Showing posts with label நொறுக்ஸ். Show all posts
Showing posts with label நொறுக்ஸ். Show all posts

Wednesday, March 19, 2014

நொறுக்ஸ் - 3-19-2014


சென்னையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் எப்போதெல்லாம் ஒலிப்பான் பயன்படுத்துகிறார்கள்? இந்தக் கேள்விக்கு 10 மதிப்பெண்கள் என்றால், விடை பின்வருமாறு:

* சாலையில் இடப்புறம் திரும்பும்போது; வலப்புறம் மற்றும் நேராகப் போகும்போது.
* வீட்டை விட்டு கிளம்பும்போது; மற்றும் வீட்டுக்கு வந்தபிறகு (உள்ளே இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்குறாராம்!).
• சிக்னலில் சிகப்பு, மஞ்சள் அல்லது பச்சை விளக்கு எரியும்போது; (கவுண்ட்டவுன் 5க்கு கீழ் வந்துவிட்டால், ஒலி exponentially கூடிக்கொண்டே போகும்).
* ஆடு, மாடு மற்றும் நாய்கள் சாலையில் நடுவே இருந்தாலோ, குறுக்கே வந்தாலோ அல்லது ஓரமாய் நின்றாலோ.
* சாலையில் மேடு, பள்ளம் இருந்தால்; அல்லது சமதரையாக இருந்தால்.
* சாலையில் அதிக போக்குவரத்து இருந்தால்; அல்லது யாருமே இல்லாமல் காலியாக இருந்தால்.
* தங்கள் வாகனத்தை விட சிறிய வாகனங்களின் பின்னால் போகும்போது (கார் பின்னால் வரும் பேருந்து, பைக் பின்னால் வரும் கார், மிதிவண்டி பின்னால் வரும் பைக் இவர்களெல்லாம் தைரியமாக ஒலிப்பான் பயன்படுத்துவார்கள்).

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனால் நிறுத்திக்குவோம். மேற்கண்ட கேள்விக்கு 1 மதிப்பெண்தான்னு சொன்னா, அதற்கான விடை எப்படியிருக்கும்? விடை பதிவில்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போன வாரம் திருப்பதி போயிருந்தோம். நிறைய மாற்றங்கள். பக்தர்களுக்கு அதிக வசதிகள். மாணவர்களுக்கு தேர்வு நேரமாகையால் அதிக கூட்டம் இல்லாமல் இருந்தது. நம் மக்கள் சாமி கும்பிட தலங்களுக்குப் போனாலும், கட்டில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தனி அறை, வெந்நீர் குளியல் இன்னபிற வசதிகளை எதிர்பார்த்தே இருப்பார்கள். அப்படியில்லாமல், கடவுளை நினைத்து, கிடைத்த இடத்தில் உண்டு, உறங்கி அவன் தரிசனம் பெற முயற்சிக்கலாமே என்று வேளுக்குடி ஒரு சொற்பொழிவில் சொல்வார். அதே போல் நாங்களும் அறை எதுவும் எடுக்காமல், ஒரு பெரிய shed போன்ற இடத்தில் மக்களோடு மக்களாக உறங்கி (சூப்பர் குளிர்!), அதிகாலையில் தண்ணீர்க் குளியலுக்குப் பிறகு தரிசனத்திற்குச் சென்றோம். ஏழுமலையானின் தரிசனம் சில நொடிகளுக்கே கிடைத்தாலும், அதை நினைத்தவாறு சில மாதங்களை ஓட்டிவிடலாம் என்றும், இனி ஆண்டுக்கொருமுறை இங்கு வரவேண்டும் என்றும் நினைத்து மலையிறங்கினோம். மதுரை தூங்கா நகரம்னா, திருமலை தூங்கா மலை. 24x7 சாப்பாடு கிடைக்குது; ஷாப்பிங்கும் செய்யலாம். 

இந்த வாரம் படித்த புத்தகம் வைகோ’வின் பல பேச்சுக்களின் தொகுப்பு. வெல்லும் சொல். விகடன் பிரசுரம். பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மகாபாரதம் என பல தலைப்புகளில், பல்வேறு கூட்டங்களில் பேசிய பேச்சுக்கள் மிக அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன. திருவாசகம் விழாவில் இவரது பேச்சைக் கேட்டு (சூப்பர் ஸ்டாரைப் போலவே!) ரசிகனானேன். அதைப் போலவே மேற்சொன்ன தலைப்புகளில் மனிதர் சும்மா பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம், ஆனால் நான் நூலகத்திலிருந்து எடுத்திருந்ததால், திருப்பிக் கொடுத்துவிட்டேன். 

பதிவில் முதலில் சொன்ன கேள்விக்கு 1 மதிப்பெண் மட்டுமே என்றால் அதற்கான விடை:

வண்டி Onல் இருக்கும்போதெல்லாம் ஒலிப்பானை ஒலிப்பார்கள்; Offல் இருக்கும்போது ஒலிப்பானை ஒலிக்கமாட்டார்கள்.

***

Read more...

Thursday, June 21, 2012

நொறுக்ஸ் - June 21, 2012


மனப்பாடம். அமெரிக்காவில் இதை கேள்விப்பட்டே இராத சஹானா, இங்கே தினமும் ஆங்கிலக் கவிதைகள், அறிவியல் கருத்துகள் அப்படி இப்படின்னு பல விஷயங்களை மனப்பாடம் செய்யற நிலைமைக்கு வந்துட்டாங்க.

அடிக்கடி நடக்கும் வகுப்புத் தேர்வைப் பற்றி அவர் சொல்லும் ஒரு குறை என்னன்னா - விடைகள் எழுதும்போது, புத்தகத்தில் இருக்கும் அதே வார்த்தைகளை, அப்படியே பயன்படுத்தினால்தான் சரியான மதிப்பெண் கிடைக்குது. கொஞ்சம் முன்னே பின்னேயோ, சொந்தமாக அதே பொருள் தரக்கூடிய வேறு வார்த்தைகளை போட்டு எழுதினால் தப்பு'ன்னு சொல்லி மதிப்பெண்களை குறைச்சிடறாங்க. இது என்ன நியாயம்?

கரெக்ட். இது என்ன நியாயம்? பதில் என்னிடத்திலும் இல்லை. இன்னொரு முறை திட்டி, ஒழுங்கா மனப்பாடம் பண்ணுன்னு சொல்லியாச்சு.

***

#365Process பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். டிவிட்டரில் சரமாரியா வர்ற விளம்பரங்களை பொறுத்துக் கொள்ளும் நண்பர்களுக்கு நன்றி. பொறுத்துக் கொள்ளாமல் ம்யூட் செய்தவர்களுக்கும் நன்றி. (ம்யூட்'னா என்னன்னு கேக்கறவங்களுக்கு, அதெல்லாம் ஒண்ணுமில்லே. மறந்துடுங்க!).

ஆரம்பிச்சி 115 நாட்கள் ஆயிடுச்சு. இப்போ ஓடும் தொடர்கள்: CMMi, 6Sigma, ITIL & BS7799. கூடிய விரைவில் 6Sigmaவிற்கு தேவையான புள்ளியியலைப் பற்றி எளிய அறிமுகப் பதிவுகளும் வரும். சுட்டி : http://365process.blogspot.com

***

குறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில் தேசிகள் கில்லாடிகள்னு சும்மாவா சொன்னாங்க. இதோ இன்னொரு உதாரணம்.

ஊரிலிருந்து திரும்பும்போது என் காரை விற்கணும்னு முடிவாச்சு. ஒரு தேசி வந்தாரு. தென்னிந்தியர். எல்லாம் முடிவாயிடுச்சு. ஒரு ஏற்பாடு செஞ்சிக்குவோமான்னு கேட்டாரு. என் காசை கொடுத்துடு, அப்புறம் எதுவேணா செஞ்சிக்கோன்னு சொன்னா, ஒரே அடம். சரி என்னய்யா அதுன்னா, காரை எனக்கு 'பரிசா' (Gift option) தர்ற மாதிரி தந்துடு. நான் தொகையை ரொக்கமா கொடுத்துடறேன் - அப்படின்னாரு.

அதனால் என்னய்யா ஆகும்னா, ரெஜிஸ்ட்ரேஷன் செலவு எனக்கு மிச்சமாகும், உனக்கும் பணம் உடனடியா கிடைச்சிடும்னாரு. நான் இந்த மாதிரி மேட்டரை கேள்விப்பட்டதேயில்லை, என்ன பிரச்னை வருமோ எனக்குத் தெரியாது, ஊருக்கு போற சமயத்துலே ஏதாவது வம்பில் மாட்டிக்க விரும்பலைன்னு சொன்னா, மறுபடி கெஞ்சல். அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி, ஒழுங்கா ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வெச்சி, பணத்தை இரண்டு / மூன்று தவணையில் தர்றேன்னு சொன்னதால் நான் ஊருக்கும் வந்துட்டேன்.

அடுத்த பிரச்னை, பணத்தை என் வங்கிக் கணக்கில் போடுவது. அதற்கும் இணையத்தில் பரிமாற்றம் செய்தா ஒருசில டாலர்கள் செலவாகுமாம். அதை மிச்சப்படுத்தணும். சரி, ஒரு காசோலையை தபாலில் அனுப்புய்யா, மேட்டர் முடிஞ்சிடும்னா, காசோலையை காசு கொடுத்து வாங்கறேன், அதை செலவழிக்க மாட்டேன்றாப்பல. ஒரு நடை போய் என் கணக்கில் நீயே காசு போடுய்யான்னா, அவர் இருக்கும் ஊரிலிருந்து கொஞ்ச தூரம் போகணும் என் வங்கிக்கு, அதுவும் முடியாதாம்.

இது வேலைக்காகாதுன்னு, என் இன்னொரு நண்பரை அவர் அலுவலகத்திற்கு போய் காசு வாங்கி வந்து, அவருடைய காசோலையை என் வங்கிக் கணக்கில் போடச் செய்து... ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா... முடியலைடா.

***

அமெரிக்காவில் இருந்தவரை, இங்கிருந்து வந்து போகும்போது அல்லது தபாலில் தமிழ்ப் புத்தகங்களை வரவழைப்பேன். தபாலுக்கு டப்பு ஜாஸ்தியாயிடும். தவிர, புத்தகங்கள் சீக்கிரம் படிச்சி முடிச்சிட்டா அப்புறம் போர் அடிக்கும். அதனாலேயே, கொஞ்சம் கொஞ்சமா படிச்சி நாள் கடத்துவேன். இப்போதான் இங்கேயே வந்தாச்சேன்னு வாங்கி படிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சு.

குட்மார்னிங் டு குட்நைட் எல்லாத்தையும் டிவிட்டரில் சொல்வதால், இப்படி படிக்கும் புத்தகங்களைப் பற்றியும் நம் அரும்பெரும் கருத்துகளை கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இயம்பலேன்னா அவங்க கஷ்டப்படுவாங்க.

அதனால், http://sathyatv426.posterous.com ஒரு பக்கம் உருவாக்கிட்டேன். ஒரு சின்ன டிவிட்லாங்கர் அளவுக்குத்தான் பதிவுகள் இருக்கும்.

லிங்க்களை வழக்கம்போல் டிவிட்டரில் தர்றேன். இப்போதைக்கு முதல் புத்தக கருத்து : http://sathyatv426.posterous.com/139837098

***

Read more...

Friday, March 9, 2012

மென்பொருள் செயல்முறை பற்றி தெரிந்துகொள்ள ஒரு புதிய தளம்!


மென்பொருள் Process சம்மந்தப்பட்ட விஷயங்களை சொல்லலாம்னு ஒரு #365 தளம் துவக்கியிருக்கேன். தளத்தின் முகவரி: http://365process.blogspot.com. தினம் ஒரு பதிவாக 365 நாட்களுக்கு தொடர்ந்து எழுதலாம்னு ஒரு
எண்ணம். இதில் என்னவெல்லாம் சொல்லப்படும் என்பதை இந்த முதல் பதிவு சொல்கிறது.

http://365process.blogspot.com/#!/2012/02/365process.html

பார்த்து, தொடர்ந்து படித்து, ஆதரவு தருக. நன்றி.

***

டிவிட்டரின் பயன் மற்றொரு முறை தெரிய வந்தது. ஒரு நல்ல technical ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி சொல்லுங்கன்னு

கேட்டேன். படபடவென வந்து விழுந்தன விடைகள். அவை இங்கே. இவை தவிர வேறேதும் இருந்தால், அதையும் சொல்லவும்.

http://dictionary.tamilcube.com/index.aspx

http://www.tamilvu.org/library/technical_glossary/html/techindex.htm

http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

**

எப்படி துவங்கியதுன்னு தெரியல. ஆனா பின்வரும் ட்வீட்ஸ் போலவே பலரும் இன்று டிவிட்டரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் பங்கு இங்கே.

சவுரி. #இழுத்ததில் வந்தது.

கங்குலி சட்டை. #கழட்டியதில் பிடித்தது.

இளவட்டக் கல். #தூக்கியதில் பிடித்தது.

திட்டு. #உடைத்ததில் கிடைத்தது

தவளை. #பிடித்ததில் கடித்தது

மாங்காய் பத்தை. #கடித்ததில் பிடித்தது

***

Read more...

Thursday, August 18, 2011

இது ஒரு குப்பை மேட்டர்!


அமெரிக்கா வந்து இறங்கியதும் எங்களுக்குப் பிடிச்சது - சுத்தம். தெரு, பூங்கா, கடைகள் எங்கு பார்த்தாலும் சுத்தம் x 3. குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் போடமுடியாது. அதுமட்டுமல்லாமல், அந்த குப்பைகளை தரம் பிரித்து வெவ்வேறு தொட்டிகளில் போடவேண்டியிருக்கும்.

1. மக்கும் பொருட்கள் தனியாக
2. காகிதங்கள், அட்டை பெட்டிகள் தனியாக
3. இதர குப்பைகள் தனியாக

இப்படி 3 தொட்டிகள் வைத்திருப்பாங்க. அதில்தான் போடணும். ஒவ்வொரு தொட்டிக்கும் அதற்குண்டான குப்பை வண்டிகள் வந்து காலி செய்து எடுத்துட்டு போயிடுவாங்க. இப்படித்தான் 4+ வருடமா நடந்திட்டிருந்தது. ஆனா 2 மாதத்திற்கு முன் திடீர்னு ஒரு மாற்றம். மேலே சொன்ன 1, 2, 3 எல்லாத்தையும் ஒரே தொட்டியில் போட சொல்லிட்டாங்க. காலையில் 5 மணிக்கு ஒரு வண்டி வந்து மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடும்.

ஏம்மா இப்படி ஆயிடுச்சுன்னு, எங்க வீட்டுக்காரம்மாகிட்டே (house owner!) கேட்டேன். ஒப்பந்தக்காரர் சொன்னபடிதான் செய்யறோம். இந்த குப்பைகளை அவங்க இடத்தில் போய் தரம் பிரிச்சிப்பாங்கன்னு சொன்னாங்க. ஏம்மா, இங்கே பிரித்து எடுத்துட்டு போறது சுலபமா, இல்லே ஊர் குப்பைகள் எல்லாத்தையும் ஒரு இடத்துலே போட்டு அங்கே பிரிக்கறது சுலபமா? யோசிச்சி சொல்லுங்கன்னேன்.

அவங்களுக்கு சுர்ர்ன்னு கோபம் வந்துடுச்சு. ஊர் முழுக்க இப்படித்தான் பண்றாங்க. உனக்கு என்ன போச்சு? சொல்றதை செய்ன்னு சொல்லிட்டாங்க.

சரிதான், எப்படியும் எல்லாத்தையும் ஒரே கண்டெய்னர்லே போட்டு, தூத்துக்குடிக்குதான் அனுப்ப போறாங்க. அதை எதுக்கு இங்கே உட்கார்ந்து வெட்டியா பிரிச்சிக்கிட்டு, செலவு செஞ்சிக்கிட்டுன்னு அந்த செலவையும் குறைச்சிட்டாங்க போலன்னு நினைச்சிண்டேன். அந்தம்மாகிட்டே சொல்லவில்லை.

டிஸ்கி: நிஜம் என்னன்னு எனக்கு தெரியாது. உண்மையாகவே ஓரிடத்தில் குப்பைகளை தரம் பிரித்து அதை உரியமுறையில் சுழற்சி செய்யலாம். ஆனா, அமெரிக்காவிலிருந்து தூத்துக்குடிக்கு இப்படி நிறைய குப்பைகள் வந்து சேர்கின்றன என்று செய்திகளில் பலமுறை படித்துள்ளதால், இப்படி நினைக்கத் தோன்றியது.

***

பலப்பல வருடங்களுக்கு முன் பதிவு துவக்கும்போது ஆர்வக்கோளாறில் ‘ச்சின்னப்பையன்’னு பேர் வெச்சி ஆரம்பிச்சேன். இந்த மாதிரி ‘ச்’ முதலில் வரக்கூடாதுன்னு சிலர் சொன்னாங்க. அப்புறம் மறந்துட்டாங்க. நானும் விட்டுட்டேன். ஆனா இன்னிக்கு ட்விட்டரில் திடீர்னு என் பெயர் பிரச்சினை ’அடி’பட்டிருக்கு.

நண்பர் @tamilravi இப்படி ஒரு ட்விட் போட்டிருந்தாரு.

”@TPKD_ @nchokkan @karthi_1 சோளி சரி.ச்சின்னப்பையன் என்று தமிழ்ச் சொல்லையே சிதைக்கும் கொடுமையையும் பார்த்திருக்கிறேன்.”

இதை படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. அதனால், இன்றிலிருந்து என் பேரை மாத்திக்கிட்டேன். முழுசா இல்லீங்க. அந்த ‘ச்’ மட்டும் எடுத்துட்டேன். அவ்வளவுதான்.

ஆனா நீங்க உங்க ஆதரவை மாத்தாமே தினமும் வந்து போயிட்டிருங்க.

***

Read more...

Sunday, December 12, 2010

உப்புமாவுக்கு ஒரு அருமையான ரெசிப்பி!

எங்க வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு குட்டிப்பையன் (தென் அமெரிக்கன்) இருக்கான். 4 வயசுதான் இருக்கும். நல்லா துறுதுறுன்னு இருப்பான். இன்னும் குட்டியா இருந்தபோது என்னைப் பார்த்து சிரிச்சிக்கிட்டிருந்த அவன், கொஞ்ச நாளா எங்கே பார்த்தாலும் ஓடி வந்து அடிக்க ஆரம்பிச்சிடறான். அடின்னா எங்க/உங்க வீட்டு அடியில்லே. வடிவேலு வாங்குற மாதிரிதான்.

நானும் ஓரிரு முறையில் சரியாகிவிடும்னு பாத்தால், ம்ஹூம். அப்புறம் நான் அவனைப் பார்த்தாலே ஓட ஆரம்பிச்சேன். அவங்க பாட்டிதான் எப்பவும் மன்னிப்பு கேப்பாங்க. நானும் - சரி விடுங்க. ச்சின்னப் பையந்தானே ( நானில்லை. அவன்) பரவாயில்லைன்னு போயிடுவேன்.

எவ்ளோ நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது - ஒரு தடவை தங்ஸ்கிட்டே சொன்னேன். இப்படி பையன் போட்டு சாத்தறான்னு. அவ்வ். சொல்லாமலேயே இருந்திருக்கலாம். அப்படி இருந்தது அவங்க கேட்ட கேள்விகள்.

அந்த பையன் எதிரே ஏதாவது தப்புத்தண்டா பண்ணினீங்களா?

ஆஹா. ஒரு வேளை அதுவாயிருக்குமோன்னு சந்தேகம் வந்தாலும்.. ச்சீச்சீ. நான் போய் அவன் எதிரே. இல்லேம்மா - என்றேன்.

அவனோட பொருள் எதையாவது எடுத்துக்கிட்டீங்களா?
அவங்கம்மா கிட்டே பேசினீங்களா?

’மை நேம் இஸ் கான்’ விமான நிலைய சோதனை மாதிரி கேள்விகளால் துளைச்சி எடுத்துட்டாங்க. இதுக்கு அந்த பையன் அடிக்கறதே தேவலைன்னு ஆயிடுச்சு.

இப்படியாக டாம்கிட்டே மாட்டின ஜெர்ரி மாதிரி நான் தப்பிச்சி ஓடிட்டிருந்தபோது ஒரு நாள் - மின்தூக்கியில் அவன்கிட்டே வசமா மாட்டிக்கிட்டேன். அவன் என்னை அடிக்க, பாட்டி அவனை அடிக்க - அவன் அழ - (அட, நான் அழலீங்க!) அந்த குட்டி மின்தூக்கியில் ஒரே அடிதடி-ரணகளம்தான்.

பாட்டிக்கும் பேரனுக்கும் நடுவே புகுந்த நான் - விட்டுடுங்க. பாவம் பையன்னு சொன்னா - பாட்டி சொன்னதுதான் சோகம்.

அந்தப் பையனுக்கு ஏதோ மருத்துவ பிரச்சினை. தினமும் நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிடறானாம். அதனால் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ ஆயிட்டான். தினமும் நல்லா அடி வாங்கறான். வயசானா சரியாயிடும்னு மருத்துவர்கள் சொல்றாங்கன்னாங்க.

வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

முன்னெல்லாம் அவன் அடிக்காக பயந்து ஓடிட்டிருந்த நான், இப்போ அவனையே பார்க்க தைரியமில்லாமல் ஓடி ஒளியறேன்.

*****

ஒரு தகுதிச் சான்றளிப்புக்காக படிக்க வேண்டியிருந்ததால், ரெண்டு வாரமா மென்பொருள் தரம் தொடர் வரவில்லை. அதுக்குள்ளே பல்லாயிரக்கணக்கான (சரி சரி!) மின்னஞ்சல்கள். இனிமே வாரம் ஒரு பகுதி சரியா வந்துடும்னு எல்லாருக்கும் தனித்தனியே சொல்றதுக்குள்ளே மௌஸ் (நாக்கு) தள்ளிடுச்சு.

*****

காலையில் சிற்றுண்டிக்கு சப்பாத்தி வைக்கும்போது - அட, காலையில் சப்பாத்தியா.. ஒரு இட்லி, தோசை இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்லுவோம். அப்புறம் கொடுக்கறத வாங்கி சாப்பிட்டு, மதியம் டப்பாவை திறந்தா - காலையில் வேணான்னு சொன்ன அதே சப்பாத்தி வந்திருக்கும். சரி. வீட்டுக்கு போய் சமாளிச்சிக்குவோம்னு அதை சாப்பிடாமேயே எடுத்து வந்திட்டா - திட்டு விழுந்து - மறுபடி சூடு பண்ணி நமக்கே கொடுத்திடுவாங்க. எப்படி இருந்தாலும் அந்த சப்பாத்தியிலிருந்து தப்பிக்க முடியாது.

அதே மாதிரிதான் இந்த ட்விட்டர் ட்விட்டுகளும். ஒழுங்கா அங்கேயே வந்து படிச்சிருந்தீங்கன்னா, நான் மறுபடி இங்கே போடத் தேவையிருந்திருக்காது. என்ன பண்றது, நீங்க அங்கே வரலை, அதனால் அதை மறுபடி இங்கே போடறேன். இங்கேயாவது படிங்க!!.

**

வெயில் காலத்தில் குளிர் காலமே பெட்டர்னு தோணுது. அதே குளிர் காலம் வந்துட்டா, குளிர் காலமே பெஸ்ட்ன்னு தோணுது.

1000 வசதிகள் இருந்தாலும், பக்கத்து வீட்டில் இருக்கும் அந்த 1001 வது வசதி இல்லையேன்னு நினைப்பதுதான் மனித இயல்பு!

டாக்டர் விஜய் அம்மா கட்சியில் சேர்ந்துட்டாருன்னா, அவரோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அம்மா கேரளா போய் சிலைக்கு மாலை போடுவாங்களா?

குளிர் + சூடான தேநீர் + மிக்ஸ்சர் + படிக்கற மூட் இல்லே = கவிதை எழுதிடலாமான்னு தோணுது

உளியின் ஓசை & பெண் சிங்கம் ரெண்டும் இல்லாததால் Netflix எடுக்காமே இருக்கேன்.

குளிருக்கு மங்கி தொப்பி அணிந்தேன். உங்களுக்கு பொருத்தமா இருக்குன்றாங்க வீட்டுலே. எந்த அர்த்தத்துலே சொல்றாங்கன்னே தெரியல

எங்க ஊர்லே, முன்னர் காவல் நிலையம் இருந்த இடத்தில் வங்கி வருது. பணம் போடப் போனா டீ வாங்கிட்டு வரச் சொல்வாங்களோ!

இப்போதைக்கு தமிழில் எனக்குப் பிடித்த இரு வார்த்தைகள் - லீக் மற்றும் (டேப்) ரிலீஸ்

Amount given per Vote should be directly proportional to the number of Tapes released. #JaiHo

வீட்லே இருக்கும்போது மழை பெஞ்சா ஆபீஸுக்கு போகவேணாம். ஜாலி. ஆபீஸில் இருக்கும்போது மழை பெஞ்சா வீட்டுக்கு போகவேணாம். ஜாலியோ ஜாலி!

காருக்குள் சாவி வெச்சி வண்டியை பூட்டிட்டேன். நல்லவேளை நானும் உள்ளேயே இருந்ததால், தொறந்துக்கிட்டு வெளியே வந்துட்டேன்.

*****

இதோ உப்புமாக்கான ரெசிப்பி. பிற்காலத்தில் செய்வதற்காக சஹானா இப்பவே எழுதி அதை அவங்க கோப்பில் சேமித்து வெச்சிட்டாங்க. நீங்களும் இதை பயன்படுத்தி, உப்புமா எப்படி வந்திருக்குன்னு சொல்லுங்க.



*****

Read more...

Saturday, November 13, 2010

நான் ஒரு நாளும் தலைவன் ஆகமுடியாது!

நான் ஒரு நாளும் தலைவன் (leader) ஆகவேமுடியாதுன்றத இன்னிக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன். என்ன நடந்தது. வழக்கம்போல் பதில் - இடுகையில்.

****

போன வாரம் ஒரு நாள். சஹானாவை தூக்கி கீழே போடுவதைப் போல் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரோ கொஞ்சம் கூட பயப்படாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். பயமா இல்லையாம்மான்னு கேட்டதற்கு - ம்ஹூம். நீங்க என்னை கீழே போடமாட்டீங்கன்னு தெரியும். அப்புறம் நான் ஏன் பயப்படணும்னாங்க.

நான் ஜென் கத்துக்கும் ஒரு ஆசாமியாகவோ அல்லது (ஜோதா) அக்பராகவோ இருந்தால், அந்த நேரத்தில் என் தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவெள்ளம் வந்து எனக்கு ஞானம் வந்திருக்கும். ஆனா நான் ஒரு ஞான0 ஆகையால், வெறும்னே சிரித்துவிட்டு - பத்து நிமிஷமா பாக்காத ட்விட்டரைப் பாக்க உட்கார்ந்தேன்.

****

எங்க ஊர்லே இருக்கும் நூலகம் இலவசம்தான் என்றாலும், வாங்கிய புத்தகத்தை / குறுந்தகடை தாமதமா திருப்பிக் கொடுத்தா, அபராதம் மட்டும் வாங்கிடுவாங்க. என் மாதிரி சிலர் இருப்பதால், அபராதத்தொகையில் அவங்களுக்கு சரியான வசூல்!

ஒரு ஆறு மாதமா என் அட்டையில் ஒரு $10 அபராதத்தொகை இருந்தது. நானும் சரி, இப்ப கட்டலாம், அப்ப கட்டலாம்னு கட்டாமலேயே இருந்தேன். நமக்கு யாராவது பணம் கொடுக்கணும்னா ஞாபகம் இருக்கும் - அதையே நாம கொடுக்கணும்னா? ம்ஹும்.

இதற்கிடையில் ஒரு நாள் என் நூலக அட்டை காலாவதி ஆயிடுச்சு. அடுத்த தடவை போய் அதை புதுப்பிச்சிட்டு, என் அபராதத் தொகை எவ்ளோம்மான்னு கேட்டா - $0 ன்னு சொன்னாங்க.

இல்லையே, $10 பாக்கி இருந்ததே - அதை கட்டலாம்னுதான் வந்தேன்னு சொன்னேன்.

அப்போதான் சொன்னாங்க - அவங்க மென்பொருளில் ஒரு சிறு பிரச்சினை இருக்காம். அதாவது காலாவதியான அட்டையை புதுப்பிக்கும்போது அதிலிருந்த பழைய பாக்கியெல்லாம் போயே போச்!

இவங்க மென்பொருளை நம்ம கம்பெனிக்காரங்க பண்ணலியே? அப்புறம் எப்படி பிரச்சினை வந்துச்சுன்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு.

சரி அதை அப்புறமா பாத்துக்கலாம்னு சொல்லிட்டு - சரிம்மா. முன்னாடி $10 பாக்கி இருந்துச்சு. இந்தாங்க புடிங்கன்னு சொன்னா - நோ நோ! கணிணியில் காட்டாத பாக்கியை நாங்க வாங்கிக்க மாட்டோம். அடுத்த தடவையிலிருந்து பாக்கியை உடனுக்குடன் கட்டிடுங்கன்னு சொல்லிட்டாங்க.

கண்டிப்பா இனிமே பாக்கியை உடனே கட்டிடறேன்னு சொல்லிட்டு - அடுத்த தடவை என் அட்டை எப்போ காலாவதி ஆகும்னு ஞாபகமா கேட்டுட்டு வந்தேன்.

****

மென்பொருள் தரத்தைப் பற்றி ஒரு சின்ன தொடர் ஓடிட்டிருக்கு. தனித்தனியா படிச்சீங்கன்னா அப்பப்ப கேள்வி கேளுங்க. மொத்தமா கடைசியில் படிச்சிக்கிறேன்னு சொன்னீங்கன்னா, அதுவும் எனக்கு ஓகேதான். :-))

****

இப்பல்லாம் ஒவ்வொரு வாரயிறுதியிலும் ரெண்டு மணி நேர பயணம் செய்வதால் (பயணம் எதுக்குன்னு தெரியலியா? அதுக்குத்தான் ட்விட்டரில் என்னை பின்தொடரணும்னு சொல்றது!)
- Leadership பற்றிய ஒரு CD புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன்.

நேற்று முதல் முறையா அந்த CDயை கேட்டபோதே - நான் எந்த காலத்திலும் தலைவனாக முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

அப்படி அதில் என்ன சொன்னாங்கன்னா - “ரெண்டு நிமிடத்துக்கு கண்ணை மூடிக்கிட்டு, இது வரைக்கும் வேலையில் நீங்க என்ன சாதிச்சிருக்கீங்கன்னு யோசிங்க”.

கொய்யாலே. புயல் மாதிரி 80 மைல் வேகத்துலே வண்டி ஓட்டிக்கிட்டிருக்கேன் இதுலே ரெண்டு நிமிடம் கண்ணை மூடுனா என்ன ஆகும்?

அப்பவே தெரிஞ்சி போச்சு <தலைப்பு>.

****

Read more...

Tuesday, October 26, 2010

கடவுள் கண்டிப்பா இருக்கார்..!!

ஆத்திகர்கள், நாத்திகர்கள், இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்றவங்க - இவங்க யாருக்குமே இந்த பதிவுலே தீனி எதுவும் கிடையாது. வழக்கம்போல் மொக்கைதான். அதனால்...

*****

வீட்டுலே நான் வேலை எதுவுமே செய்யாமே - கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்கேன்னு - நாக்கு மேல் பல்லு போட்டு பேசறவங்களுக்கு, அவங்க தப்புன்னு நிரூபிக்க ஒரு வலுவான ஆதாரம் கிடைச்சிடுச்சு. கீழே பதிவில்.

*****


ச்சின்ன வயசிலேந்து உலகத்தை வாங்கணும்னு ஆசை. ..ன்னா ..யே இல்லை. உலக உருண்டையைத்தான் சொன்னேன். பள்ளியில் தலைமை ஆசிரியர் மேஜையில் உ.உ ச்சும்மா
கொலுவிற்காக வெச்சிருந்ததை பாத்ததிலிருந்து - வீட்டிலேயும் ஒண்ணு வேணும்னு கேக்கணும்னு பாப்பேன். ஒண்ணு கேட்டா ரெண்டு கிடைக்கும் முதுகுலே. அதனால் கேக்காமே விட்டுடுவேன்.

சமீபத்தில் இங்கே பழைய பொருட்களை விற்கும் கடை ஒண்ணு. வெளியிலிருந்து பாத்தபோதே பெரிய உ.உ ஒண்ணு உள்ளே இருப்பது தெரிஞ்சுது. சரின்னு உள்ளே போனா அங்கே ஒரு தாத்தா உ.உ.வை சுத்தவிட்டு பாத்துட்டிருந்தாரு.

அங்கிருந்ததோ ஒரே ஒரு உ.உ.தான். அதையும் இந்த தாத்தா விடாமே சுத்திட்டிருந்தாரு. ச்சின்ன வயசிலே உலகத்தை சுத்தி வரணும்னு ஆசையோ என்னவோ.. அல்லது காணாமல் போன அவங்க ஊரு ஆண்டிலேண்ட் (like ஆண்டிப்பட்டி) தேடிட்டிருந்தாரோ தெரியல. ரெண்டு.. நாலு.. ஆறு நிமிஷமாச்சு. அவரும் நகர்ற மாதிரியில்லே. அதை வாங்கற மாதிரியும் தெரியல.

இது வேலைக்காகாதுன்னு அவர்கிட்டேயே போய் - ஐயா, நீங்க வாங்கப் போறீங்களா.. இது எனக்கு வேணும்னு கேட்டுட்டேன். மனுசன் அசராம - யெஸ். இது எனக்கு வேணும்னு சொல்லிட்டாரு.

இருந்தாலும் நப்பாசை. கடைக்குள்ளேயே சுத்திட்டிருக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. தங்ஸ் ஒரு பக்கம், நான் இன்னொரு பக்கம்னு நின்னு அவரை கண்காணிச்சிண்டிருந்தோம். ஒரு நிமிஷம் தாத்தா நகர்ந்தாலும் டக்குன்னு அமுக்கிடலாம்னு ப்ளான்.

இன்னொரு பத்து நிமிடம் கழிச்சிதான் தாத்தாவோட 'உலக ஆராய்ச்சி’ முடிஞ்சி, கொஞ்சம் அந்தப்பக்கம் நகர்ந்தாரு.

பழைய படங்கள்லே 'அந்த' மாதிரி காட்சி வரும்போது காட்டுவாங்களே - மான் மேலே புலி பாயறா மாதிரி - அந்த மாதிரி பாய்ஞ்சி உலகத்தை கைப்பற்றினேன்.

அன்று முதல் அவ்வப்போது உலகத்தை சுற்றி சஹானாவுக்கு கண்டம் / நாடு / கடல் போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொடுப்பதால் - உலகம் சுற்றும் ச்சின்னப் பையன் என்று பெயர் பெற்றேன்.(ஹிஹி. எனக்கு நானே!).

*****

இந்த வார 18+ ஜோக்:

கொறுக்ஸ், மொறுக்ஸ் இந்த மாதிரியெல்லாம் போட்டா கண்டிப்பா 18+ ஜோக் ஒண்ணு போடணும்னு புது சட்டம் போடப் போறாங்களாம். அதனால் பல (சில?) பேர் படிக்கும் பூச்சாண்டியிலும் ‘இந்த வார 18+ ஜோக்’ போடறதா முடிவு பண்ணிட்டேன்.

நல்லா பாத்துக்குங்க.

இந்த வார 18+ ஜோக்.

போட்டாச்சு..

*****

சஹானாவின் பள்ளியில் தினம் ஒரு கடிதம்னு எழுதவைக்கிறாங்க. உங்க அப்பாவுக்கு கடிதம் எழுதுன்னு சொன்னதுக்கு, என்னமா அனுபவிச்சி எழுதியிருக்காங்க பாருங்க.

இதெல்லாம் மண்டபத்துலே யாரும் சொல்லிக் கொடுத்து எழுதினதில்லீங்க. நான் படற கஷ்டத்தைப் பாத்து தானா வர்றதுதான்.



நானா எப்படிடா சொல்றதுன்னு தெரியாமே இருந்தப்போ, இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பதால்தான், கடவுள் கண்டிப்பா இருக்கார்னு தெரியுது! (அப்பாடா, தலைப்பு வந்தாச்சு!).

*****

Read more...

Monday, August 23, 2010

ரொம்ப நாள் கழிச்சி ஒரு நொறுக்ஸ்!


நான் வீட்டுலே இருக்கும்போது, எப்போதும் ஐபாட்லே பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன். அதனால் எந்த வேலை செய்வதற்கும் எவ்ளோ நேரமாகும்னு சொல்லாமே, எவ்ளோ பாட்டு ஆகும்னு சொல்லலாம். அதாவது:



ஓய்வறைக்கு - 3 பாட்டு (+25 பக்கங்கள்)


குளிப்பதற்கு - 3 பாட்டு


சாப்பிடும்போது - 2 பாட்டு


அலுவலகம் போவதற்கு - 2 பாட்டு


வீட்டுக்கு வருவதற்கு - 1 பாட்டு



இனிமேதான் கவனமா படிக்கணும்.

தங்கமணி பேச ஆரம்பித்தால் - 150 பாட்டு


நான் பேசணும்னா - ஒரு பாட்டு முடிஞ்சி அடுத்த பாட்டு ஆரம்பிப்பதற்குள்.

*****

நம்ம சென்னையில் தனியார் GPS தயாரிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்னு ஒரு ச்சின்ன கற்பனை.



முதல்லே ‘அவர்’ தயாரிக்கிறாரு. ‘அவர்’ யாருன்னு இதை படிச்சாலே உங்களுக்கு தெரிஞ்சிடும். மத்தவங்க தயாரிப்பு அடுத்தடுத்த இடுகைகளில் வரும்.



1. இந்த தெரு எங்கே போகும்னு நான் இப்ப சொல்லமாட்டேன். சொன்னா உங்களுக்கு இப்பவே தெரிஞ்சிடும்.



2. இந்த தெருவுலே மொத்தம் 500 வீடு. மொத்த ஆட்கள் 300 பேர் ஆண்கள். 200 பேர் பெண்கள். அதில் என்னோட மாமா பொண்ணும் ஒண்ணு. ம்க்கும்.



3. இந்த தெருவுலே கும்பலா இருக்கும். நமக்கு யார் கூடவும் போக பிடிக்காது. தனியாத்தான் போகணும். அதனால் அந்த தெருவுலே போவோம். பத்தாயிரம் செலவானாலும் பரவாயில்லை.



4. இந்த தெருவுலே போறதா அந்த தெருவுலே போறதான்னு எனக்கு தெரியல. நடுலே நில்லுங்க. யாரு எந்தப்பக்கம் கூப்பிடறாங்களோ, அந்த பக்கம் போகலாம்.



5. பாரிமுனையிலிருந்து தாம்பரம் செல்லும்போது வழியில் சம்மந்தமில்லாமே கோயம்பேடு ஏன் வர்றோம்னு பாக்குறீங்களா? இதோ இடது பக்கம் தெரியுதே, அந்த கல்யாண மண்டபத்தைதான் படுபாவிப் பசங்க இடிக்க இருந்தாங்க. இதைப் பாக்கத்தான் உங்களை கூட்டிட்டு வந்தேன்.



6. இங்லிஷ்லே எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - ஒன் வே. நீங்க தைரியமா இதே தெருவிலே போங்க. யாரு என்ன சொல்றாங்கன்னு பாத்துடலாம்.



*****



தாய்மொழியைப் போலவே ஆங்கிலத்திலும் சரளமாய் பேசிய சஹானா, சில நாட்களாய் (ஆங்கிலத்தில்) தட்டுத் தடுமாறி பேச ஆரம்பித்தார். என்னடா இது, Danburyக்கு வந்த சோதனைன்னு அவங்ககிட்டேயே அதற்கான காரணத்தை கேட்டோம். பிறகு, ஏண்டா அப்படி கேட்டோம்னு நொந்தோம்.



அவங்க சொன்னது இதுதான்.



நான் பள்ளியில் பேசறமாதிரி வீட்டிலேயும் ஆங்கிலத்தில் பேசினா, உங்களுக்கு புரியறதில்லை. அதனால், உங்களுக்கு புரியற மாதிரி யோசித்து பேசவேண்டியிருக்கு. அதுக்கு நேரமாகுது. அவ்ளோதான். ஓகேவா?



அவ்வ்வ்... எனக்கு ஆங்கிலம் தகராறுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சி போச்சு...



*****



என் தலையில் இருக்கிற ஆயிரக்கணக்கான முடிகளில் எந்த முடி எனக்கு ரொம்ப பிடிக்கும்னு கேட்டா, நான் எப்படி சொல்வேன்? அதே மாதிரிதான், என் ட்வீட்களும். இருந்தாலும் உங்களுக்காக சில இங்கே.



ரோஜா ரோஜா பாடலில் எவ்வளவு ரோஜான்னு எண்ணுகையில், வழியில் குறுக்கிட்ட ஒரு இரு-கால் ரோஜாவைப் பார்த்து எண்ணிக்கையை தவறவிட்டேன்



கூட்டத்திலே கோயில் புறா. யாரை இங்கு தேடுதம்மா" - கொய்யாலே. எங்கக்காவை யார்ரா அடிச்சி சாப்பிட்டது?..



தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி பேசினால், அவனவன் அலறி அடிச்சிக்கிட்டு ஓடுறான் - மூக்கைப் பொத்திக்கிட்டு. ஏன்னு தெரியல



நாளை மாலை 6 மணிக்கு 'நொந்திரன்' க்ளைமாக்ஸ் உருவான விழாவின் உருவான விழாவின் உருவான விழாவின் உருவான விழா! காணத் தவறாதீர்கள்!



*****



Read more...

Wednesday, June 23, 2010

நாலு பேர் ஆறு விதமா..

பணம் இன்னிக்கு வரும். நாளைக்கு போகும். அதுக்காக வராமே இருக்கறதா?

எப்போ அமெரிக்காவுக்கு போனானோ அப்பவே உறவினர்களையெல்லாம் மறந்துட்டான்.

வேலை என்ன பெரிய வேலை. இது இல்லைன்னா வேறே வேலையே கிடைக்காதா என்ன?

இரண்டு மூணு நாள் கூட விடுமுறை கிடைக்கலேன்னா, அலுவலகமே இவன் தலையில்தான் ஓடுதா என்ன?

வீட்டுக்கு பெரியவனா முன்னிருந்து நடத்த வேணாமா? இப்படியா தொலைபேசியில் விசாரிக்கறது?

எல்லாம் பணம் பண்ற வேலை. அந்த காலத்துலே எப்படி இருந்தோம்னு நினைச்சி பாக்க வேணாமா?

*****

இப்படி எல்லோரும் எதைப் பத்தி பேசறாங்க? விவரங்கள் இடுகையில்..

*****

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23வது ஆண்டு விழாவில் மாபெரும் பதிவர் சந்திப்பு ஒன்று நடக்க இருக்கிறது. பதிவர்களும், அனானிகளும், மற்றும் அனைவரையும் வருமாறு அழைக்கிறேன்.

உள்ளூர் அண்ணன் விழாவின் பிரச்சார பீரங்கி (மாதிரி!) பழமைபேசியும், வெளியூர் அண்ணன் அப்துல்லா அவர்களும் பங்கேற்கிறார்கள். அனைவரும் வருக, ஆதரவு தருக!!!

*****

ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டு முடிவடையும்போது சஹானாவின் வாத்திகளிடம் ஒரு சின்ன நோட்டு கொடுத்து, சஹானாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதுமாறு சொல்வோம்.

மூன்றாவது வருடமாக இந்த வருடமும் எழுதி வாங்கியிருக்கிறோம். கடந்த வருடங்களின் குறிப்புகளை இப்போது படித்தாலே பரவசமாய் இருக்கும்போது இன்னும் 15-20௦ வருடங்கள் கழித்துப் படித்தால் எப்படி இருக்கும்? ஏய் யாருப்பா அது பின்னாலே - 15 வருடம் கழிச்சி வா, எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்னு சொல்றது?)

*****

ரொம்ப நாளைக்கு முன்னாடியே மின்னூல் கிடைத்தாலும், புத்தகம் வாங்கித்தான் படிக்கணும்னு இருந்தது - சேத்தன் பகத்தின் 2 States. பஞ்சாப் பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் நடுவே ஒரு ’இது’. பல தடைகளைத் தாண்டி ’அது’ எப்படி திருமணத்துலே முடியுதுன்னு புத்தகம்.

போன தடவை இந்தியா போயிருந்தபோது அந்த புத்தகத்தை வாங்கி வந்து - ஓய்வறையில் படிச்சி படிச்சி ஒரு வழியா படிச்சி முடிச்சேன். நிறைய பேர் ஏற்கனவே படிச்சிட்டிருப்பீங்க. கதையில் வர்ற தமிழ்க்குடும்பம் மூலமா தமிழர்களை நல்லா வாரியிருக்காரு சேத்தன்.

கதையில் வர்ற தமிழ் வார்த்தைகளுக்கெல்லாம் பொருள் கேட்கும் என் குழுவிலிருக்கும் (இந்தியப்) பெண்களுக்கு நான் சொல்லும் பதில் வெறும் ‘ஙே’தான். ஏன்னு கேக்குறீங்களா? அட. புத்தகத்தில் அங்கங்கே அக்மார்க் தமிழ் கெட்ட வார்த்தைகள். அதுக்கெல்லாம் பொருள் சொல்லமுடியுமா? அதுவும் பொண்ணுங்க கிட்டே போய்? இந்த விளையாட்டுக்கே நான் வரலேப்பா!!!

*****

இந்த வாரயிறுதியில் சென்னையில் என் கூடப்பிறந்த (கூடன்னா கூடவே இல்லை. ஒரு நாலு வருஷம் தள்ளி!) தம்பிக்கு திருமணம். பல்வேறு காரணங்களால் என்னால் போக முடியவில்லை. வரமுடியாதுன்னு பல மாதங்களாய் சொன்னாலும், கடைசி நிமிடத்தில் <இடுகைத் தலைப்பு> பேசத்தானே செய்வாங்க.

*****

Read more...

Tuesday, June 8, 2010

பாசம், பொறுமை, சண்டை மற்றும் தமிழ் விழா!

திடீர்னு எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற ரெண்டு - மூணு பேரு எங்கிட்டே பேசறத நிறுத்திட்டாங்க. முன்னாடி மெதுவா புன்னகை புரிஞ்சவங்க, பின்னாடி பற்களை கடுகடுன்னு கடிக்கறாங்க. அப்படி என்னதான் ஆச்சு... கீழே படிங்க...

*****

அப்பா வந்துட்டாருடா செல்லம்.
குட் நைட்,
குட் மார்னிங்,
பசிக்குதாடா கண்ணு

அப்படின்னு "அவங்க"கிட்டேயும்

சத்தம் போடாதீங்க. "அவங்க" தூங்கறாங்க
விளக்கை அணைங்க. "அவங்களுக்கு" தொந்தரவா இருக்கில்லே

அப்படின்னு எங்க கிட்டேயும் சொல்லிட்டிருந்தாங்க சஹானா.

(நாங்க = நாங்க. அவங்க = மீன்கள்)

அவங்களுக்கு சாப்பாடு போடறது, தொட்டியை சுத்தம் பண்றது, தூசு தும்பு அவங்களை பாதிக்காமே பாக்குறது - அப்படி இப்படின்னு வேலைங்க கூடிப்போச்சு.

வாங்கின புதுசுலே தொட்டி பக்கத்துலே போனாலே அலறி அடிச்சி ஓடிட்டிருந்த ஸ்வீட்டியும், ப்யூட்டியும் - நாலு வாரத்துலே தைரியமா முன்னாடி வந்து நிக்க ஆரம்பிச்சாங்க.

திடீர்னு ஒரு நாள் ப்யூட்டி குப்புற கவுந்தடிச்சி படுத்திருந்தாங்க. ஒண்ணுமே புரியல. சஹானா அவங்களை மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறாங்க. அவங்க வாத்தி வீட்டுலேயும் இப்படித்தான் ஆகி, பின்னாடி மருத்துவர்கிட்டே போய் சரிசெய்தாங்கன்னு அழுகை.

நமக்கு இருக்கவே இருக்கு கூகிள். என்ன ஆச்சுன்னு ஆராய்ச்சி பண்ணினா - வயித்துலே காத்து போயிட்டா மீன் அப்படித்தான் கவுந்தடிச்சி படுத்திருக்கும்னும், 90% உயிருக்கு பிரச்சினையிருக்காதுன்னும்
போட்டிருந்துச்சு.

அங்கு போட்டிருந்தபடியே மறுபடியும் தண்ணியை சுத்தம் பண்ணிட்டு, கடவுளை வேண்டிக்கிட்டு இரவு படுக்கப் போனோம்.

காலை 5 மணி.

ப்யூட்டி நினைப்பிலேயே படுத்திருந்து, எழுந்து வந்து பார்த்தால் - ம்ஹூம். பேச்சு மூச்சு இல்லை. சஹானா எழுந்து வர்றதுக்குள்ளே அவங்களை எடுத்து அப்புறப்படுத்தியாச்சு.

மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகலாம்னு நான் அப்பவே சொன்னேனேன்னு எழுந்து வந்த சஹானா அழ ஆரம்பிச்சாங்க.

இன்னும் பெரிய தொட்டி, கூடுதல் மீன்கள் வாங்கித் தர்றேன்னு சமாதானப்படுத்தியாச்சு.

இணையத்தில் போட்டிருந்த மாதிரியே - மூழ்கக்கூடிய சாப்பாடு, அடிக்கடி சுத்தம்னு எல்லாமே சரியா செய்தாலும், ப்யூட்டி போனதுலே மனசு ரொம்பவே கஷ்டமா போயிடுச்சு.

நாயை / பூனையை 'ஆம்புலன்ஸ்' வெச்செல்லாம் காப்பாத்த முயற்சிக்கிற அமெரிக்கர்களை கேலி செய்த மனம் - இப்ப மெல்ல மாறுது. அந்த பாசம் புரியுது.

*****

இ.கோ.மு.சிங்கம் அப்படின்னு ஒரு படத்தை பாக்க ஆரம்பிச்சோம். நகைச்சுவை இப்ப ஆரம்பிச்சிடும், அப்ப ஆரம்பிச்சிடும்னு ஒரு 20 நிமிடம் போயிடுச்சு. பொறுமை பொறுமைன்னு எழுந்து போகவிருந்த தங்கமணியை உக்கார வைக்கிறேன்.

படத்துலே வி.எஸ்.ராகவன் மெதுவ்வ்வ்வ்வ்வா நடந்து போய் அந்த தலைவன்கிட்டே ஏதோ கேட்டுட்டு மறுபடி மெதுவ்வ்வ்வ்வா நடந்து வரும்போதே ஏதோ மொக்கையா சொல்லப்போறாருன்னு தெரிஞ்சி போச்சு.

அவரும் "கு*" விட்டுக்கலாம்னு சொல்லிட்டாருன்னு சொன்னவுடனே - இருக்குற ஒட்டுமொத்த பொறுமையும் போய் இதுக்கு "சுறா"வே மேல்னு சொல்லி அதை பாக்க ஆரம்பிச்சிட்டோம்.

ஆரம்ப பத்து, இருபது நிமிடங்கள் மட்டும் பார்த்த தமிழ் படங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.

*****

சஹானாவை பார்க்கிற அமெரிக்கர்கள் - எப்பவுமே ஏதாவது பேசுவாங்க. அப்புறம் - உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கான்னு சொல்லிட்டு போவாங்க.

அப்படி ஒரு நாள் நாங்க மின்தூக்கியில் போயிட்டிருந்தபோது - கூட நாலைஞ்சு பேர் இருந்தாங்க. அதில் ஒரு அம்மா - மேலே சொன்னதையே சொன்னாங்க.

அதுக்கு நான் சொன்னதைக் கேட்டுதான் - அதுக்கப்புறம் அவங்க யாருமே என்னை பாத்து பேசறத நிறுத்திக்கிட்டாங்க. அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு எனக்கு புரியல. நீங்களே நியாயத்தை கேளுங்க.

சரி - நான் என்ன சொன்னேன்னுதானே கேக்குறீங்க? நான் சொன்னது - "ஆமா. அவ என்னை மாதிரி".

*****

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ம் ஆண்டு விழா அடுத்த மாதம் வருது. விவரங்களுக்கு http://www.fetna.org/ பார்க்கவும். இங்கே வடகிழக்கில் இருக்கும் பதிவர் நண்பர்களை விழாவுக்கு வருமாறும், தன்னார்வலர்களாக செயல்புரிய முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணன் பழமைபேசியை முதல்முறையும், இந்தியாவிலிருந்து வரும் மாண்புமிகு அண்ணன் அப்துல்லா அவர்களை மறுபடியும், பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். விழாவுக்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் திரு.விஜய்
மணிவேல் பற்றிய பழமைபேசியின் இடுகை இங்கே.

*****

Read more...

Sunday, April 18, 2010

பார்வதியம்மாள், கல்கி பகவான் மற்றும் சாமியார் அனுபவம் ஒண்ணு!!!

ஒரு வயசான பாட்டியை மருத்துவம் பாக்க அனுமதி மறுத்து விமானத்தில் திருப்பி அனுப்பியாச்சு. வழக்கம்போல் தாத்தா இதைப் பத்தி பேசவே மாட்டாரு.

திமுக ஆதரவு பதிவர்கள் மத்திய அரசை திட்டியும் - காங்கிரஸ் ஆதரவு பதிவர்கள் மாநில அரசு/காவல் துறையை திட்டியும் - கூட்டணிக்கு ஆதரவு தரும் பதிவர்கள் இதைப் பத்தி எழுதாமலும் அல்லது இச்செயலுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவு எழுதுங்கப்பா. எல்லாரும் நல்லாவே இருங்க!

*****

சென்ற வாரம் இந்தியா செல்வதற்காக JFK விமான நிலையத்தில் அமர்ந்து கமகமவென்று புளி/தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது - ஒருவர் வந்து பக்கத்தில் அமர்ந்தார் - நீங்க தமிழா? சென்னை போறீங்களா? நானும்தான் - அப்படின்னு ஆரம்பிச்சி வளவளன்னு பேச ஆரம்பித்தார். நான் அங்கே இருக்கேன் - என் பசங்க இங்கே இருக்காங்கன்னு சொல்லிக் கொண்டே போனவர் அடுத்து சொன்னதைக் கேட்டு - நான் தங்கமணியிடம் - கிளம்பு, அந்தப்பக்கம் போய் உக்காருவோம். இங்கே வேணாம்னு சொல்லி அடிச்சிக்கோ பிடிச்சிக்கோன்னு ஓடிப்போனோம்.

அப்படி அவர் என்ன சொன்னாரு?

”எங்களுக்கு எல்லாமே கல்கி பகவான்தான். என் பொண்டாட்டிக்கு எல்லாமே அம்மா பகவான்தான். நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? ரெண்டு பேரும் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க. நாங்க வருடாவருடம் அவங்களை பார்ப்பதற்காகவே இந்தியா போவோம். நீங்களும் வர்றீங்களா?”.

ங்கொய்யாலே. அந்த தெலுங்கு சேனல் வீடியோ பாத்தப்புறம் கூடவா இப்படி அலையறீங்கன்னு கேக்க ஆசை. அப்புறம் அவரு என் மனசையும் மாத்திட்டார்னா என்ன பண்றதுன்னு அந்த இடத்தை காலி செய்தோம்.

ஜெய் கல்கி பகவான்! ஜெய் அம்மா பகவான்!!

*****

இதற்கு முன் இடுகையில் சொன்ன நண்பர் - 3ன் பெயர் திரு.அமிர்த கிருஷ்ணன். ஐசிஐசிஐ வங்கியின் வீட்டுக் கடன் வழங்கித் தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். சென்னையில் உள்ள இவரது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்க. # தர்றேன்.

*****

சிலபல வருடங்களுக்கு முன், நான் வேலை பார்த்த நிறுவனத்தின் சார்பாக - நிறைய கண்காட்சிகளில் மென்பொருள் கடை போடுவோம். அப்படி ஒரு தடவை - ஒரு பிரபல சாமியார் நடத்தும் ஒரு பயிற்சிக்கூட்டத்திற்காக மும்பை போயிருந்தோம். பத்து நாள் விழாவில் பயங்கரக்கூட்டம். கடைசி நேரத்தில் பயணம் செய்ததால் எனக்கு தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு சிபாரிசின் பேரில் அந்த சாமியாரின் சீடர்களின் அறையிலேயே பத்து நாளும் இருக்க வேண்டியதாயிற்று.

ஒரு நாள் அந்த சீடரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் - “இந்த உலகத்தில் எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால் அனைவரும் நம் சகோதர சகோதரிகள்” என்று கூறினார்.

அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால், இந்த பத்தியை நான் இங்கே எழுதியிருக்கவே மாட்டேன். அப்படி அடுத்து அவர் என்ன சொன்னாரு?

“ நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தான். அழகான பெண்களைத் தவிர”.

*****

Read more...

Friday, March 12, 2010

நான் ஒரு சராசரி கணவனா?

ஸ்வாமி சத்யானந்தாவைப் பார்க்க சென்னை மக்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. ஒரே ஒரு வாரத்திற்கான அந்த பயண விவரங்களை ஆசிரம வெளி'விவகார'த் துறை விரைவில் வெளியிடும்.
ஸ்வாமியை தரிசனம் செய்ய விரும்பறவங்க, வீடியோ காமிராவையெல்லாம் வீட்டிலேயே வெச்சிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தன்மத்ரா, ப்ரமரம் - மலையாளப் படங்களில் இந்த ரெண்டை மட்டும்தான் பாத்திருக்கேன். இதே மாதிரி நம்மை கட்டிப்போடும் மலையளப் படங்கள் (அஞ்சரைக்குள்ள படங்கள் கிடையாது!!!) சிபாரிசு செய்யுங்க. சென்னை வரும்போது டிவிடி வாங்கறேன்னு ஒரு இணைய நண்பர்கிட்டே கேட்டிருக்கேன். நீங்களும் சொல்லுங்க. (அண்ணாச்சி?)

*****

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) ஜூலை மாத விழாவின் வேலைகள் பல்வேறு குழுக்களுக்கு பிரிக்கப்பட்டு தற்போது அனைவரும் முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். (அடியேனும்
அதில் ஒருவன். அதனால்தான் சமீபகாலமாக பதிவு போடுவதும் குறைஞ்சிடுச்சு. ட்விட்டர் பக்கமே போறதில்லை).

தமிழார்வலர்களை விழாவில் பங்கேற்குமாறும், அதற்காக இப்போதே இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் விழாக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். www.fetna.org தளத்தில் அதற்கான விவரங்கள் கிடைக்கும். விழாவைப் பற்றிய விரிவான இடுகை ஓரிரு நாளில்.

*****

தமிழ்ப்படம் - திரையரங்கில் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. பயங்கர அருமையா இருக்கு. அப்படி இப்படின்னு பதிவர் விமர்சனங்களைப் படிச்சிட்டு - சரி பாத்துடலாம்னு ஒரு வாரம் பிச்சிபிச்சிப் படத்தைப் பாத்து, மண்டை காஞ்சி போயிருக்கோம். ஓரிரு இடங்களில் சிரிக்க முயற்சித்தடோட சரி.

இதுக்கு டாக்டர் விஜயோட படத்தையோ, அவரது 'பேக்கரி' லொள்ளு சபாவையோ பாத்திருந்தாலே நல்லா சிரிச்சிரிக்கலாம்.

இவ்ளோ பேரு நல்லாயிருக்குன்னு சொல்லி, நான் மட்டும் நல்லாயில்லேன்னு திட்டினா, பிரச்சினை என்கிட்டேதானா? எனக்குதான் நகைச்சுவை உணர்வு குறைஞ்சிக்கிட்டே போகுதா? அடுத்த செய்திக்கும்
இதுக்கும் தொடர்பிருக்குதா? ஒண்ணுமே புரியல.

*****

இங்கே தொலைக்காட்சியில் AFV (Americas Funny Videos) அப்பப்போ போடுவாங்க. நாங்களும் பாத்து சிரிச்சிக்கிட்டே இருப்போம். சஹானா மட்டும் சிரிக்காமே உர்ருன்னு இருப்பாங்க. ஏம்மா சிரிக்கலியான்னு கேட்டா, அந்தப் பையனுக்கு கீழே விழுந்து எவ்வளவு வலிச்சிருக்கும், அந்த விபத்துக்கப்புறம் அந்தம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க - அதனால் அது நகைச்சுவையே இல்லே. எனக்கும் சிரிப்பே வரலேன்னுட்டாங்க.

இனிமே விபத்துகளுக்கோ, மக்கள் தவறி விழுந்து அடிபட்டாலோ சிரிப்பதில்லைன்னு முடிவு செய்திருக்கோம்.

*****

ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் இருந்தாதான் சராசரியை கண்டுபிடிக்க முடியும்னு எல்லோருக்கும் தெரியும். அப்போ சராசரி கணவனைக் கண்டுபிடிக்க ரெண்டு/மூணு/மூணு+ பொண்டாட்டிங்க இருந்தாதான்
முடியும்னு சொல்றது சரிதானா? அப்போ என்னாலே சராசரி கணவனா ஆகவே முடியாதா? 'அவரு' மட்டும்தான் அந்த கணக்குலே வருவாரா? யாராவது பதில் சொல்லுங்க.

*****

Read more...

Friday, February 19, 2010

கலர் பாக்கத் தெரியாதது ஒரு பெரிய குற்றமா?

இந்த அநியாயத்தை நீங்களே கேளுங்க. எல்லோரும் அவங்க வீட்டு ஆம்பளைங்க கலர் பாக்கறாங்கன்னு தெரிஞ்சா உண்டு இல்லேன்னு பண்ணிடுவாங்க. இங்கே அதுக்கு உல்டா. எனக்கு கலரே பாக்கத் தெரியலேன்னு திட்டு விழுது. அப்படி ச்சின்ன வயசுலே என்னதான் பண்ணினீங்கன்னு கேள்வி கேக்குறாங்க.. விஷயம் என்னன்னா...

******

மூணு நாளைக்கு முன்னாடி நண்பர் ஆதி ஒரு இடுகையில் என் பேரை குறிப்பிட்டு எழுதியிருந்தாலும், இணைப்பு ஆரூராருக்கு கொடுத்திருந்தார். நண்பர்கள் சொல்லியும் திருத்தாதலே, எனக்கு வரவேண்டிய ஆயிரக்கணக்கான ஹிட்ஸை திசை திருப்பி விட்டுட்டாருன்னு நான் சொன்னா, அவர் பதில் என்ன என்பதை கனம் பதிவர்கள் முன் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

(ஹிஹி. ஆதி. நோ டென்சன். ச்சும்மா ஜாலிக்குதான். ஆனா இந்த வாரயிறுதியில் நிமிஷத்துக்கு ஒரு தடவைன்னு இரவு முழுக்க பூச்சாண்டியில் F5 தட்டி கணக்கை சரிப்படுத்திடுங்க. சரியா?.)

******

இந்த வருடம் பள்ளி ஆரம்பித்து 100 நாட்கள் ஆனதையொட்டி சஹானாவின் பள்ளியில் 100 பொருட்களை வைத்து ஏதாவது செய்து கொண்டுவாங்கன்னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு ஆரம்பிச்சு அடுத்த மூணு நாள் ஒரே குழப்பம்தான். என்ன பண்றதுன்னே தெரியல. இணையத்துலே / நண்பர்கள்கிட்டே / அங்கே இங்கேன்னு எல்லாத்திலேயும் கேட்டு / தேடிட்டோம்.

100 ஒரு பைசா காசுகளை வெச்சி ஏதாவதொரு படத்தை வரையலாம்.
100 ச்சின்ன வளையங்களை வெச்சி ஏதாவது செய்யலாம்.
100 பேப்பர் க்ளிப்களை வெச்சி ஒரு மிருகம் செய்யலாம்.

இப்படியெல்லாம் யோசிச்சிட்டிருந்தோம்.

இணையத்துலே ஒருத்தரு சொல்லியிருந்தாரு - 100 மனித உறுப்புகளை வரிசையா ஒரு அட்டையில் எழுதி கொடுத்துடலாம்னு. யோசனை
நல்லாதான் இருந்தது. ஆனா மனித உடம்புலே மொதல்லே 100 உறுப்புகள் இருக்கான்னே எங்களுக்கு தெரியல. எல்லா உறுப்புகளையும் சொல்லப் போய் பிறகு பள்ளியில் ஏதாவது ரசாபாசமாயிடப் போகுதுன்னு அதையும் வேணான்னு சொல்லிட்டேன்.

எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு(!!). பூச்சாண்டியிலிருந்து 100 இடுகைகளை அச்செடுத்து வரிசையா புத்தகம் மாதிரி அடிச்சி கொடுத்துட்டா, பள்ளியில் எல்லோரும் அதை படிச்சி தெளிவடைஞ்சிடுவாங்கன்னு சொன்னேன். அடுத்த நாள் வரைக்கும் வீட்லே யாருமே என்னோட பேசலே. ஏன்னு தெரியல.

பேசிக்கிட்டிருக்கும்போது தங்ஸ் ஒரு ஐடியா சொன்னாங்க. 100 மிருகங்கள்/ பறவைகள் படங்களை இணையத்திலிருந்து சுட்டு, வரிசையா ஒட்டி கொடுத்துடலாம்னாங்க. நிறைய நேரம் தேடியும் 100 விதமான மிரு/பற படங்கள் கிடைக்கவேயில்லை. சுமார் 75 வரைக்கும்தான் கிடைச்சது. என்ன பண்றதுன்னாங்க. பேசாமே 50 புலி மற்றும் 50 சிங்கம் இதோட படங்களை
ஒட்டிடலாம் - மொத்தம் 100தானேன்னு சொன்னேன். ம்ஹும். நோ பேச்சு. நோ மூச்சு.

இன்னொரு முழு நாள் செலவழிச்சி 100 மிரு/பற படங்களை சேகரித்து, அதை ஒரு பெரிய தாளில் ஒட்டி கஷ்டப்பட்டு முடிச்ச அந்த ப்ராஜெக்டை படமே எடுக்காமே பள்ளியில் கொண்டு கொடுத்துட்டோம். அதனால் இணையத்திலும் போட முடியல. :-((

*****

போன வாரம் ஒரு நாள் எங்க ஊர்லே நடந்தது இது. காலையில் கடுமையான பனிப்பொழிவு, மதியம் நல்ல வெயில், பிற்பகல் சூப்பரா மழை, மாலையில் புயற்காற்று. ஒரே நாள்லே நாலு விதமான வானிலை மாறுதல்கள்.

அடுத்த நாள் பேசும்போது நண்பர் ஒருத்தர் - 2012ம் ஆண்டுக்காக கடவுள் இப்போதே தயாராயிட்டாரு. அதுக்கான ஆயத்த வேலையாதான் நம்ம ஊருக்கு வந்து இப்படி ஒரே நாள்லே எல்லாத்தையும் கொடுத்து டெஸ்ட் பண்றாரு - அப்படின்னாரு.

அவ்வ்.. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா... முடியல..

*****

பச்சை, மஞ்சள், சிகப்பு, கறுப்பு - இப்படி பல வண்ணங்கள் நம்ம அரசியல்வாதிகள் புண்ணியத்துலே தெரிஞ்சிக்கிட்டாலும், இந்த பர்பிள், ஆரஞ்ச், பிங்க் இப்படி சில வண்ணங்களை சஹானா கேக்கும்போது தப்புதப்பா சொல்லி திட்டு வாங்குவேன். அப்புறம், குழந்தைங்க புத்தகத்தை பாத்து இந்த மாதிரி நிறைய வண்ணங்கள் பேரை தெரிஞ்சிக்கிட்டேன்.

பிரச்ச்சினை இதோட முடிஞ்சுதுன்னு நீங்க நினைச்சா அது தப்பு.

அடுத்த கட்டமா - பச்சையும் மஞ்சளும் கலந்தா என்ன வரும், சிகப்பும், பிங்கும் கலந்தா என்ன வரும் - அப்படின்னெல்லாம் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதையெல்லாம் எப்படி கண்டுபிடிக்கறது சொல்லுங்க. எதையாவது குத்து மதிப்பா சொன்னா, கண்டிப்பா அது தப்பாதான் இருக்குது. நான் என்ன செய்யறது? கலர் பாக்கத் தெரியாதது என் தப்பா?

*****

Read more...

Tuesday, January 5, 2010

தமிழ்ப்பித்தர் தி.வெ.ச!!!

நண்பர் தமிழ்ப்பித்தர் தி.வெ.ச. ஒரு பதிவரும் கூட. அவர் இந்த வாரம் பல மைல்கற்களை தாண்டியுள்ளார். தனது 300வது இடுகையை போட்டிருக்கும் இவ்வேளையில், பதிவுலகத்தில் தன் இரண்டாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். மணம், குணம், சுவை நிறைந்த (இவைகளில் ஒன்றிரண்டு குறையலாம்!) அவரது பதிவை படிக்க இங்கே செல்.... அட,
அதான் படிச்சிட்டே இருக்கீங்களே... அனைவருக்கும் நன்றி... (ஹிஹி. அது நாந்தான். என் பெயரை தமிழ்ப்'படுத்தினேன்'. அவ்வளவுதான்!).

*****

பல வருடங்களுக்குப் பிறகு தலைவரின் ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை' படித்தேன். அடடா.. அருமை.. அற்புதம்.. இதெல்லாம்தான் எல்லாருக்கும் ஏற்கனவே தெரியுமே.. அதுக்கென்னன்றீங்களா.. நண்பர் நர்சிம்மின் மாறவர்மன் படிக்கும்போதே, நாமும் இந்த மாதிரி ஒரு சரித்திரத் தொடர் எழுதினா என்ன என்று தோன்றும். (டேய். உனக்கெதுக்கு இந்த
வேண்டாத வேலை. சரித்திரமெல்லாம் ஒழுங்கா இருக்குறது போதாதான்னு எல்லாருமே சொல்றது கேக்குது!).

ஆனா விதி வலியது. இப்போ அந்த ஆசை கொழுந்து விட்டு எரியுது. அதனால் கூடிய விரைவில் இங்கே ‘இளவரசன் விஜயன்' நகைச்சுவைத் தொடர் - கதையில் உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ ஒருவர்தான் ஹீரோ!!!.

*****

முன்னாடியே எழுதியிருக்கணும். மறந்துட்டேன். இப்போ எங்க கிராமத்துலே பதிவர்களின் எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. ஹிஹி.. அதிகம்னா ரொம்ப அதிகமில்லே ஜெண்டில்மேன்.. என்னையும் சேர்த்து ரெண்டு பேர். நண்பர் ஆளவந்தான் இங்கே வந்திருக்கிறார். என்னமோ வேலையாம், அது ரொம்ப ஜாஸ்தியாம். அதனால் கொஞ்ச நாளா எதுவுமே எழுதலியாம். (ஆமா.. வேலைன்னா என்ன?!!) ஆளவந்தான் அண்ணே.. நம்ம கிராமத்து பேரை நிலைநாட்ட வேணாமா.. சீக்கிரமா மறுபடி எழுத ஆரம்பிங்க...

*****

என்னை மாதிரி வெளிநாட்டுலே இருக்குறவங்களுக்கு சென்னையில் (அல்லது அவங்கவங்க ஊரில்) என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்படுது - பாலம் வந்துடுச்சா - பைபாஸ் ரோடு போட்டுட்டாங்களான்ற கேள்விகள் இருக்கும். என்னைப் பொருத்தவரை தென்சென்னையில் என்ன நடக்குதுன்னு தேடிக்கிட்டே இருப்பேன். இப்படி எல்லா தகவல்களையும் ஒரே இடத்துலே கிடைக்கறதுக்கு இங்கேதான் போவேன். பல்வேறு தலைப்புகள்லே மக்கள் பேசிக்கிட்டே இருக்காங்க. எனக்கு வேண்டிய தகவல்களுக்கு கேள்வி கேட்டா யாராவது ஒருத்தர் பதிலும் சொல்றாங்க. நல்லா இருக்கு.

*****

கதை நேரத்துலே என்னோட திறமையை முன்னாடியே சொல்லியிருக்கேன். இங்கே இருக்கு. (சகோதரி ரம்யா -> ப்ளீஸ் ஸ்டாப் த சிரிப்பு!). இதோட அடுத்த கட்டம் என்னன்னா, ஊர்லே இருக்கும் ‘பெரிசுங்க' தொந்தரவு தாங்கமுடியாமே புராணக் கதைகள் சொல்லலாம்னு முடிவு பண்ணோம்.

ஹிஹி. அதுக்கு முதல்லே நமக்கு தெரியணுமே. ச்சின்ன வயசுலே படிச்சது
எல்லாம் மறந்து போயே போச்சு!. ரெண்டு புத்தகத்தை வாங்கி முதல்லே நாங்க படிச்சி அப்புறம் சஹானாவுக்கு சொல்லலாம்னு ஆரம்பிச்சா... வந்த ஏகாகூடமான சந்தேகங்களைக் கேட்டு இப்பல்லாம் நான் சீக்கிரம் தூங்கிடறேன். கொர்..கொர்..

1. மேலே அவங்களுக்கெல்லாம் குளிராதா? ஒண்ணுமே (சட்டை!) போட்டுக்காமே நிக்குறாங்களே?

2. தேவர்கள் நல்லவர்கள்னு சொல்றீங்க. அவங்க எதையும் 'share' பண்ணாமே, கெட்டவர்களோட எதுக்கு எப்ப பாத்தாலும் சண்டை போடறாங்க?

3. கடவுளுக்கே ஒரு பெரிய கயிறு கிடைக்கலியா? ஏன் பாம்பை எடுத்து கடையணும்?அந்த ஆமை வேறே.. பாவம்.

4. அவங்கவங்க (கடவுள்கள்!) சிங்கம், பாம்புன்னு வெச்சிருக்காங்க. நான் ஒரு ச்சின்ன பூனைதானே கேக்குறேன். எனக்கு வாங்கித் தர மாட்டேன்றீங்க. ஏன்?

5. தசரதனுக்கு மூணு wife-ஆ? (உண்மையான நம்பரை நான் சொல்லவில்லை!). அது எப்படி?

இதெல்லாம் ஒரு சாம்பிள்தான்.. அவ்வ்..

*****

கடைசி மேட்டருக்கு மட்டும் பின்னூட்டம் போட்டு தப்பிச்சிடாதீங்க... அப்புறம் முதல்லேந்து படிக்கலேன்னு கண்டுபிடிச்சிடுவேன். ஆமா..

*****

Read more...

Tuesday, December 22, 2009

ஈரோடு சங்கமம், டாக்டர் விஜய், FeTNA-2010 மற்றும் சில...

மறுபயனாகு கூறுகள் - மென்பொருள் துறையில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒன்றுதான் இது. ஆங்கிலத்தில் - Reusable Components.

ஒரே மாதிரி வடிவமைப்போ, மென்பொருள் ஆணைகளோ பலமுறை பயன்படுத்தும் நிலை வருமாயின், முன்னால் செய்து வைத்த வேலையிலேயே மிகச்சிறிய அளவுக்கு நகாசு வேலை செய்து - அப்படியே
பயன்படுத்துவதற்குப் பெயர்தான் மறுபயனாகு கூறுகள்.

புதிதாக ஒன்றை உருவாக்கும் நேரம், உழைப்பு அதற்காக ஆகும் செலவு இவை அனைத்தும் மிச்சமாகையால், இந்த மாதிரியான மறுபயனுக்கான வேலைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பல நிறுவனங்களில் சிறப்பு
பரிசுகளைக் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

இப்படி ஒரு துறையில் ஊக்கப்படுத்தும் ஒரு வேலையை, இன்னொரு துறையில் ஒருவர் பயன்படுத்தினால் - அவரை இந்த உலகம் தூற்றுகிறது. வாருகிறது. சேற்றை அள்ளி பூசுகிறது.

யார் அவர்? அது என்ன துறை? விடை இடுகையில்.

*****

ஈரோடு சங்கமம் தொடர்பான இடுகைகளை படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. ஒரு மிக நல்ல ஆராக்கியமான கூட்டத்தை நடத்திய ஈரோடு மற்றும் தமிழக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டியது நம் கடமை. நீண்ட நாள் நிலைத்து நிற்கும்படியான சிறுசிறு ப்ராஜெக்டுகளை கண்டுபிடித்தால் - உடலால் உதவிட முடியாத வெளிநாட்டிலிருக்கும் என் போன்றவர்கள் கண்டிப்பாக பொருளுதவி செய்வோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

********

குளிர் இங்கே வாட்ட ஆரம்பித்துவிட்டது. போன வாரயிறுதியில் 10"க்கு பனி வேறு.

வெளியில் போகும்போது அடுக்கடுக்கா ஆடைகளை போட்டுக் கொண்டு, கொலை செய்யப் போவதைப் போல், முகத்தை மூடும் மங்கி குல்லா (அதுக்கு சரியாத்தான் பேரு வெச்சிருக்காங்கன்னு வீட்லே சொல்றாங்க!), கையுறை இதையெல்லாம் மாட்டிக் கொண்டு - மறுபடி வீட்டுக்கு வந்து இதையெல்லாம் (எல்லாத்தையும்னா, எல்லாத்தையும் இல்லேப்பா!!!) கழட்றதுக்கே நேரம் சரியா போயிடுது. இதுலே எங்கே பதிவு, இடுகை, பின்னூட்டமெல்லாம்!!!.

குளிரினால் பெரிய உபயோகம் என்னன்னா (இதெல்லாம் போன வருடமே சொன்னேன்னு நினைக்குறேன்!!!) - சட்டையை நெருப்புப் பெட்டியில் தேய்க்க வேண்டாம், அங்கங்கே கிழிஞ்சி இருந்தாலும் பரவாயில்லே, சொல்லப் போனா சட்டையே வேண்டாம் - அட. மேலேதான் குளிராடை (ஸ்வெட்டர்) போட்டிருப்போமே!!!.

*****

ஃபெட்னா-2010னுக்கான (FeTNA-2010) திட்டமிடும் பணிகள் துவக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு திட்டக்குழுக்களில் உதவிட தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். இங்கிருக்கும் நண்பர்கள் - உதவிட
நினைத்தால் சொல்லுங்கள். (ஃபெட்னா பற்றிய விவரங்களுக்கு www.fetna.org பார்க்கவும்).

*****

மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு இன்னேரம் விடையை கண்டுபிடிச்சிருப்பீங்க. அது டாக்டர் விஜய். வேணும்னா முதல் பத்தியை மறுபடி படிச்சிக்கோங்க. நான் இங்கே அதை விளக்கவில்லை.

*****

வீட்டில் காபி என்று கொடுத்த டிகாக்ஷன்
காலை அலுவலகத்துக்கு புறப்படும் டென்ஷன்

முன்னால் செல்லும் வண்டியின் புகை
சடாரென்று கடக்கும் பாதசாரியின் கண்ணில் தெரியும் பகை

சரியாக நாம் வரும்போது மாறும் சிவப்பு
மேலே கூறிய எல்லாவற்றாலும் சரியான கடுப்பு

இவற்றிற்கெல்லாம் இருக்கு உங்ககிட்டே மாத்திரை
இந்த இடுகைக்கு நீங்க போடும் ஓட்டு முத்திரை

ஓட்டு போடுவோம்! பயன் பெறுவோம்!!!
(நான் என்னைச் சொன்னேன்!!!)

******

Read more...

Wednesday, December 2, 2009

Fetna-2010 மற்றும் நொறுக்ஸ்...

குளிர் காலம் ஆரம்பிச்சிடுச்சு இங்கே. தங்ஸாலெ சஹானாவை பள்ளிக்கு நடத்தி கூட்டிட்டு போகமுடியல. காலையில் 9 மணிக்கு நாந்தான் போய் விடவேண்டியிருக்கு. அதுக்காக மேனேஜர்கிட்டே இனிமே காலையில் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும்னு சொல்லப் போனேன்.

மேனேஜர்: லேட்டுன்னா, எப்போ வருவே?

நான்: கரெக்டா 9.10க்கு தினமும் வந்துடுவேன்.

மேனேஜர்: ம்? (கோபத்தோடு என்னைப் பார்க்க...)

நான்: (பின்மண்டையை சொறிந்தவாறே) : கோபப்படாதீங்க. தினமும் சரியா 9.10க்கு வந்துடுவேன். வேலையை சரியா செய்துடறேன். பாவம் தங்ஸ் குளிர்லே நடக்க முடியல. அதனால்தான்...

மேனேஜர்: இவ்ளோ நாளா எத்தனை மணிக்கு ஆபீஸ் வந்துட்டிருந்தே?

நான்: அது வந்து.. அது வந்து..

மேனேஜர்: நான் சொல்றேன்... 9.30.. எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டிருந்தியா?... @#$%% @#%@@

(இன்னும் அங்கேயே நின்னுக்கிட்டிருக்க நான் என்ன லூஸா... எஸ்கேப்....)

***********

போன வாரம் இங்கே நன்றி சொல்லும் நாள். அதாங்க Thanksgiving day. அன்னிக்கு ஒரு நாளு தொலைக்காட்சிப் பெட்டி முதல் சாம்பார் கரண்டி வரை எல்லாம் விலை குறைப்பு (அப்படின்னு சொல்லி) செய்து விப்பாய்ங்க.

வைகுண்ட ஏகாதசி அன்னிக்கு விடியற்காலையில் சொர்க்க வாசல் திறக்கறதுக்கு முன்னாடி கோயில்லே மக்கள் கூடறா மாதிரி, இங்கேயும் எல்லா கடைகளுக்கு முன்னாடி கும்பல் சேந்துடுவாங்க. பொருட்களை வாங்க வர்றவங்களுக்கு நடுவே - வாங்கறவங்களை பாக்க வர்றவங்கன்னு சரியா கும்பல்.

நாங்களும் வருஷம் தவறாமே காலையில் 4.30 மணிக்கு குளிர்லே நண்பர்களோட எல்லா கடைகளுக்கும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம்.
அப்படி இந்த வருடம் வாங்கின பொருட்கள்.

ஒரு 42” வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
ஒரு மைக்ரோவேவ் பெட்டி
ஆப்பிளின் பாட்டு கேட்கும் குட்டி பெட்டி
நாலைஞ்சு எலிக்குட்டி, விசைப் பலகை
மற்றும் பல பொருட்கள்.

இவ்வளவையும்... வெயிட் வெயிட்... நான் வாங்கலை. என் கூட வந்த நண்பன் வாங்கினான். அவன்கிட்டேந்து வாங்கி நான் கார்லே வைச்சேன். அவ்வளவுதான்...

**********

வட அமெரிக்கப் பேரவையின் 2010ஆம் ஆண்டுக்கான விழாவின் ஆரம்பம் வரும் டிசம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. இடம், நேரம் மற்றும் விவரங்கள் கீழே.

அண்ணன் பழமைபேசி ஏற்கனவே விவரமா இடுகை இட்டுட்டாரு. ஒருக்கா படிச்சிக்கோங்க.

கூட்டத்திற்கு நான் போகலாம்னு இருக்கேன். மக்கள் யாராவது வர்றீங்கன்னா சொல்லுங்க. அட தப்பிச்சி போகறதுக்கு இல்லீங்க. பாக்கறதுக்கு வசதியா இருக்கும்னு சொல்ல வந்தேன்.

December 12 th, 2009

4.30 p.m

Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

Admission: Free for donors, $ 20 per head for non-donors*

RSVP: by Dec 5th 2009, by email [N Kuppuraj, nkuppuraj@gmail.com]

***********

இந்த சிச்சுவேஷனை உன்னிப்பா கவனிங்க..

இரவு சுமார் 8 மணி இருக்கும்.
அன்று முழு நிலவு நாள்.
நிலவு வெள்ளையா பிரகாசமா மேலே.
நல்ல இலையுதிர் காலம். எல்லா மரமும் மொட்டையா இருக்கு.
மொட்டையா இருக்குற மரக்கிளைகளுக்கு நடுவே நிலவின் வெளிச்சம் பாய்ந்து கொண்டிருக்கிறது.
முன்னே ஒத்தையடிப் பாதை.
காரில் நானும் தங்ஸும் தனியே போயிட்டிருக்கோம்.
பாதையில் எங்க காரைத் தவிர வேறு வண்டிகளே இல்லை.

இந்த சிச்சுவேஷன்லே உங்களுக்கு என்ன பாட்டு தோணும்?

எனக்கு...

ஒரு பழைய படத்துலே... சிவக்குமார் & சரிதா..சரிதாவுக்கு ஏதோ பிரச்சினை. சிவக்குமார் ஒரு பாட்டு பாடி அவங்களை தூங்க வைப்பாரு.அப்போ ஒரு வெள்ளையம்மா - மொட்டை மரங்களுக்கு நடுவே - சர்சர்ருன்னு சுத்தி வந்து ஆடுவாங்க.

ஒரு தடவை பக்கத்துலே உக்காந்திருந்த தங்ஸை திரும்பி பாத்தேன்.

அதுக்கப்புறம் வீடு வந்து சேர்றவரைக்கும் அவங்களை பாக்கலை...

***********

Read more...

Friday, November 13, 2009

நொறுக்ஸ் - வெள்ளி - 11/13/2009

போன மாதம் ஒரு நாள் எங்க மாநில தமிழ் சங்கத்திலே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - ஒரு இன்னிசை கச்சேரியும், ஈரோடு மகேஷின் சிரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஈரோடு மகேஷ் : நல்லா சிரிப்பாத்தான் பேசுறார். வருடா வருடம் இங்கே வராப்பலயாம். இந்த வருடம்தான் எங்களுக்குத் தெரியும். வழக்கம்போல் எதையும் தயார் செய்து வைத்துக் கொள்ளாமல், அந்தந்த சமயத்துக்கேற்ப ஜோக்குகளை அள்ளித் தெளித்து கூடவே நல்ல மேற்கோள்களோடு பேசினார்.

நடிக்க வரலேன்னா என்ன செய்துட்டிருப்பீங்க? கலையுலகத்துலே உங்க லட்சியம் என்ன? - நடிகைகளைப் பார்த்து இப்படி வரலாற்று சிறப்புமிக்க கேள்விகளைக் கேட்கும் தொகுப்பாளர்களைப் போல் - இடைவேளையில் வெளியே வந்த மகேஷை மடக்கி நாங்களும் கேள்விகள் கேட்டோம். எப்படி எதையும் தயார் செய்துக்காமே கடகடன்னு ஜோக்கா பொளந்து கட்றீங்க? - கார்ல் மார்க்ஸையெல்லாம் எப்படி மேற்கோள் காட்டி பேசறீங்க? - இன்னுமா உங்களுக்கு கல்யாணம் ஆகலே?.

அரங்கத்தில், நாங்கள் எதிர்பார்க்காத - தங்கமணி எதிர்பார்த்த - ஒரு கடை இருந்தது. ப்ரின்ஸ் ஜுவல்லரி. நிகழ்ச்சி ஆரம்பிக்க கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க - இங்கே தங்ஸும் அவர் நண்பிகளும் ப்ரின்ஸில் நின்னுட்டு வெளியே வரவே மாட்டேன்னுட்டாங்க.

கடை எங்கும் போகாது, நிகழ்ச்சி முடிஞ்சதும் நிறைய வாங்கித் தர்றோம்னு (ஏமாத்தி) உள்ளே கூட்டிட்டு போய் - வெளியே வரும்போது (10 மணி) - நல்ல வேளை, கடை மூடியிருந்தது.

கடை மட்டும் திறந்திருந்தா, எங்க நிலைமை ரொம்பவே கஷ்டமாயிருக்கும்!!!






**********

சஹானாவோட வகுப்பில் வாரந்தோறும் ஒருவரை - student of the week - அப்படின்னு தேர்ந்தெடுக்குறாங்க. சத்தம் போடாமே, சொல்ற பேச்சை கேட்டு, நல்ல புள்ளையா நடக்குறவங்களுக்கு இந்த 'விருது' கிடைக்குது. சில வாரம் யாருக்குமே கிடைக்காமையும் இருக்குது.

இன்னிக்கு அவனுக்கு கிடைச்சுது, இன்னிக்கு அவளுக்கு கிடைச்சுதுன்னு அப்பப்போ சொல்லிட்டே இருப்பாங்க.

இப்படியே எல்லாருக்கும் கிடைக்குதே. உனக்கு எப்போ அந்த விருது கிடைக்கும்? அப்படின்னு போன வாரம் கேட்டேன். கூடவே - மிஸ் சொல்ற பேச்சை கேட்டு நடந்தாதானே கிடைக்கும்? எப்பவும் கத்திக்கிட்டே, பக்கத்தில் இருப்பவரோட சண்டை போட்டுட்டிருந்தா எப்படி விருது கிடைக்கும்? அப்படின்னேன்.

அதுக்கு சஹானா - அதெல்லாம் ஒண்ணுமில்லே. எல்லாருக்கும் வரிசையா கொடுத்து வர்றாங்க. ஸ்கூல் (இந்த வருடம்) முடிய இன்னும் நிறைய நாளிருக்குல்ல. கண்டிப்பா எனக்கும் ஒரு நாள் குடுப்பாங்க - அப்படின்னுட்டாங்க.

ரொம்ம்ம்ப தெளிவா இருக்காங்கப்பா!!

********

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் (Fetna) அடுத்த ஆண்டு விழா ஜூலை 2010ல் கனெக்டிகட்டில்தான் நடைபெறுகிறதாம். அரங்கம் நம்ம வீட்டு பக்கத்திலேதான். சரி ஒரு மூணு நாள் அங்கனயே டேரான்னு முடிவு பண்ணியிருக்கோம்.

*******

சமீபத்தில்(!!) வெளியான ஆறு (சூர்யா, திரிஷா) படத்தை வெகு சமீபத்தில்தான்(!!) பார்த்தேன். ஐசுவர்யாவும் சரி, மத்தவங்களும் சரி - படத்துலே கெட்ட வார்த்தைகளை சரமாரியா பயன்படுத்தறாங்க. cut எதுவுமில்லாமல் எல்லாமே தெளிவா கேக்குது வேறே. அதையெல்லாம் இப்போ கெட்ட வார்த்தையில்லேன்னு சொல்லிட்டாங்களா என்ன?

**********

மீண்டும் சஹானா!!!

பொம்பள புள்ளன்றது சஹானா விஷயத்துலே சரியாத்தான் இருக்கு. ஸ்கூல்லே, தொலைக்காட்சியில் இங்கேல்லாம் பாத்து - நகப்பூச்சு, உதட்டுச் சாயம், உயர்-செருப்பு இதெல்லாம் பெண்களுக்கு கட்டாயம்னு அம்மணி தெரிஞ்சிக்கிட்டாங்க. (கேட்டாலும் வாங்கிக் குடுக்கலைன்றது வேற விஷயம்!!).

எந்த கடைக்குப் போனாலும், பெண்களுக்கான பகுதிக்கு சென்று - எந்தெந்த பொருட்களை எங்கெங்கே(!!) தடவிக்கணும்/போட்டுக்கணும்னு விளக்குறாங்க.அதோட இல்லாமல், அந்த அக்காவை பாரு, அந்த மாதிரி காதுல மாட்டறது வாங்கணும், இந்த ஆண்டியை பாரு இந்த மாதிரி செருப்பு வேணும்னெல்லாம் கேக்குறாங்க.

அதனால் இப்பல்லாம் எங்கே போனாலும், நான் அங்கிருக்கும் அக்காவையும், ஆண்டியையும் தைரியமாய்(!!) பாக்க முடியுது. தங்ஸ் கேட்டாலும், நம்ம பாப்பாவுக்காக - அவங்க வளையலையும், கம்மலையும் பாத்தேன். அவ்வளவுதான். வேறொண்ணுமில்லைன்னு சமாளிச்சிடறேன்.. ஹிஹி..

******

Read more...

Tuesday, September 29, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 09/29/09

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜோதா அக்பர் திரைப்படம் பார்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டிருந்த நண்பரை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். போகும்போது, போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த நண்பர் கார் மீது மற்றொரு கார் இடித்து விபத்து. அன்றிலிருந்து, எங்கு சென்றாலும் என்னை அழைப்பதை குறைத்துக் கொண்டார் அந்த நண்பர். அந்த விபத்துக்கு நானும் ஒரு காரணம்தான் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.


அதே போல், சென்ற மாதம் சஹானாவின் பிறந்த நாள் விழாவுக்காக, பக்கத்து ஊரிலிருந்து ஒரு நண்பரை அழைத்திருந்தோம். வர்றேன், வந்துட்டே இருக்கேன்னு சொன்ன நண்பர் கடைசி வரை வரவேயில்லை. பிறகு பார்த்தால், எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது - விபத்து. கவனக்குறைவால் இவர் வேறொரு வண்டியில் போய் இடித்துவிட்டாராம்.


இந்த விபத்துக்கு நீ பொறுப்பு கிடையாது. உங்க வீட்டுக்கு வரும்போது நடந்திருந்தாலும், என்னுடைய தப்புதான் அது - என்று நண்பர் கூறிக்கொண்டிருந்தாலும், மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. சில நாட்களுக்கு என்ன செய்வதென்றும் புரியவில்லை...:-((


*********


தினமும் காலையில் நடக்கும் 5.30 மணி மீட்டிங்கில், கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் கலந்து கொள்ளவில்லை. தூக்கத்தில் 6.15 மணியைப் பார்த்து, 5.15தானே ஆகுது, இன்னும் பத்து நிமிடம் தூங்கலாம்னு தூங்கி, எழுந்து பாத்தா, மணி 6.45 ஆகிவிட்டிருந்ததே காரணம்.


பஞ்சும் நெருப்பும் பக்கத்து பக்கத்துலே இருந்தாக்கூடப் பரவாயில்லே... இந்த அஞ்சும் ஆறும் ஒரே மாதிரி இருக்கிறதை - ஒரு அரசாணை போட்டு மாத்தமுடியுமான்னு கேட்டு சொல்லுங்கப்பா.... அவ்வ்வ்..


*********


ரொம்ப நாள் கழிச்சி தங்ஸுக்கு மிகவும் முக்கியமான ஒரு சந்தேகம் வந்தது. எங்களுக்கு தாலி, மெட்டி இந்த மாதிரியெல்லாம் இருக்குற மாதிரி, ஆம்பளைங்களுக்கு ஒண்ணும் இல்லையே? அவங்களுக்கு கல்யாணமாயிடுச்சுன்னு எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேட்டுட்டாங்க..


பொம்பளைங்க ஷாப்பிங் போனாலோ, அல்லது சும்மாவே வெளியே போனாலோ தனியா போறீங்க. அப்போ உங்களுக்கு கல்யாணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்கத்தான் அதெல்லாம். ஆம்பளைங்களை கொஞ்ச நேரமாச்சும் தனியா விடறீங்களா? இல்லையே? எங்கே போனாலும் கூடக்கூட வந்துடறீங்கல்லே... அப்புறம் எங்களுக்கு எதுக்கு தனியே ஒரு குறியீடு? பொண்டாட்டி கூட இருந்தா, கல்யாணமாயிடுச்சுன்னு நினைச்சிக்க வேண்டியதுதான் - அப்படின்னு சொன்னேன்.


சரிதானே?


*********


சஹானா பாட்டுக்கு பாடகி சின்மயிக்கு விருது கிடைத்திருக்காம். இதில் எனக்கு ஆச்சரியமேயில்லை. சஹானாவுக்குதான் பரிசு கிடைக்கும்னு முன்னாடியே தெரியும். பின்னே சத்யா இல்லேன்னா மகேஷ்னு பாட்டு எழுதியிருந்தா அதுக்கெல்லாம் பரிசு கிடைக்குமா என்ன?... :-))

என்ன மகேஷ் அண்ணே, சரிதானே?

********

இந்தியாவிலிருந்து திரும்பி வரும்போது பத்து கிலோவுக்கு புத்தகங்கள் வாங்கி வந்திருந்தேன். சுஜாதா, சாரு, ஜெயமோகன், பாரா, ஜெஃப்ரி ஆர்ச்சர் இவங்களையெல்லாம் விமானத்தில் படிக்க ஆரம்பித்து, இங்கே வீட்டில் ஓய்வறைக்கு உள்ளே, வெளியே, துணி துவைக்கப் போகும் இடத்தில் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில் - இங்கெல்லாம் படித்துப் படித்து, முடித்தேன்.

இனிமே 'உள்ளே' சுடோகுதான் போடணும்.... :-((

******

டாக்டர் விஜய் மட்டும்தான் அவரோட அரசியல் பிரவேச முடிவை மாத்திக்க முடியுமா என்ன?... நான்கூட சென்ற இடுகையில் கூறியபடி - நபோஒ - பதிவர்களின் பார்வையில் - இடுகையை நேரமின்மையால்
எழுதவில்லையென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.


இருந்தாலும், அடுத்த வருடம் தமிழக அரசின் சார்பில் சிறந்த படமாக உபோஒ தேர்ந்தெடுக்கப்படப்போவதால், அதைப் பற்றி எழுதலேன்னாலும், அதோட உல்டா நபோஒ -வைப் பற்றி ஏதாவது எழுதியே
ஆகவேண்டுமென்பதால் ... இப்படியெல்லாம் பின்னூட்டம் வந்திருந்தால் எப்படியிருக்கும்னு ஒரு சிறு கற்பனை...


**


இது ஒரு சிறந்த ஆணாதிக்கப் பதிவு. இதையேதான் நாங்க ஆட்டோகிராஃப் படத்துலேந்து சொல்லிட்டு வர்றோம். இதையே ஒரு பெண் தொலைபேசி, வீட்டிலே ஆம்பளை இருக்கறதா பதிவு எழுதக்கூடாதா... இல்லே அப்படி எழுதினாதான் நல்லா இருக்காதா...


ஹாஹா... நண்பா.. மத்தியானம் 12 மணிக்கு எந்த பெண் வீட்டு வேலை பாக்கறாங்க... அப்பதான் டிவிலே சீரியல் ஓடிட்டிருக்குமே.... ஒரு வேளை விளம்பர இடைவேளையில் அப்படி நடக்கும்னு எழுதியிருந்தீங்கன்னா... ஓகே...


சுத்தமா ஒத்துக்கவே முடியாத பதிவு... ஒரு புருஷன் எப்படிப்பட்ட கொம்பனா இருந்தாலும், எப்படித்தான் குரலை மாத்தி பேசினாலும், அவனோட மனைவியால் உடனடியா கண்டுபிடிக்கப் படுவான். இங்கே
அந்தப் பெண் அப்படி கண்டுபிடிக்கலேன்றதாலே, இந்த பதிவே டோட்டல் பீலா.... வர்ட்டா...


தலைவா... அவன் வீட்டு சமையல்லேந்து ஒரு நாளைக்கு தப்பிச்சிட்டான்... ஆனா மறுபடி அடுத்த நாள் மாட்டித்தானே ஆகணும்... என்னவோ போங்க...


அவரை எங்க வீட்டுக்கும் தொலைபேசி இப்படியே செய்யச் சொல்லுங்களேன்...


பொம்பளைங்கன்னாலே வீட்டு வேலை செய்யத்தான்னு முடிவு பண்ணிட்டீங்களா... இது வேலைக்காகாத பதிவு...


இந்த பதிவுலே அந்த எதிர் வீட்டு ஜன்னலுக்கு என்ன வேலைன்னே தெரியல. கடைசி வரை, அவங்களுக்கு இதனால் என்ன நன்மைன்னே புரியல... சும்மா அவங்க கால்ஷீட் கிடைச்சிடுச்சுங்கறதால் அவங்களையும் கதையில் சேத்துக்கிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.... சரிதானே?

************

Read more...

Friday, August 21, 2009

சென்னையில் 3வது வாரம் - போளி டோண்டு பாக்கமுடியல!!!

சரி சரி. தலைப்பைப் பாத்துட்டு வந்தவங்க எல்லாம் வாங்கப்பா... உங்களுக்கான மேட்டர் இந்த இடுகையில் எங்கேயோ இருக்கு. அப்பத்தானே முழுக்க படிப்பீங்க?

****

உண்மைத்தமிழன் அண்ணாச்சி மற்றும் சில பதிவர்களை மாதிரியே - எங்க வீட்டிலும் ஹாத்வே இணைய இணைப்பு இருந்தது. ஒரு சுபமுஹூர்த்த நன்னாளில் அவர்கள் தொழிலையே விட்டுவிட்டு ஓடிவிட - அடுத்த இணைப்பு கொடுக்க 10-15 நாட்கள் ஆகும்னு மற்றவர்கள் சொல்லிவிட - நான் தினமும் அரை மணி நேரத்துக்கு மட்டுமே கடைக்குப் போய் இணையத்தை மேய வேண்டியதாயிற்று. நெம்ப கஷ்டம்!!!

********

சென்னையில் இருக்கும்போது, ஒரு பதிவர் நண்பர் என்னை கைப்பேசியில் கூப்பிட்டு - எங்கே இருக்கீங்க, பின்னணியில் இவ்ளோ அமைதியா இருக்கே... தூங்கிட்டிருந்தீங்களா? - அப்படி இப்படின்னு கேட்டுட்டே இருந்தாரு. பொய் சொல்லவே பிடிக்காத எனக்கு அப்போ பொய் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம். அடுத்த பத்தி படிச்சீங்கன்னா, நான் எங்கே இருந்தேன்னு புரியும்.

அலுவலகத்தில் ஒரு பெரிய மீட்டிங். தொலைபேசியிலும் (கான்ஃபரென்ஸில்) நிறைய பேர் இருந்தாங்க. ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று தொலைபேசியில் - ஓய்வறையில் தண்ணீர் ஃப்ளஷ் (flush) செய்யும் சத்தம் கேட்டது. யாரோ ஒருவர் ஓய்வறையில் இருந்துகொண்டே மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தார் போல.

எங்க தலைவர் எங்களிடம் - நல்லவேளை, எல்லாரையும் வீடியோ கான்ஃப்ரன்ஸில் வாங்கன்னு நாம கூப்பிடலே. நாறிப்போயிருக்கும் - அப்படின்னவுடன், சிரித்து சிரித்து சிரித்துக் கொண்டேயிருந்தோம்.

வெ*பூ, இப்ப தெரிஞ்சுதா, அப்ப நான் எங்கே இருந்தேன்னு!!!

*****

திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு அறிவிப்பு பலகை வெச்சிருக்காங்க. அந்த பலகையில் - தஞ்சாவூருக்கு இன்னும் இவ்ளோ தூரம் இருக்கு, இப்போ இந்த ஊர்லே இருக்கோம் - இப்படியெல்லாம் விஷயம் இருக்கும்னு நினைச்சீங்கன்னா, எச்சி போட்டு உடனே அதை அழிச்சிடுங்க. அப்படி ஒரு 'தூர வழிகாட்டி' எங்கேயுமே காணலே.

அப்படின்னா அந்த பலகையில் என்ன எழுதியிருக்காங்கன்னு கேக்குறீங்களா - “ நான், நீ என்றால் உதடு ஒட்டாது. நாம் என்று சொன்னால் மட்டுமே உதடு ஒட்டும். நெடுஞ்சாலைத் துறை” அவ்வளவுதான். இதையே திரும்பத் திரும்ப நெடுஞ்சாலை முழுக்க மஞ்ச கலர்லே எழுதி வெச்சிருக்காங்க.

எனக்கு தோன்றிய கேள்விகள்:

1. குடும்பக் கட்டுப்பாடு, பெண் சிசுக்கொலை, மரம் வளர்ப்போம் - இதைப் பற்றி ஒரு வாக்கியத்தை எழுதி வைத்தாலாவது ஏதாவது பயன் கிடைத்திருக்குமென்று நம்பலாம்.

2. கலைஞர் மொத்தமே இந்த ஒரு பொன்மொழியைதான் சொல்லியிருக்கிறாரா? நாம் தெரிந்து கொள்வதற்காக வேறு எதையுமே சொல்லவில்லையா?

3. இதே அறிவிப்பு பலகைகளில், அடுத்த ஊர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று ஒரு ச்சின்ன எழுத்திலாவது எழுதியிருக்கலாமே?

4. இவ்வளவு செலவு செய்து வைத்த இந்த பலகைகளை - நாளை ஒரு வேளை ஆட்சி மாற்றம் வந்தால், விட்டு வைப்பார்களா?

5. இதே பழமொழியை ஒரு வேளை அம்மா ஆட்சிக்கு வந்தால் எப்படி உல்டா செய்து வைப்பாங்கன்னு ஒரு கற்பனை. ”சென்னை, பெங்களூர்லே ஓய்வு எடுத்தால் அது ஓய்வு கிடையாது. கோட நாட்டில் ஓய்வெடுத்தால் மட்டுமே அது ஓய்வு”.

*****

ஊருக்கு வந்தப்பிறகு எந்த பதிவரை தொலைபேசி எங்க ஏரியா நங்கநல்லூர்னு சொன்னாலும், உடனே அவங்க கேட்பது - டோண்டு ஐயாவை பாத்தீங்களா?

சரின்னு ஒரு நாள் அவருக்கு தொலைபேசினேன். அடுத்த நாள் நடைப்பயிற்சிக்கு வரும்போது வீட்டுக்கு வந்துடறேன்னு சொன்னவர், அதே மாதிரி காலை சுமார் 7.45க்கு வந்துவிட்டார்.

திருவல்லிக்கேணி, நங்கநல்லூர், நோய்டா, எங்கே பிராமணன், மொழிபெயர்ப்பு, ஃப்ரெஞ்ச், இஸ்ரேல் - அப்படி இப்படின்னு பல்வேறு விஷயங்களைத் தொட்டு படபடவென்று பேசிக் கொண்டிருந்தார் இந்த 60+ வாலிபர். பல்வேறு பதிவுகளில் படித்த மாதிரியே - செய்யும் தொழிலிலும், பதிவுகளிலும் நல்ல ஈடுபாட்டோடு இயங்கி வரும் இவரிடம் பேசும்போது - இவருடைய உற்சாகம் கண்டிப்பாக நம்மையும் பற்றிக்கொள்ளும்.

என்ன ஒரே ஒரு ஆசை இருந்தது. அவர் வரும்போது ‘போளி' (ஒரு இனிப்பு சாப்பாட்டு ஐட்டம், தெரியும்தானே?) வாங்கி அவர்கையில் கொடுத்து - ஹையா ஐயா, நான் ‘போளி' டோண்டுவை பாத்துட்டேன்னு சொல்ல நினைத்தேன்.

ஹிஹி.. உலகமறிந்த நம் ஞாபகமறதியால் அதை வாங்கி வைக்க மறந்துவிட்டேன்...

அதனால் என்ன ... அடுத்த தடவை வரும்போது இதை செய்துவிட வேண்டியதுதான்.

*****

Read more...

Friday, July 17, 2009

நொறுக்ஸ் - சென்னையில் முதல் வாரம்!!!

ஊருக்கு வந்த இரண்டாம் நாள் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் சஹானா கேட்ட முதல் கேள்வி -- கடைசியில் இருக்கு.

*****


சென்னை நகரம் ஒரு பெரிய்ய்ய வீடியோ கேம்!!!

பைக் மட்டுமில்லே, கார் ஓட்டுறவங்களும் வீடியோ கேம்லே வண்டி ஓட்டறா மாதிரி வளைச்சி வளைச்சி வேகமா ஓட்றாங்க. சைதாப்பேட்டையிலிருந்து ராஜ் பவன் போற சாலையில் ஐந்தாறு லேன்கள் இருக்குன்னு நினைக்குறேன். ஒரு குட்டி கார் சாலையில் வலது பக்கத்திலேந்து சர்ர்ருன்னு இடது பக்கம் வரைக்கும் போய் மறுபடி இந்த பக்கம் வந்து... எங்க கண்லேந்து மறைஞ்சியே போயிடுச்சு. பல பேரு அந்த மாதிரிதான் ஓட்றாங்க.

நீங்க எங்கேயாவது பராக்கு பாத்துக்கிட்டே போவீங்க. எவனாவது வந்து இடிச்சிடுவான். அதனால் இருக்கற ஒரு மாசத்துக்கு பைக்கே எடுக்காதீங்கன்னு சொல்லிட்டாங்க தங்ஸ்.

*****


அப்போ நாந்தான் லூஸா!!!

இன்னொரு சமயம் போயிட்டிருக்கும்போது, பக்கத்துலேந்து அடிக்கடி ஒரு அக்கா எங்க ஆட்டோக்குள்ளே குதிக்க முயற்சி செய்துக்கிட்டிருந்தாங்க. என்னன்னு பாத்தா, அவங்க ஒரு பைக் பின்னாடி உக்காந்து போறாங்க. அந்த பைக் எங்க ஆட்டோவோட தோளோடு தோள் உரசிக்கிட்டு வருது. இந்த அக்காவும் எங்க ஆட்டோக்குள்ளே எட்டிப் பாத்து சினேகமா சிரிக்கிறாங்க, மணி கேக்குறாங்க, பாப்பா அழகா இருக்குன்னு சொல்றாங்க.

அவங்க பாதை மாறிப் போறதுக்கு முன்னாடி சொன்ன அந்த கடைசி வார்த்தைகள் மூலமாதான் நான் ரொம்ப நேரம் தனியா பேசிட்டிருந்தேன்னு புரிஞ்சுது...

அவங்க சொன்னது - “சரி நேர்லே பேசுவோம். வெச்சிரட்டா...”

*****


போன வாரம் ஒரு மினி பதிவர் நண்பர்கள் சந்திப்பு நடத்தி முடிச்ச கையோட இந்த வாரயிறுதியில் கோவை நண்பர்களை சந்திக்கப் போறேன்.

அடுத்த வாரயிறுதி (25,26) சொந்த வேலையா வெளியூர் போறதால், சென்னை நண்பர்கள் ஆகஸ்ட் 1,2 தேதிகள்லே ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணீங்கன்னா எல்லாரையும் பாக்க வசதியாயிருக்கும்.

*****


அனானிகளுக்கு ஆபீஸ்லே ஆணி அதிகமாகணும் ஆண்டவா. அப்பத்தான் அவங்க ஆட்டம் அடங்கும். அனைவருக்கும் அடிப்பதற்கு அருமையான அடுகைகள் அடிக்கும்

(ஹிஹி... எல்லாம் அ, ஆ-லேயே ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். முடியல. அதனால் வேணும்னே சில ஸ்பெல்லிங் மிஷ்டேக் பண்ணிட்டேன்... டென்சனாகாதீங்க!!!!).

*****


இந்த வண்டியில் ஏன் சீட் பெல்ட் இல்லே? - இதுதான் அந்த கேள்வி... அவ்வ்வ்வ்... முடியல....

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP