Sunday, December 30, 2007

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...!!!

வெளியே சடசடவென்று மழை பெய்து கொண்டிருக்கிறது.
மனைவி, குழந்தையை கூட்டிக்கொண்டு தன் தாயார் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பல நாட்களாய் மனதில் பூட்டி வைத்திருந்த ஆசை இன்று திடீரென்று மீண்டும் தலை காட்டியது.
அடுத்த அறையில்தான் அவள் படுத்திருப்பாள். எப்படியாவது இன்று...
மனைவி இருந்தவரை அவளை நெருங்கக் கூட விடமாட்டாள்.
க்றீச் என சத்தம் போட்ட கதவை மெதுவாக திறந்துகொண்டு அவளை நெருங்கினேன்.
தூங்கிக்கொண்டிருப்பவளை சடாரென்று தூக்கி ஜன்னல் வழியே வெளியே போட்டேன்.
இந்த பூனையை, வீட்டை விட்டு துரத்த வேண்டுமென்ற என் ஆசை, பல நாட்களுக்குப் பின் இன்றுதான் நிறைவேறியது.
மறுபடி அவள் வீட்டிற்குள் வந்துவிடாதபடி, கதவை தாழ் போட்டுக்கொண்டு வத்து படுத்தேன்.

1 comments:

cheena (சீனா) January 8, 2008 at 12:07 PM  

நச்சென்ற கதையா - போட்டிக்கு அனுப்ப வில்லையா - ம்ம்ம்ம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP