Tuesday, March 4, 2008

தங்கமணியின் எசப்பாட்டு !!!




நல்லா பாடறவங்களைப் பாத்தா, எல்லோருக்கும் பொறாமைதான். எப்படியாவது குண்டக்க மண்டக்க பேசி பாடற மூடை கெடுத்துடுவாங்க. இப்படித்தான், நான் எப்போ பாட (!!) வாயெ தொறந்தாலும், தங்கமணி 'தகதக' மணியாயிடுவாங்க... (அட.. கொதிச்சி எழுந்துடுவாங்கன்னு சொன்னேன்).

உதாரணத்துக்கு, சில பாடல்களைப் பாருங்க. பாடல்களின் கீழேயே தங்க்ஸின் முத்தான கமெண்ட்கள் / எசப்பாட்டுகள் உள்ளன.

நான்: சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை...
தங்க்ஸ்: பக்கத்து வீட்டிலிருந்து தினமும் கிடைக்கும் பூசை...

நான்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
தங்க்ஸ்: ஏன், உங்க பொண்ணே இருக்காளே, சொந்த அம்மாவையே - மாமான்றா, மாமின்றா (Momma / Mommy) ...

நான்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...
தங்க்ஸ்: நீங்க மனசிலே அசிங்க அசிங்கமாத்தான் நினைப்பீங்க... அதையெல்லாம் என் வாயால நான் பேச முடியாது.

நான்: நேற்று இல்லாத மாற்றம் என்னது...
தங்க்ஸ்: நேத்து நீங்க குளிக்கல... கப்பு தூக்கல்... இன்னிக்கு குளிச்சிட்டீங்க... கப்பு கம்மி.. அவ்ளோதான் மாற்றம்.

நான்: பழம் நீயப்பா.. ஞானப்பழம் நீயப்பா...
தங்க்ஸ்: கண்ணாடி முன் நின்று பாடப்பா... இது ஒண்ணுதான் சரியா பாடறீங்க..

இப்படியே எடக்கு மடக்கா பேசிக்கிட்டிருந்தா, யாருக்குத்தான் கோபம் வராது? எனக்கும் வந்தது..
உடனே போயிட்டு வந்து - தண்ணி குடிச்சிட்டு - குப்புற படுத்து தூங்கிட்டேன்.
ம். வேறே என்ன பண்றது?...

4 comments:

Unknown March 7, 2008 at 6:19 PM  

ஹைய்யோ! ஹைய்யோ! ஒரே தமாசுதான் போங்க.... :)

cheena (சீனா) March 14, 2008 at 8:31 PM  

ரங்கமணிக்கு ஏத்த தங்கமணி

மங்களூர் சிவா March 15, 2008 at 4:11 PM  

//
இப்படியே எடக்கு மடக்கா பேசிக்கிட்டிருந்தா, யாருக்குத்தான் கோபம் வராது? எனக்கும் வந்தது..
உடனே போயிட்டு வந்து - தண்ணி குடிச்சிட்டு - குப்புற படுத்து தூங்கிட்டேன்.
ம். வேறே என்ன பண்றது?...
//

:-))))))))))))))))

பாச மலர் / Paasa Malar March 16, 2008 at 9:10 AM  

சூப்பர் கலக்கல்..உங்க அரை பக்க கதைகளும்தான்..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP