Sunday, October 16, 2011

நொறுக்ஸில் இரு விடயங்கள்.



ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்தவுடன் சஹானா சொன்னது.

“இன்னிக்கு என் டீச்சர், மொத்த வகுப்பிற்கும் நான்தான் rolemodelனு சொன்னாங்க. அதுக்கு சில நண்பர்கள் கை தட்டினாங்க”.

”அப்படியா?. வெரி குட். என்ன ஆச்சு?”

”வகுப்பில் இருக்கும்போது திடீர்னு யாரோ உள்ளே வந்தாங்க. டீச்சர் அவங்ககிட்டே பேசும்போது, இங்கே நண்பர்கள் எல்லாரும் கசமுச கசமுசன்னு அவங்களுக்குள் பேசிக்கிட்டாங்க. நான் மட்டும் யாரிடமும் பேசாமல் எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் டீச்சர் - சஹானா மட்டும்தான் பேசாமல் நல்ல புள்ளையா எழுதிட்டிருக்கா. அவதான் இந்த வகுப்பிற்கே rolemodel. நீங்களும் அவளை மாதிரியே இருக்கணும்.”னு சொன்னாங்க.

”சூப்பர். அப்படித்தான் இருக்கணும். அதுக்கு நீ டீச்சருக்கு நன்றி சொன்னியா?”

“இல்லை”

“ஏன்? யாராவது உன்னை பாராட்டினா அவங்களுக்கு நன்றி சொல்லணும். அதுதான் நல்ல பழக்கம்.”

இதுக்கு இவங்க சொன்னதைக் கேட்டு நான் - வேதம்புதிதில் அடி வாங்கிய சத்யராஜ் தலையை அப்படி இப்படி திருப்பியமாதிரி திருப்பிக் கொண்டேன். அப்படி என்ன சொன்னாங்க? பதில் கடைசியில்.

***

ஒரு ஒருவழிப்பாதையில் சரியாக போகும் திசையில் பார்த்தவாறு இருக்கும் வண்டி, அப்படியே பின்னாடி வந்தால் எப்படி இருக்கும்?

ஒண்ணும் புரியலியா? கவலைப்படாதீங்க. இந்த ஒளித்துண்டை பாருங்க. பிறகு பேசுவோம்.



எங்க ஊர் நூலகத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஒரு ஒருவழிப்பாதையில் வலது திரும்பணும். அந்த வலதிலிருந்து வண்டி எதுவும் வராது என்பதால், இடது பக்கம் மட்டும் பார்த்துக்கொண்டு திரும்பிவிடுவேன்.

அன்றும் அப்படியே திரும்பியவுடன் பார்த்தால், ஒரு வண்டி ‘ரிவர்ஸில்’ படுவேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பதற்றத்தில் என்னால் ஒலி எழுப்பவும் முடியவில்லை. சரக்கென்று சாலையோரத்தில் வண்டியை ஓட்டி நிறுத்தினேன்.

எந்த வெண்ணைய் இப்படி போகக்கூடாத பாதையில் நேராக போகமுடியாததால், ரிவர்ஸில் ஓட்டிப்போவது என்று பார்த்தால், அது ஒரு தேசி வெண்ணைய். அப்போதான் என் மனம் சமாதானமடைந்தது. நம்மைத் தவிர வேறு யாரால் இப்படி செய்யமுடியும்?

ஒழுங்கா போகணும்னா, நாலு தெரு சுத்தி வரணும். அதுக்கு இப்படி குறுக்கு வழி கண்டுபிடித்த அந்த தேசி வாழ்க.


****

”நான் யாரிடமும் பேசவில்லை என்பதால்தான் என்னை rolemodelனு சொன்னாங்க. அதுக்கு நான் நன்றின்னு சொல்லணும்னா பேசியாகணும். அப்படி பேசிட்டேன்னா, rolemodel இல்லேன்னு அர்த்தமாயிடும். அதனால்தான், நான் அப்பவும் பேசவில்லை.”

எப்பூடி?

***

3 comments:

அறிவிலி October 20, 2011 at 2:38 AM  

சூப்பர்.........






நான் சஹானாவுக்கு சொன்னேன்.

Sudha Sathya October 20, 2011 at 5:13 AM  
This comment has been removed by the author.
Sudha October 20, 2011 at 5:15 AM  

தந்தை (?!) எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்.

நூலை போல சேலை, தந்தை (?!) போல பிள்ளை.

திருப்திக்கே லட்டுவா, சத்யாகிட்டேயே லொள்ளா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP