Wednesday, March 26, 2008

அம்புலிமாமாவில் ஒரு புதிய பகுதி - கிசுகிசு

தினமலர், குமுதம் ஆகியவற்றில் வருவதுபோல் அம்புலிமாமாவிலும் ஒரு 'கிசுகிசு' பகுதி துவக்கினால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை. இனி கிசுகிசு.


'பூனை' போன்ற விழிகளையுடைய நடிகையும், 'நாய்'வால் போன்று நிமிர்த்தமுடியாத படத்தைக் கொடுத்த நடிகரும் சேர்ந்து ஒரு 'சொத்து' வாங்கினர். சென்ற வாரம் அவர்கள் பிரிந்தபோது, அந்த 'சொத்தை' பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்தனர். அதில் சமரசம் காண முடியாமல் சண்டை வரவே, பஞ்சாயத்து செய்ய 'குரங்கின்' மற்றொரு பெயரைக் கொண்ட இயக்குனரிடம் சென்றனர்.

அந்த இயக்குனரும் பஞ்சாயத்து செய்வது போல் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அந்த சொத்தை ஆக்ரமித்துக் கொண்டு விட்டார். அந்த சொத்து வெள்ளைக்கணக்கில் வராததால், நடிகையும், நடிகரும் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.


0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP