Wednesday, January 9, 2008

அம்மா வீட்டருகே மர்ம நபர்கள்...

சமீபத்தில், அம்மா வீட்டருகே 2 (3?) மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததாகவும், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஏன் இப்படி நடக்கிறது என்று சிந்தித்தபோது உண்டான கற்பனை இது.

அம்மாவை பார்க்க வருகிற ஒருவருக்கும், அம்மா வீட்டிலிருக்கும் காவலாளி ஒருவருக்குமிடையே நடக்கும் உரையாடல் இது.

சார்...சார்..
வாங்க...என்ன வேணும்?
அம்மாவை பாக்கணும்.
அப்போ எதுக்கு சார்..சார்னு கத்தினீங்க? அம்மான்னே கூப்பிட்டிருக்கலாமே?
சாரி சார். அம்மாவை நான் பாக்க முடியுமா?
கண்ணிருக்கிற யாரும் அம்மாவை பாக்க முடியும்.
சார் ப்ளீஸ்...அம்மாவை எப்போல்லாம் பாக்க முடியும்?
எப்போல்லாம் நேர்ல் வர்றாங்களோ, அப்பொல்லாம் பாக்கலாம்.
அதில்லை சார்...அம்மாவை நான் இப்போ பாக்க முடியுமா?
இப்போ எப்படி பாக்க முடியும். அவங்கதான் உள்ளே இருக்காங்களே?
சார்...சீரியஸா பேசுங்க..என் பேர் சுரேஷ்.
சுரேஷ்னா சீரியஸா பேசணுமா?
ஹலோ...அம்மாவை பாக்க முடியுமா? முடியாதா?
முடியாது.
ஏன் பாக்க முடியாது? என் கிட்டேதான் கண் இருக்கே?
அம்மா தூங்கும்போதும், குளிக்கும்போதும் யாரும் பாக்க முடியாது
அப்போகூட எனக்கு கண் தெரியுமே?
ஆனா, அதுக்கப்புறம் கண் இருக்காது.
சரி. இப்பொ கடைசியா என்னதான் சொல்றீங்க?
ஆனா, அதுக்கப்புறம் கண் இருக்காது.
அட.. அந்த கடைசி இல்லேங்க...
நான் இப்பொ அம்மாவை பாத்தே ஆகணும்.
அம்மாயிண்ட்மென்ட் இருக்கா?
என்கிட்டே ஆயிண்ட்மென்ட்தான் இருக்கு.
அம்மாவெ பாக்கணும்னா அம்மாயிண்ட்மென்ட் இருக்கணும்.
நீங்க கண் இருந்தா போதும்னீங்க?
நக்கல்?..எங்கெயிருந்து வர்றீங்க?
அதோ அங்கேயிருந்து...
அதில்லேங்க....அதுக்கு முன்னாடி எங்கேயிருந்து வர்றீங்க?
எங்க வீட்டிலேர்ந்துதான்.
இதே மாதிரி பேசிட்டிருங்க...பார்வை நேரம் முடிஞ்சிடும்.
அப்புறம், எனக்கு கண் தெரியாதா?
அதில்லே, அதுக்கப்புறம் அம்மா பாக்க மாட்டாங்க.
ஏன், அப்புறம் அவங்களுக்கு கண் தெரியாதா?
என்ன விஷயமா அம்மாவை பாக்கணும்.
இதெ மொதல்லெயே கேட்டிருக்கலாமே?
ஏன், இப்பொ கேட்டா சொல்ல மாட்டீங்களா?
சொல்றேன்.
சொல்லுங்க.
அம்மாவை பாத்து 'குட் மார்னிங்' சொல்லணும்.
அதுக்கு நீங்க நாளைக்கு கார்த்தாலதான் வரணும்.
ஏன், இன்னிக்கு 'குட் மார்னிங்' கிடையாதா?
நீ இப்படி பேசி பேசியே, 'குட் மார்னிங்' போய் 'குட் ஆப்டர்னூன்' வந்துடுச்சு.
சரி.. நான் இப்போ போறேன். ஆனா, இங்கேயேதான் சுத்திட்டிருப்பேன். எப்பொ அம்மா வந்தாலும் அவங்களுக்கு 'குட் மார்னிங்' சொல்லிட்டுத்தான் போவேன்.
போயிட்டு வாடா சாமி...

இதனால்தான் அந்த நபர்கள் அங்கே நடமாடிக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்க என்ன நெனெக்கிறீங்க?

6 comments:

Anonymous,  January 9, 2008 at 6:21 PM  

Good One. Soon you can see this in TV shows or a movie..

:))

Cheers,
Nokia Fan

Anonymous,  January 26, 2008 at 2:42 PM  

அப்படி காத்துட்டு இருந்தது நீங்க இல்லியே

சின்னப் பையன் January 26, 2008 at 7:40 PM  

சின்ன அம்மிணி...

அது... அது வந்து....
நான்... நான் அவனில்லை...:-)

Anonymous,  January 27, 2008 at 2:45 AM  

ஆஹா. சிரிச்சு சிருச்சு வயிறு வலிக்குது............

Aruna January 27, 2008 at 2:53 AM  

சூப்பர் டமாசுங்க ச்சின்னப் பையா!
அன்புடன் அருணா

சின்னப் பையன் January 27, 2008 at 7:23 AM  

நன்றி அனானி மற்றும் அருணா...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP