Sunday, January 2, 2011

ச்சின்ன ஒற்றி... பெரிய ஒற்றி...


எங்களை ஒரு தடவையாவது உங்க அலுவலகத்துக்கு கூட்டிப் போங்கன்னு அம்மாவும் பொண்ணும் (பெரிய ஒற்றி & ச்சின்ன ஒற்றி) சொல்லிட்டே இருப்பாங்க. அது என்ன, சும்மா விளையாடற இடமா? ரத்த பூமிம்மா.. உள்ளே வந்துட்டா ரத்த காயம் இல்லாமே வெளியே போகமுடியாதுன்னு சொன்னாலும் கேட்டாதானே?

இது போதாதுன்னு, குடும்ப சந்திப்புகளில் நண்பர்கள் என்னைப் பற்றி தவறாமல் சொல்வது - இவரு எங்கே வேலை செய்யறாரு? எப்ப பாத்தாலும் பக்கத்துலே கடலை, இல்லே ட்விட்டர்/இணையம் இதிலேதான் இருப்பாரு.

இப்படி சொன்னதுக்கப்புறம் விடுவாங்களா? சன் டிவியில் எந்திரன் விளம்பரம் போல், மேலே சொன்னதையே தொடர்ச்சியா சொல்லிட்டே இருந்தாங்க.

கடைசியா அந்த நாளும் வந்தது.

**

ச்சி.ஒ க்கு பள்ளி விடுமுறை. எனக்கு அலுவலகம் இருந்தது. அதனால் அவரை கூட்டிப் போகவேண்டுமென்று அரச கட்டளை. கூடவே ச்சி.ஒ விடம் - அப்பா ஆபீஸ்லே வேலை பாக்கறாரா இல்லே கணிணியில் விளையாடறாரான்னு பாத்து எனக்கு உடனே தொலைபேசி சொல்லுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

அந்த ச்சின்ன ஒற்றியும் என்கூடவே அலுவலகம் வந்து - பக்கத்தில் உட்கார்ந்து - இது என்ன? அது என்னன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.

மறைந்தவை கேட்கவற்(று) ஆகி, அறிந்தவை
ஐயப்பா(டு) இல்லதே ஒற்று.- (587)

அவருக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லாமே / காட்டாமே மறைக்கற விஷயங்களை எப்படியாவது தெரிஞ்சிப்பவர்தான் நல்ல ஒற்றன்(றி)னு ‘அவரே’ சொல்லிட்டாரே.


அம்மா, இந்த linkedinன்னா என்ன? ரொம்ப நேரமா இதைத்தான் பாத்துக்கிட்டிருக்காரு.

எப்படியாவது வேலை செய்யற மாதிரி ’நடிச்சி’ நேரத்தை ஓட்டிடணும்னு - பழைய, செய்ய விரும்பாத வேலைகள் ரெண்டு மூணை எடுத்து செய்ய ஆரம்பிச்சேன்.

நடுநடுவே வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வருது.

"என்ன நடக்குது அங்கே?"

"என்னன்னு தெரியலேம்மா. என்னவோ கணிணியில்தான் பாத்துட்டே இருக்காரு. நான் கேட்டுட்டு சொல்றேன்".

டொக்.

போற போக்கைப் பாத்தால், என்னை ‘ஃபெயில்’ பண்ணிடுவாங்கன்னு - தொலைபேசியில் இன்னொரு நண்பரை அழைத்து - (அலுவலக வேலையைப் பற்றி பேசுவதைப் போல்!) ஆங்கிலத்தில் சீரியஸாக பேச ஆரம்பித்தேன்.

ஒரு பத்து நிமிடம் பேசியபிறகு, அடுத்த ஸ்டேடஸ் ரிப்போர்ட்டில் கொஞ்சம் அதிகமாக மார்க் கிடைத்தது. - யார்கிட்டேயோ ஆங்கிலத்தில் பேசிட்டிருந்தாரு. ட்விட்டரை திறக்கவில்லை.

(ட்விட்டர் எப்படி இருக்கும்னு ச்சி.ஒ.க்கு தெரியுமாகையால், அந்த மூணு மணி நேரம் ட்விட்டரை திறக்கமுடியவில்லை). சிபிஐகிட்டே மாட்டிக்கிட்ட ராசா நிலைமை ஆகிப்போச்சு எனக்கு.

இதுக்கு நடுவில், அலுவலகத்தை சுத்திப் பாக்கணும்னு விருப்பப்பட்டாங்க. சரின்னு நண்பர்கள் அறைகள், காபி/டீ குடிக்குமிடம் - எல்லாத்தையும் கொண்டு போய் காட்டினேன்.

அன்னிக்குன்னு பாத்து நேரம் ஓடவே மாட்டேங்குது. கடிகாரத்தை தட்டித் தட்டி ஓடவைக்கிறேன்.

ஒரு மூணு மணி நேரம் கழிச்சி - கிரிக்கெட் மேட்சுலே பெவிலியனிலிருந்து டிக்ளேர் செய்யும் அணித்தலைவர் போல் - கடைசி அழைப்பும் வந்தது. - "போதும். புறப்பட்டு வந்துடுங்க".

வைக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்து விட்டேன்னுதான் நினைக்கிறேன். அன்னிக்கு அர்ச்சனை எதுவும் நடக்கலை.

கூட இருக்கும் நண்பரில் ஒருவரே சிறப்பு ஒற்றராக மாறும்வரை இப்படியே ஓபி அடிப்பதில் பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன். அந்த் ஆண்டவன்தான் காப்பாத்தணும்.

*****

4 comments:

kannan,  January 2, 2011 at 2:59 PM  

super
same blood
kannan
bangalore

Prathap Kumar S. January 2, 2011 at 10:56 PM  

ஹஹஹ....நம்ம சங்கத்தோட மானத்தை காப்பாத்திட்டீங்க தல :))



ஆபிசில் ஓபி அடிப்போர் சங்கம்
அமீரக கிளை

முத்துலெட்சுமி/muthuletchumi January 2, 2011 at 11:22 PM  

:) ஒற்றியையே ஏமாத்தி வெற்றியா..

Mahesh January 3, 2011 at 8:23 PM  

The spy who loves you !!!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP