Wednesday, March 5, 2008

இரண்டாயிரம் பின்னூட்டங்கள்!!! அரைபக்க கதை

முன்னுரை:

இது ஒரு கற்பனை கதைதான். என் சொந்த கதை அல்ல. இந்த கதை துளசி மேடமுக்கும், cheena (சீனா) சாருக்கும் சமர்ப்பணம். ஒரு இளம் வலைப்பதிவருக்கு 2000 பின்னூட்டங்கள் எப்படி கிடைக்குது - அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று பார்ப்போம். இனி கதைக்கு போவோமா...

கதை:

காலை 7 மணி:
பதிவு போட்டு 3 நாளாச்சு... இன்னிக்கு ஏதாவது போட்டாகணும்... ஒரு கதையோ அல்லது கவிதையோ போட்டா நல்லாயிருக்கும். யோசிப்போம்.

காலை 10 மணி:
தமிழ்மணத்தை பார்ப்போம்.. அடடா.. நிறைய பேர் பதிவுகளைப் போடறாங்களே?.. நமக்கு மட்டும் ஒண்ணும் தோணவே மாட்டேங்குதே?...

மதியம் 1 மணி:
யாரு திட்டினாலும் பரவாயில்லை - இந்த கவிதையைப் போடுவோம்.

தலைப்பு: சாப்பாடு இறங்கலே!!!

பசிக்கும்போது நீ அருமையான வார்த்தைகளை பேசினே -
அதனாலே எனக்கு வயிறு ரொம்பி சாப்பாடு இறங்கலே!!!

பசிக்காதபோது நீ அசிங்கமான வார்த்தைகளை பேசினே -
அதனாலே எனக்கு மனசு வெம்பி சாப்பாடு இறங்கலே!!!

மாலை 4 மணி:
பின்னூட்டப் பெட்டியைப் பார்ப்போம்.. வழக்கம் போல ஒரு பின்னூட்டமும் வரலை...

இரவு 7 மணி:
இன்னும் ஒரு பின்னூட்டமும் இல்லை.

இரவு 10 மணி:
சரி சீக்கிரம் தூங்கப் போவோம். நாளைக்கு காலையில் 2000 பின்னூட்டங்கள் வந்திருக்கும். அவற்றை பப்ளிஷ் செய்யணும்.

கதை அவ்வளவுதான்.

பின்னுரை:
நாயகன் என்ன நினைக்கிறார்னா - கதை/கவிதை நன்றாக இருக்கும் பட்சத்தில் - துளசி மேடமும், cheena (சீனா) சாரும் பதிவரை ஊக்கப்படுத்தி ஒரு பின்னூட்டம் போடுவாங்க. அவங்களோட ஒவ்வொரு பின்னூட்டமும் 1000 பின்னூட்டங்களுக்கு சமம் - ஆக மொத்தம் 2000 பின்னூட்டங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறார்.

என்ன, அவர் நினைப்பது சரிதானே?

16 comments:

பிரேம்ஜி March 5, 2008 at 4:45 PM  

புதியவனான எனக்கு அவர்கள் இருவரின் பின்னூட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சி,நம்பிக்கையை அளித்தன. ஏதோ என் வலைப்பூவுக்கு வர்ற ஒன்னு ரெண்டு பேர் துளசி மேடம், சீனா சார் பின்னூட்டங்கள பார்த்திட்டு என்ன ஏதுன்னு என் பதிவை படிக்கிறாங்க .இல்லன்னா நானெல்லாம் ஈ ஓட்டவேண்டியது தான்.அவங்க வந்து பின்னூட்டம் போடலைன்னா இப்பவும் பல சமயம் ஈ ஓட்ட வேண்டியதா இருக்கு. சின்ன பையன்!அவங்கள வெச்சி காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலையே?
:-))

பிரேம்ஜி March 5, 2008 at 4:48 PM  

//
நாயகன் என்ன நினைக்கிறார்னா - கதை/கவிதை நன்றாக இருக்கும் பட்சத்தில் - துளசி மேடமும், cheena (சீனா) சாரும் பதிவரை ஊக்கப்படுத்தி ஒரு பின்னூட்டம் போடுவாங்க. அவங்களோட ஒவ்வொரு பின்னூட்டமும் 1000 பின்னூட்டங்களுக்கு சமம் - ஆக மொத்தம் 2000 பின்னூட்டங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறார்.

என்ன, அவர் நினைப்பது சரிதானே?//

சொல்ல மறந்துட்டேன். கதை நாயகன் நினைப்பது சரிதான்.

சிறில் அலெக்ஸ் March 5, 2008 at 5:06 PM  

கதைய இப்படி முடிச்சிருக்கலாம்..

அவன் நினைத்தது போலவே அடுத்தநாள் துளசியும், சீனாவும் பின்னூட்டமிட்டிருந்தனர்.

காமெடிக்கு ஒரு அலவே இல்லாமப் போகுதுப்பா
:)

சின்னப் பையன் March 5, 2008 at 5:59 PM  

பிரேம்ஜி: வாங்க வாங்க... பாத்தீங்களா.. உண்மையைத்தாங்க சொல்லியிருக்கேன்... நிச்சயமா காமடி/கீமடி எதுவுமே இல்லை...

சிறில் அலெக்ஸ்: ஆமாங்க... அவர் ரொம்ப நம்பிக்கையோடதான் தூங்கவே போறார். ஹலோ, இதிலே காமெடி எதுவுமே இல்லைங்க....:-)

TBCD March 5, 2008 at 6:44 PM  

பின்னுட்டம் என்பது ஒரு போதை
அதற்கு காத்திருப்பவர் எல்லாம் பேதை

தீராது எப்பவும் நம்ம கையிருப்பு
தனக்குத் தானே திட்டம் தானே சிறப்பு :P

(சம்சாரம் என்பது வீணை என்ற பாடல் மெட்டில் பாடினால் சிறப்பு)

ஆரம்ப காலக் கட்டத்திலாகட்டும், இன்று வரை ஆகட்டும், பின்னுட்டங்கள் வருவது பதிவின் பொருளடக்கத்தினாலே என்பது தான் என் புரிதல்.

துளசி கோபால் March 5, 2008 at 7:21 PM  

அடப்பாவி..........:-)))))

தமிழ் எழுதறவங்களை 'ஊக்கு விக்க'ப்போடும் பின்னூட்டங்களோட சக்தி யை இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீங்கதானே?

எப்படியோ பதிவு எழுதவும் ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கோம் நானும் சீனாவும் என்பதே இப்போதைய மகிழ்ச்சி.

இதுலே ஏதும் உ.கு. இல்லை:-))))

நல்லா இருங்கப்பா......நல்லா இருங்க.

சின்னப் பையன் March 5, 2008 at 7:36 PM  

tbcd:
ரொம்ப நல்லாயிருக்கு பாட்டு...:-)

சரியா சொன்னீங்க... இது வெறும் கற்பனை கதைதாங்க... இன்னொரு :-)

துளசி மேடம்:
வாங்க... இந்த கதை நாயகன் மட்டுமல்ல, மேலெ இன்னொருத்தரும் அதையே சொன்னதை பாத்தீங்கதானே...:-)
நன்றி...

இம்சை March 5, 2008 at 8:31 PM  

எனக்கு இதுவரைக்கும் எல்லா பதிவுக்கும் 1000 பின்னூட்டம் மட்டும் தான் வந்துருக்கு.... அப்படியே துளசி டீச்சரையும் நம்ம பதிவு பக்கம் அனுப்பி வைங்க...நானும் இனிமே 2000 பின்னூட்டம் வாங்கரேன்.

இம்சை March 5, 2008 at 8:34 PM  

TBCD said...
ஆரம்ப காலக் கட்டத்திலாகட்டும், இன்று வரை ஆகட்டும், பின்னுட்டங்கள் வருவது பதிவின் பொருளடக்கத்தினாலே என்பது தான் என் புரிதல்.


அண்ணே குசும்பனை எதுக்கு கிண்டல் செய்யறிங்க

பினாத்தல் சுரேஷ் March 5, 2008 at 9:20 PM  

நல்லா இருங்க! (இதுக்கு எத்தனை கவுண்ட்?)

சின்னப் பையன் March 5, 2008 at 9:27 PM  

இம்சை:
வாங்க.. வாங்க... ஹாஹா... நான் அனுப்பி வைக்கணும்னே இல்லீங்க... அவங்க இங்கேயும் இருப்பாங்க...அங்கேயும் இருப்பாங்க... எங்கேயும் இருப்பாங்க....:-)

பினாத்தல் சுரேஷ்:
வருகைக்கு நன்றி... உங்க கவுண்ட்:
1000, 10000, ... , மாமா பிஸ்கோத்து...:-)

அரை பிளேடு March 11, 2008 at 6:13 PM  

இப்பின்னூட்டம் கோடி பெறும். :)

கருப்பன் (A) Sundar March 12, 2008 at 5:48 AM  

//
இப்பின்னூட்டம் கோடி பெறும். :)
//
சரியா சொன்ன தலீவா...!

cheena (சீனா) March 14, 2008 at 8:14 PM  

ஹேய் - என்ன வைச்சு காமெடி கீமெடி பண்ணலேயே - நான் பின்னூட்டமிடுவதில் அதிக விருப்பமுள்ளவன். அவ்வளவு தான். முடிந்த வரை அனைத்துப் பதிவுகளிலும் பின்னூட்டமிடுபவன். ஊக்கு விப்பவன். வாங்குவது யாரெனத் தெரிய வில்லை. ம்ம்ம்ம்ம்

ஒரு தடவை சொன்னா 1000 தடவை சொன்ன மாதிரியா..பலே பலே - கதா நாயகனே - வாழ்க - வளர்க - தொடர்க - வாழ்த்துகள்

சின்னப் பையன் March 15, 2008 at 6:20 AM  

வருகைக்கு நன்றி அரை பிளேடு மற்றும் கருப்பன்...

cheena (சீனா) ->
ஐயா... என்ன இப்படி சொல்லிட்டீக.. இது நிஜம்தான்னு இங்கனயே ஒருத்தரு சொல்லியிருக்காரு பாத்தீகளா? நீங்க வித்ததை நான் வாங்கிட்டேன்னு நினைக்கிறேன்... நன்றி... :-)

மங்களூர் சிவா March 15, 2008 at 4:09 PM  

அடேங்கப்பா இதோட சேத்து
16000

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP