Thursday, May 18, 2017

பாகுபலி2 - சில கருத்துகள்


பாகுபலி முதல் பகுதிக்கு இவ்வளவு அழுத்தம் வரலை. விடுமுறையில் வரலையோ? ஆனா, இந்த இரண்டாம் பகுதிக்கு... அன்றாட சாப்பாட்டுக்கு பிரச்னை வந்துடும்படியா ஒரு அழுத்தம். மேல் வீட்டில் பார்த்துட்டாங்க, கீழ் வீட்டில் பார்த்துட்டாங்கன்னு Tablemat விளம்பரம் போல் சொல்லத் துவங்கியதால், சரி பார்த்துடலாம்னா.. தமிழில் எங்கேயும் கிடைக்கலை அல்லது நேரம் சரிப்படவில்லை. நமக்குத் தெலுங்கு தகராறு. வெறும் சண்டைப் படம்தானே, வசனமாடா முக்கியம்,
இந்தியிலேயே பார்த்துடுவோம்னு போய் பார்த்து வந்தாச்சு.

நிறைய சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாங்க இது. ஏம்மா, நம்ம வீட்டில் நாம போடாத சண்டையா, அதில் கிழியாத சட்டையா? காசு குடுத்து அடுத்தவன் சண்டையை பார்க்கப் போகணுமா? பேசாம வாங்க. சரி. போயாச்ச்சு.

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதில் ஒரு இணை-விதி - படம் 2 மணி நேரத்தில் இருக்கவேண்டும்னு சொல்லலாம். கவலையேபடாமல் 3 மணி நேரத்துக்கு படம் வைக்கிறாங்க. இதிலேயே நிறைய இடத்தில் ‘கட்’ செய்திருப்பது தெரியுது. அந்த கட் இல்லையென்றால், 4 மணி நேரம் கூட போயிருக்கலாம். ‘எப்போதாவது’ யூட்யூபில் பார்த்தால், ஒரு படத்தை ஒரு வாரம் / பத்து நாட்களுக்கு பார்க்கும் எனக்கு, 3மணி நேரம்லாம்... ம்ஹூம். மிடில.

படத்தில் நிறைய CG இருக்குன்னு DWவிடம் சொன்னது தப்பாப் போச்சு. தசாவதாரம் படத்தில், போவோர் வருவோர் (& சில அசையாப் பொருட்களைக் கூட) இது கமல்’ஆ இருக்குமோன்னு சந்தேகத்துடன் பார்த்தது போல், இந்தப் படத்தில், ஏங்க இந்த யானை, அருவி, இந்த குழந்தை? இதெல்லாம் நிஜமா அல்லது CGயான்னு கேள்வி கேட்டே, படம் பார்க்கும்போது என் தூக்கத்தைக் கெடுத்தாங்க.

தென்னை மரத்தை வளைத்து, angry birds போல் பறந்து செல்வதெல்லாம் செம ஐடியா. அதை அப்படியே லுரு சில்க்போர்ட் மேம்பால போக்குவரத்து நெரிசலுக்குப் பயன்படுத்தலாம். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு தென்னை மரத்தை நட்டு வைத்தால் போதும். பத்து பத்து பேராக பறந்து, சுலபமாக மேம்பாலத்தை தாண்டிவிடலாம். இதச்சொன்னா...

நடுவில் ஒரு காட்சியில், நீங்க சிவகாமிக்கு சொல்லலாமே என்று நாசரைப் பார்த்து கேட்க, அவர் நான் சொன்னால் சிவகாமி கேட்கமாட்டாள் என்பது போல் ஏதோ சொல்வார். அதைத் தொடர்ந்து, படையப்பா காலத்திலிருந்து நான் சொல்வதை அவள் கேட்பதேயில்லை என்று வசனம் வரும்னு பார்த்தால் - வரவில்லை.

ரோகிணி, தமன்னா - இவங்கல்லாம் திடீர்னு தலை காட்டினாங்க. முதல் பகுதியில் வந்திருப்பாங்களா இருக்கும். நமக்குத் தெரியல.

மாமா, மாமான்னு பாசத்துடன் கூப்பிட்டவரை கொன்னுட்டாரேன்னு வருத்தப்பட்டோம். படம் முடிந்து வரும்போது, மிஸ்ட் கால் வந்திருந்தது. ஏங்க, உங்க மாமான்னு கூப்பிட்டிருக்காருன்னாங்க. ஐயய்யோ, இங்கே வர்றேன்னு சொன்னார்னா, நாம வீட்டில் இல்லைன்னு சொல்லிடும்மா, நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகில் இருக்கேன்னு சொல்லிட்டேன்.

சுபம்.

***

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP