Monday, March 29, 2010

FeTNA-2010 விழா மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன...


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தொடர்பான செய்திகளுக்கு FeTNA-2010 லேபிளுக்கு சென்று பார்க்கலாம். மேலும் விவரங்கள் http://www.fetna.org/ தளத்தில் கிடைக்கும்.

*****


சுமார் 3000 தமிழர்கள் கூடும் இவ்விழாவில் 'விழா மலர்' ஒன்று வெளியிடப்படும். அம்மலரில் பிரசுரிக்க படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

படைப்புகளுக்கான விதிமுறைகளாக விழாக்குழுவினர் தெரிவிப்பது என்னவெனில் :


*** கதை, கவிதை மற்றும் கட்டுரைப் படைப்புகள் தமிழில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படைப்புகள் தகுதி அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

*** சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் ஒரு குறுந்தலைப்பும், பொருளடக்கம் பற்றிய சிறு விவரிப்பும் கொண்டிருக்கவேண்டும்.

*** 500 வார்த்தைகளுக்கும் குறைவான, முழுப்பக்கப் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

*** இவ்வாண்டுத் தமிழ் விழாவின் மையக்கருத்தைப் (செந்தமிழால் சேர்ந்திணைவோம் - செயல்பட்டே இனம் காப்போம்) பிரதிபலிக்கும் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

*** படைப்புகள் பொருள் பொதிந்தவையாகவும், கருத்தூட்டமும் கல்வித்தரமும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும்.

*** முன்னால் பிரசுரிக்கப்படாத, தனித்தன்மை வாய்ந்த, அசலான படைப்புகளை ஊக்குவிக்கிறோம். பிறர் படைப்புகளின் பிரயோகம் ஊக்குவிக்கப்படாது. அப்படி அவற்றை மேற்கோள் காட்டும்போது தயவுசெய்து மூலப்படைப்பையும் அதன் ஆசிரியரையும் குறிப்பிடவேண்டும்.

*** படைப்புகள் கண்டிப்பாக எவ்விதத்திலும் தவறான கருத்துக்களையோ, அவமதிப்பையோ, அல்லது அநாகரிகத்தையோ பிரதிபலிக்கக்கூடாது.

*** அனைத்துப் படைப்புகளும் மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு MS Word (.doc) அல்லது PDF வடிவில் அனுப்பப்படவேண்டும். தேவையான புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் அனைத்தும் .JPG வடிவில் இருக்கவேண்டும்.

*** அனைத்துப் படைப்புகளும் ஏப்ரல் 30, 2010 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எமக்கு வந்து சேர வேண்டும்.

*** கெடு முடிந்தபின்னர் அனுப்பப்படும் படைப்புகள் பிரசுரிக்கப்படா.

*** எந்தப் படைப்பும் பிரசுரிப்புக்கேற்ப எங்களால் மாற்றியமைக்கப்படலாம்.

*** வந்து சேரும் நுழைவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளே விழா மலரில் பிரசுரிக்கப்படும்.

*** படைப்புகள் குறித்த ஆசிரியர் குழுவின் முடிவுகளே இறுதியானவை.

*** இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படும் படைப்புகளிலிருந்து சிறந்த ஆறு தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு விழாவில் கலந்துகொள்ளும் தமிழறிஞர் கையால் பரிசுகள் (ஒரு முதல் பரிசு, இரு இரண்டாம் பரிசுகள், மூன்று மூன்றாம் பரிசுகள்) விழாவின் இறுதி நாளன்று வழங்கப்படும்.

*** இந்த அறிவிப்புக் குறித்த கேள்விகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

*****

சென்ற ஆண்டுகளின் விழா மலர்களுக்கு இங்கே சுட்டவும்.

*****

6 comments:

நசரேயன் March 30, 2010 at 10:31 AM  

உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்

sriram March 30, 2010 at 11:28 AM  

அன்பின் மணி,
H1B / Greencard / Consulting companies practices / Job market in US (consulting) இவை பற்றி கேள்வி பதில்கள் இருந்தால் உபயோகமாக இருக்குமா? இருக்குமென்றால்- கேள்விகள் தந்தால் இயன்ற வரை பதில்கள் தர தயாராக இருக்கிறேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram March 30, 2010 at 11:29 AM  

மன்னிக்கனும் சின்னப் பையன் Fetna என்று சொன்னதும் - பழமை பேசியின் ஞாபகம் தான் வந்தது, மணி என்று விளித்துவிட்டேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown March 31, 2010 at 4:37 PM  

அன்பு சத்யா,

உங்கள் பணி பேரவை மாநாட்டிற்கு மிகவும் தேவை. பாராட்டுக்கள்.

அன்புடன்
முத்துவேல் செல்லையா

பழமைபேசி March 31, 2010 at 4:51 PM  

//riram said...
மன்னிக்கனும் சின்னப் பையன் Fetna என்று சொன்னதும் - பழமை பேசியின் ஞாபகம் தான் வந்தது, மணி என்று விளித்துவிட்டேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

March 30, 2010 11:29 AM//

அஃகஃகா!

நணபா, நன்றி!!

ஊர்கூடித்தானே தேர் இழுக்கணும்... ஆகையால, இந்த ஆண்டு சத்யா அண்ணன் பட்டையக் கிளப்பிக் கொண்டு இருக்காரு....

நீங்களே ஒரு கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்...நன்றி!

Unknown April 3, 2010 at 7:32 AM  

வாழ்த்துக்கள்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் உணர்வு மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP