Monday, June 15, 2009

காலங்கார்த்தாலே எவ்ளோ டென்சன்?

காலங்கார்த்தாலே எழுந்து தயாராகி, போக்குவரத்தில் மாட்டி, அலுவலகத்திற்கு போய் அன்றைய வேலையை துவக்குறது எவ்ளோ கஷ்டம்னு வேலைக்குப் போற எல்லோருக்கும் தெரியும்.

இந்த அரைபக்கக் கதையிலேயும் ஒருத்தரு அலுவலகத்திற்கு போறாரு. என்ன பண்றாரு, எப்படி போறாருன்னு பாப்போம்.

சும்மா ஒரு ஜாலிக்காக - இங்கே அவரு பேசறத மட்டும் பாப்போம். மத்தவங்க பேசறதெல்லாம் உங்க கற்பனைக்கே.

*****

கார்த்தாலே சீக்கிரமா எழுப்பச் சொன்னேனே... ஏன் எழுப்பலே...

@#$@

ஏம்மா, சரியா 9 மணிக்கு ஆபீஸ்லே இருக்கணும்னு சொன்னேனே... என்னோட சாக்ஸ் எங்கே போச்சு??

@#$

இவ பால் குடிக்கலேன்னா பரவாயில்லே. முதல்லே ப்ரெட்டை கொடு. சாப்பிடட்டும்.

#$$$

வழியில் ஆயிரத்தெட்டு சிக்னல் வேறே. நான் வர்றேன்னு அவனுக்கு எப்படி தெரியுமோ? சரியா ரெட் போட்டுடுவான்.

@#%%

மீட்டிங்லே 5 நிமிஷம் லேட்டாச்சுன்னா, பிடிச்சு குதறிடுவாங்க. சாப்பாடு கட்ட லேட்டாச்சுன்னா விட்டுடு. நான் வெளியிலேயே சாப்பிட்டுக்கறேன்.

#%%@

இன்னிக்கு கார்த்தாலே சீட்டை விட்டு அங்கே இங்கே நகர முடியாது. அதனால் பக்கத்து பாங்க்லே இந்த செக்கை போட்டுடு.

@#%@

சொல்லிட்டே இருக்கேன்ல. நடுவிலே வெளியே வரமுடியாதுன்னு. மழை வந்தா என்ன, குடை பிடிச்சிண்டு போய் இவளை ஸ்கூல்லேந்து கூட்டிட்டு வா. முடியாதுன்னா இவ இன்னிக்கு ஸ்கூலுக்கு போகவே வேணாம்.

@#%@

நடுநடுலே ஃபோன் பண்ணி தொந்தரவு பண்ணாதே. மீட்டிங்லே பிஸியா இருப்பேன்.

(அலுவலகம் போகும் வழியில்)

சார்... முன்னாடி பாருங்க.. பச்சை போட்டு மூணு செகண்டாயிடுச்சு. வண்டிய எடுங்க... பப்பரப்பான்னு வேடிக்கை பாத்துட்டு நிக்கறீங்களே...

@#$

ஏண்டா டேய். சொல்லிட்டு வந்துட்டியா வீட்லே?

(அலுவலகத்தில் - மணி 9.05)

அடேங்கப்பா.. காலையிலே வீட்லேந்து ஒருவழியா கிளம்பி ஆபீஸ் வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. இதுலே அஞ்சு நிமிஷம் லேட்டு வேறே. மக்கள்லாம் என்னை ஆளைக் காணோம்னு தேடறதுக்குள்ளே, வேலையை ஆரம்பிச்சிடுவோம்.

www.thamizmanam.com

*****

Read more...

Sunday, June 14, 2009

அடுத்த 32 கேள்விகள் என்னவாக இருக்கும்?

சமீப காலமாக, இணையத்தில் தொடர் விளையாட்டாக உலவிக் கொண்டிருப்பது - 32 கேள்வி பதில்கள்.


அந்த கேள்விகளை தயாரிச்சவரு அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு யோசித்திருப்பார்னு நினைச்சிப் பார்த்தபோது, என் உடல் பயங்கரமாக சிலிர்த்தது. அப்புறம் பாத்தா, அது வேறே ஒண்ணுமில்லே - வீட்டு ஜன்னலிலிருந்து சாரல் அடிச்சிண்டிருந்தது. உடனே எல்லாத்தையும் மூடிட்டு, என் சொந்தக்கண் மற்றும் அறிவுக்கண்ணை மட்டும் திறந்து வெச்சிண்டு - கணிணியைப் பார்த்தேன்.


நம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள மிகவும் முக்கியமான கேள்விகள் அந்த 32ல் பல இருந்தன. நம் நண்பர்கள் பலர் படு சீரியஸாக அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லியிருப்பதால், நான் அந்த கேள்விகளை அடையாளம் காட்டப்போவதில்லை. ஆனா, அதே மாதிரி கேள்விகள் பலவற்றை அதன் தயாரிப்பாளர் விட்டுட்டார்னு மட்டும் புரிஞ்சுது. அதனால், நானும் - மல்லாக்க, பக்கவாட்டில், தலைகுப்புற - எப்படியெல்லாமோ படுத்து யோசிச்சி, அடுத்த 32 கேள்விகளை தயார் செய்யலாம்னு பாத்தேன். ஆனால் எவ்வளவு யோசித்தாலும் எனக்கு தோணினது வெறும் பத்து மட்டுமே.


இவற்றையும் யாராவது தொடராக எண்ணிக்கொண்டு பதிலளிக்க ஆரம்பித்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

சரி.. கேள்விகளுக்குப் போகலாமா?

*****

உங்க மூக்கு உங்களுக்கு பிடிக்குமா?

உங்க பக்கத்துலே யாரு இருக்கறதுக்காக வருத்தப்படறீங்க?

கண்ணாடி முன்னாடி நின்னு உங்க பற்களை எண்ணியிருக்கீங்களா? எவ்வளவு தேறுது?

(திருமணமான ஆண்களுக்கு மட்டும்) நீங்க கடைசியா சிரித்தது எப்போது?

சுடுதண்ணீரில் குளிக்க விருப்பமா அல்லது ஜில் தண்ணீரிலா?

படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் - ஒவ்வொரு படிகளாக போவீர்களா அல்லது இரண்டிரண்டு படிகளாக தாண்டிப் போவீர்களா?

இட்லிக்கு எதை தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கும்? (தரையை / சுவற்றை தொட்டுக் கொள்வேன் என்று அறுக்க வேண்டாம்!!).

மோதிரம் போட்டுப்பீங்களா? எந்த விரலில் போட்டுப்பீங்க?

உங்க தலையில் வகிடு எந்தப்பக்கம் எடுப்பீங்க? இடது, வலது அல்லது நடு?

எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?

*****

Read more...

Tuesday, June 9, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 06/09/09

பின்தொடர்பவர்கள்

ரெண்டு நாளைக்கு முன்னாடி 90ஆ இருந்த பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை, திடீர்னு சரசரன்னு ஏறி இன்னிக்கு 102க்கு வந்துடுச்சு. நாம வழக்கமா போடற மொக்கையத்தானே போடறோம். அப்படியிருந்தும் எப்படி இப்படின்னு ராத்திரியெல்லாம் ஒரே சந்தேகம்.

எது எப்படியோ இருந்துட்டு போகட்டும், வந்தவங்களுக்கு நன்றி சொல்லலாம்னு முடிவு செய்து... பின்தொடரும் முதல் நண்பரிலிருந்து 102வது நண்பர் வரை அனைவருக்கும் - நன்றி நன்றி நன்றி. (மூணு தடவைதான் சொல்லியிருக்கேன். எல்லாரும் பி(ரி)ச்சி எடுத்துக்குங்கப்பா!).


*****

அலுவலகம்

ஒரு பாழடைஞ்ச கட்டிடத்தில் ஒரு ஓரத்தில் சும்மா(!!) உக்காந்திருந்தவனை, இன்னொரு பிஸியான கட்டிடத்துக்கு மாத்தினதோடில்லாமே, போற வர்றவங்க எல்லாரும் பாக்கறா மாதிரி நட்ட நடுவில் உக்கார வெச்சி, வேலையும் பாக்கச் சொன்னா எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு ஒரு பதினைஞ்சு நாளுக்கு முன்னால்தான் எனக்கு தெரிஞ்சுது. யாராச்சும் சொன்னாங்களான்னு கேக்காதீங்க. அப்படி உக்காந்தவன் நாந்தான்.


பள்ளியில் படிக்கும்போது பாடப்புத்தகத்தில் குமுதத்தை மறைச்சி வெச்சி படிச்சா மாதிரி, இப்போ அவுட்லுக்குக்கு பின்னாடி, தமிழ்மணத்தை திறந்து வெச்சி படிக்கவும், பூச்சாண்டி/ ப்ளாக்கரை திறந்து வெச்சி தட்டச்சவும் வேண்டியிருக்கு.


எதையாவது கிறுக்கணும்ற இந்த ஆர்வம் எப்போ குறையும்னு சொல்ல முடியாது. அப்படி குறையற வரைக்கும் கிறுக்கித்தான் பாப்போமேன்னு நானும் விசைப்பலகையை தட்டிக்கிட்டிருக்கேன். பாப்போம் எவ்ளோ தூரம் போகுதுன்னு.


*****

மென்பொருள் நிறுவனங்களில் மந்த நிலை எப்போ தீரும்னு தெரியல. போன மாசம் எங்க நிறுவனத்தில் (உலகம் முழுவதும்) 5% ஊதிய குறைப்பு செய்தவங்க, இந்த மாசம் முதல் (இந்தியாவில்) ஊழியர்களுக்கு அலுவலக வளாகத்தில் வண்டியை நிறுத்த கட்டணம் (பார்க்கிங் சார்ஜ்) வசூலிக்கிறார்களாம்.

இன்னும் கணிணியில் உட்கார்ந்து வலைமேய்வதற்கு, ப்ரௌசிங் செண்டர் போல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் கேக்காமே இருந்தா சரின்னு பேசிக்கிட்டிருந்தபோது - இன்னிக்கு டி.சி.எஸ் (TCS) உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ஊதிய உயர்வு பற்றிய செய்தியை பார்த்தோம். என்னத்த சொல்ல?

இதுக்குத்தான் நான் அப்பவே நேரடியா ‘டைரக்டர்' (சினிமா டைரக்டர் இல்லே!!) ஆயிடறேன்னு சொன்னேன். வீட்லே கேக்க மாட்டேன்றாங்க.

*****

அந்த மூணு வார்த்தைகள் - ஒரு சிறிய கதை

என் மனதை கவர்ந்த அவகிட்டே கொடுப்பதற்காக ஒரு கடிதத்தை எழுதி வெச்சிக்கிட்டு, ஒரு வாரமா முயற்சி பண்றேன். எப்பவும் வீட்லே யாராவது ஒருத்தர் அவகூடவே இருக்கறதால், அவளை தனியா சந்திக்கவே முடியல. அதிசயமா ஒரு தடவை அப்படி அவ தனியா வந்தப்போ, இந்த கடிதத்தைக் கொடுக்க எனக்கு தைரியம் வரலை.

மனசுலே இருக்கறதை அப்படியே பக்கம்பக்கமா கொட்டிடலாம்னுதான் முதல்லே நினைச்சேன். ஆனா, எல்லோரும் சொல்லும் அந்த மூணு வார்த்தைகளை மட்டும் சொன்னால் போதும் - அதுவே 'நச்'சுன்னு இருக்கும்னு முடிவு பண்ணி - கூடுதல் எஃபெக்டுக்காக மேலும் ஒரு வார்த்தையைக் கூட்டி கடிதத்தை எழுதி முடிச்சிட்டேன்.

கடிதத்தை பார்த்தபிறகு அவ என்ன சொல்வாளோன்னு பயமா இருந்தாலும், அதை கொடுக்காமே இருந்தா என் நிம்மதி போயிடும்ற நிலை வந்ததால் இன்னிக்கு எப்படியாவது கொடுத்திடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

அதோ அங்கே அவ தனியா வர்றா. இதைவிட்டா நல்லா சான்ஸ் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. சுத்திமுத்தி யாராவது இருக்காங்களான்னு ஒரு தடவை பாக்குறேன். நல்லவேளை யாருமில்லை.

எதுக்கும் ஒரு தடவை என் கடிதத்தை எடுத்து ஏதாவது எழுத்துப்பிழை இருக்கான்னு பாக்கறேன். கடித மேட்டரை ஒரு தடவை சொல்லி பாத்துக்கறேன்.

"ங்கொய்யாலே. வரவர சாப்பாடே சரியில்லே".


*****

Read more...

Monday, June 8, 2009

கணவனிடம் மனைவி அன்பா பேசினா????

மனைவி: என்னங்க, எப்ப பாத்தாலும் ஆபீஸ் வேலையாவே இருக்கீங்க. இன்னிக்கு ஒரு நாள், கொஞ்ச நேரம் என்கிட்டே பேசுங்களேன். நாம ரெண்டு பேரும் உக்காந்து பேசியே எவ்வளவு நாளாயிடுச்சு?

கணவன்: பேசறதுக்கு விஷயம் ஒண்ணுமேயில்லையே. நான் கொஞ்சம் வேலையா இருக்கேம்மா.

மனைவி: எப்ப கேட்டாலும் இப்படியே சொல்லுங்க. கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் ஃபோன் பண்ணி என்கிட்டே பேசிக்கிட்டேயிருப்பீங்க. இப்ப அந்த மாதிரியெல்லாம் இல்லே. ஒரு தடவை நான் ஆபீஸுக்கு ஃபோன் போட்டபோது - ராங் நம்பர்னு சொல்லி வெச்சிட்டீங்க.

கணவன்: அது ஆபீஸ் டென்ஷன்லே சொன்னதும்மா. சரி சொல்லு. என்ன பேசணும் இப்போ.

மனைவி: நம்ம பக்கத்து வீட்டுலே அந்தம்மா என்ன பண்ணாங்கன்னு தெரியுமா... அது....

கணவன்: இரு இரு... எனக்கு இந்த பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு வம்பெல்லாம் வேணாம். வேற ஏதாவது பேசு.

மனைவி: சரி. புதுசா வந்திருக்கிற விஷால் படம் இணையத்துலே பாத்தேன். அதோட கதை என்னன்னா...

கணவன்: வெயிட். தமிழ் படத்துக் கதையெல்லாம் சொல்லி என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதே. அதெல்லாம் ஒரே டெம்ப்ளேட் கதைதான். வேறே ஏதாவது இருக்கா பேசறதுக்கு?

மனைவி: நாளைக்கு என்ன சமைக்கட்டும்? பிஸி பேளா பாத் பண்ணி ரொம்ப நாளாச்சே, அது பண்ணட்டுமா?

கணவன்: சமையலைப் பத்தி என்கிட்டே கேக்காதேன்னு எவ்ளோ தடவை சொல்லியிருக்கேன்? நெக்ஸ்ட்.. நெக்ஸ்ட்...

மனைவி: அடுத்த தடவை விஜயகாந்த் வந்தா, தமிழகத்துக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

கணவன்: அரசியல் பத்தி ஒண்ணுமே தெரியாத உன்கிட்டே நான் என்னத்த பேசறது? ஒரு நாள் உக்காந்து உனக்கு அரசியல் பாடம் எடுத்தாதான் சரியாயிருக்கும்.

மனைவி: சரி விடுங்க. உங்க ஆபீஸ்லே நடந்த ஏதாவது ஒரு தமாஷ் விஷயத்தைப் பத்தி சொல்லுங்களேன்.

கணவன்: என் ஆபீஸ் விஷயத்துலே தலையிடாதேன்னு சொன்னா கேக்கமாட்டியா? அதை விட்டுடு.

மனைவி: கோலங்கள் சீரியல்லே என்ன அநியாயம் பாத்தீங்களா? அவ...

கணவன்: அம்மா சாமி. ஆள விடு. சீரியல் கதை சொல்லி என்னை கொல்லாதே. சுவாரசியமா எதுவுமே பேசமாட்டியா?

மனைவி: சரி. நேத்து நான் தொலைபேசும்போது உங்கம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?

கணவன்: இதோ பாரு. யாரைப் பத்தி வேணா பேசு. எங்கம்மா பத்தி மட்டும் நீ பேச வேணாம். புரியுதா?

மனைவி: எதைப்பத்தியும் பேசாதே, பேசாதேன்னா நான் என்னதான் பேசறது? உங்க சொந்தக்காரங்க வந்தா மட்டும் அவங்க போடற மொக்கையெல்லாம் தாங்கிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே உக்காந்திருக்கீங்க. நான் பேசினா மட்டும் வந்துடுமே கோபம்...

கணவன்: @#%@%@

மனைவி: @$#@%%@###@@

Read more...

Sunday, June 7, 2009

நான் ரொம்ம்ம்ம்ப பிஸி!!!


முகு: இடுகையில் எங்கேயுமே முழுப்புள்ளியே கிடையாது. அதனால் நீங்களும் - மூச்சு விடாமே எஸ்.பி.பி பாட்டு பாடறா மாதிரி - முழு இடுகையையும் படிச்சிடுங்க.



*****



காலங்கார்த்தாலே எழுந்ததும்



என்னோட யாஹூவில்
மனைவியோட யாஹூவில்
எங்களோட ஹாட்மெயிலில்
மனைவிக்குத் தெரியாத என் ஜிமெயிலில்
எங்கள் நிறுவன மெயிலில்
வேலை பார்க்கும் க்ளையண்ட் மெயிலில்



இப்படி எல்லாத்துலேயும் ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பாத்துட்டு



செய்திகளுக்காக



தட்ஸ்தமிழ்
தினமலர்
தினமணி
யாஹூ தமிழ்
மைக்ரோசாஃப்ட் தமிழ்
சி என் என்



இங்கேயெல்லாம் ஒரு தடவை போய் பாத்துட்டு



அலுவலகம் வந்தபிறகு



இந்தியாவில் எங்கள் வீடு
மாமியார் வீடு
யாராவது நண்பர்கள் வீடு
ஏதாவது ஒரு ராங் நம்பர்



இப்படி எல்லோருக்கும் தொலைபேசி எல்லார் நலனையும் விசாரிச்சிட்டு



ரீடரில் இருக்கோ இல்லையோ ஒரு தடவை



இட்லிவடை
சாரு
ஜெயமோகன்
பாரா
எஸ்ரா
லக்கிலுக்



இங்கேயெல்லாம் ஒரு தடவை போய் தரிசனம் செய்துட்டு



நண்பர்களைத் தேடி

முதல் மாடி
ரெண்டாவது மாடி
மூணாவது மாடி
நாலாவது மாடி



ஆக மாடிமாடியா ஏறி இறங்கி மொக்கை போட்டுட்டு



இருக்கையில் வந்து உக்காந்தவுடன்,


கணிணியில்

சுடோகு
சதுரங்கம்
கோல்ஃப்
சாலிடைய்ர் (solitaire)
ஃப்ரீசெல் (freecell)
ப்ரிக் ப்ரேக் (brick break)



ஆகிய விளையாட்டுக்களை கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு



நடுநடுவே




தண்ணி
காபி
தண்ணி காபி
டீ



இதெல்லாம் குடிச்சிட்டு




சாயங்காலமா வீட்லே எல்லாரையும் கூட்டிட்டு



வால்மார்ட்
டார்கெட்
மால்
இந்திய மளிகைக் கடை



இப்படி எல்லா கடைகளுக்கும் போய் எதுவுமே வாங்காமே வெறும்னே பாத்துட்டு



வீட்டுக்கு வந்து சஹானாவுடன்



டோரா
பார்னி
எல்மோ
டாம் அண்ட் ஜெர்ரி
மேக்ஸ் அண்ட் ரூபி



ஆகிய எல்லாத்தையும் பாத்துட்டு




அக்கடான்னு படுத்தா போதும்னு இருக்கும்போது, புது இடுகைக்காக யோசிக்கறதுக்கு நேரம் எங்கே இருக்கு?



*****


Read more...

Wednesday, May 20, 2009

மாமனார் போட்ட மோதிரம்!!!

ச்சின்ன வயசிலேயிருந்தே நமக்கு இந்த விரலில் மோதிரம் அணிவது பிடிக்காது. கல்யாணத்துக்குப் பிறகு ஆண்களுக்கு எல்லாமே அவர்கள் விருப்பத்துக்கு எதிராகத்தான் நடக்கும் என்ற பொது விதிப்படி, எனக்கும் என் மாமனார் ஒரு மோதிரத்தைப் போட்டு விட்டார்.

"அட அதை எவன்பா கையிலே எல்லாம் போட்டுக்கிட்டு அசிங்கமா - உள்ளே வாங்கி வெளியே வித்துட வேண்டியதுதான்" - அப்படின்னு அண்ணன் கவுண்டமணி சொன்னதைப் போல் - அதை வெளியே விக்க முடியலேன்னாக்கூட கையில் மாட்டிக்கொண்டு அலைவது படு அவஸ்தையான விஷயம் எனக்கு.

பெரிய மனது பண்ணி தங்ஸ் என்னிக்காவது வற்புறுத்தி மோதிரத்தை போட்டுக்கச் சொன்னாலும், அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை - கை காட்டுங்க... கை காட்டுங்கன்னு சொல்லி - அந்த மோதிரம் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வார். அலுவலகத்தில் இருந்தால் தொலைபேசியில் ஸ்டேட்டஸ் அப்டேட் நடக்கும்.

அது ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா - அட கேக்கலேன்னாக்கூட நான் சொல்லித்தான் ஆகணும்.

வீட்டிலோ அலுவலகத்திலோ உக்காந்து நான் யோசிச்சிண்டிருந்தேன்னு வைங்க - சரி சரி அலுவலக விஷயமா நான் என்னிக்கு யோசிச்சிருக்கேன் - எல்லாம் நம்ம பதிவு விஷயமாத்தான் - அந்த மோதிரம் ஒரு வழியாயிட்டிருக்கும்.

ஒரு விரல்லேந்து இன்னொரு விரலுக்கு மாற்றுவது, ஒரே விரலில் அதை சுற்றிக்கொண்டிருப்பது - அப்படி இப்படின்னு அதை ஒரு இடத்துலே உக்கார விடாமே விளையாடிட்டிருப்பேன். கு கையிலே பூ அப்படின்னு ஒரு பழமொழி இந்நேரத்துக்கு உங்களுக்கு நினைவுக்கு வரலாம். தப்பில்லை.

ஒரு சமயத்தில் என்ன ஆச்சுன்னா, தங்க மோதிரத்தை தொலைச்சிடுவேன்னு சொல்லி, எனக்கு வெள்ளியில் ஒரு மோதிரத்தை போட்டிருந்தாங்க. ஒரு நாள் வீட்டு வாசலில் நின்று தங்ஸுடன் பேசிக்கொண்டிருந்தபோது, வழக்கம்போல் மோதிரத்தை நோண்டிக்கொண்டிருக்க, டக்கென்று என் கையிலிருந்து குதித்து - அந்த மோதிரம் பக்கத்திலிருந்த ஒரு சாக்கடையில் விழுந்து சடாரென்று மறைந்தது.

அன்றிலிருந்து எந்த வகையான மோதிரத்தையும் என் கண்களில் காட்டாமல் வைத்திருந்த தங்ஸிடம், போன வாரம் ஒரு சிறப்பு நாளில் கெஞ்சிக் கூத்தாடி அந்த தங்க மோதிரத்தை வாங்கி மாட்டிக்கொண்டேன். ஆனால், அப்படி மாட்டிக்கொண்ட ஒரு மணி நேரத்திலேயே - அந்த மோதிரம் கொடுத்த அசௌகரியத்தாலும், தங்ஸ் கொடுத்த (அன்புத்!!) தொல்லையாலும் - வீட்டிலேயே அதை கழட்டி உள்ளே வைத்தாயிற்று.

மோதிரத்தை கழட்டிய அந்த நிமிடம், சந்தோஷத்தில் நான் சிறகில்லாமலேயே வானத்தில் பறந்து கொண்டிருந்தேன். லிட்டில் (இன்னுமா?) சூப்பர் ஸ்டார், நம்ம சிம்பு மாதிரி - கோலப்பொடி இல்லாமலேயே காத்துலே கோலம் போட்டு காட்டினேன்.

அப்பாடா, இப்பத்தான் என் விரல்களுக்கு விடுதலை கிடைச்சா மாதிரி இருக்கு - இனிமே பாரு, என் கையிலேந்து இடுகையா கொட்டப் போகுது - பின்னூட்டமா பின்னப் போகுது - அப்படின்னு ஆனந்தப் பட்டேன். ஆனா வழக்கம்போல கணிணியில் உக்காந்து, விசைப்பலகையில் கை வச்சபிறகு, தட்டச்சுவதற்கு எதுவுமே தோன்றவில்லை. கொஞ்ச நேரம் அப்படியே
திரையை முறைத்துப் பார்த்தபிறகு, கணிணியை அணைத்துவிட்டு தூங்கப் போய்விட்டேன்.

சரி, அவ்வளவுதான். இடுகையின் கடைசி பத்திக்கு வந்தாச்சு.

போன வாரம் ஒரு சிறப்பு நிகழ்ச்சின்னு சொன்னேனே - அது மட்டும் என்னன்னு சொல்லிட்டு முடிச்சிக்கறேன். மே 14ம் தேதி நமக்கு (எங்களுக்கு) திருமண நாள். அவ்வளவுதான்.

*****

Read more...

Tuesday, May 19, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 05/19/2009

முதல் செய்தியாக - நாடாளுமன்றத்துக்குப் போகவிருக்கும் நம் தானைத்தலைவர், தங்கத்தின் தங்கம், அகிலாண்ட பிரமாண்ட நாயகன் அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாழ்த்துகளை சொல்லிக்கறேன்.

அவரு எம்.பி ஆனதைக் கேட்ட தமிழ்த் திரையுலகம் மட்டற்ற மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருக்குன்னு கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சியானது - இனிமே அவர் தமிழ்ப் படத்தில் நடிக்கமாட்டாருன்னு சொன்னதாலே வந்த மகிழ்ச்சின்னு கண்டுபிடிச்சபிறகு கோபம் கோபமா வருது.

பின்னே என்ன, அவர் இனிமே நடிக்க மாட்டாருன்னு சொன்னா, மக்கள்தானே சந்தோஷப்படணும்?

*****

ஒரு வேளை இலங்கை விடுதலை அடையும்போதே தமிழர்களுக்கு தனி நாடு பிரிக்கப்பட்டிருந்தால்...

தன் தாயைப் போல ராஜீவும் இந்த பிரச்சினையை ஒழுங்காகக் கையாண்டிருந்தால்...

சென்ற முறை ஐ. நா தலைவராக இந்தியர் சசி தரூர் தேர்வாகியிருந்தால்...

இந்தியாவின் பாதுகாப்பு தூதராக ஒரு தமிழர் இருந்திருந்தால்...

ஐ.நாவிலிருந்து இலங்கையில் பார்வையிடப் போயிருந்தவர் ஒரு தமிழராக இருந்திருந்தால்...

இதே மாதிரி ஏகப்பட்ட பதிலற்ற கேள்விகள் இருந்தாலும், ஏதாவது ஒன்றிற்காவது பாஸிட்டிவ் பதில் கிடைத்திருந்தால்.. நம் மக்கள் இப்படி உலக நாடுகள் அனைத்தும் கைவிடப்பட்ட அனாதைகளாய் அலைந்து அல்லல்பட்டு இறந்து போயிருக்க மாட்டார்கள்.

*****

கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே வேண்டுகிறேன்.

*****

சில நாட்களுக்கு முன் போட்டிருந்த முத்தையா இடுகையின் உரலை அந்த இடுகையின் நண்பர் சுரேஷுக்கு அனுப்பியிருந்தேன்.

தொலைபேசி, வீடு, நாடு, மின்னஞ்சல் என எல்லாவற்றையும் மாற்றிவிட்ட அந்த நண்பர் - நெடுநாள் கழித்து தன் பழைய மின்னஞ்சலைப் பார்க்க - அதில் என் மின்னஞ்சலைப் பார்க்க - கொசுவத்தி சுத்திக்கொண்டே - என்னைத் தொடர்பு கொண்டுவிட்டார்.

வாழ்க இணையம்!!! வளர்க முத்தையா தொடர்!!!

*****

புது டெம்ப்ளேட் எப்படியிருக்குன்னும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க மக்கள்ஸ்...

*****

தங்ஸ்: காங்கிரஸ்தான் இப்போ தனிப்பெரும்பான்மை அடைஞ்சிடுச்சே. அப்படியும் சோனியா ஏன் பிரதமராகாமே மன்மோகன் சிங்கை பிரதமராக்கியிருக்காங்க?

நான்: அவங்க கட்சியும் நம் வீட்டைப் போலதாம்மா. அதனால்தான்.

தங்ஸ்: புரியலியே.

நான்: நம்ம வீட்டு ரேஷன் கார்டுலே கு.த.ன்னு யார் பேர் போட்டிருக்கு. என் பேர்தானே? ஆனா, நிஜமான கு.த யாரு? .. அதே மாதிரிதான் அவங்க கட்சியிலேயும்.

டம். டமார். டுமீல். டப்.

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP