Wednesday, May 24, 2017

ஜொள் அங்கிள்

அடியேன் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் 22 கிமீ தூரம். அலுவலகப் பேருந்தில்தான் போய் வருவது. அடியேன் வீட்டுப் பக்கத்திலேயே இன்னும் இருவர் (மகளிர்) அதே அலுவலகத்தில் வேலை செய்றாங்க. அலுவலகத்திற்கு தாமதமாகப் போகணும்னாலோ, வீட்டிற்கு சீக்கிரம் வரணும்னாலோ, மூவரும் ஒரு Ola book செய்து, 1/3 போட்டு போய் வருவது வழக்கம்.

திடீர்னு அலுவலகத்தில் ஒரு carpool app உருவாக்கி, மக்கள் எல்லாரும் அதை பயன்படுத்திக்கோங்கன்னு சொன்னாங்க. நாங்க மூவரும், நம்ம வீட்டு பக்கம் யாராவது காரில் போவோர் வருவோர் இருக்காங்களான்னு பார்க்கலாம்னு பார்த்தோம். அட, ஒருவர் இருந்தார். நமக்கு தோதான நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்புபவராகவும் இருந்தார். சரி ஒரு நாள் இவர் வண்டியில் மூவரும் போவோம்னு முடிவு செய்தோம்.

அந்த நாளும் வந்தது. ஒருவருக்கு ரூ70. சும்மா போகும் வண்டியில் நாங்களும் போனால், அவருக்கு ரூ210 வரும். ஒவ்வொருவராக தம் கைப்பேசியிலிருந்து அந்த rideக்கு request கொடுத்தோம். Note the point. இரு மகளிர் மற்றும் நான். அவங்க ரெண்டு பேர் requestம் உடனே approve ஆயிடுச்சு. எனக்கு எதுவும் பதில் வரலை. Ofcourse, நாங்க மூவரும் ஒரே க்ரூப்ன்னு அங்கிளுக்கு தெரியாது.

வண்டி புறப்பட இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. புரியுதா, அந்த அங்கிளுக்கு நீங்க வர்றது பிடிக்கலை. ஜொள் அங்கிள்ன்றங்க மகளிர். சரி, நீங்க போங்க, நான் பேருந்திலேயே வர்றேன்னேன். வெயிட்டீஸ், அங்கிளுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்ன்றாங்க. இருவரும், அந்த requestஐ cancel செய்துவிட, உடனே அங்கிள் என் requestஐ approve செய்துவிட்டார். அதற்குள் நாங்க ஒரு ஓலா புக் செய்துவிட, நானும் அந்த அங்கிள் வண்டியை cancel செய்துவிட்டேன். ஒழுங்கா என்னையும் ஓகே சொல்லியிருந்தா ஒரு ரூ210 வந்திருக்கும். இப்போ ஜொள் அங்கிள் தனியா போகவேண்டியதாய் போச்சு. (அதன் பிறகு வேறு யாரும் request கொடுக்காத பட்சத்தில்). 

இனி மறுபடி இன்னொரு நாள் இவர் வண்டிக்கு request கொடுக்கலாமான்னு நான் கேட்க, அங்கிள் திருந்தியிருக்காரா இல்லையான்னு இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்னு இருவரும் சொல்லியிருக்காங்க. பார்ப்போம். அதன் முடிவை இன்னொரு பதில் சொல்றேன். 

தொடரும்...

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP