Tuesday, June 29, 2010

FeTNA-2010 : 23ம் ஆண்டு விழா

1 சென்ற வருடம் எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி விழா. முதல்முறையாக நாங்க போனோம். அப்பத்தான் சொன்னாங்க அடுத்த வருடம் பேரவை விழா இதே ஊரில்தான் நடக்குதுன்னு.


2 அடுத்த நாள் பழமைபேசி அண்ணனுக்கு முதல்முறையாக தொலைபேசறேன் - அண்ணே. நான் ஏதாவது உதவி செய்யமுடியுமா?


3 அடுத்த நாள் பேரவை செயலரிடமிருந்து தொலைபேசி வருது. - மிக்க மகிழ்ச்சி. இன்னும் வேலைகள் துவங்கலே. நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்யறேன்.


4 ஜனவரி மாதம் - மெதுவா மின்னஞ்சல்கள் வரத் துவங்குகின்றது. தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு கூப்பிடுறாங்க. ஓரிரு நண்பர்கள் கிடைக்குறாங்க.


5 பிப்ரவரி மாதம் - குழுக்கள் அமைக்கப்படுகின்றன. என்னையும் இரு குழுக்களில் போடுகின்றனர். இரு வாரங்களுக்கொரு முறை தொலைபேசியிலும் மாதமொருமுறை சந்திப்பும் துவங்குகின்றன.


6 மார்ச் மாதம் - குழுக்கள் பரபரப்பாகின்றன. வாரநாட்களில் பல்வழி அழைப்புகள் ஆரம்பம். வாரயிறுதிகளிலும் வேலை வருகின்றது.


7 ஏப்ரல் மாதம் - இப்போது நான் மூன்று குழுக்களில். இரண்டில் தலைமை. வாரத்தில் மூன்று பல்வழி அழைப்புகள். அதில் பேசியவைகளை வைத்து வேலைகள் செய்கிறோம். மின்னஞ்சல்கள் பெருகுகின்றன.


8 மே மாதம்: அனைத்து நாட்களும் பல்வழி அழைப்புகள். ஒரு நாளைக்கு கு.ப 10 மின்னஞ்சல்களுக்கு பதில் போட வேண்டியிருக்கிறது. வாரயிறுதியில் ஒரு நாள் வேலை. வீட்டில் மெதுவாக 'ப்ச்' என முணுமுணுப்புகள் துவங்குகின்றன. அலுவலக வேலைகளுக்கு இதுவரை பங்கமில்லை.


9 ஜுன் மாதம்:அலுவலகம் பல நாட்கள் மட்டம் போட்டு இந்த வேலை செய்யவேண்டிய நிலை. வீட்டில் அன்றாடம் செய்யும் வேளைகளில் சுணக்கம். தினமும் பல்வேறு அழைப்புகள். ஏகப்பட்ட மின்னஞ்சல்கள். வாரமொருமுறை கூட்டம்.


10. ஜுலை 3, 4, 5: ஆறு மாத உழைப்புக்கு பலன் கிடைக்கும் மாதம். இன்னும் மூன்று நாட்களில் விழா. வேலைகள் உச்சக்கட்டத்தில். அனைத்து தன்னார்வலர்களும் தயார் நிலையில்.

**********

இதுக்கு மேல் அடிக்க நேரமில்லை எனக்கு. அதனால் விழாவுக்கு வாங்க. அங்கே சந்திப்போம்.

**********

9 comments:

மருதநாயகம் June 29, 2010 at 10:36 AM  

வாழ்த்துக்கள்

Thamira June 29, 2010 at 12:07 PM  

வாத்துகள் பாஸ்.

ILA (a) இளா June 29, 2010 at 12:13 PM  

//வாத்துகள் பாஸ்.//
கோழிகள் பாஸ்

பழமைபேசி June 29, 2010 at 12:53 PM  

நண்பா... உழைப்புக்கு என்றும் தமிழ்ச் சமுதாயம் நன்றி சொல்லும்!!!

இனியா June 29, 2010 at 6:02 PM  

naanum varren...santhippOm...

Mahesh June 29, 2010 at 9:19 PM  

//வீட்டில் அன்றாடம் செய்யும் வேளைகளில் சுணக்கம்.//

நாமதான் அலுவலகத்துலயே வேலை செய்யறதில்ல. வீட்ல எப்பிடி? புரியலயே....

Rangan Kandaswamy June 29, 2010 at 10:59 PM  

சினிமா ஆட்களை அழைக்க வேண்டாம். சொன்னால் புரியாது. கூத்துப்பட்டறை கலைஞர்களை அழைத்திருக்கலாம்!

@rangankan

ஆரூரன் விசுவநாதன் June 30, 2010 at 7:46 AM  

வாழ்த்துக்கள் சத்யா......நண்பர் பழமையின் பக்கங்களிலும் படித்தேன்...
மிக்க மகிழ்ச்சி....



அன்புடன்
ஆரூரன்

அறிவிலி July 1, 2010 at 8:28 AM  

//அலுவலக வேலைகளுக்கு இதுவரை பங்கமில்லை.//

நல்ல வேளை, தூக்கம் கெட்ருந்தா விழா வேலைகளை கரெக்டா செஞ்சிருக்க முடியாது. :-)))))))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP