Saturday, September 9, 2017

நானே நானா.. தனியாதான் பேசுறேனா..


நானே நானா.. தனியாதான் பேசுறேனா..

ட்விட்டரில் 3599 பேர் நம்மை பின்தொடர்ந்தாலும், 5க்கும் குறைவான ஆட்களே நம்மிடம் தொடர்ந்து பேசுவாங்க. மற்றவர்கள் ம்யூட்டில் போட்டு வைத்திருப்பார்கள்னு நம்புறேன். #BlockNarendraModi போல #MuteChPaiyanன்னு இதுவரை tag பார்த்ததில்லை. இது பிரச்னையில்லை. நிஜவாழ்க்கையிலும் நம் பேச்சை யாரும் கேட்பதேயில்லைன்னு நினைக்கிறேன்.

அட, எல்லார் வீட்டிலும் இதே பிரச்னைதான்பா. யார் வீட்டில்தான் குடும்பத்தலைவர் (ரேசன் அட்டையின்படி!!) பேச்சை கேட்குறாங்க? ம்ம். அதுவும் பிரச்னையில்லை. குடும்பத்துக்கு வெளியில் - உறவினர், நண்பர்கள் ஆகியோர் (எல்லாரும் அல்ல, பெரும்பாலும்) நாம் பேசறதைக் காது குடுத்து கேட்குறாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குது.

அது எப்படி உனக்குத் தெரியும்ன்னு கேட்டா, சில பல உதாரணங்களைத் தர்றேன் பாருங்க. 

நம் சொந்தக்கார் ஒருத்தர். போன வாரம் நடந்த அண்ணன் பெண் திருமணத்தில் பார்த்தவர் - உனக்கு கன்னடம் எழுதப் படிக்க தெரியுமான்னார். அடியேனைப் பார்த்து அவர் இந்தக் கேள்வியைக் கேட்டது - கடந்த 4 ஆண்டுகளில் இது சுமார் 10வது முறை. செம கடுப்பு. முதலில் ஆமாங்க. தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சி - பிறகு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே கேள்வியால் கோபப்பட்டு - அந்த சமயத்தில் என்ன பதில் தோணுதோ அதைச் சொல்லத் துவங்கிவிட்டேன். 

சரி வயசானவர்னு இவரை மன்னித்து விட்டால், நம் சமகாலத்திய வாலிப வயதில் (சிரிக்க வேண்டாம்!) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை? பைக்கில் வரியா? மறுபடி விளக்கவேண்டியிருக்கும். நான் இன்னிக்கு லீவ். 

சரி வாலிப வயதில்தான் இப்படி, சின்ன பசங்களாவது நாம் சொல்றதைக் கேட்கிறாங்களான்னா, அதுவும் இல்லை. 

பெரிய அண்ணன் பையர் ஒருத்தர். 30 வயதிருக்கும். நாங்க ஊரிலிருந்து (அமெரிக்காவிலிருந்து) வந்து சென்னையில் ஒரு 3-4 மாதம் இருந்து, இப்போ பெங்களூர் வந்து 5 ஆண்டுகள் ஆயிடுச்சு. எப்போ திருவல்லிக்கேணி போனாலும், அந்த அண்ணன் வீட்டிற்குப் போய் ஒரு காபி (ஹிஹி) குடிச்சிட்டு வருவது வழக்கம். 

அப்போ அந்தப் பையர் கேட்பார் - நங்கநல்லூரில்தானே இருக்கீங்க? தண்ணீர் பிரச்னை இல்லையே? முதல் 2-3 முறை சொல்லிப் பார்த்தேன். இல்லப்பா, நாங்க லுரு போய் நாளாச்சு. இங்க இல்ல. பையர் நம் பேச்சைக் கேட்பதாகவே தெரியல. அடுத்தடுத்த முறையும் அதே கேள்விதான். இப்பல்லாம் நான் மறுப்பு சொல்றதில்லை. ஆமாம்பா நங்கநல்லூர்தான். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா. 

கண்டகண்ட தகவல்களை நாம்தான் நினைவில் வைத்திருக்கிறோமோ? (படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உட்காரும் அந்த நடிகை பெயர் என்னன்னு கேட்கக்கூடாது) மற்றவர்கள் மேலே சொன்னாற்போல் தேவையானவற்றை மட்டுமே கேட்டு (அல்லது கேட்ட மாதிரி நடித்து) - கவனத்தை எப்போதும் எங்கேயோ வைத்து சுற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. இதில் வயது வித்தியாசம் கிடையாது. 

இவ்வளவு உதாரணங்களுப் பிறகு, இப்பல்லாம் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை (நம்புங்க!). அப்படி பேசினாலும், 

* அவங்க தன் கைப்பேசியைப் பார்த்தாலோ
* வேறெங்கோ நோட்டம் விட்டாலோ
* கொட்டாவி விட்டாலோ
* கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டாலோ

பேச்சை நிறுத்தி / அங்கிருந்து நகர்ந்து விடுவது வழக்கமாக்கிட்டேன். 

சரி நீங்களாவது ஒழுங்கா படிச்சீங்களா - இல்லே, முதல் பாராவிலிருந்து நேரா ஜம்ப் அடிச்சி கடைசி பாராக்கு வந்துட்டீங்களா? 

ஓம் சாந்தி.

***

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP