Friday, November 21, 2014

Woh Shaam kuch ajeeb thi


பல கிஷோர் குமார் பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்திய என் தந்தையார்தான் இந்தப் பாடலையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போ யூட்யூப் கிடையாதே. ரேடியோ கீத் மாலா & சித்ரஹாரில்தான். உடனே பாட்டு பிடித்தும் போனது.

20 கண்கள் இருக்கும் ராவணனிடம் உனக்குப் பிடித்த கண் எதுன்னு கேட்டா எதைச் சொல்வார்? அதைப் போலவே கிஷோர் பாடல்களும் எனக்கு ஆனது. எல்லாப் பாடல்களையும் திரும்பத் திரும்பக் கேட்டாலும் இன்னொரு முறை கேட்க வேண்டும் என்றானது. பள்ளிப் பாடங்கள் படிக்காமல் கிஷோர் பாடல்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தால்? அதுவும் இந்தப் பாடலை மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தால்? கோபம் வந்துடுச்சு அவருக்கு.

ஒரு கேசட்டில் இரு பக்கமும் இந்த ஒரே பாடலை பதிவு செய்து - ஒரு இரவு முழுக்க என்னை தனியறையில் அடைத்து வைத்தார். காலை வரை இந்தப் பாடலைக் கேட்டு, இந்த கேசட்டை அழிக்கணும். அதுதான் உனக்கு தண்டனை என்றார்.

நானும் இரவு முழுக்க, திரும்பத் திரும்ப அதே பாடலை போட்டுப் போட்டுக் கேட்டேன். கேசட்டும் தேய்ஞ்சி போச்சு.

காலை கதவைத் திறந்த என் அப்பா - இப்போ உனக்கு அந்தப் பாடல் அலுத்திருக்கும். ஜென்மத்திற்கும் அந்த பாடலின் ஒலி உனக்கு கசந்துவிடும் என்றார். நானும் ஸ்டைலாக சிரித்துக் கொண்டே சொன்னேன் - ஆமாம்பா. இவ்வளவு முறை கேட்டபின்புதான் அந்தப் பாடலின் மகத்துவம் எனக்குப் புரிந்தது. இனிமேல் தினமும் ஒருமுறையாவது அதைக் கண்டிப்பாகக் கேட்பேன் என்று அவருக்கு வாக்குக் கொடுத்தேன்.

அதன்படியே, இன்று வரை அவ்வப்போது இந்தப் பாடலைக் கேட்காவிட்டால், எனக்கு தூக்கமே வராது.

அதுக்கப்புறம், 300 கோடியா 3000 கோடியான்னு கேட்டாரான்னு கேட்கக்கூடாது. அவ்வளவு பணம் இருந்தா, நான் ஏன் இங்கே இருந்து, இந்த மாதிரி மொக்கை ப்ளாக்கையெல்லாம் எழுதிக்கிட்டிருக்கேன்.

பாடலைக் கேளுங்க.

பிகு: சம்பவம் கற்பனைன்னு தெரிஞ்சிருக்கும். ஆனால் பாடலைப் பற்றிய கருத்துகள் உண்மை.

இந்தப் பாடலின் பொருள், பின்னணி விவரங்கள் இந்தப் பதிவில் அருமையா சொல்லியிருக்கார் ஒருவர்.

http://mrandmrs55.com/2012/04/02/woh-shaam-kuch-ajeeb-thi-lyrics-and-translation-lets-learn-urdu-hindi/




0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP