Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Thursday, August 13, 2009

சென்னையில் இரண்டாவது வாரம் (கோவை, திருப்பூர் விசிட்!)

வடிவேலுவை நல்ல்ல்ல்லவன்னு சொன்னவங்க மாதிரி - மொதல்லே ஒரு ஆறு பேரு திருப்பூர்லே... சுத்தி நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க... அப்புறம் பக்கத்து ஊர்லே (கோவை) இருக்கறவருக்கு தொலைபேசி - நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா. இங்க ஒருத்தன் மாட்டியிருக்கான்னாங்க. அவங்களும் - நாங்க எல்லாரும் இங்கேதாம் இருக்கோம். அவரை பஸ் ஏத்தி விடுங்க. நாங்க பாத்துக்குறோம்னாங்க. சரின்னு இவங்களும் பஸ்(லே) ஏத்தி அவங்களே டிக்கெட்டும் எடுத்து அனுப்பி வெச்சாங்க.. சரின்னு அங்கே போய் இறங்கினா.. அங்கே ஒரு பத்து பேரும்மா... மாத்தி மாத்தி பேசறாங்க...


இப்படி நகைச்சுவையா சொன்னாலும் நேர்லே பார்த்தேயிராத ஒருத்தனுக்காக (ஏன் பாக்க முடியல, கழுத்து வலியான்னு கேக்கப்படாது!), ஞாயிறிலும் வேலையில் பிஸியாயிருந்த திருப்பூர் நண்பர்கள் மற்றும் ஓய்வு நாளிலும் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்த கோவை நண்பர்கள் - எனக்காக சில மணி நேரங்கள் செலவழித்தது மனது நெகிழ்ந்தது.


இவர்களைப் பற்றி சில பாயிண்டுகள்... கோர்வையா எழுதாமே பின்னே முன்னேன்னு எழுதியிருக்கேன். ஏதாவது வித்தியாசம் காட்டணுமே!!!

பாசக்கார மனுசங்க. அப்படியே அன்பாலே நனைச்சிட்டாங்க... ஹிஹி அப்புறம் மழையிலும்.

விருந்தோம்பலுக்கு மறுபெயர் இவங்கதான். இவங்கள பாக்க வர்றவங்க தங்கள் பர்ஸை வீட்லேயே வெச்சிட்டு வந்துடலாம்... வெளியே எடுக்க விடவே மாட்டாங்க... :-)

கம்பங்கூழ். கேள்விப்பட்டு மட்டும் இருந்த இதை குடிக்கச் சொன்னாங்க. ஆஹா ஆஹா.. அற்புதமான சுவை. மறக்கவே முடியல.(செய்முறை இணையத்தில் கிடைக்குதான்னு பாக்கணும்!).

நான் பழகுவதற்கு ரொம்ப இனிப்பானவன்னு கோவையில் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. சந்திப்பு ஏற்பாடு செய்திருந்த பூங்காவில் ஏகப்பட்ட எறும்பு எங்களை சுத்தி!!! 'அவங்களாலேயே' வேறே இடம் தேடிப் போக வேண்டியதாயிற்று.

சஞ்சய் சுக்கு காப்பி(ன்னு) கொடுப்பாரு. (ஆனா அதை யாரும், இது உப்புமாவான்னு கேக்கப்படாது!!).

எனக்கு அல்வா கொடுக்கணும்னு கடைகளில் தேடியிருக்காங்க ஒரு சகோதரி. கருணை உள்ளம் கொண்ட கடைக்காரர் அதற்கு மறுத்துவிட்டதால், வேறு இனிப்பு ஐட்டங்களை வாங்கி வந்துட்டாங்க... அவ்வ்வ்... அடுத்த முறை வந்தா வீட்டுக்கே வரச்சொல்லியிருக்காங்க.. ஸ்பெஷல் அல்வா கொடுப்பாங்களாம்...

வந்துடறேம்மா... வந்துடறேம்மா... - இதையே ஒரு நூறு தடவை சொல்லிப்பாருங்க. என்னைப் பார்க்க ஊர் விட்டு ஊர் வந்திருந்த வால்பையன் அவரோட தங்ஸ்கிட்டே இப்படித்தான் வாங்கிக் கட்டிண்டிருந்தாரு.

திருப்பூர் மக்கள் - பதிவர் சந்திப்புக் குழுன்னே ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க.. அதுக்கு தலைவர், பொருளாளர் அப்படின்னெல்லாம் ஆட்களை நியமிச்சி, சந்திப்பின்போது பில் செட்டில் பண்ண பொருளாளர் பர்ஸில் கை வைச்சிடறாங்க!!!

எல்லாத்துக்கும் மேலே - (கோவை) பதிவர் சந்திப்பில் மொக்கையான விஷயங்களை பேசாமே - பல ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை விவாதிக்கிறார்கள். விரைவில் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம். வாழ்த்துக்கள் நண்பர்களே!

கடைசியானாலும் குறைவில்லாத ஹிஹி.. last but not least... பின்னிரவானாலும் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லையென்றால் மற்றவர்கள் உதவுவதும், யாராவது ஒருவருக்கு தொலைபேசினால் மற்ற நண்பர்களுக்கு கான்ஃபரன்ஸ் போட்டு உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதுமாக - கோவை பதிவர்கள் ஒரு நல்ல குழுவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு விஷயமே.

*****

Read more...

Tuesday, December 2, 2008

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 2 of 2





ட்விட்டர்: நம்ம ஊருலே குட் மார்னிங், குட் நைட்ன்னு எஸ்.எம்.எஸ் பண்ணிக்கிட்டேயிருப்பாங்க. அதே மாதிரி இங்கே 'பெருந்தலைகள்' எல்லாரும் ட்விட்டர்லேயே இருக்காங்க. ப்ளாக்கிங்க ஒரு நாள் போட்டின்னா - ட்விட்டரை 20 - 20 மேட்ச் மாதிரி நினைக்கறாங்க. இளா எல்லா பதிவர்களையும் ட்விட்டருக்கு வாங்கன்னு அழைப்பு விடுச்சாரு. நமக்கு அலுவலக நெட்வர்க்லே ட்விட்டர் வேலை செய்யலே. அதனால் அங்கே எதையும் படிக்க முடியறதில்லே. கு.ப வீட்லேயிருக்கும் போதாவது ஏதாவது பாக்கணும்.


குழுப்பதிவுகள்: வலைப்பதிவுகளில் குழுப்பதிவுகள் ஏன் தோல்வி அடைகின்றன - என்று அலசப்பட்டது. பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டினர். accountability இல்லாதது, கமெண்ட் மாடரேஷன் மற்றும் குழுவில் எழுதறதுக்கு நம்ம சொந்த பதிவுலேயே எழுதிடலாம்ன்ற மனப்பான்மைதான் குழுப்பதிவுகள் தோல்வியடையறதுக்கு காரணங்கள் என்று கூறப்பட்டது.


சமூகசேவை: வலைப்பதிவுகளில் புதிதாக வருபவர்களுக்கு - இங்கு என்ன சமூகசேவை நடக்கிறது, எதில் பங்கு கொள்ளலாமென்ற தகவலே தெரியவில்லை - இதற்கு தமிழ்மணத்தில் தனியாக இடம் ஒதுக்கலாமா? என்றெல்லாம் மொக்கைச்சாமி கேட்டார். இதற்கு பதிலளித்த கேயாரெஸ்/இளா - பல உதவிகள் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினர். அதை தனிப்பட்ட முறையில் யாராவது எடுத்து செய்கிறார்களே ஒழிய, ஒரு குழுவாக எடுத்து செய்யமுடியவில்லை என்று கூறினர்.


மோகன் கந்தசாமி -> புதிதாக வருபவர்களின் பதிவுகளை, பெருந்தலைகள் விமர்சித்து எழுதி அவர்களை ஊக்கப்படுத்தலாமே என்று கேட்டார். செய்யலாம் என்று பதில் வந்தது. மோகன் -> 'ச்சும்மா டமாஷ்'னு இல்லாமே, இதை எப்படி செய்யலாம்னு பாருங்க... காத்து வாங்கிட்டிருக்கற பல புதிய நல்ல கடைகளை விமர்சனம் செய்ய வைங்க.. நல்லா இருக்கும்....:-)


நசரேயன் -> இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்கறதுக்கு இல்லே!!!). திருநெல்வேயில் இருந்தபோது - இரண்டரை மணி நேரமுள்ள நாடகத்துக்கெல்லாம் காமெடி ட்ராக் எழுதியிருக்காரு. அந்த மாதிரி இங்கே பதிவுலேயும் நிறைய எழுதுங்கன்னு அவர்கிட்டே வேண்டுகோள் வைக்கப்பட்டது.


சத்யராஜ்குமார்: ஏகப்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிய எழுத்தாளர். இவரை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அவரது கதைகளில் பெரும்பாலும் அமெரிக்க வாழ்க்கையை எதிர்மறையாகவே சொல்வதன் காரணம் என்ன என்று கேட்டபோது - இந்தியாவில் இருப்பவர்கள் அமெரிக்க வாழ்க்கை என்றால் சொர்க்கம் என்றே நினைக்கின்றனர். ஊடகங்களும் இங்கே இருக்கும் பிரச்சினைகளை சொல்வதில்லை. அதை என் கதைகளின் மூலம் சொல்கிறேனென்று சொன்னார். இதை நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாலேயே ஏன் சொல்லவில்லை என்று நினைத்தேன். சொல்லவில்லை.... :-)


தமிழோவியம் கணேஷ் மற்றும் ஜெய்: இவங்க ரெண்டு பேரும் நிறைய படிக்கறாங்க. எல்லாவற்றையும் படிக்கறாங்க... மொக்கைப் பதிவுகளைத் தவிர்த்து... அதனாலே என்னோட பதிவுகளையும் படித்ததில்லைன்னு நினைக்கிறேன்... ச்சின்னப் பையனின் இருக்கும் அந்த 'ச்' போட்டு எழுதுவது நீங்கதானா? அப்படின்னு கொலவெறியோட பாத்தாங்க.... அவ்வ்வ்...


மேலே படத்துலே இடது பக்கத்திலிருந்து இருப்பவர்கள்தான் முறையே கணேஷ் சந்திரா மற்றும் ஜெய்.


மருத நாயகம்: பல நல்ல பதிவுகள் எழுதவேண்டுமென்று வந்த இவர் கடை பயங்கரமாக காத்து வாங்கியதால், இவர் மொக்கை போடும் நிலமைக்கு வந்துவிட்டார் - இதை அவரே சொன்னார். (எஸ்.வி.சேகர் நாடகத்துலே வருமே - இவர் பேரு ஏகலைவன். பெரிய எழுத்தாளராம். அவரே சொன்னார் - அப்படி படிங்க!!!). அப்படி எழுதிய மொக்கையொன்று உடனே 'சூடாகி' விட்டதையும் சொல்லி 'சந்தோஷப்பட்டார்'. ஹிஹி..


கொத்ஸ் குறுக்கெழுத்து: விடைகள் தெரிந்தபிறகே கேள்விகள் புரிவதாக இளா குறிப்பிட்டார். அதனால் அந்த பக்கமே போகவில்லை என்றும் தெரிவித்தார். குறுக்கெழுத்துக்கு '+' குத்தாவிட்டாலும் பரவாயில்லை யாரோ '-' குத்திவிட்டனர் என்று கொத்ஸ் சொன்னதற்கு, இளா பாய்ந்து சொன்னார் ' அது நானில்லை.. அது நானில்லை'. எல்லோரும் நம்பிவிட்டனர். இனிமேல் 'க்ளூ'வை சுலபமாக வைப்பதாகவும், இந்த சந்திப்புக்கு வந்தவர்களுக்கு மட்டும் விடைகளை முன்கூட்டியே அனுப்பி வைப்பதாகவும் (!!!) கொத்ஸ் சொன்னார்.


இன்னும் இதே மாதிரி பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.


என்னைத் தவிர எல்லோரும் லோக்கல் ஆளுங்க என்பதால் (லோக்கல் = உள்ளூர். தப்பர்த்தம் பண்ணிக்காதீங்க!!!) - நாந்தான் 'மீ த பஷ்ட் எஸ்கேப்' என்று கிளம்பியபோது மணி 9.00. போக்குவரத்தில் சிக்கி வீட்டுக்கு வந்தபோது மணி சரியாக நள்ளிரவு 12.


இதைத்தவிர சுவாரசியமாக நம்ம மோகன் ஏற்கனவே பதிவு போட்டுட்டார். அங்கேயும் போய் படிச்சிடுங்க.

Read more...

Monday, December 1, 2008

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 1 of 2


(இ-வ): சுதன் (பார்வையாளர்) இளா (விவசாயி), சம்சுதீன் (மருத நாயகம்) மற்றும் இலவசம்.



(இ-வ): கேயாரெஸ், நசரேயன், மோகன் கந்தசாமி, சத்யராஜ்குமார்



(இ-வ): மேலே குறிப்பிட்டபடி



(இ-வ): சஹானா (பார்வையாளர்), ரோஹன் (பார்வையாளர்), சத்யா (ச்சின்னப் பையன்)

(இ-வ): ஜெய் (பார்வையாளர்), மொக்கைச்சாமி
-----

மேலே குறிப்பிட்ட (இ-வ) அப்படின்னா இட்லிவடையோ, இ.வாயோ இல்லே... சரியா படிங்க.. இடமிருந்து வலம்.
------
சிறப்பு விருந்தினர் திரு.பாஸ்டன் பாலா சந்திப்புக்கே வராமல் மட்டம் போட்டுவிட்டார். அவரைக் காணவேண்டுமென்று ஆவலுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சார்பாக மென்மையாக ஒரு கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
-----
5.15 மணிக்கு முதல்முதலா நாந்தான் போய் கதவை திறக்காத உணவகத்தின் முன் தர்ணா செய்து, கடையை திறக்கச் செய்தேன். மெதுவாக 5.45 மணியிலேர்ந்து மக்கள் வர ஆரம்பித்தனர்.
6.30 மணிக்கு மும்பை பிரச்சினையில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலியுடன் ஆரம்பித்த சந்திப்பில் பல்வேறு சூடான பிரச்சினைகள் அலசப்பட்டன.
இரவு உணவில் கண்டிப்பாக போண்டா இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
-----
இன்னொரு முக்கியமான நபர் இருக்கிற படம் காமிராலேந்து வரமாட்டேங்குது... நாளைக்கு அதை பிச்சிப் போட்டு, சந்திப்பின் மத்த விவரங்களையும் சொல்றேன்.

Read more...

Thursday, November 13, 2008

வட அமெரிக்க பதிவர்கள் தேசிய மாநாடு 2008!!!

வட அமெரிக்கப் பதிவர்கள் சார்பில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் நாள்: நவம்பர் 29, 2008 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

இடம்: நியூ ஜெர்ஸி. (இப்போதைக்கு மாநாட்டுத் திடல் இருக்கும் இடம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது - அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்).

தலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா

முன்னிலை: திரு. இலவசக்கொத்தனார்

வரவேற்புரை: திரு. கே.ஆர்.எஸ்

மக்கள் தொடர்பு: திரு. இளா

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்னும் சிலரை சாட்டிங்கில் அழைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.

சிரஞ்சீவிகாரு கூட்டத்தில் போட்டதைப்போல் முட்டை வீசத் தயாராக இருப்பவர்கள், தயவுசெய்து அந்த முட்டைகளை முன்கூட்டியே எங்களுக்கு அனுப்பிவிட்டால் உபயோகமாக இருக்கும். (அழுகாத) தக்காளி கிடைத்தாலும் நலம்.

மேலும், மாநாட்டை வாழ்த்தி குறைந்த பட்சம் ஒரு லட்சம் தந்திகளாவது எதிர்பார்க்கிறோம்.

அனைவரும் வருக!!! ஆதரவு தருக!!!

Read more...

Wednesday, October 22, 2008

பதிவர் சந்திப்பு - சிறப்பு படங்களுடன்!!!



மேலே படத்தில் தோன்றுபவர்கள் - ஒண்ணு நான், இன்னொண்ணு சில நாட்கள் முன்பு வரை பதிவு போட்டு கலக்கிட்டிருந்த - பதிவர் நண்பர் பிரேம்ஜி. இரண்டு பேரில் எது நான், எது பிரேம்ஜிங்கறது பதிவின் கடைசியில் சொல்றேன்.


பிரேம்ஜி அடுத்த வாரம் சென்னைக்கு திரும்பறார். லீவுக்கு இல்லே. அமெரிக்காவை விட்டுட்டு. ரொம்ப நாளா மொக்கை போட்டிருக்கோமே, சரி ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு தடவை பாத்துக்கிடுவோம்னு சென்ற 5ம் தேதி (சென்னை பதிவர் சந்திப்பு நடைபெற்ற தினம்) எங்க
ஊரிலேருந்து புறப்பட்டு அவர் ஊருக்கு (120 மைல்கள்) சென்றோம்.


போய் சிறிது நேரம் பேசி முடித்தபிறகு - சாப்பாடு. பிரேம்ஜியின் தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். நல்ல்ல்ல்ல்ல்லா சாப்பிட்ட பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பக்கத்திலிருந்த ஒரு கோயிலுக்குச் சென்றோம். அங்கேயே புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு - (பிரேம்ஜி ஒரு
அருமையான SLR காமிரா வைத்திருக்கிறார். அதனால், அங்கே என்னோட ச்சின்ன காமிராவை நான் வெளியே எடுக்கவேயில்லை!!!)


அவர்களை புகைவண்டி நிலையத்தில் இறக்கிவிட்டு, நாங்கள் மறுபடி 120 மைல்கள் பயணித்து வீடு வந்து சேர்ந்தோம்.


----

வீட்டுக்கு திரும்ப வரும்போது, நானும் தங்கமணியும் பேசிக்கொண்டது.

நான்: ஏம்மா, பிரேம்ஜியோட படமெல்லாம் எடுத்திருக்கோம். நானும் என் படத்தை இணையத்திலே போடலாம்னு இருக்கேன்.

என் தங்க்ஸ்: எதுக்கு படத்தை போடணும்?

நான்: சில நண்பர்கள் கேட்டிருக்காங்க. அதைத்தவிர லட்சக்கணக்கான பேர் கேக்காம தினமும் நினைச்சிட்டிருக்காங்க. அதுக்காகத்தான். அது தவிர, நான் என்ன இட்லிவடையா, அஞ்சு வருஷம் மூஞ்சியையே காட்டாமே இருக்கறதுக்கு...

என் தங்க்ஸ்: எதுக்கும் ஒரு தடவை பின்விளைவுகளை நினைச்சி பாத்துக்கங்க.

நான்: என்ன சொல்ல வர்றே?

என் தங்க்ஸ்: இவ்ளோ நாளா உங்க முகம் தெரியாமே உங்களை அஜீத், சூர்யா ரேஞ்சுக்கு நினைச்சிருந்தாங்கன்னு வைங்க - நாளைக்கு படத்தை பாத்தபிறகு - இதை பாக்கவா நாம் படத்தை கேட்டோம்னு நொந்துக்கற அளவுக்கு அவங்களை கொண்டு வந்து விட்றாதீங்க.
அவ்ளோதான் நான் சொல்லுவேன்.

நான்: சேச்சே.. அவ்ளோ மோசமா நினைக்க மாட்டாங்கம்மா. ஒரு வேளை அப்படி நினைச்சாலும், யாரும் வெளிப்படையா பின்னூட்டத்திலே சொல்ல மாட்டாங்கன்ற நம்பிக்கையிலே நான் படத்தை போடத்தான் போறேன்.

என் தங்க்ஸ்: என்னமோ செய்ங்க.

நான்: ரொம்ப நன்றிம்மா..

----




அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP