Wednesday, August 29, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்


சென்ற மாதம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானபோது ( :-(((( ) அந்த வண்டியில் பயணம் செய்த நாட்கள் நினைவில் வந்தன. அப்போ எழுத ஆரம்பிச்சது இந்த பதிவு, இன்னிக்குதான் முடிஞ்சது. ஒரு பத்து roundtrip அடித்திருப்பேன் அதில். அந்த நினைவுகள் bullet pointsஆக இங்கே இந்த பதிவில்.

** மத்தியப் பிரதேசத்தில் பல மலைக்குகைகள் [tunnels] வரும். அவை ஒவ்வொன்றையும் எவ்வளவு நொடிகளில் வண்டி கடக்கிறது என்ற கணக்கெடுப்பு எடுப்பேன். ஆனால் ஒரு முறைகூட முத்த சத்தம் செய்துவிட்டு, பக்கத்தில் இருப்பவரை அறைந்ததில்லை.

** மறுநாள் மதியம் சம்பல் பள்ளத்தாக்கை கடக்கும்போது, கொள்ளைக்காரங்க வருவாங்க, கல் எடுத்து வண்டியில் வீசுவாங்கன்னு ஒரு வதந்தி கேள்விப்பட்டிருந்ததால், பயந்துகொண்டே பயணம் செய்திருக்கிறேன்.

** பயந்துகொண்டே சீட்டு விளையாடும் மக்கள், அதே பெட்டியில் ராணுவத்தினர் யாராவது பயணம் செய்தால், பயமே இல்லாமல் (அவர்களையும் சேர்த்துக்கொண்டு!) தைரியமாக சீட்டு விளையாடுவார்கள். நான் வெறும் வேடிக்கை.

** சரியான கோடை காலத்தில், இரண்டாம் வகுப்பில் போகும்போது வெயிலின் தாக்கம் தெரியாமலிருக்க (என்) தலையில் தண்ணீர் ஊற்றிய காலமும் உண்டு; 2ACயில் செம குளிரால் போர்வையால் போர்த்தியவாறே உலாத்திய காலமும் உண்டு.

** பயணச்சீட்டை இணைத்தால்தான் ஆபீஸில் reimbursement கிடைக்கும் என்பது தெரியாமல், அதை நிலையத்துக்கு வெளியில் நிற்கும் டிக்கெட் செக்கரிடம் கொடுத்துவிட்டு நிதித்துறையில் கெஞ்சிக் கிடந்தேன் சில நாட்கள்.

** வண்டியில் வருவதையெல்லாம் எனக்கும் வாங்கிக் கொடுத்து பேசிக்கொண்டே வரும் மாந்தர்களையும்; அனைத்தையும் மூடிமூடி சாப்பிட்டு எனக்கு வெறும் சிரிப்பை மட்டுமே வழங்கிய நண்பர்களையும் பார்த்த நாட்கள் அவை.

** (சென்னைக்கு வரும்போது) போபால், ஜான்சி போன்ற நிலையங்களில் செய்தித்தாள் விற்பவர்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க - ’சென்னையில் குண்டுவெடிப்பு. 20 பேர் பலி’ என்று கூவிக்கொண்டே விற்பார்கள். இது பொய்த் தகவல் என்று அறியாதவர்கள் அந்த செய்தித்தாளை விலை கொடுத்து வாங்குவார்கள். அப்படியும் அந்த செய்தித்தாளாவது சரியாக இருக்குமா என்றால், இருக்காது. உள்ளே இருக்கும் பக்கங்களெல்லாம் பழைய (முந்தைய தின) தாள்களாக இருக்கும். ஓரிரு முறை அனுபவப்பட்ட பிறகே எனக்கு புரிந்தது இந்த விஷயம்.

** நாக்பூரில் ஆரஞ்சு வாங்கிட்டு வான்னு ஒவ்வொரு முறையும் வீட்டில் சொல்வதால் ஒரு சின்ன கூடை வாங்கி வருவேன். ஒவ்வொருமுறையும் அதில் அஞ்சு ஆறுதான் நல்லா இருக்கும்.

சென்னை - தில்லி இடையே இரண்டாம் வகுப்பில் போக ஆரம்பித்து, 3AC, 2AC, விமானம் என்று படிப்படியாக முன்னேறினாலும், ஆபீஸ் பிரச்னையோ, அடிக்கடி, ‘என்னங்க, என்னங்க’ பிரச்னையோ இல்லாமல் நாள் முழுக்க தூங்கியவாறு, வேளாவேளைக்கு வண்டியில் கொண்டு வருவதை சாப்பிட்டு, மறுநாள் ஹாயாக ஊர் போய் இறங்குவதை மறுபடி ஒரு முறையாவது செய்யணும். அட, ஆபீஸ் விஷயமா போகும்போது குடும்பத்தை கூட்டிப் போகமுடியாதுல்லா?

***

 

Read more...

Thursday, August 23, 2012

எப்படி இருக்கீங்க? எப்படி இருந்துச்சு உங்க நாளு?


என்னோட நாள் எப்படி இருக்கும்னு யாராலும் சொல்லமுடியாது. ஒரு நாள் பயங்கர பிஸியா இருக்கும். சில நாட்கள் ஒரு (வாடிக்கையாளர்) அழைப்பும் இருக்காது. அட,  ஒரே நாள்லேயே காலையில் பிஸியா இருப்பேன். மாலையில் ஒண்ணுமே இருக்காது. ஆனா, எனக்கு இந்த வேலை சரியா பிடிச்சிருக்கு. ச்சின்ன வயசிலிருந்தே மார்க்கெடிங்தான் எனக்கு பிடிக்கும். அதே போல் இந்த வேலைக்கு வந்துட்டேன்.

மேற்கண்ட பாராவை படிச்சிட்டீங்களா? இது யார் சொன்னது? சொல்றேன். தற்போது தங்கியிருக்கிற Guesthouseலே கூட இருக்கற ஒருவரை நேற்று மாலை ஒரே ஒரு கேள்வி கேட்டேன் - எப்படி இருந்துச்சு உங்க நாள்?. அவ்வளவுதான். அதுக்கு அந்த மனுசர் படபடவென பொரிஞ்சி தள்ளியதுதான் அது. டேய், நான் என்ன கேட்டேன்? உன் நாள் எப்படி இருந்துச்சு? அதுக்கு என்ன சொல்லணும்? நல்லா இருந்துச்சு, நல்லா இல்லே - அவ்வளவுதானே? ஏன் நீ தேவையில்லாமே பேசிட்டே போறே? - இதெல்லாம் நான் மனசுக்குள்ளே கேட்டது.

இதை விடுங்க. தலைப்பில் இருக்கும் முதல் கேள்வியைப் பாருங்க. “எப்படி இருக்கீங்க?”. இதுக்கு மக்கள் சொல்லும் பதில்கள் இருக்கே.

காலை வேளையில் பல வேலைகளை செய்வதற்காக சுறுசுறுப்பாக ஆபீஸ் வந்து ஒருவரைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்டா, அதுக்கு அவர் சொல்லும் பதில் - "ஏதோ போகுது. ஒண்ணும் சரியில்லே". அவ்வளவுதான். அவரு மூட்அவுட்டாக இருப்பது மட்டுமல்லாமல், நம்மையும் switchoff செய்துட்டு போய்விடுவார்.

அடுத்து இன்னொருத்தர். அவர் ஏதோ ஒரு யோசனையில் வந்திருப்பார். கேள்வி கேட்டவுடன், “அட அதை விடுப்பா. இந்த பிரச்னைக்கு ஒரு பதில் சொல்லு”ன்னு ஏதோ ஒரு விஷயத்தை தேவையில்லாமல் நம் தலையில் ஏற்றிவிட்டு போய்விடுவார். எனக்குத் தேவையா இது?

அடுத்தவர். "Fine". இதுதான் பதில். அஷ்டே. all silent. ஏன்யா, நீ என்னை திருப்பி கேட்கமாட்டியா?. சரி விடு. நாளைக்கு பார்க்கலாம்.

இனி அடுத்து வருபவர்தான் நிஜமாகவே டாப். இது ஐந்து வருடம் நான் வேலை பார்த்த என் அமெரிக்க பாஸ். காலை வந்தவுடன், ”குட்மார்னிங் ஸ்டீவ்,
எப்படியிருக்கீங்க”ன்னு கேட்டவுடன், சிரித்தபடியே பலமாக “Wonderful. Excellent. Cannot complain for such an awesome day" அப்படி இப்படியென்று உற்சாகத்துடன்
அவர் சொல்லும் பதில் இருக்கிறதே, தூக்கக் கலக்கத்துடன் ஆபீஸ் சென்று, அடுத்த வாரயிறுதி எப்போ வரும்னு சோம்பேறித்தனமாக காலண்டரை பார்க்கும் எனக்கு (மற்றும் பலருக்கு) செமையா ஊக்கத்தைக் கொடுக்கும். அந்த முழு நாள் இல்லேன்னாலும், கொஞ்ச நேரத்துக்காவது அவரது உற்சாகம் என்னிடம் வந்திருக்கும். வேலை பரபரவென நகரும். இதெல்லாம் அடுத்து ஒரு தேசியை பார்க்கிற வரைதான். அப்புறம் புஸ்ஸ்ஸ்....

அதற்குப் பிறகு, என்னை யார் கேட்டாலும் நானும், ”சூப்பர். அருமையா இருக்கேன். ஒரு பிரச்னையும் இல்லே”ன்னு உற்சாகமா சொல்ல ஆரம்பிச்சேன்.

அப்புறம், இதே கேள்வியை காலையில் வீட்டில் தூங்கி எழுந்ததும் சஹானாவிடம் கேட்க ஆரம்பித்தேன். “செல்லம். குட் மார்னிங். ஹௌ ஆர் யூ?”. நான் இவ்ளோ நேரம் உன்கூடதானேப்பா தூங்கிக்கிட்டிருந்தேன்னு ஆரம்பத்தில் சொன்னவங்க, இப்போல்லாம் ‘சூப்பர், அப்பா’ என்று உற்சாகமாக எழுந்து வரவும் ஆரம்பித்திருக்கிறார்.

அவ்ளோதாம்பா பதிவு. இப்போ சொல்லுங்க. நீங்க எப்படி இருக்கீங்க?

***

Read more...

Thursday, June 21, 2012

நொறுக்ஸ் - June 21, 2012


மனப்பாடம். அமெரிக்காவில் இதை கேள்விப்பட்டே இராத சஹானா, இங்கே தினமும் ஆங்கிலக் கவிதைகள், அறிவியல் கருத்துகள் அப்படி இப்படின்னு பல விஷயங்களை மனப்பாடம் செய்யற நிலைமைக்கு வந்துட்டாங்க.

அடிக்கடி நடக்கும் வகுப்புத் தேர்வைப் பற்றி அவர் சொல்லும் ஒரு குறை என்னன்னா - விடைகள் எழுதும்போது, புத்தகத்தில் இருக்கும் அதே வார்த்தைகளை, அப்படியே பயன்படுத்தினால்தான் சரியான மதிப்பெண் கிடைக்குது. கொஞ்சம் முன்னே பின்னேயோ, சொந்தமாக அதே பொருள் தரக்கூடிய வேறு வார்த்தைகளை போட்டு எழுதினால் தப்பு'ன்னு சொல்லி மதிப்பெண்களை குறைச்சிடறாங்க. இது என்ன நியாயம்?

கரெக்ட். இது என்ன நியாயம்? பதில் என்னிடத்திலும் இல்லை. இன்னொரு முறை திட்டி, ஒழுங்கா மனப்பாடம் பண்ணுன்னு சொல்லியாச்சு.

***

#365Process பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். டிவிட்டரில் சரமாரியா வர்ற விளம்பரங்களை பொறுத்துக் கொள்ளும் நண்பர்களுக்கு நன்றி. பொறுத்துக் கொள்ளாமல் ம்யூட் செய்தவர்களுக்கும் நன்றி. (ம்யூட்'னா என்னன்னு கேக்கறவங்களுக்கு, அதெல்லாம் ஒண்ணுமில்லே. மறந்துடுங்க!).

ஆரம்பிச்சி 115 நாட்கள் ஆயிடுச்சு. இப்போ ஓடும் தொடர்கள்: CMMi, 6Sigma, ITIL & BS7799. கூடிய விரைவில் 6Sigmaவிற்கு தேவையான புள்ளியியலைப் பற்றி எளிய அறிமுகப் பதிவுகளும் வரும். சுட்டி : http://365process.blogspot.com

***

குறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில் தேசிகள் கில்லாடிகள்னு சும்மாவா சொன்னாங்க. இதோ இன்னொரு உதாரணம்.

ஊரிலிருந்து திரும்பும்போது என் காரை விற்கணும்னு முடிவாச்சு. ஒரு தேசி வந்தாரு. தென்னிந்தியர். எல்லாம் முடிவாயிடுச்சு. ஒரு ஏற்பாடு செஞ்சிக்குவோமான்னு கேட்டாரு. என் காசை கொடுத்துடு, அப்புறம் எதுவேணா செஞ்சிக்கோன்னு சொன்னா, ஒரே அடம். சரி என்னய்யா அதுன்னா, காரை எனக்கு 'பரிசா' (Gift option) தர்ற மாதிரி தந்துடு. நான் தொகையை ரொக்கமா கொடுத்துடறேன் - அப்படின்னாரு.

அதனால் என்னய்யா ஆகும்னா, ரெஜிஸ்ட்ரேஷன் செலவு எனக்கு மிச்சமாகும், உனக்கும் பணம் உடனடியா கிடைச்சிடும்னாரு. நான் இந்த மாதிரி மேட்டரை கேள்விப்பட்டதேயில்லை, என்ன பிரச்னை வருமோ எனக்குத் தெரியாது, ஊருக்கு போற சமயத்துலே ஏதாவது வம்பில் மாட்டிக்க விரும்பலைன்னு சொன்னா, மறுபடி கெஞ்சல். அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி, ஒழுங்கா ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வெச்சி, பணத்தை இரண்டு / மூன்று தவணையில் தர்றேன்னு சொன்னதால் நான் ஊருக்கும் வந்துட்டேன்.

அடுத்த பிரச்னை, பணத்தை என் வங்கிக் கணக்கில் போடுவது. அதற்கும் இணையத்தில் பரிமாற்றம் செய்தா ஒருசில டாலர்கள் செலவாகுமாம். அதை மிச்சப்படுத்தணும். சரி, ஒரு காசோலையை தபாலில் அனுப்புய்யா, மேட்டர் முடிஞ்சிடும்னா, காசோலையை காசு கொடுத்து வாங்கறேன், அதை செலவழிக்க மாட்டேன்றாப்பல. ஒரு நடை போய் என் கணக்கில் நீயே காசு போடுய்யான்னா, அவர் இருக்கும் ஊரிலிருந்து கொஞ்ச தூரம் போகணும் என் வங்கிக்கு, அதுவும் முடியாதாம்.

இது வேலைக்காகாதுன்னு, என் இன்னொரு நண்பரை அவர் அலுவலகத்திற்கு போய் காசு வாங்கி வந்து, அவருடைய காசோலையை என் வங்கிக் கணக்கில் போடச் செய்து... ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா... முடியலைடா.

***

அமெரிக்காவில் இருந்தவரை, இங்கிருந்து வந்து போகும்போது அல்லது தபாலில் தமிழ்ப் புத்தகங்களை வரவழைப்பேன். தபாலுக்கு டப்பு ஜாஸ்தியாயிடும். தவிர, புத்தகங்கள் சீக்கிரம் படிச்சி முடிச்சிட்டா அப்புறம் போர் அடிக்கும். அதனாலேயே, கொஞ்சம் கொஞ்சமா படிச்சி நாள் கடத்துவேன். இப்போதான் இங்கேயே வந்தாச்சேன்னு வாங்கி படிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சு.

குட்மார்னிங் டு குட்நைட் எல்லாத்தையும் டிவிட்டரில் சொல்வதால், இப்படி படிக்கும் புத்தகங்களைப் பற்றியும் நம் அரும்பெரும் கருத்துகளை கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இயம்பலேன்னா அவங்க கஷ்டப்படுவாங்க.

அதனால், http://sathyatv426.posterous.com ஒரு பக்கம் உருவாக்கிட்டேன். ஒரு சின்ன டிவிட்லாங்கர் அளவுக்குத்தான் பதிவுகள் இருக்கும்.

லிங்க்களை வழக்கம்போல் டிவிட்டரில் தர்றேன். இப்போதைக்கு முதல் புத்தக கருத்து : http://sathyatv426.posterous.com/139837098

***

Read more...

Tuesday, May 22, 2012

உட்காருங்க. உட்காருங்க.

முக்கிய டிஸ்கி: வழக்கம்போல் லேபிளை முதலில் படித்து விடவும். பின்னர் வருத்தப்படக் கூடாது.

அடடே. வாங்க வாங்க.

வந்துட்டேன். நலமா?

நலமே. நீங்க?

நானும் நலமே.

உட்காருங்க.

இல்லே முதல்லே நீங்க உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

அட சொல்ற பேச்சை கேளுங்க. மரியாதையா உட்காருங்க.

என்னங்க. நீங்க பெரியவங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

எனக்கு வேலை வாங்கித் தந்த தெய்வம் நீங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

வேலை சரி. எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து என் வாழ்க்கையை மங்களகரமா துவக்கி வெச்ச நீங்கதான் முதல்லே உட்காரணும்.

இது சரிப்படாது. இப்ப உட்காரறீங்களா இல்லையா?

முடியாதுங்க. நீங்கதான் முதலில்.

இத பார்றா. சொன்னா கேளு.

டேய் @#, நீ கேளுடா மொதல்லே.

டேய் வெண்ணை, முன்னாடி இருந்த வேலையில் நான் நிம்மதியா இருந்தேண்டா. நீ வாங்கிக் குடுத்தே பாரு ஒரு வேலை, @#$ என் நிம்மதியே போச்சு. இவ்வளவும் பண்ணிட்டு இங்கே உட்காரவும் மாட்டேன்னா என்னடா அர்த்தம்?

வெளக்கெண்ணை, சிவனேன்னு தனியா இருந்த எனக்கு ஒரு பொண்ணை.. பொண்ணா அவ... கட்டி வெச்சியே, என்ன பாடு படுத்தறா தெரியுமா? அன்னிலேர்ந்தே நீ என்னிக்கு என்கிட்டே மாட்டுவேன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்போ இங்கே வந்து உட்காரவும் மாட்டேன்னு வம்பு பண்றே?

சரி சரி விடுங்க. சமாதானமா போயிடுவோம்.

ஆமா. நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.

சே. ச்சே. இதென்ன பெரிய பெரிய வார்த்தையா சொல்லிக்கிட்டு.

சரி. உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

***

Read more...

Wednesday, April 11, 2012

நிலநடுக்கம், சுனாமி, கடவுள் மற்றும் சில ட்வீட்டுகள்.


இன்று காலை ட்விட்டரில் நிலநடுக்கம், சுனாமி ட்விட்டுகளுக்கு நடுவே கடவுளைப் பற்றிய ஒரு விவாதமும் ஓடிக்கொண்டிருந்தது. யாரு கேக்கறாங்களோ இல்லையோ, யாரு படிக்கறாங்களோ இல்லையோ, ஒரு டுமீல் ட்விட்டராய் நம் கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். போட்டேன் பல ட்வீட்டுகள்.


ஆனா பாருங்க, ஒவ்வொரு முறையும் 140 எழுத்துகளை என்னால் எட்ட முடியல. அதனால், இந்த #365Process தளத்தைப் பற்றியும் நடுநடுவே எழுத வேண்டியதாயிடுச்சு.  படிச்சி பாருங்க, உங்களுக்கே புரியும் என் கஷ்டம். மற்றபடி இந்த பதிவின் தலைப்பில் உள்ளவற்றைப் பற்றிய ட்விட்டுகளே இவை. நம்புங்க.


***

கடவுள் உலகை அளந்தாரான்னு தெரிய வேண்டாம்; உங்க செயல்திறனை அளக்க தெரிஞ்சிக்குங்க. உதவிக்கு #365Process

கடவுள் இருந்தா நல்லா இருக்கும். செயல்முறை இல்லேன்னா நாறிடும். அதைப்பற்றி தெரிஞ்சிக்க படியுங்கள் #365Process

நிலநடுக்கம் ஏற்பட்டாலும், செய்யும் வேலையில் மனநடுக்கம் ஏற்படாமல் இருக்க படியுங்கள் #365Process

கடவுள் உண்டு/இல்லை என்பதற்கான காரணங்களை இஷிகாவா வரைபடத்தில் வரைய #365Process படியுங்கள்

12/21/12 அன்று உலகம் அழியாது. ஏன்னா 2/28/13 அன்றுதான் #365Process முடியும்

ஆக்கல், காத்தல், அழித்தல் - செயல்முறையில் இவற்றை சரியா செய்யணுமா? படியுங்கள் #365Process

ஆத்திகர்கள், நாத்திகர்கள் இருவரும் ஒப்புக் கொண்டு படிக்கும் ஒரே தளம்.. #365Process

இப்பவாவது அடுக்ககத்தில் அடுத்த வீட்டில் இருப்பது யார்னு தெரிஞ்சிக்குங்க. இப்பவும் வேணாமா? படிங்க #365Process

வதந்திகளை பரப்பாதீர்கள். உண்மையான செய்திகளை மட்டுமே சொல்லவும். இதையும் செய்தியாக பரப்பலாம். #365Process

பேரிடர் சமயங்களில் தொலைபேசி அலைவரிசைகளை கடலை போட்டு busy ஆக்காதீர்கள். படியுங்கள் #365Process

நிலநடுக்கம் வந்து போனபிறகு வெளியில் சும்மா நிற்பவர்கள் படிக்க சிறந்த தளம். #365Process

அடாது நிலநடுக்கம் வந்தாலும் விடாது பதிவு போடப்படும். #365Process

***


இப்போ உங்களுக்கும் அந்த தளத்தை பார்க்க ஆசை வந்திருக்குமே. இங்கே போங்க.
http://365process.blogspot.com

***

Read more...

Saturday, April 7, 2012

ஹிஹி.. ஒரு விளம்பரம்..


ஏண்டா. அந்த சினிமாக்காரங்கதான் தனக்குத்தானே விளம்பரம் அடிச்சிக்குவாங்க. உனக்கு எதுக்கு இதெல்லாம்?.. இப்படி கவுண்டர் சொன்னது காதில் விழுந்தாலும்.. ஒரு விளம்பரம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.


போன வாரம் அலுவலகத்தில் ஒரு நாள் முழுக்க உட்காரவைச்சி ஒரு கூட்டம் போட்டாங்க. அப்போ எல்லாரிடமும், மத்தவங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்களோ, அதில் நல்லதை மட்டும் மூணு விஷயத்தை எழுதி அவங்கவங்க தாளில் ஒட்டுங்கன்னாங்க. நண்பர்கள் என்னைப் பற்றியும் ஏதோ சில விஷயங்களை எழுதியிருக்காங்க. கீழே இருக்கு பாருங்க.


நல்லவேளை நல்லதை மட்டும் எழுதச் சொன்னாங்க. இல்லேன்னா, பயபுள்ளைங்க என்னென்ன எழுதியிருப்பாங்களோ.. இப்ப நினைச்சாலும் கதி கலங்குது!!.


படத்தை க்ளிக் செய்து பெரிசா பாத்து, கவனமா படிங்க. ஏதாவது புரியலேன்னா கேட்கலாம். :-))


நன்றி.


Read more...

Friday, March 9, 2012

மென்பொருள் செயல்முறை பற்றி தெரிந்துகொள்ள ஒரு புதிய தளம்!


மென்பொருள் Process சம்மந்தப்பட்ட விஷயங்களை சொல்லலாம்னு ஒரு #365 தளம் துவக்கியிருக்கேன். தளத்தின் முகவரி: http://365process.blogspot.com. தினம் ஒரு பதிவாக 365 நாட்களுக்கு தொடர்ந்து எழுதலாம்னு ஒரு
எண்ணம். இதில் என்னவெல்லாம் சொல்லப்படும் என்பதை இந்த முதல் பதிவு சொல்கிறது.

http://365process.blogspot.com/#!/2012/02/365process.html

பார்த்து, தொடர்ந்து படித்து, ஆதரவு தருக. நன்றி.

***

டிவிட்டரின் பயன் மற்றொரு முறை தெரிய வந்தது. ஒரு நல்ல technical ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி சொல்லுங்கன்னு

கேட்டேன். படபடவென வந்து விழுந்தன விடைகள். அவை இங்கே. இவை தவிர வேறேதும் இருந்தால், அதையும் சொல்லவும்.

http://dictionary.tamilcube.com/index.aspx

http://www.tamilvu.org/library/technical_glossary/html/techindex.htm

http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

**

எப்படி துவங்கியதுன்னு தெரியல. ஆனா பின்வரும் ட்வீட்ஸ் போலவே பலரும் இன்று டிவிட்டரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் பங்கு இங்கே.

சவுரி. #இழுத்ததில் வந்தது.

கங்குலி சட்டை. #கழட்டியதில் பிடித்தது.

இளவட்டக் கல். #தூக்கியதில் பிடித்தது.

திட்டு. #உடைத்ததில் கிடைத்தது

தவளை. #பிடித்ததில் கடித்தது

மாங்காய் பத்தை. #கடித்ததில் பிடித்தது

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP