நிலையம். ஆத்திரத்தை அடக்கிவிட்டு, அடுத்ததை அடக்க முடியாமல் ஊர் மக்கள் எல்லாரும் இங்கே வந்துதான் போவாங்க போலன்னு நினைக்க வைக்கும் வாடை. நம் ஓட்டுநருக்கும் அந்த வாடை வந்ததால், உடனே வண்டியை கிளப்பிட்டாரு.

ஊருக்குப் போய், தென்பெண்ணையைப் பார்த்து பல்லாண்டுகள் ஆச்சு. திச2015ல் தமிழக மழை வெள்ளத்தில் இந்த நதியில் தண்ணீர் விட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. ஜன2016ல் இன்னும் தண்ணீர் இருக்கலாம்னு நினைச்சி போனா, கண்ணுக்கெட்டிய வரை அங்கங்கே மக்கள், மணலில் குந்தவெச்சி, அசிங்கம் செய்திங். மிகப்பெரிய திறந்தவெளி அசிங்கரங்கம்.

உலகளந்த பெருமாள். கோயிலில் ஆறஅமர வேடிக்கை பார்த்தவாறு தரிசனம் முடிச்சாச்சு. பெரும்பாலான கோயில்களைப் போலவே இங்கும் செக்யூரிட்டி முதற்கொண்டு அனைவரும் வணக்கம் வைக்கிறார்கள். கையில் பல பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தால் நலம்.

இன்னொரு உறவினர். ஏன் என் பையன் பூணலுக்கு வரலை. இந்தக் கல்யாணத்துக்கு மட்டும் வரத் தெரிஞ்சுதில்லை? அடேய். இப்போ நான் வந்தது பெங்களூரிலிருந்து. அப்போ நான் இருந்தது அமெரிக்காவில். அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்மேல் எனக்குக் கோபம் இன்னும் தீரலை. பிறகு, பந்தியில் அவருக்கு ஒரு எக்ஸ்ட்ரா லட்டு வாங்கித் தந்தபிறகு சிறிது பேசினார்.

திருவண்ணாமலை பேருந்து நிலையம். 12வாழைப்பழம் 10ரூபாய்னு வாங்கியாச்சு. சிறிது நேரத்தில் ஒரு வயதானவர் பசிக்குது ஏதாவது காசு கொடுங்கன்னு கேட்டு பேருந்து ஓரமாக வந்தாரேன்னு, சீப்பிலிருந்து 6வாப பிச்சி அவரிடம் கொடுத்தோம். பேருந்து புறப்பட்டு ஒரு சுற்று சுற்றி, வெளிச்சுவர் ஓரமாக மறையும் வரை அவரைப் பார்த்திருந்ததால், அந்தப் பழங்களை அவர் சாப்பிடாமல் தூக்கியெறிந்ததை பார்க்க முடிந்தது.

ஒரு வழிக்கு 250கிமீ. இரண்டு வழிக்கும் த நா அதிவிரைவுப் பேருந்து. சரியா 6மணி நேரம் எடுத்துக்கறாங்க. பேருந்து நல்ல கண்டிஷனில்தான் இருந்தது. ஆனா தேநெ7ல் வரும் பாலங்கள் மேல் ஏற முக்கி முக்கி முக்குது. சரக்கு லாரிகளுடன் போட்டி. 7 தாண்டியபிறகு சாலைகள் சரியில்லைன்னு ஏற்கனவே பார்த்தாச்சு.

போகும்போது அமைதியாகப் போன பேருந்து, திரும்பி வரும்போது மாபியா மெம்பர்களோடு வந்தது. ஓட்டுநர் + நடத்துனர் இருவரும் மாபியா. கேட்கணுமா. மொத்த 6மணி நேரமும் 80-90 பாடல்கள். இவங்களும் கூடவே பாடிக்கிட்டு. சரின்னு நாமும் காதில் சொருகியிருந்த தாசர் பாடல்களை எடுத்துவிட்டு, ஆத்தா பெத்தாளே ஆம்பளயா என்னத்தான்னு பாடிக்கிட்டே வந்து சில்க்போர்டில் இறங்கியாச்சு.

நன்றி வணக்கம்.

***

Read more...

Thursday, January 7, 2016

இரண்டு குரு’க்கள் வர்றார். வழி விடுங்கோ!!


இரண்டு குரு’க்கள் வர்றார். வழி விடுங்கோ!!

மொத்தம் இரண்டு தத்துவ நூல்கள். (பேர் இப்போதைக்கு தேவையில்லை!). ஒன்று சமஸ்கிருதத்தில். இன்னொன்று கன்னடத்தில். இரண்டு மொழிகளுமே நமக்கு ததிங்கினத்தோம். ஆனா அந்த நூல்களை படிக்கணும். அதனால், சரியான குரு ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த சமயம்.



நான்கு மாதங்களுக்கு முன்:

அந்த சமஸ்கிருத நூலை கற்றுத்தரும் ஒரு குரு கிடைத்தார்னு போனேன். அவருடன் இருந்த ஒரு சிஷ்யர் நமக்குத் தெரிந்தவர். இந்த மாதிரி.. இந்த மாதிரின்னு சொன்னதற்கு, குரு - ஆஹா, அதுக்கென்ன? பேஷா சொல்லித் தரலாமே? வந்துடு.

நமக்கோ - சரிதான், இன்னிக்கு நரி முகத்தில்தான் முழிச்சிருக்கோம்னு நினைப்பு. ஆனா... ஊஊஊஊ..

அந்த சிஷ்யர் - குருஜி, இவருக்கு (அதாவது எனக்கு) கன்னடம் சரியா பேச வராது. தடுமாறி தடுமாறித்தான் பேசுவார். நம்ம கூட்டத்தில் நாம் எல்லாருமே கன்னடிகா. கன்னடம்தான் பேசுவோம். அதனால் இவருக்கு கஷ்டமா இருக்கும். ஒத்துப் போகாது.

குருஜி - தடுமாறியாவது பேசுவார்லே. அது போதும்.

சிஷ்யர் - வேண்டாம் குருஜி. திரும்பி என்னிடம் - அதுவும் தவிர, இவருக்கு ரொம்ப வயசாயிடுச்சு. பேசுவதே எங்களுக்கு சரியா கேட்கவில்லை. அதனால், இது சரிப்படாது.

குருஜியும் ஒன்றும் பேசவில்லை. நானும் சரின்னு திரும்பி வந்துவிட்டேன்.

No Hard feelings on either குருஜி or சிஷ்யர்.

ஒரு மாதத்திற்கு முன்:

கன்னட நூலுக்காக ஒருவர் சிக்கினார். அவரிடம் போய் கேட்டேன். சார், எனக்கு கன்னடம் மெதுவாகத்தான் படிக்க வரும். பேசுவதும் தமின்னடம் or கன்னமிழ் (கன்னடம்+தமிழ்) மாதிரிதான் இருக்கும். ஆனா எனக்கு இந்த புத்தகம் படிக்கணும்.

அவரும் ஊஊஊஊ சொல்லி அனுப்பிடுவார்னு நினைத்திருந்தபோதுதான், காதில் அந்த இன்பத்தேன், இன்பத்தேன்னு சொல்வாங்களே, அது -

அதனால் என்ன, நூலைக் கற்க மொழி அவசியமேயில்லை. எனக்கு கன்னடம் தெரியும். உனக்கு கன்னடம் புரியும். நம்ம இருவருக்கும் ஆங்கிலம் தெரியும். நான் கன்னட+ஆங்கிலத்திலேயே சொல்லித் தர்றேன். ஓகேதானே?

சலங்கை ஒலி கமல் போல் expression காட்ட நம்மால் முடியாது. ஆனால் மிகவும் நன்றி ஐயா என்றேன்.

கூடவே, நம் தளமான தாசர் பாடல்களைப் பற்றியும் சொன்னேன். இன்னொரு நற்செய்தியும் சொன்னார்.

தாச சாஹித்ய பாடத்தில் மணிபால் பல்கலையில் உள்ள ஒரு பிரிவில் பல்வேறு தேர்வுகள் நடப்பதாகவும், அதையும் நீ முயற்சிக்கலாமே என்றார்.

எனக்கு தலை கீழே. கால் மேலே. அப்புறம் சரியாக திரும்பி நின்றுவிட்டேன்.

மொத்தம் 12 செமஸ்டர்கள். குறைந்த பட்சம் 6 வருடங்கள் ஆகும். 12 தேர்வுகளும் முடித்தால், தாச சாஹித்யத்தில் M.Philக்கு நிகரான ஒரு பட்டம்.

அதற்கு மேல் பேச ஒன்றுமேயில்லை. எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினேன்.

இதோ, இந்த ஜன 10 முதல் அந்த கன்னட நூல் + முதல் நிலைத் தேர்வுக்கான coaching வகுப்புகள் துவக்கம்.

இந்த ஆண்டு இனிய ஆண்டு.

***


Read more...

Friday, December 18, 2015

பகவத் கீதை.



நண்பர் உவாச (சொன்னார்):
மாதங்களில் நான் மார்கழின்னு சொன்னாரே பகவான், அந்த பகவத் கீதையை படிச்சிருக்கியா?

நான்: யெஸ். மலர்களிலே நான் மல்லிகைதானே அடுத்த வரி?

நண்பர்: அடேய்!!



ரொம்ப நாளாகவே இந்த பகவத்கீதையை முழுக்க ஒரு முறையாவது படிக்கணும்னு நினைப்பு இருந்தது. அங்கும் இங்குமாக சொற்பொழிவுகள் கேட்டிருந்தாலும், புத்தகம் படிக்கணும், அதில் என்னதான் சொல்ல வர்றார்னு புரிஞ்சிக்கணும்னு இருந்தது. சரி இந்த மார்கழியில் ஒரு rapid-fire பகவத்கீதை படித்தல் / கேட்டல் செய்திடுவோம்னு முடிவு எடுத்தாச்சு.

வீட்டில் இருந்த புத்தகங்கள்:
* கீதா பிரஸ் - தமிழில் உரை (1000 பக்கங்கள்).
* பாரதியாரின் உரை - (Project Madurai)
* The Gita for Children : Roopa Pai
* My Gita - Devdatt Patnaik
* Gita for Students - ராஜாஜி

கேட்பதற்காக தேர்ந்தெடுத்த ஒலித்துண்டுகள்:
* வேளுக்குடியின் கீதாசாரம் - 3மணி நேரங்கள்
* வேளுக்குடியின் பக்தி யோகம் - 2மணி நேரங்கள்
* சுகி சிவமின் கீதாசாரம் - 4மணி நேரங்கள்

இதையெல்லாம் இந்த ஒரே மாதத்தில் முடிச்சிடலாம்னு முடிவு செய்திருக்கேன்.

நண்பர்: அட! ஆமா கீதா பிரஸ் ஒரு as-is உரைன்னு சொல்றாங்க. ஆனா மத்தவங்க அவங்க அவங்களுக்கு புரிஞ்ச மாதிரிதானே சொல்லியிருப்பாங்க. எல்லாத்தையும் படிச்சி / கேட்டு, நீ குழம்பிடமாட்டே?

நான்: கண்ணா. அர்ச்சுனன் குழப்பத்தையே தீர்த்த கீதை இது. இதைப் படிச்சி குழம்பிட்டான்னு கேக்குறியே?

நண்பர்: அதில்லை. School of thoughtன்னு சொல்றாங்களே? அதில்தானே குழப்பமெல்லாம் வரும்?

நான்: இது கேள்வி. இதுவரை பகவத்கீதைன்னா என்னன்னே தெரியாமல் இருக்கிற எனக்கு, மேற்சொன்ன எல்லாம் ஒரு முன்னுரை மாதிரிதான். இப்போ content என்னன்னு தெரிஞ்சபிறகே, நம்ம school of thoughtக்கு வரணும். அதைப் பற்றி சொல்லவேயில்லையே?


நம்மது எப்பவுமே இரட்டை இலைதான். (பார்க்க படம்). அதற்கான ஒலித்துண்டு + புத்தகங்கள் இவை.

* சுவியேந்திரர் - உடுப்பி மடத் தலைவர்களில் ஒருவர் - 12 மணி நேர சொற்பொழிவு (கன்னடத்தில்)
* வித்யாபூஷணர் - 10 மணி நேர சொற்பொழிவு (கன்னடத்தில்)
* த்வைத வழியின் ஆராய்ச்சியாளர்கள் - K.T.Pandurangi & T.S.Raghavendran ஆகியோர் எழுதிய புத்தகங்கள்.

இதைத் தவிர, இந்த வாரயிறுதியில், த்வைத புத்தகக் கடைக்குப் போய், ஓரிரு புத்தகங்கள்/CDகளை அள்ளப் போறேன். இவை, நம்ம School of thoughtல் ஏதாவது வித்தியாசம் இருக்கா, கீதையை எப்படி புரிஞ்சிக்கணும்னு எனக்கு சொல்லித் தரும்.

நண்பர்: சூப்பர். ஆமா, இது எல்லாத்தையும் ஒரே மாதத்தில் செய்ய முடியுமா?

நான்: ஹிஹி. ஆபீசில் சும்மாதானே இருக்கோம்?

நண்பர்: இருக்கேன்னு சொல்லு. ஆமா, இவ்வளவு செய்த பிறகு, அடுத்த மாசம் இதிலிருந்து என்ன முடிவு வரும்னு எதிர்பார்க்கிறே?

நான்: பகவத்கீதை படிக்கிறது என் கடமை. படித்தா என்ன பலன்கள் வரும்னு நான் எதிர்பார்ப்பதில்லை. எப்புடி?

நண்பர்: ஆ!

***

Read more...

Friday, November 28, 2014

உலகின் மிக அழகான சாலைகள்.




மேலிருக்கும் Maze இன்னொரு முறை பார்த்துடுங்க.

ஒரு பக்கம் எலியும் இன்னொரு பக்கம் வெண்ணெயும் வெச்சிட்டு, எலியை வெண்ணெயிடம் கொண்டு சேருங்கள்னு சொல்வாங்க. இரண்டும் நேரெதிரில் இருந்தாலும், சந்து சந்தாக நுழைந்து, கடைசியில் வெண்ணெயை அடைவதே விளையாட்டு.

இதுவே எங்களுக்கு ஒரு காலத்தில் பொழுதுபோக்காக இருந்தது. அட, Maze விளையாடுவது கிடையாதுங்க. திருவல்லிக்கேணியில் இருந்த காலத்தில், வீடு ஒரு பக்கம். பேருந்து நிலையம் இன்னொரு பக்கம். இந்த இரண்டும், நேரெதிரில் இருந்தாலும், இதே Maze போல, ஊர் முழுக்க சுற்றிக்கொண்டே போவோம். காரணம்? வேறென்ன.. தோழிகள்தான்.

இந்த நேரத்தில் க க க க க க கல்லூரிச் சாலை.... பாடலையும் பார்க்கலாம். மூட் செட்டாவதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

பேதை, பெதும்பை காலத்திலிருந்து பேரிளம் பெண்ணாக மாறிய வரை, தெரிந்த பலர் அங்கே இருந்ததுதான் காரணம். அதாவது, பள்ளியில், தட்டச்சு / சுருக்கெழுத்து நிலையத்தில், இந்தி வகுப்பில் இப்படி பல இடங்களில் கூடப் படித்தவர்கள் எல்லாரும் அதே சுற்றுவட்டாரத்தில் இருந்ததால், எங்களுக்கு பொபோ வேறெதுவும் தேவையில்லை. வெறும் தெருத்தெருவாக - மேற்கண்டவர்கள் வீடு வழியாக - போய் வருவதே போதுமானதாக இருந்த காலம். (அப்பா/அம்மா அன்பாகச் சொல்வதுபோல் சொல்லணும்னா - வெட்டியா ஊர் சுற்றிட்டு வருது பாரு தண்டச்சோறு!).

வெறும் நாட்களிலேயே இப்படியென்றால், தீபாவளி போல் விழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம். அப்போதெல்லாம் எங்களுக்கு புதுத்துணி என்பது, இரண்டு ஆடிக்கு ஒரு முறை, 24 அமாவாசைக்கு ஒரு முறைதான். ஆனால், அதெல்லாம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. பண்டிகையன்று, சீக்கிரம் வாடா’ன்னு அவசரப்படுத்தும் நண்பர்கள். பிறகென்ன.. நகர்வலம்தான்.

இப்போ, ஏப்ரல், மே’யிலே பசுமையே இல்லே - பாடலையும் சேர்த்துக்கலாம். பார்க்கவில்லை என்றாலும் தப்பில்லை.

Mazeல் முக்கியமான விதி என்னன்னா, எங்கும் சுவற்றில் போய் முட்டிக் கொள்ளக்கூடாது. பாதை இருக்கும் வழியாகவே போக வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி முடியுமா? நமக்குத் தெரிந்த சில மடந்தைகளும், அரிவைகளும் வேண்டுமென்றே அப்படி ஒரு சந்தில் - அதாவது முட்டுச்சந்தில், அதுவும் கடைசி வீட்டில்தான் இருந்தார்கள். அந்த சந்திற்கு மறுபுறம் போக வழியில்லை என்று தெரிந்தாலும், நம்மால் போகாமல் இருக்கமுடியுமா? அங்கே போவதெல்லாம் நாம் என்ன பெருமைக்கா செய்கிறோம்? ஒரு கடமைதானே? வாடா போகலாம்னு இழுத்துக் கொண்டு போவான் நண்பன். அவ்வளவு தூரம் போய், அவர்களும் வெளியே இருந்துவிட்டால் ஒரு வழி, வழிந்துவிட்டு - பம்மல் உவ்வே சம்மந்தம், ஏண்டி சூடாமணின்னு பாடிக்கொண்டே சுவற்றில் போய் முட்டி, திரும்பி சரியான பாதையில் வருவதைப் போல் வந்துவிடுவோம்.

இப்படியாக சிலபல வருடங்களைக் கழித்ததால், உலகின் மிக அழகான, மிகவும் பிடித்தமான சாலைகள்/தெருக்கள் எங்கேயிருக்குன்னு கேட்டால் என்ன பதில் வரும்? திருவல்லிக்கேணியின் எல்லா தெருக்களும் (முட்டுச்சந்துகள் உட்பட) அழகானவைகள்தான். எவ்வளவு முறை வேண்டுமானாலும்  ’நடைப்பயிற்சி’ செய்யத் தகுந்தவை என்று சொல்வேன். ரிடையர் ஆனபிறகு அதே ஊரில் போய் செட்டில் ஆகவேண்டும் - ஆனால் என்ன, எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரும் கிழவி ஆயிருப்பாங்க என்று சொன்னால், நீங்க மட்டும்னு ஒரு கேள்வி வரும் வீட்டிலிருந்து. நமக்கு எப்பவுமே வாலிப வயசுதான்னு சமாளிக்க வேண்டியிருக்கும்.

ஆனால்.. ஆனால்..

மேற்சொன்ன அருமை / பெருமைகள் நிறைந்த திருவல்லிக்கேணியிலும் ஒரே ஒரு தெரு/சந்து மட்டும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. கடந்த 20 வருடங்களாக பலமுறை அந்தப் பக்கம் சுற்றி வந்தாலும், அந்த தெருவுக்குள் மட்டும் நான் போகவே இல்லை. இனிமேலும் போக மாட்டேன்.

ஏன்? யார்கிட்டேயாவது திட்டு / அடி வாங்கினியா? எனி வம்பு / தும்பு? என்று கன்னாபின்னாவென மனசை அலைபாய விடுவதற்குமுன் சரியான காரணத்தைச் சொல்லி விடுகிறேன்.

<கடைசி பாரா சோகமான முடிவு என்பதால் 31.10.2024 அன்று நீக்கப்பட்டது. ஹேப்பி தீபாவளி>


***


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP