Saturday, February 25, 2012

சென்னை பள்ளிகள் - பாகம் 3.


பாகம் 1

பாகம் 2
 

இந்திய பார்லிமென்ட் முதற்கொண்டு நம்ம போயஸ் கார்டனுக்கு உள்ளே கூட போய்விடலாம் (ஹிஹி. நான் அந்த தோட்டத்திலேயே - அம்மா/ ரஜினிகிட்டே இல்லே - ஒரு அலுவலகத்தில், ஆறு மாதம் வேலை பாத்திருக்கேன்!). ஆனால் இந்த பள்ளிகள் உள்ளே நுழைய நாங்க பட்ட பாடு இருக்கே. அப்பப்பா. "ஆமா, ஏகப்பட்ட பசங்க படிக்கிற பள்ளிகள், அதுக்கு பாதுகாப்பு இருக்க வேணாமா" என்று கேட்கலாம். அது சரிதான். அதுக்காக, ஆபீஸ் ரூம், முதல்வர் அறை இதுக்கெல்லாம் கூடவா அனுமதி மறுக்கணும்?



* பிரின்சிபல்தான் வரச்சொன்னாங்க,

* ஆபீஸ் ரூமில் விவரங்கள் விசாரிக்கணும்,

* அப்ளிகேஷன் பாரம் வாங்கணும்,



இப்படி எது சொன்னாலும், வாயிற்காப்போன்களுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை ஒன்றே - 'யாரையும் உள்ளே விடாதே'.



ப்ரீகேஜி அட்மிஷங்களுக்கு மட்டுமே தேதிகள், விவரங்கள், படிவங்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கு விவரங்கள் வேண்டுமா - யாருக்குமே தெரியாது. அந்த கடவுளுக்கே வெளிச்.. சாரி. அவருக்கே தெரிந்திருக்காது.



இந்த அட்மிஷன் வேட்டையில் தெரிந்து கொண்ட விஷயம் ஒன்றுதான். பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் - அவர்கள் அங்கேயே இருபது ஆண்டுகளாக வேலை பார்த்தாலும் - அவர்களுக்கு 'வாய்ஸ்' என்று ஒன்று கிடையாது. 'நான் சொன்னாலெல்லாம் கேக்க மாட்டாங்க. நீங்க ஏதாவது பெரிய ஆளோட ரெகமெண்டேஷன் லெட்டர் கொண்டு வாங்க'.


ஒவ்வொரு பள்ளியிலும் (மொத்தம் நான்கு) ஒவ்வொரு ஆசிரியரை பிடித்தோம். ஒருவராலும் உதவ முடியவில்லை. அதுகூட பரவாயில்லை. விவரங்களும் தெரியவில்லை. அட்மிஷன் கிடைக்குமா, கிடைக்காதா, யாரை பார்க்கணும் - எந்த விவரங்களும் தெரியவில்லை. 'ஆபீஸ் ரூமில் நான் சொன்னா ஒண்ணும் நடக்காது'.



தற்போதைய தமிழக முதல்வர் + அமைச்சரவை நிலைமை மாதிரியே இருக்குது இல்லையா? அனைத்து முடிவுகளும் முதல்வர்தான். ஆனால் அவரோ யாரையும் பார்க்கமாட்டார். எப்போதும் பிஸி. :-)


அட, ஆசிரியர்களை விடுங்க. ஒரு பள்ளியில் 'உதவி தலைமை ஆசிரியர்' கிட்டே பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்கிட்டே விவரங்கள் கேட்டபோது, என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கிறீங்க. கரெக்ட். மேலே சிகப்பு வண்ணத்தில் இருக்கு பாருங்க. அதேதான்.



இவற்றையெல்லாம் தாண்டி அலுவலர்களிடம் பேச வாய்ப்பு கிடைத்தபோது, அவர்கள் சொன்னவைகளில் சாம்பிளுக்கு சில கீழே:



* மாலை நாலு மணிக்கு தொலைபேசுங்க. கண்டிப்பா சொல்றேன். (மூன்றரை மணிக்கே தொலைபேசி சுவிட்ச் ஆஃப்).



* நாளைக்கு பத்து மணிக்கு வாங்க. முடிச்சிடுவோம். (நாளைக்கு அவர் கண்டிப்பாக மட்டம் போட்டிருப்பாரு).



* இவ்வளவு நேரம் பிரின்சிபால் இங்கேதான் இருந்தாரு. பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தீங்கன்னா பாத்திருக்கலாம் (மருத்துவமனைகளில் சொல்வதைப் போல் இருக்கா?)



* நான் ஆபீஸ்ரூமில் சொல்லி வெச்சிடறேன். நீங்க கரெக்டா வந்துடுங்க. (ஆபீஸ்ரூமில் - அப்படி யாரும் சொல்லலியே? நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க)



சரி விடுங்க. திட்டாமே இப்படியாவது மரியாதையா சொல்றாங்களேன்னு சொல்லாதீங்க. ஒரு இடத்தில் திட்டு கூட வாங்கியாச்சு.



" நாளை காலை பத்து மணிக்கு டாண்ணு(!!) வந்திடுங்க. அப்ளிகேஷன் பாரம் தர்றேன். கொண்டு போய், பூர்த்தி செய்து ரெண்டு நாட்களுக்குள் தந்துடுங்க" என்று சொன்னவரை நம்பி போனால், 'வெள்ளை பேப்பர் கொண்டு வந்தீங்களா? அதில் ஊர், பேர் எல்லாம் எழுதிக் கொடுங்க' என்றார். 'பேப்பர் கொண்டு வரலீங்க. பாரம் தர்றேன்னு சொன்னீங்களே' என்றால், நான் என்ன 'ஸ்டேஷனரி கடையா நடத்தறேன். போற வர்றவங்களுக்கெல்லாம் பேப்பர் கொடுக்க. பத்து நிமிடத்தில் கொண்டு வந்து தந்தா தாங்க. இல்லேன்னா ஒண்ணும் சொல்ல முடியாது'.



இதுவே நானாக இருந்தால், அங்கு நடந்ததே வேறாக இருந்திருக்கும். (யாருப்பா அது, 'வவாச கைப்புள்ள மாதிரியா'ன்னு கேக்கறது?!!). அங்கிருந்தது தங்க்ஸ் ஆகையால், ஒரு கடைக்கு போய், பேப்பர் வாங்கி, எல்லாவற்றையும் எழுதி போய் கொடுத்துவிட்டு வந்தார்.



இப்போதைக்கு இது போதும். தொடர்ந்து அடுத்த பகுதியில்...



2 comments:

Sathish February 27, 2012 at 4:55 AM  

சார், ரொம்ப interesting post. Admission தலைவலி ஒரு புறமிருக்க, இடம் கிடைத்து விட்டால் மூன்றே நாளில் rs 35000 fees கட்ட வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. இவ்வளவு பதறாமல் கம்மியான fees உடன் easy admission கிடைக்க கூடிய பள்ளிகளும் இருக்கின்றன. அனால் அந்த மாதிரி பள்ளிகளில் "Quality of Education" compromise செய்ய வேண்டியிருக்கும் என்ற Mindset இன்றைய பெற்றோர்களிடம் உண்டு.

Anonymous,  March 24, 2012 at 5:51 PM  

so, finally endha school, epdi thaan saethu irukeenga? I am soooo glad that you have decided to go back to India for good. Not many people are going back....continue ur school posts & give us more info on that ! will be helpful to lots of parents like me, who are planning to go back & search for school admissions...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP